திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான்!

சென்னை: ஏற்கெனவே அறிவித்தபடி வரும் மே 9-ம் தேதியன்று, ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நேற்று அறிவித்தனர்.

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவது சந்தேகம் என்பது போன்ற தகவல்கள் கடந்த சில தினங்களாக மீடியாவில் அதிகம் வெளியாகிவந்தன.

திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கோச்சடையான்!

இது படத்தை எதிர்ப்பார்த்துக் கிடந்த பல லட்சம் ரசிகர்களைத் தவிப்புக்குள்ளாக்கியது.

படம் வெளியாகுமா இல்லையா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், திட்டமிட்டபடி கோச்சடையான் படம் மே 9-ம் தேதியே வெளியாகும் என தயாரிப்பாளர் முரளி மனோகர் நேற்று அறிவித்தார்.

இதனை படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவும் உறுதிப் படுத்தினார். படத்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமதுவும், கோச்சடையான் 9-ம் தேதி வெளியாவது நிச்சயம் என தகவல் வெளியிட்டுள்ளார்.

 

கோச்சடையானுக்கு சிக்கல் என்பது தவறான செய்தி.. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்ற படம் அது! - விநியோகஸ்தர்கள்

சென்னை: கோச்சடையான் படத்துக்கு சிக்கல் என்று வரும் செய்திகள் உண்மையில்லை. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்று, ரிலீசுக்கு தயாராகவே உள்ளது அந்தப் படம். திட்டமிட்டபடி மே 9-ம் தேதி வெளியாகும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோச்சடையானுக்கு விநியோகஸ்தர்களால் சிக்கல், தயாரிப்பாளருக்கு பிரச்சினை, வியாபாரம் ஆவதில் தாமதம் என்றெல்லாம் கடந்த நான்கு தினங்களாக செய்திகள் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தன.

கோச்சடையானுக்கு சிக்கல் என்பது தவறான செய்தி.. ஏற்கெனவே வரிவிலக்கு பெற்ற படம் அது! - விநியோகஸ்தர்கள்

ஆனால் அவற்றில் உண்மையில்லை என்று விநியோகஸ்தர்கள் சங்கம் மறுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலர் ஜெயக்குமார் கூறுகையில், "பொதுவாக கோச்சடையான் மாதிரி பெரிய படங்கள் வெளியாகும்போது, வருமானப் பகிர்வு, டிக்கெட் விலை, தியேட்டர் ஒதுக்குதல் போன்ற விஷயங்களைப் பற்றி நிறைய கலந்துரையாடல்கள் நடப்பது வழக்கம்.

கோச்சடையான் பட விஷயத்திலும் அதுதான் நடந்தது. இந்த மாதிரி பெரிய படம், அதுவும் ரஜினி படம்தான் தியேட்டர்களில் பெரிய கூட்டத்தை ஈர்க்கும். அந்த வாய்ப்பை யார் தவறவிடுவார்கள்.

கோச்சடையானுக்கு ஏற்கெனவே கேளிக்கை வரிச் சலுகையை தமிழக அரசு வழங்கிவிட்டது. படம் வெளியாகத் தேவையான அனைத்து விஷயங்களையும் பேசி முடித்துவிட்டோம். திட்டமிட்டபடி, மே 9-ம் தேதி கோச்சடையான் வெளியாகிறது," என்றார்.

 

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கு தமிழ்நாட்டிலும் வாக்கில்லை.. வாக்களிக்க சொந்த ஊருக்கும் போகவில்லை

சென்னை: தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சென்னையிலோ அல்லது தமிழகத்தின் பிற பகுதியிலோ வாக்குரிமையே இல்லை.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் நடிகைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.

வட மாநிலங்கள், ஆந்திரா அல்லது கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் தமிழின் பெரும்பாலான நடிகைகள்.

டாப் நடிகைகளுக்கு தமிழ்நாட்டிலும் வாக்கில்லை.. வாக்களிக்க சொந்த ஊருக்கும் போகவில்லை!

இவர்களுக்கு சொந்த ஊரில் வாக்குரிமை இருக்குமா என்பதும் சந்தேகம்தான். காரணம் 16 வயதிலேயே பெரும்பாலானோர் நடிக்க வந்துவிடுகிறார்கள். நடிக்க வந்த பிறகு சென்னையில் இருந்தாலும், வாக்களிப்பது குறித்த ஆர்வம் இவர்களில் பெரும்பாலானோர்க்கு இல்லை.

வாக்களிக்கச் சென்றால் ரசிகர்கள் மொய்த்துக் கொள்வார்கள், பாதுகாப்புப் பிரச்சினை என்றெல்லாம் இருப்பதால் பொதுவாகவே நடிகைகள் வாக்களிக்க வருவதில்லை. ரிடையர் ஆன பிறகு, வாக்குக் கேட்க அல்லது தேர்தலில் நிற்க மட்டும் தயாராக வந்துவிடுவார்கள்!

இந்த தேர்தலிலும் இதே நிலைதான்.

முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் அமலா பால், ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா... இவர்களில் யாருக்குமே வாக்குரிமை இல்லை. இவர்களுக்கு ஒருவேளை அவரவர் மாநிலங்களில் வாக்குரிமை இருந்தாலும் அதைச் செலுத்த மெனக்கெட்டுப் போகவில்லை.

தமிழ் சினிமாவின் நிஜமான டாப் நடிகை லட்சுமி மேனனுக்கோ இன்னும் வாக்களிக்கும் வயசே வரவில்லையாம்!

நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் வாக்குரிமை உள்ளது. ஆனால் அவர் ஊரில் இல்லாததால் வாக்களிக்கவில்லையாம்!

 

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

சென்னை: நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு துவங்கியவுடன் வாக்களித்தார்.

மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்

இந்நிலையில் அஜீத் குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர்.

 

தேர்தலுக்காக தியேட்டர்கள் லீவு... ஆனா 'பிரண்ட்ஸ்', சன் டிவி வீட்டுக்கே வந்து படம் காட்டுது!

சென்னை: சன் டிவியில் இன்று காலை 10 மணிக்கு விஜய், சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 6 மணி வரை திரையரங்குகளை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவெ கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே, இத்தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்காக தியேட்டர்கள் லீவு... ஆனா 'பிரண்ட்ஸ்', சன் டிவி வீட்டுக்கே வந்து படம் காட்டுது!

அதன்படி, இன்று பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், விடுமுறை தினமான இன்று வாக்காளர்கள் சினிமா பார்க்க தியேட்டர் சென்று விடாதபடி இருக்க இன்று மாலை வாக்களிக்கும் நேரம் முடியும் வரை தியேட்டர்களை மூட தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது

ஆனால், தியேட்டர்களுக்கு லீவு விட்டால் என்ன நாங்கள் இருக்கிறோம் என சேனல்கள் சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது.

சீரியல்களின் ஆக்கிரமிப்பு...

சன்டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் சமீபத்தில் சனிக்கிழமை வரை நீட்டிக்கப் பட்டுள்ளன. இவை விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளை ஆக்கிரமித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

சிறப்புத் திரைப்படம்....

ஆனால், தேர்தல் நாளான இன்று மற்ற அரசு விடுமுறை நாட்களைப் போல் காலையில் திரைப்படம் ஒளிபரப்புகிறது சன் டிவி.

ப்ரண்ட்ஸ்...

இன்று காலை 10 மணிக்கு விஜய், சூர்யா நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘ப்ரண்ட்ஸ்' ஒளிபரப்பாகிறது.

அப்புறம் சீரியல் தான்....

