தெனாலிராமனில் யாரையும் வடிவேலு விமர்சிக்கவோ கிண்டலடிக்கவோ இல்லை - இயக்குநர்

சென்னை: தெனாலிராமன் படத்தில் கிருஷ்ணதேவராயரை வடிவேலு இழிவுபடுத்தவில்லை என்று இயக்குநர் யுவராஜ் தயாளன் தெரிவித்துள்ளார்.

வடிவேலு நடிக்கும் ‘தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தணிக்கை குழு அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார்.

தெனாலிராமனில் யாரையும் வடிவேலு விமர்சிக்கவோ கிண்டலடிக்கவோ இல்லை - இயக்குநர்

இப்படத்தில் வடிவேலு தெனாலிராமனாகவும், கிருஷ்ண தேவராயராகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்புக்கு தெனாலிராமன் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "தெனாலிராமன் படத்துக்கு வீண் சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி இருப்பதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்க்கின்றன. ஆனால் இந்த படத்தில் கிருஷ்ணதேவராயர் பற்றி காட்சிகளே இல்லை. வடிவேலும் கிருஷ்ண தேவராயரை விமர்சிக்கவில்லை. இந்த படம் தெனாலிராமன் பற்றிய கதை.

படத்தை எதிர்ப்பவர்களுக்கு திரையிட்டுக் காட்ட இருக்கிறேன். படத்தை பார்க்காமலேயே எதிர்ப்புகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தெனாலிராமன் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் எந்தவொரு காட்சியையும் நீக்காமல் ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.

வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிக்கிறார். படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு படம் ரிலீசாகும் நேரத்தில் எதிர்ப்பு கிளம்புவது இப்போதைய உத்தியாகிவிட்டது," என்றார்.

 

கமல் - வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்

டெல்லி: நடிகர் கமல்ஹாஸன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு இன்று 2014-ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்.

நடிகர் கமல் ஹாசன் மற்றும் வைரமுத்துவுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.

கமல் - வைரமுத்துவுக்கு பத்மபூஷண் விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதன்படி கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார். கவியரசு வைரமுத்துவுக்கும் இவ்விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

 

அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு

சென்னை: தமிழ் இனத்தை இழிவாகச் சித்தரிப்பதாக உணர்வாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட 'இனம்' படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறபுவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை:

"இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.

அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு

உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.

தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.

அப்படி ஒரு சினிமா நேசனாகவே 'இனம்' படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.

அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.

ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.

எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க 'இனம்' படத்தை நான் நிறுத்துகிறேன். 'திருப்பதி பிரதர்ஸ்' சார்பாக வெளியிடப்பட்ட 'இனம்' திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்," என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

 

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்!

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவரை மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தயாரானார்.

ஆனால் இப்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளது சினிமா ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

 

மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பில் நாம் தமிழர் முற்றுகை.. படப்பிடிப்பு ரத்து!

மும்பை: சர்ச்சைக்குரிய இனம் படத்துக்கு எதிராக மும்பையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய முற்றுகை காரணமாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இனம் திரைப்படம் தமிழ் உணர்வாளர்களை கொதிப்படை வைத்துள்ளது. அந்தப் படம் முழுக்க தமிழ் ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சிகள், தமிழர்களை இழிவாகச் சித்தரிக்கும் காட்சிகள், ராஜபக்சேயின் ராணுவம் நடத்திய இனப்படுகொலையை நியாயப்படுத்தும் காட்சிளே நிறைந்திருக்கின்றன.

மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பில் நாம் தமிழர் முற்றுகை.. படப்பிடிப்பு ரத்து!

இந்தப் படத்துக்கு எதிராக வைகோ மிகக் கடுமையான அறிக்கை வெளியிட்டு எல்லோரையும் அதிர வைத்தார். அடுத்த நாளே படத்தை அனைத்து திரையரங்குகளிலிருந்தும் எடுத்துவிடுவதாக லிங்குசாமி அறிவித்தார்.

இந்நிலையில், லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியாகவிருக்கும் மற்ற படங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உலகத் தமிழர் அமைப்புகள் எடுத்துள்ளன.