படத்தைத் தொடர்ந்து மீதமுள்ள சீரியல்கள் வழக்கம் போல ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மீண்டும் வழக்கம் போல 3 மணி சுமாருக்கு மற்றொரு படம் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

பெண்கள் எண்ணிக்கை...

காலையில் சீரியல் கட்டாவதால் வாக்குச்சாவடியில் பெண்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

தியேட்டர் வரலாற்றில் முதல்முறையாக...

தமிழ்நாட்டில் தேர்தலுக்காக தியேட்டர்கள் மூடப்படுவது இதுவே முதன்முறையாகும். தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் பெங்களூர் சென்றார்.

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. உலக நாயகன் கமல் ஹாஸன் உத்தமவில்லன் படப்பிடிப்பில் பெங்களூரில் பிசியாக இருந்தார். வாக்களிப்பதற்காக அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விமானம் மூலம் சென்னை வந்தார்.

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

அவர் ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்திற்கு எதிரே உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார். அவருடன் நடிகை கௌதமியும் வந்து வாக்களித்தார்.

வாக்களித்த உடன் அவர் விமானம் மூலம் பெங்களூருக்கு கிளம்பிச் சென்றார். பெங்களூரை அடைந்த அவர் உத்தம வில்லன் படப்பிடிப்பில் இன்று கலந்து கொள்கிறார்.

 

24 வயதில் முதல்முறையாக வாக்களித்த நடிகர் கௌதம் கார்த்திக்

சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் முதன்முறையாக இன்று வாக்களித்துள்ளார்.

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம். கடல் படம் ஓடாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது.

24 வயதில் முதல்முறையாக வாக்களித்த நடிகர் கௌதம் கார்த்திக்

அவர் தற்போது சிப்பாய், வை ராஜா வை மற்றும் இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் வாக்களித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் கடமையை தற்போது தான் நிறைவேற்றினேன். முதல் முறை வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

24 வயதாகும் கௌதம் தற்போது தான் முதல்முறையாக வாக்களித்துள்ளாராம்.

 

அஜீத் ஸ்டைலில் பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு பரிமாறிய மம்மூட்டி

திருவனந்தபுரம்: அஜீத் குமார் ஸ்டைலில் மம்மூட்டி தான் நடிக்கும் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியுள்ளார்.

மம்மூட்டி மங்களிஷ் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் மீன்களை மொத்த விலைக்கு விற்கும் வியாபாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் மம்மூட்டி தன் கையாலேயே தலச்சேரி மட்டன் பிரியாணியை சமைத்துள்ளார்.

அஜீத் ஸ்டைலில் பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு பரிமாறிய மம்மூட்டி

சமைத்ததோடு மட்டும் அல்லாமல் படக்குழுவினருக்கு தானே பிரியாணியை பரிமாறி மகிழ்ந்துள்ளார். அவ்வளவு பெரிய நடிகர் பிரியாணி சமைத்து கொடுத்ததை பார்த்து படக்குழுவினர் நெகிழ்ந்துவிட்டனர்.

'தல' அஜீத் தான் பணியாற்றும் படக்குழுக்களுக்கு தன் கையாலேயே பிரியாணி சமைத்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அஜீத் பாணியில் மம்மூட்டியும் பிரியாணி சமைத்து படக்குழுவுக்கு கொடுத்துள்ளார்.

 

யாரையும் நான் ஆதரிக்கவில்லை.. அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: லோக்சபா தேர்தலில் தாம் யாரையும் ஆதரிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

லோக்சபா தேர்தலில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை முதல் நபராக நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது கடமை என்றார்.

யாரையும் நான் ஆதரிக்கவில்லை..: வாக்களித்த பின் ரஜினி பேட்டி

அப்போது நீங்கள் தேர்தலில் யாரை ஆதரிக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் யாரையும் ஆதரிக்கவில்லை என்றார்.

தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வந்த பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிவீட்டுக்கு சென்று சந்தித்தார். அதற்கு முன்னதாக மதிமுக பொதுச்செயலர் வைகோவும் ரஜினியை நேரில் சந்தித்தார். இதனால் ரஜினி தங்களது அணியை ஆதரிப்பதாக பாஜகவினர் கூறிவந்தனர்.

ஆனால் ரஜினிகாந்த் மோடியுடனான சந்திப்பு தனிப்பட்ட முறையிலானது என்றே கூறிவந்தார். இன்றும் வாக்களித்த பின்னரும் தாம் தேர்தலில் யாரையுமே ஆதரிக்கவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது,.

 

அஜீத்துக்கு இந்த முறை வில்லன்கள் மட்டுமல்ல... வில்லியும் உண்டு!

சென்னை: கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத்துடன் இரு வில்லன்கள் மட்டுமல்லாது... வில்லியும் உண்டு. அவர் இதுவரை நாயகியாக நடித்து வந்த தன்ஷிகா.

அஜீத்துக்கு இந்த முறை வில்லன்கள் மட்டுமல்ல... வில்லியும் உண்டு!

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்படத்தில் அஜீத்துக்கு வில்லன்களாக அருண் விஜய்யும், ஆதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது, இப்படத்தில் ஒரு வில்லியையும் சேர்க்கப் போகிறார்கள். அந்த வில்லி வேடத்திற்கு அரவான், பரதேசி படங்களில் நடித்த தன்ஷிகா.

வில்லன்களை விட இவருடைய கதாபாத்திரம் இப்படத்தில் முக்கியத்துவம் மிக்கதாக இருக்குமாம்.

 

பில் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்ட இயக்குநர்!

சென்னை: பில் தொகையைச் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்டுள்ளார் தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர்.

அவர் பெயர் பி ரவிக்குமார். சமீபத்தில் நடிகை சுஜிபாலா விவகாரத்தில் ஏகத்துக்கும் அடிபட்டவர் இந்த ரவிக்குமார். இவரால் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுஜிபாலா புகார் தந்தது நினைவிருக்கலாம்.

பில் கட்டாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்ட இயக்குநர்!

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ரவிக்குமார் சிக்கியுள்ளார். தன் சொந்தத் தயாரிப்பான 'லவ் பண்ணலாமா வேணாமா' படப்பிடிப்பிற்காக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை மும்பை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவர்களை ஓட்டலிலேயே திண்டாட விட்டுவிட்டு பாதியில் திரும்பி வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மும்பை ஹோட்டல் நிர்வாகத்தினர் ரவிக்குமார் தங்களுக்கு பெருந்தொகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, உடனே அந்தத் தொகையைச் செலுத்தக் கோரினார்.

ஆனால் இதற்கு பதில் எதுவும் அளிக்காத ரவிக்குமார், மறுநாள் யாரிடமும் சொல்லாமல் ஹோட்டலை விட்டு வெளியேறிவிட்டாராம்.

இந்த விஷயம் தெரிய வந்ததும் ஷாக் ஆகிவிட்டார்களாம் படக்குழுவினர். தொடர்ந்து படக்குழுவினருக்கு எந்த சேவையும் தர முடியாது என கூறிவிட்டது ஓட்டல் நிர்வாகம்.

கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு இவர்களுக்கு உணவு கூட தரப்படவில்லை. தங்க மட்டுமே அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து ரவிக்குமாரைத் தொடர்புகொண்டபோது, "படப்பிடிப்புக் குழுவினர் மும்பை ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். தேர்தல் சமயம் என்பதால் தன்னால் ஹோட்டல் பாக்கியை செலுத்த முடியவில்லை," என்று தெரிவித்தார்.