குறிப்பாக இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் மற்றும் லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கும் உத்தம வில்லன் போன்ற படங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ஷூட்டிங் மும்பையின் விடி பகுதியில் நடந்து வருகிறது. இந்த விஷயம் தெரிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு சென்று பிற்பகல் 3 மணிக்கு படக்குழுவை முற்றுகையிட்டனர்.

படக்குழுவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழினத்தைக் கொச்சைப்படுத்தும் இனம் படத்தைத் தயாரித்த லிங்குசாமியை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் படப்பிடிப்பை ரத்து செய்தார் லிங்குசாமி.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த நடிகர் சூர்யா அந்த இடத்திலிருந்து உடனே வெளியேறினார்.

இனத்தைக் காட்டிக் கொடுத்து பணம் பார்க்க முயற்சிக்கும் கூட்டத்தில் லிங்குசாமியும் சேர்ந்தது வருத்தத்தைக் கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில நிர்வாகி பொன் கருணாநிதி தெரிவித்தார்.

இனம் படம் அனைத்து திரையரங்குகளிலிருந்தும் தூக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நேரத்தில் இரண்டா?: இயக்குனரை பார்த்து காண்டாகும் ஹீரோக்கள்

சென்னை: ஒரு இடத்தில் இருக்காதவர்களின் பெயரில் படம் எடுத்த கனி இயக்குனருக்கும், 2 இளம் நாயகிகளுக்கும் இடையே நல்ல நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

ஒரு இடத்தில் இருக்காதவர்களின் பெயரில் படம் எடுத்த கனி இயக்குனர் எந்த கிசுகிசுவிலும் இதுவரை சிக்காமல் இருந்தார். அண்மையில் அவர் எடுத்த படம் ரிலீஸாகாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து அவர் நான் உயிருடன் தான் இருக்கிறேன், அது வெறும் வதந்தி என்று தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் அவருடைய பெயர் ஒரு நடிகையுடன் சேர்ந்து அடிபடுகிறது. அவர் அடிக்கடி பெங்களூர் செல்வதாகவும் அங்கு அவர் நேராக நிற்கும் படத்தில் நடித்த கினி நடிகை வீட்டில் தான் தங்குவதாகவும் சாண்டல்வுட்டில் பேச்சாக கிடக்கிறது. இதற்கிடையே மில்க் நடிகை வேறு பேட்டிக்கு பேட்டி கனியை புகழ்ந்து தள்ளுகிறாராம்.

இப்படி இந்த கனி ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோயின்களோடு நெருக்கமாக உள்ளாரே என்று பல ஹீரோக்கள் வயித்தெரிச்சலில் உள்ளார்களாம்.

 

தோலில் அலர்ஜி: இறால் சாப்பிட வேண்டாம்... டாக்டர்கள் அட்வைஸால் நயன்தாரா சோகம்

சென்னை: தோலில் உண்டாகும் அலர்ஜி காரணமாக இனி இறால் சாப்பிட வேண்டாம் என நடிகை நயன்தாராவுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்களாம்.

நயன்தாராவுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று இறால் குழம்பு. தினமும் உணவோடு இறால் இருந்தால் தான் நயன் சாப்பிடுவாராம். இது தெரிந்தே அவரது வெளியூர் படப் பிடிப்புகளிலும், படக்குழுவினர் தேடி அலைந்து இறால் குழம்பு வாங்கி வைத்து விடுவார்களாம்.

தோலில் அலர்ஜி: இறால் சாப்பிட வேண்டாம்... டாக்டர்கள் அட்வைஸால் நயன்தாரா சோகம்

ஆனால், தொடர்ந்து சொந்த வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்து வந்த நயனுக்கு தற்போது சாப்பாட்டிலும் சோதனை வந்து விட்டது. அளவுக்கு அதிகமாக இறால் குழம்பை சாப்பிட்டதால் நயன்தாராவின் சருமத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதாம்.

எனவே, நயனுக்கு மிகவும் பிடித்த இறாலை இனி அறவே தொடக்கூடாது என தடை விதித்து விட்டார்களாம் டாக்டர்கள்.

இதனால் மீண்டும் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம்.

 

பெற்றோர் பேச்சையும் மீறி காதலுடன் சுற்றும் நடிகை: கவலையில் 'ஹீரோ' அப்பா

சென்னை: தன்னுடைய இளைய மகள் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் காதலில் விழுந்திருப்பது உத்தம வில்லனுக்கு கவலை அளித்துள்ளதாம்.