இப்போது கிடைத்துள்ள தகவல்படி, ஓட்டல் பாக்கியைச் செலுத்த ரவிக்குமார் ஒப்புக் கொண்டுள்ளாராம். எனவே படக்குழுவினருக்கு சேவைகளைத் தொடர்கிறது ஓட்டல் நிர்வாகம்.

 

அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் விஜய்

சென்னை: நடிகர் விஜய் தனது வாக்கை காலை 10 மணிக்கு செலுத்தினார்.

தமிழ் சினிமா நடிகர்கள் வாக்களிப்பதை மிக முக்கிய கடமையாகக் கருதி, தவறாமல் வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தன்னைப் பின்பற்றும் ரசிகர்களும் இதுபோல ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் விஜய்

வெளியில், க்யூ போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் காத்திருந்து வாக்களிப்பதையும் காண முடிகிறது.

முன்னணி நடிகர் விஜய் எங்கே எப்போது வாக்களிப்பார் என்ற தகவலை அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.

அடையாறு தொலைபேசி இணைப்பகத்துக்கு அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு விஜய் வாக்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாக்களிக்க வந்த விஜய், வரிசையில் நின்று வாக்களித்தார்.

விஜய் இந்தத் தேர்தலுக்கு முன் கோவை சென்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைச் சந்தித்தது நினைவிருக்கலாம், கடைசி நேரத்தில் மோடிக்கு ஆதரவாக இவர் அறிக்கை தருவார் என கூறப்பட்டது. ஆனால் விஜய் அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை.

 

காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!

சென்னை: காலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார் நடிகர் சூர்யா.

சென்னை தி நகர் கிருஷ்ணா தெருவில் சிவகுமார் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் இந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட வேண்டும்.

காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!

இன்று பிற்பகல் குடும்பத்துடன் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்தார் சிவகுமார்.

அவருடன் மகன்கள் சூர்யா, கார்த்தியும் வாக்களித்தனர்.

அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சற்று தாங்கித் தாங்கி நடந்து வந்த சூர்யா சிரமம் பார்க்காமல் வரிசையில் நின்று வாக்களித்தார்.

ஆனால் அவரது மனைவி நடிகை ஜோதிகா வாக்களிக்க வரவில்லை.

மும்பையில் நடந்த அஞ்சான் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கு காலில் காயமேற்பட்டது நினைவிருக்கலாம். வாக்குச் செலுத்துவதற்காகவே அவர் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இன்று மாலை மீண்டும் மும்பை திரும்புகிறார்.

 

''கட்டிங், வெட்டிங், ஒட்டிங்.. வோட்டிங்.''. டிவிகளை கலக்கும் கவுண்டமணி...!!!

சென்னை: தேர்தல் காலம் பார்த்து செம டைமிங்காக நகைச்சுவை அரசர் கவுண்டமணி நடித்துள்ள 49 ஒ படத்தின் விளம்பரங்களை டிவியில் போட்டு கலக்கி வருகின்றனர்.

டிவி சானல்களில் காலை முதலே இந்தப் பட விளம்பரம்தான். கவுண்டமணியின் டிப்பிகல் வசனங்களை வைத்தே விளம்பரத்தை ஒளிபரப்புகின்றனர்.

''கட்டிங், வெட்டிங், ஒட்டிங்.. வோட்டிங்.''. டிவிகளை கலக்கும் கவுண்டமணி...!!!

கட்டிங், வெட்டிங், ஒட்டிங், வோட்டிங் என்று பன்ச் விடுகிறார் கவுண்டர். அதேபோல மேலும் சில அவரது பாணி வசனங்களுடன் கூடியதாக விளம்பரம் உள்ளது.

ஒட்டுப் போடுங்க, ஒட்டுப் போடுங்க என்று கவுண்டர் பாடும் பாடலும் இடம் பெறுகிறது.

இறுதியாக அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே என்று ஒலிபெருக்கிக் குரலுடன் விளம்பரம் முடிகிறது.

முற்றிலும் மக்கள் பிரச்சினையை மையமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் தேர்தல் ஆணையத்தின் 49 ஓ விதியையே தலைப்பாக வைத்து உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது அந்த விதியைத்தான் நோட்டா என்ற பெயரில் பொத்தானாக வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே தேர்தல் ஆணையம் பொருத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் ஆளாக வாக்களித்த '49 ஓ ஹீரோ' கவுண்டமணி!

சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் தான் வசிக்கும் பகுதியின் வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கே வாக்களித்தார் காமெடி கிங் கவுண்டமணி.

தேர்தல் தொடர்பாக 49 ஓ எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுவும் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவரது 49 ஓ படத்திலிருந்து 'கட்டிங், வெட்டிங்... ஓட்டிங்' என்ற விளம்பரம் வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகிறது.

முதல் ஆளாக வாக்களித்த '49 ஓ ஹீரோ' கவுண்டமணி!

இன்று ரஜினி, கமல் தொடங்கி அத்தனை நடிகர்களும் வாக்களித்த விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, கவுண்டமணி வாக்களித்த செய்தி மட்டும் தெரியாமல் இருந்தது.

இதுபற்றி விசாரித்தபோது, காலை 7 மணிக்கே செனடாப் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கவுண்டமணி முதல் வாக்காளராகப் போய் வாக்களித்த விவரம் தெரியவந்தது.

கூட்டம் அதிகமாக சேர்வதற்கு முன்பே வாக்குச் சாவடிக்குப் போன கவுண்டர், விறுவிறுவென தன் வாக்கைச் செலுத்திவிட்டுத் திரும்பினாராம்.

'49 ஓ படத்துல நடிச்சிட்டு ஜனநாயகக் கடமையைச் செய்யலன்னா சரியா இருக்குமா?' என தன் நண்பர்களிடம் கமெண்ட் அடித்தாராம் கவுண்டர்.

 

விஷாலுக்கு முறைப் பெண்ணான அபிநயா

சென்னை: பூஜை படத்தில் விஷாலுக்கு முறைப்பெண்ணாக நடிக்கிறாராம் அபிநயா.

நாடோடிகள் படம் மூலம் பிரபலம் ஆனவர் அபிநயா. அண்மையில் அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்திருந்தார். அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஷாலுக்கு முறைப் பெண்ணான அபிநயா

இந்நிலையில் ஹரி தனது பூஜை படத்தில் அபிநயாவை ஒப்பந்தம் செய்துள்ளார். படத்தில் அபிநயா விஷாலின் முறைப்பெண்ணாக வருகிறார். பூஜை படத்தின் நாயகி ஸ்ருதி ஹாஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்க அமைதியாக பக்கத்து வீட்டுப் பெண் போன்று இருக்கும் அபிநயாவுக்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜை பட வேலைகள் மளமளவென நடப்பதை பார்த்து ஸ்ருதி அதிசயித்துள்ளார்.

 

தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்... புதிய பிரதமரிடம் நதிநீர் இணைப்பு பற்றி பேசுவேன்!!- இது சிவகுமார்

சென்னை: தண்ணீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு நீர் வேண்டும். கங்கையில் வீணாய் போகும் நீரை தமிழகத்துக்கு தர வேண்டும். இதுகுறித்து புதிய பிரதமரிடம் நான் வலியுறுத்துவேன் என ஆவேசமாகத் தெரிவித்தார் நடிகர் சிவகுமார்.

நடிகர் சிவகுமார் தன் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் இன்று இந்திப் பிரச்சார சபா சாவடியில் வாக்களித்தார்.

காலில் காயமடைந்திருந்த சூர்யா, ஊன்று கோல் உதவியுடன் வாக்களிக்க வந்தார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்... புதிய பிரதமரிடம் நதிநீர் இணைப்பு பற்றி பேசுவேன்!!- சிவகுமார்

வாக்களித்து முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், "இந்த முறை அமையும் அரசு மூலம் தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும். மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தண்ணீரும் மின்சாரமும்தான்.

தமிழகம் இந்த இரண்டுமின்றித் தவிக்கிறது. ஆனால் வடக்கில் கங்கை நதியில் 60 சதவீத தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்கு திருப்ப வேண்டும். அதற்கு நதிநீர் இணைப்புதான் ஒரே வழி. இதுபற்றி நிச்சயம் புதிய பிரதமரிடம் பேசுவேன்.

மேலும் காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து தமிழத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யுமாறும் வலியுறுத்துவேன்.

சொந்த மக்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையா.., " என்றார்.

 

கமலின் உத்தம வில்லன் செப் 10-ல் ரிலீஸ்... அப்போ விஸ்வரூபம் 2?

சென்னை: கமலின் உத்தம வில்லன் செப் 10-ல் ரிலீஸ்... அப்போ விஸ்வரூபம் 2?  

லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாசன் ‘உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார்.

‘விஸ்வரூபம் 2' படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசன் எழுத, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

உத்தம வில்லன் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்ததாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

இதையடுத்து இன்று உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாஸனின் பெரிய பட்ஜெட் படமான விஸ்வரூபம் 2 படம் ரிலீசாவது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அடுத்த படமான உத்தம வில்லன் ரிலீஸ் பற்றி செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கப்பல்... ஷங்கர் உதவியாளர் இயக்கும் முதல் படம்!

மெகா இயக்குநர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவரான கிரிஷ் இயக்குநராகிறார், கப்பல் படத்தின் மூலம்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் அடுத்தடுத்து இப்போது இயக்குநர்களாக மாறி வருகிறார்கள்.

சமீபத்தில்தான் ராஜா ராணி மூலம் இயக்குநரானார் அட்லி.

கப்பல்... ஷங்கர் உதவியாளர் இயக்கும் முதல் படம்!

இப்போது மேலும் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரின் பெயர் கார்த்திக் ஜி.கிரிஷ். ஷங்கரிடம் ‘சிவாஜி', ‘எந்திரன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

இவர் இப்போது கப்பல் என்ற படத்தை இயக்குகிறார். இன்று இப்படத்தின் லோகோவை அறிமுகப்படுத்திய அவர், "அதில் தெரியும் வண்ணக் கலவை படத்தில் வரும் எண்ணற்ற உணர்ச்சிகளை படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கும்," என்றார்.

மேலும் படத்தின் தலைப்பான ‘கப்பல்' கதையின் போக்கையும், கதையில் வரும் கதாபாத்திரங்களின் பயணத்தையும் எதிரொலிக்கும் என்றார்.

இப்படத்தை ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைக்கிறார்.

படத்தின் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

சாயங்காலம் 6 மணிக்கு மேல சினிமா பார்க்கலாம்!

சென்னை: தேர்தலையொட்டி இன்று பகலில் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அல்லவா...

இன்று மாலை 6 மணிக்குப் பிறகு அனைத்து அரங்குகளிலும் சினிமாக்கள் திரையிடப்படும்.

சாயங்காலம் 6 மணிக்கு மேல சினிமா பார்க்கலாம்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று நடக்கும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து திரையரங்குகளின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள், தயாரிப்புப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

ஆனால் தேர்தல் நேரம் முடிந்த பிறகு 6 மணிக்குப் பிறகு திரைப்படங்களை தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளன திரையரங்குகள்.

அதன்படி இன்று மாலைக் காட்சி 6.30 மணிக்கும், இரவுக்காட்சி 10 மணிக்கும் நடக்கிறுது. 16 திரைகள் கொண்ட மாயாஜால் போன்ற அரங்குகளில் மாலை 6 மணி தொடங்கி இரவு 10.45 மணி வரை தொர்ந்து காட்சிகள் நடைபெறுகின்றன.

 

விவேக்கின் 'நான்தான் பாலா'... கவுதம் மேனன் பாராட்டு!

விவேக் ஹீரோவாக நடித்துள்ள நான்தான் பாலா படத்தைப் பார்த்த கவுதம் மேனன், விவேக்கைப் பாராட்டியுள்ளார்.

டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நான்தான் பாலா'. இந்த படத்தில் நாயகனாக புதிய பரிமாணத்தில் காமெடி நடிகர் விவேக் நடித்துள்ளார்.

விவேக்கின் 'நான்தான் பாலா'... கவுதம் மேனன் பாராட்டு!

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கண்ணன் இயக்கியுள்ளார். வெங்கட் க்ரிஷி என்பவர் இசையமைக்கிறார். மணவாளன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது நான்தான் பாலா. இந்த நிலையில் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.

படமும், விவேக்கின் நடிப்பும் சிறப்பாக இருந்ததாக அவர் விவேக்கிடம் தெரிவித்துள்ளார்.

பாலக்காட்டு மாதவன் என்ற படத்திலும் விவேக் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்தப் படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அந்த வகையில் இது விவேக்குக்கு ஸ்பெஷலான ஆண்டு. ஒரே ஆண்டில் அவர் ஹீரோவாக நடித்த இரு படங்களும் திரைக்கு வருகின்றனவே!

 

ராஜமவுலி... உங்க ஷூட்டிங்கைப் பார்க்க ஆசையா இருக்கு.. எனக்குச் சொல்லி அனுப்புங்க! - ரஜினி

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலியின் ஷூட்டிங்கைப் பார்க்க ஆசையாக உள்ளதென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சரித்திரக் கதைகளுக்கு புது வண்ணம் கொடுத்தவர் இயக்குநர் ராஜமவுலி. இவரது மகதீரா பெற்ற மாபெரும் வெற்றி சினிமாவுலகம் அறிந்ததே.

ராஜமவுலி... உங்க ஷூட்டிங்கைப் பார்க்க ஆசையா இருக்கு.. எனக்குச் சொல்லி அனுப்புங்க! - ரஜினி

தற்போது பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க பாகுபலி என்ற சரித்திர படத்தை இயக்கி வருகிறார். பெரிய அரண்மனை செட்கள் அமைத்து இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் இந்த படம் வருகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கைத்தான் ரஜினி பார்க்க விரும்பி, ராஜமவுலியிடம் கேட்டுள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த விக்ரமசிம்ஹா அறிமுக விழாவுக்கு வந்த ராஜமவுலி, அங்கு ரஜினியைச் சந்தித்தது குறித்து இப்படிக் கூறியுள்ளார்:

ரஜினி என்னைப் போன்ற பலருக்கு காட்பாதர் மாதிரி. அவரைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் பிரமிப்பாக இருந்தது. அவருடன் நெருக்கமாக நின்று படமெடுத்துக் கொண்டது சந்தோஷமாக தருணம். அவரிடம் எவ்வளவோ பேச நினைத்தும், என் உதடுகள் பேச மறந்து, அவரைப் பார்த்து சிரிக்க மட்டும் செய்தன.

சரித்திரப் படங்களை பிரமாண்டமாகவும், ஜனரஞ்சகமாகவும் எடுக்கிறீர்கள் என்று என்னைப் பாராட்டினார் ரஜினி. அதுமட்டுமல்ல, உங்கள் படப்பிடிப்பு அரங்கை காண எனக்கு ஆர்வமாக இருக்கிறது. எனவே படப்பிடிப்பு நடக்கும் போது என்னை கூப்பிடுங்கள் என்றார்.

ரஜினி இப்படிச் சொன்னதை என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்."

 

விழாவுக்கு வராத நயன்தாரா... வெறுப்பில் அனாமிகா குழு!

அனாமிகா படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்ததால் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது அனாமிகா படக் குழு

இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய ‘கஹானி' படம்தான் தெலுங்கில் அனாமிகாவாகத் தயாராகி வருகிறது. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வருகிறது.

விழாவுக்கு வராத நயன்தாரா... வெறுப்பில் அனாமிகா குழு!  

வித்யாபாலன் நடித்த பாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலா படத்தை இயக்கியுள்ளார்.

‘அனாமிகா' தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் கூறியிருந்தனர். காரணம், அதற்கு முன்பு சென்னையில் நடந்த நீ எங்கே என் அன்பே ட்ரைலர் வெளியீட்டு விழாவையும் நயன்தாரா புறக்கணித்துவிட்டார்.

நிச்சயம் வந்துவிடுவார் என்று இயக்குநர் காத்திருக்க, கடைசி வரை அனாமிகா விழாவுக்கும் நயன்தாரா வரவே இல்லை.

இந்த முறை விஷயத்தை லேசில் விடுவதாக இல்லை அனாமிகா இயக்குநரும் தயாரிப்பாளரும்.

நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை நாடியுள்ளார்களாம்.

 

திருமணத்துக்குப் பிறகு அமலா பால் நடிக்கமாட்டார்?

இயக்குநர் விஜய்யைத் திருமணம் செய்த பிறகு, படங்களில் தொடர்ந்து நடிக்கமாட்டார் அமலா பால் என்று கூறப்படுகிறது.

விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 7-ம் தேதி நடக்கிறது. ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்குப் பிறகு அமலா பால் நடிக்கமாட்டார்?  

திருமணத்துக்கு முன் ஒப்புக் கொண்ட படங்களை முடித்து கொடுப்பதில் மும்முரமாக உள்ளார் அமலாபால்.

இவர் தற்போது தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடிக்கிறார். பார்த்திபன் இயக்கும் கதை, திரைக்கதை, வசனம் இயக்கும் படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் படங்கள் கைவசம் உள்ளன.

இந்தப் படங்களையும் அடுத்த மாதத்துக்குள் முடித்துக் கொடுத்துவிடப் போவதாகக் கூறியுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

ஆனால் இயக்குநர் விஜய் குடும்பத்தினர், அமலா பால் தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லையாம். எனவே நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார் என்றே கூறப்படுகிறது.

 

கோச்சடையான் விவகாரம்... ஒதுங்கி நிற்கும் ரஜினி... திட்டமிட்டபடி படம் வருமா?

கோச்சடையான் படம் அறிவித்தபடி மே 9-ம் தேதி வெளிவருமா... இல்லையா என்ற கேள்வி முன்னிலும் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

காரணம்... படத்தின் விளம்பரங்கள் கடந்த மூன்று தினங்களாக நிறுத்தப்பட்டுவிட்டன.

தயாரிப்பாளர் முரளி மனோகர் ஏற்கெனவே தரவேண்டிய ரூ 38 கோடியை எடுத்து வைத்தால்தான் ஆச்சு என முன்னிலும் உறுதியாக நிற்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

கோச்சடையான் விவகாரம்... ஒதுங்கி நிற்கும் ரஜினி... திட்டமிட்டபடி படம் வருமா?

முரளி மனோகர் ஒன்றும் பணத்துக்கு பஞ்சமுள்ள நபர் அல்ல. அவருடைய நிறுவனம் சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள பொது நிறுவனம் ஆகும். தமிழகமெங்கும் 12க்கும் அதிகமான திரையரங்குகளை சொந்தமாகவும் லீஸ் அடிப்படையிலும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஈராஸ் நிறுவனம் சார்பாகத்தான் கோச்சடையானையும் தயாரித்துள்ளார்.

இப்போது பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பணத்தில் ஒரு பைசா கூட இப்போது தராவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் ரஜினியை ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுங்கள் போதும் என்றும் விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த விநியோகஸ்தர்களிடம் பாபா, குசேலனில் ரஜினி நிறைய சங்கடங்களை அனுபவித்துவிட்டார்.

எனவே கோச்சடையான் படம் பிஸினஸைத் தொடங்கிய அடுத்த கணமே, ரஜினி கறாராகச் சொன்னது, 'படத்தின் பைனான்ஸ் பிரச்சினை, ரிலீஸ், விநியோகஸ்தர்களிடம் விலை பேசுவது என எதிலும் நான் தலையிட மாட்டேன்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஜஸ்ட் நான் ஒரு நடிகன். அவ்ளோதான்..." என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இப்போதுதான் என்றில்லை, ஒவ்வொரு படத்தை ஆரம்பிக்கும்போதும், இதையும் அக்ரிமெண்டில் சேர்த்துக்கங்க என்று கூறுவது ரஜினியின் வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது முரளி மனோகருக்கு ஒரு ஒரே வாய்ப்பு... பணத்தை செட்டில் செய்துவிட்டு படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்வதுதான். அதே நேரம் மே 9-ம் தேதி படத்தை வெளியிட வேண்டுமானால் நாளைக்குள் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

என்ன செய்யப் போகிறார்கள்?

 

'முத்திரை முகாம்' : நடிகர் ஆதி நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்னை: தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு முகாமை 'முத்திரை முகாம்' : நடிகர் ஆதி நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!  

இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் முதல் விழிப்புணர்வு முயற்சி 'முத்திரை முகாம் - வாக்கு பதிவுக்கான விழிப்புணர்ச்சி' என்ற பெயரில் நடத்தப்பட்டது.

நாங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் இந்த முகாம் நடத்தது.

இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் "நம் எதிர்காலம் உங்கள் கையில் - சிந்தித்து வாக்களிப்பீர்" என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகியோரும் பங்கேற்று ஒத்துழைத்தனர்.

 

கவர்ச்சிப் புயலாக மாறும் இளம் நடிகை

சென்னை: இத்தனை நாட்களாக கவர்ச்சிக்கு நோ சொன்ன நித்யமான நடிகை இனி அதிரடியாக கவர்ச்சியில் இறங்க முடிவு செய்துள்ளாராம்.

நடிப்புக்கு பெயர் போன நித்யமான நடிகை கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார். ஆளும் சற்று பூசினாற் போல் உள்ளதால் அவரது உடல் வாகுக்கு கவர்ச்சி ஒத்து வராது என்று கூறி வந்தார்.

இந்நிலையில் சக நடிகைகள் ஆளாளுக்கு போட்டி போட்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கிறார்கள். அவர்களின் மார்க்கெட்டும் எகிறுகிறது. இதை பார்த்த நடிகை இனியும் போர்த்திக்கிட்டே இருந்தால் வேலைக்கு ஆகாது. நாமும் கவர்ச்சி கோதாவில் குதித்துவிட வேண்டியது தான் என்று முடிவு செய்துள்ளாராம்.

தமிழ், மலையாளம் தவிர்த்து தெலுங்கு படங்களிலும் நடிக்கும் அவரின் புதிய அவதாரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

No such pipe, or this pipe has been deleted

This data comes from pipes.yahoo.com but the Pipe does not exist or has been deleted.
 

கோச்சடையான் பிஸினெஸ்... உண்மை நிலவரம் என்ன?

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் வரும் மே 9-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அந்தப் படம் குறித்து பல்வேறு எதிர்மறைச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஒருபக்கம், படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தன் முந்தைய படங்களின் நஷ்டத்துக்குத் தரவேண்டிய பாக்கித் தொகைக்காக திரைப்பட கூட்டமைப்பு நெருக்கடி தர ஆரம்பித்திருப்பதாக செய்திகள்.

இன்னொரு பக்கம், படத்தின் வர்த்தகம் குறித்து. இந்தப் படம் இன்னும் முழுசாக விற்கப்படவில்லை என்றும், அதிக விலை சொல்வதால் வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குவதாகவும் கூறப்பட்டது.

கோச்சடையான் பிஸினெஸ்... உண்மை நிலவரம் என்ன?

இப்போது உண்மை நிலவரம் குறித்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இழப்பீட்டுக்கு பதில் படத்தைக் கேட்கும் விநியோகஸ்தர்கள்..

விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பினர் கேட்கும் நஷ்ட ஈட்டுத் தொகையைத் தர முரளி மனோகர் தயாராகத்தான் இருக்கிறாராம். ஆனால் அவர்களோ, நஷ்ட ஈட்டுக்குப் பதில் கோச்சடையான் படத்தைத் தருமாறு கேட்கிறார்களாம்.

எனவே, 'நீங்கள் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். படத்தைத் தர மாட்டேன். நானே சொந்தமாக வெளியிட்டுக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டாராம் முரளி மனோகர்.

எனவே கோச்சடையான் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.. திட்டமிட்டபடி மே 9-ம் தேதி படம் வெளியாகிவிடும். தமிழகத்தில் மட்டும் 750 அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்படும் என்கிறார்கள்.

விற்பனையாகவில்லையா...?

கோச்சடையான் படம் விற்பனையாகவில்லை என்பதையும் மறுக்கிறார் ஒரு பிரபல விநியோகஸ்தர்.

அவர் கூறுகையில், 'இந்தப் படத்துக்கு சற்று அதிக விலையைத்தான் முரளி மனோகர் நிர்ணயித்தார். அதைத் தர அனைவரும் தயாராக இருந்தாலும், ரஜினி எதிலும் தலையிட மறுப்பதால் தயங்குகின்றனர்.

ஆனால் இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் முரளி மனோகர், சொந்தமாக வெளியிடத் தயாராக இருக்கிறார். எனவே இதில் படம் விற்பனையாகவில்லை என்று கூற எதுவுமில்லையே," என்றார்.

கேயார் பேச்சு..

நிலைமை இப்படி இருக்க, கோச்சடையான் படம் சற்றுத் தாமதமாகத்தான் விற்பனையானது என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நேற்று கூறியிருப்பது மேலும் குழப்பத்தைக் கூட்டியுள்ளது.

 

என் கல்யாணத்துக்கு கிப்ட் வேணாம்... உங்கள் கருணை போதும்! : இது சின்மயி கண்டிசன்

சென்னை: விரைவில் மணநாள் காண இருக்கின்ற பாடகி சின்மயி தனது திருமணத்திற்கு யாரும் அன்பளிப்பு வாங்கி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

பிரபல சினிமாப் பாடகி சின்மயி. இவருக்கும், நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் வரும் மே 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மிகவும் எளிமையாக ஹோட்டல் ஒன்றில் திருமணத்தை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. தனது திருமண நாளில் வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்த சின்மயி, மற்றவர்களுக்கும் உபயோகப் படும் மாதிரியாக எதையாவது செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, தனது திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் போதே தயவு செய்து பரிசுப் பொருள் வாங்கி வர வேண்டாம் என தெரிவித்து விட்டாராம்.

என் கல்யாணத்துக்கு கிப்ட் வேணாம்... உங்கள் கருணை போதும்! : இது சின்மயி கண்டிசன்

ஆனால், பரிசுப் பொருள் வேண்டாம் என மறுத்த அதே சமயத்தில் மொய் எழுதக் கூடாது எனக் கூறவில்லை. காரணம் தனது திருமணத்திற்கு தர நினைக்கும் பணத்தை லடாக்கில் உள்ள 17 ஆயிரம் அடி பவுண்டேஷனுக்கு நிதியாக அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

இது தொடர்பாக சின்மயியின் தாயார் கூறும் போது, ‘இன்றைய விலைவாசியில் சாதாரண பூங்கொத்து என்பதன் விலையே ரூ 500ஐத் தொடுகிறது. மறுநாளே அந்தப் பூங்கொத்துக்கள் வாடி விடுகின்றன. இதனால் யாருக்கு என்ன பயன்?

அதனால் தான் சின்மயியின் திருமணத்தை உபயோகமாக இருக்குமாறு செய்ய வேண்டும் என யோசித்து இவ்வாறு திட்டமிட்டோம். இத்தகவலை திருமண அழைப்பிதழிலும் தெரிவித்துள்ளோம். நேரில் பார்ப்பவர்களிடமும் மறக்காமல் கூறி வருகிறோம்' என்றார்.

 

த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட விருது!

திருவனந்தபுரம்: மோகன்லால் - மீனா நடித்த த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘த்ரிஷ்யம்' மலையாள படம் இதுவரை எந்த மலையாளப் படமும் செய்யாத சாதனைகளைச் செய்துள்ளது.

த்ரிஷ்யம் படத்துக்கு கேரள அரசின் சிறந்த திரைப்பட விருது!

ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள் ஓடிய டைட்டானிக்கின் சாதனையை ‘திரிஷ்யம்' முறியடித்துள்ளது. அங்கு 100 நாட்களை தாண்டி இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

தற்போது ‘த்ரிஷ்யம்' படத்துக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளது. பிரபலமான சிறந்த படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘கிரைம் நம்பர் 89', ‘நார்த் 24 காதம்' போன்ற படங்களும் சிறந்த படத்துக்கான கேரள அரசு விருதை பெற்றுள்ளன.

சிறந்த நடிகருக்கான விருது பகத் பாசில், லால் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகை விருதை ஆன் அகஸ்டின் பெற்றுள்ளார்.

 

'ஐயம் சந்தானம்'... இது நடிகர் சந்தானத்தின் ட்விட்டர்!

சென்னை: ஹீரோ அவதாரமெடுத்திருக்கும் காமெடி சந்தானம், அடுத்து ட்விட்டர் களத்திலும் குதித்துவிட்டார்.

முன்பெல்லாம் ஒரு விஷயம் குறித்து நடிகர்களின் கருத்தை அறிய அவர்கள் வீட்டுக்குப் போய்க் காத்திருக்க வேண்டிய நிலை.

'ஐயம் சந்தானம்'... இது நடிகர் சந்தானத்தின் ட்விட்டர்!

ஆனால் இப்போது, அவர்களே தாங்கள் பல் துலக்குவதில் தொடங்கி, தேர்தலில் ஓட்டுப் போடுவது வரை அனைத்தைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள் ட்விட்டரில். அவ்வப்போது விதவிதமாக படங்கள் எடுத்தும் வெளியிடுகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் நாங்களே ட்விட்டரில் சொல்கிறோம். அதுவரை மீடியாக்காரர்கள் காத்திருக்கவும் என ஸ்டேட்மென்டே விடுகிறார்கள்.

சமூக வலைத் தளங்கள் அந்த அளவுக்கு சினிமாக்காரர்களுக்கு வசதியாக உள்ளது.

தமிழ் சினிமாவைப் பொருத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தவிர, மற்ற எல்லாரும் ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

இப்போது நடிகர் சந்தானமும் ட்விட்டரில் களமிறங்கியுள்ளார். @iamsanthanam என்ற பெயரில் அவரது ட்விட்டர் பக்கம் அமைந்துள்ளது.

என்னைப் பற்றியும் என் படங்கள் பற்றியும் என அஃபிஷியல் ட்விட்டர் பக்கத்தில் இனி தகவல்களைப் பகிர்ந்து கொள்வேன் என்று தகவலும் வெளியிட்டுள்ளார்.

அறிவித்த சில மணி நேரங்களில் 1000 பேருக்கு மேல் அவருக்கு பாலோயர்கள் வந்துள்ளனர். முதல் ட்வீட்டாக தனது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

 

கோச்சடையான் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்?

சென்னை: ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி தரக்கூடிய செய்தி இது. ஆம்.. கோச்சடையான் வெளியாவதில் மீண்டும் சிக்கல்.

மே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பரங்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுவிட்டன.

கோச்சடையான் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்?

காரணம்...? ரஜினியோ, சவுந்தர்யாவோ, ரவிக்குமாரோ அல்ல... படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்தான்!

இவர் ஏற்கெனவே எடுத்த, வெளியிட்ட சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடிகளை எடுத்து வைத்தால்தான் கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள்.

சில தினங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில், ரூ 35 கோடியில் பாதியை இந்த வாரம் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் முரளி மனோகர் இன்னும் பணம் தராததால், கோச்சடையான் விளம்பரங்களை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். இது ரஜினி படம் என்பதால் வெளிப்படையாக ரெட் போடாமல் பேசிக் கொண்டிருப்பதாக கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

நாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே 9-ல் வெளியாகும். காரணம், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய கால அவகாசம் வேண்டுமல்லவா...

பிரச்சினை தீருமா? என நகம் கடித்தபடி கவலையுடன் காத்திருக்கிறது கோச்சடையான் டீம்!

 

பாட்ஷா கதையைத்தான் சூர்யாவை வைத்து எடுக்கிறாரா லிங்கு?

ரஜினி நடித்த பாட்ஷா கதையைத்தான் சூர்யாவுக்கேற்ற மாதிரி மாற்றி அஞ்சானாக எடுக்கிறார் லிங்குசாமி என்று தகவல் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் அஞ்சான். சூர்யா - சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

பாட்ஷா கதையைத்தான் சூர்யாவை வைத்து எடுக்கிறாரா லிங்கு?

வரும் ஆகஸ்டில் வெளியாகவிருக்கும் அஞ்சானின் கதை குறித்து மீடியா பரபரப்பு கிளப்ப ஆரம்பித்துள்ளது.

லிங்குசாமிக்கு ரஜினியின் பாட்ஷா படம் மீது எப்போதும் தனி ஈர்ப்பு. பல மேடைகளில், பாட்ஷா மாதிரி ஒரு ஆக்ஷன் படம் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.

அஞ்சான் படத்தை சூர்யாவுக்கு ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட லிங்கு, கிட்டத்தட்ட பாட்ஷாவின் பாணியிலேயே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம்.

அதனால்தான் படத்தின் பெரும்பகுதியை மும்பையிலேயே வைத்து எடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 

பிரச்சாரத்திற்கு அழைத்த தேசிய கட்சி: தெறித்து ஓடிய நடிகை

சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம்.

ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய கட்சி ஒன்று நயன நடிகையை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டது. இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் பெரும்புள்ளி ஒருவரை தொடர்பு கொண்டு நடிகையிடம் பேசுமாறு கூறினார்களாம்.

அவரும் நயன நடிகையை தொடர்பு கொண்டு தேசிய கட்சி ஒன்று உங்களை பிரச்சாரத்திற்கு அழைக்கிறது. 10 படத்திற்கான சம்பளத்தை தர அவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ பிரச்சாரம் செய்ய முடியாது என்னை விட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை இதனால் ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் இருந்து தனக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று நடிகைக்கு பயம். உடனே தன்னுடன் நடித்து அடுத்த படத்திலும் நடிக்கும் அரசியல் வாரிசு ஹீரோ கம் தயாரிப்பாளரை அணுகி நடிகை விஷயத்தை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதுடன் கொதிப்படைந்த ஆந்திர பெரும்புள்ளிகளின் கோபத்தை தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் தணித்துவிட்டாராம்.

 

மான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை: சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்

சென்னை: மான் கராத்தே படத்தில் குத்துச் சண்டையை தப்புத் தப்பாக எடுத்து இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் விவரம்:

மான் கராத்தேயில் தப்புத்தப்பா குத்துச் சண்டை: சிவகார்த்திகேயன் மீது பரபரப்பு புகார்

நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி குழு நடத்தி வருகிறேன்.

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள மான் கராத்தே படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தப்புத் தப்பாக இந்த விளையாட்டைக் காட்டியுள்ளனர். அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெறவில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.

எனவே மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மான் கராத்தே படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

நடிப்பா.. இசையா... என்ன பண்ணலாம்? கையில் ‘பென்சிலை’ பிடித்தபடி சிந்திக்கும் நடிகர்

சென்னை: தனது இசையால் பிரபலமானவர் அந்த ஒளிமயமான இசையமைப்பாளர். ஆனால், தோற்றம் மற்றும் வயது காரணமாக நடிக்கும் வாய்ப்பு அவரது வாசல் கதவைத் தட்டியது.

மணமான பிறகு தற்போது பள்ளி மாணவராக பிள்ளைகள் எழுதும் பொருள் ஒன்றின் பெயரால் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக திவ்யமான நடிகை.

நடிக்க ஆரம்பித்த பிறகு, தற்போது அவரது கவனம் முழுவதும் அதிலேயே இருக்கிறதாம். எப்போதாவது காதுக்கும் விருந்தளிக்கும் இசைச் சேவையை ஆற்றுகிறாராம்.

இதை கவனித்த அவரது நலம் விரும்பிகள், ‘நடிப்பா, இசையா, இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடு. ஒன்று முழுநேர நடிகனாகி விடு அல்லது மீண்டும் இசையமைப்பாளராகி விடு. அதை விட்டுட்டு இப்படி ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணம் செய்ய நினைப்பது உனது எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என அறிவுரை கூறுகிறார்களாம்.

இரண்டில் எதை தேர்ந்தெடுக்கலாம் என சிந்தித்து வருகிறாராம் சம்பந்தப்பட்ட நடிகனான இசையமைப்பாளர்.

 

நண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா? - கவுதம் கார்த்திக் விளக்கம்

சென்னை: என்னமோ ஏதோ படப்பிடிப்பில் நண்பர்களுடன் போய் தொந்தரவு செய்ததாக வந்த செய்திகளை மறுத்தார் நடிகர் கவுதம் கார்த்தி.

ரவிபிரசாத் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் படம் என்னமோ ஏதோ. இதில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் மற்றும் நிகிஷா பட்டேல் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நண்பர்களுடன் போய் படப்பிடிப்பில் தொந்தரவு செய்தேனா? - கவுதம் கார்த்திக் விளக்கம்

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ரவிபிரசாத் லேபில் நடந்தது.

படத்தின் இயக்குநர் ரவி தியாகராஜனிடம், தலைப்பு குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "படத்தில் என்னமோ ஏதோ இருக்கிறது என்று ரசிகர்கள் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இளைஞர்கள் மனதில் உடனே பதிய வேண்டும் என்ற நினைப்பில் இந்தத் தலைப்பை வைத்தோம். மற்றபடி விசேச காரணங்கள் இல்லை," என்றார்.

ஹீரோ கவுதம் கார்த்திக்கிடம், இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது உங்கள் நண்பர்களையெல்லாம் வரவழைத்து, ஷூட்டிங்கைக் கெடுத்துவிட்டதாகவும், இதனால் தயாரிப்பாளர் உங்கள் மீது கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறதே...? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ரவிபிரசாத், "அப்படி எதுவும் நடக்கவில்லை. நானே இப்போதுதான் இந்த தகவலை கேள்விப்படுகிறேன், என்றார்.

பின்னர் ஹீரோ கவுதம் கார்த்திக் கூறுகையில், "இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால் என் படப்பிடிப்புகளுக்கு எனது மிக நெருங்கிய நண்பன் - என் மேனேஜர்- ஒருவரை அழைத்துச் செல்வது வழக்கம். அவரிடம் ஏதாவது கேட்டு அவர் மறுத்த கோபத்தில் இப்படி தகவலைப் பரப்பியிருக்கலாம்," என்றார்.

 

இயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்!

இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் திருமணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இருவருக்கும் வரும் ஜூன் 7-ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தமும், ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடக்கிறது.

இயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்!

வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலா பால், விஜய்க்கு அறிமுகமானது தெய்வத் திருமகள் படத்தில். அந்தப் படத்திலிருந்தே இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தனர்.

இந்த விஷயத்தை அப்போதே மோப்பம் பிடித்துவிட்ட மீடியா, தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது. ஆனால் இருவருமே அப்போது உறுதியாக மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சைவம் இசை வெளியீட்டு விழாவில், கிட்டத்தட்ட விஜய்யின் மனைவியைப் போலவே நெருக்கமாக வளைய வந்தார் அமலா. விசாரித்ததில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பது தெரிய வந்தது.

இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாக வேறு வழியின்றி, காதலையும் திருமணத்தையும் ஒப்புத் கொண்டனர் இருவரும். அதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பதாகவும் கூறியிருந்தனர்.

சொன்னபடியே இன்று அறிவித்துள்ளனர்.

அதன்படி, இருவருக்கும் கொச்சியில் நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடக்கிறது. மோகன்லால், மம்முட்டி உள்பட மலையாள திரையுலகினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

சென்னையில் மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் ஜூன் 12-ம் தேதி திருமணம் நடக்கிறது.

 

என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல! - நடிகர் உதயா

2000-ஆண்டில் திருநெல்வேலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கிறதா... அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் உதயா. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன். இயக்குநர் விஜய்யின் அண்ணன்.

இந்த பதினான்கு ஆண்டுகளில் அவரும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ராரா என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரித்து நடித்தார். இப்போது ஆவிகுமார் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

என்ன ரோல் கொடுத்தாலும் பண்ணுவேங்க.. ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கல! - நடிகர் உதயா

நாளை பிறந்த நாள் கொண்டாடும் உதயா, அதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து, சினிமா கேரியரில் தான் எடுத்திருக்கும் புதிய முடிவைச் சொன்னார்.

அதாவது இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை.. கிடைக்கிற நல்ல வேடங்களில் நடிப்பதுதான் அந்தப் புது முடிவாம்.

அவர் மேலும் கூறுகையில், "ஆவி குமார் ஒரு வித்தியாசமான கதை. என் வேடமும் இன்னும் வித்தியாசமாக இருக்கும்.

வெறும் பேய்ப்படம் என்று சொல்லிவிட முடியாது. அதைத் தாண்டி, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்.

எனக்குன்னு ஒரு இடம் வேணும் சினிமாவில. அது ஹீரோன்னு இல்ல... எந்த நல்ல வேடமாக இருந்தாலும் ஓகே. வில்லனா கூட நடிக்க தயார்," என்றார்.

இயக்குநர் விஜய்யின் காதல் திருமணம் பற்றிக் கேட்டபோது, "தம்பி காதல் விவகாரம் எங்களுக்கு முன்னாலேயே தெரியும். எங்கள் வீட்டில் முதன் முதலில் காதல் திருமணம் செய்யப்போவது அவன்தான்," என்றார் உதயா.

 

மோடி சந்திப்பு எஃபெக்ட்: விளம்பரங்களில் விஜய் படத்தை மறைக்க உத்தரவிட்ட தேர்தல் கமிஷன்!

மோடி சந்திப்பு எஃபெக்ட்: விளம்பரங்களில் விஜய் படத்தை மறைக்க உத்தரவிட்ட தேர்தல் கமிஷன்!

கோவை: கோவையில் வைக்கப்பட்டிருந்த நகைக்கடை விளம்பரங்களில் இடம்பெற்ற நடிகர் விஜய்யின் படங்களை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடந்த வாரம் கோவைக்குப் போய்ச் சந்தித்துவிட்டு வந்தார் விஜய்.

இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை என்று விஜய் சொன்னாலும், தேர்தல் ஆணையம் இதனை அரசியல் சந்திப்பாகவே பார்க்கிறது.

விஜய் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார் எனத் தீர்மானித்து விட்டது.

விஜய் பிரபலமான ஒரு நகைக்கடைக்கு விளம்பர தூதராக உள்ளார். அவர் அந்த கடைக்காக தோன்றிய விளம்பரங்கள் இடம்பெற்ற பலகைகள் கோவை நகர் முழுவதும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த விளம்பரங்களில் உள்ள நடிகர் விஜய்யின் முகத்தை மறைத்து விடுமாறு கோவை மாநகர திட்ட அமைப்பு அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த விளம் பரத்தின் ஏஜன்சியை தொடர்பு கொண்டு விளம்பரத்தில் உள்ள விஜய் படத்தை மறைக்குமாறு உத்தரவிட்டார் அதிகாரி.

இப்போது கோவை நகர் முழுவதும் வைக்கப் பட்டிருந்த நகைக்கடை விளம்பரத்தில் உள்ள நடிகர் விஜய் படங்களை மறைத்து விட்டனர்.

 

அஜீத் படத்தில் மீண்டும் விவேக்

அஜீத்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார்.

கெளதம் மேனன் இயக்கத்தில், ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

அஜீத் படத்தில் மீண்டும் விவேக்

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்கிறார்.

இதற்கு முன்பு கிரீடம் படத்தில் அஜித்-விவேக் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல கிட்டதட்ட 13 வருடங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் விவேக் நடிக்கிறார். 2001-ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘மின்னலே' படத்தில் விவேக்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு கவுதம் மேனன், அஜீத்துடன் கைகோர்க்கிறார் விவேக்.

 

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

கிராமப் பிண்ணனியில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ் எழில். தேசிங்கு ராஜாவுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார் ஸ்ரீதிவ்யா!

இப்போது சிகரம் தொடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, எழில் படத்துக்காக முற்றிலுமாக தன்னை மாற்றிக் கொள்ளவிருக்கிறாராம்.

விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கியும் கிராமப் பின்னணியில் அமைந்ததுதான்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் எழில் கூறுகையில், "இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் படம். வழக்கமான கமர்ஷியல் விஷயங்களும் இந்தப் படத்தில் உண்டு. தஞ்சைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்குகிறோம். எம்எஸ் பாஸ்கரின் மகனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு.

மெல்லிசைக் கச்சேரி நடத்தும் எம்எஸ் பாஸ்கர் குழுவில் எதிர்பாராமல் பாடகராக நுழையும் விக்ரம் பிரபு, ஒரு பெண்ணில் காதலில் விழுகிறார்... ஆனால் அந்தப் பெண் ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கிறார்.. எனப் போகிறது கதை. அடுத்த மாதமே ஷூட்டிங் தொடங்கிவிடுவோம்," என்றார்.