உத்தம வில்லன் நடிகரின் மூத்த மகள் பிசியான நடிகையாக உள்ளார். இந்நிலையில் இளைய மகள் உதவி இயக்குனராக இந்தி படங்களில் பணியாற்றி வந்தார். தாயுடன் மும்பையில் தங்கியிருக்கும் அவர் தற்போது சுள்ளான் நடிகர் நடிக்கும் இந்தி படத்தின் மூலம் நாயகியாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது தந்தையுடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் மகனை தீவிரமாக காதலிக்கிறாராாம். நடிக்க வந்ததும் காதலா, வளரும் நேரத்தில் இது தேவையா என்று அவரது தந்தையும், தாயும் கவலையில் உள்ளார்களாம். அவர்களுக்கு மகளின் காதல் பிடிக்கவில்லையாம். இதையடுத்து மகளை தந்தையும், தாயும் கண்டித்தார்களாம்.

ஆனால் அவர் தனது அக்கா போன்று இல்லை. தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாத குணம் உள்ளவர். அதனால் பெற்றோரின் பேச்சை காதில் வாங்காமல் காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

 

நள்ளிரவு பார்ட்டிகளில் ஆட்டம் போடும் தளபதி

சென்னை: தளபதி நடிகர் தற்போது நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு தூள் கிளப்புகிறாராம்.

தளபதி நடிகர் வீடு விட்டால் ஷூட்டிங், ஷூட்டிங் விட்டால் வீடு என்று இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது எல்லாம் நள்ளிரவு நேரங்களில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறாராம்.

நள்ளிரவு பார்ட்டிகள் என்றால் தளபதி எப்பொழுதும் பிரசன்ட் தானாம். பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இளம் ஹீரோ, ஹீரோயின்களுடன் விடிய விடிய செம ஆட்டம் போடுகிறாராம்.

தனது தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் வருத்தம் அடைந்த நடிகர் பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஆறுதல் தேடுகிறாராம்.

 

வெள்ளியங்கிரியில் மாயமான ஆர்ட் டைரக்டர்... இன்னும் கிடைக்கலை

கோவை:மகாசிவராத்திரி தினத்தன்று வெள்ளியங்கிரி மலைக்கு போன சினிமா ஆர்ட் டைரக்டர் மாயமாகி ஒருமாதமாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.

மதுபானக் கடை படத்தில் தன் விவசாய நிலத்தை டாஸ்மாக் கடை வைக்க கொடுத்துவிட்டு குடித்து குடித்து சாகும் விவசாயி கேரக்டரில் நடித்தவர் வினோ மிர்தாத்.

அவர்தான் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரும்கூட. திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோவுக்கு டிரக்கிங் டூர் எனப்படும் மலையேறும் பழக்கம் உண்டு. அடிக்கடி மலைக்கு சென்று வருவாராம்.

மகாசிவராத்தியில் பயணம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் பிப்ரவரி 27ந் தேதி கோவைக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக நண்பர்களிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

வழி தவறிய வினோத்

அடுத்த நாள் மதுபானக்கடை இயக்குனர் கமலக் கண்ணனுக்கு போன்செய்து "வழி தவறி வந்துட்டேன்"னு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது "எங்கே இருக்கேன்னு தெரியல ஏதாவது லேண்ட் மார்க் வந்ததும் போன் பண்றேன்"னு சொல்லியிருக்கிறார். அதன்பிறகு அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டதாம்.

தேடுதல் வேட்டை

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. நண்பர்கள், போலீசார், காட்டு இலாகா அதிகாரிகள் தேடியும் இதுவரை வினோவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லையாம்.

ஒரு மாதம் நிறைவு

வினோ காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதமாகிறது. அவர் தற்போது ஒன்பது குழி சம்பத், நீர் நிலம் காற்று படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஒருமாதகாலமாக அவரைக் காணாமல் அவரது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

நடிகை சீதாவின் தந்தை காலமானார்

சென்னை: பிரபல நடிகை சீதாவின் தந்தை பி.எஸ்.மோகன்பாபு இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76.

சீதாவின் தந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

நடிகை சீதாவின் தந்தை காலமானார்

இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் சீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்பு இறுதி சடங்குகள் இன்று மாலை 3.30 மணியளவில் போரூரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளது.

 

அதிமுகவில் எப்ப சேர்ந்தார் கார்த்தி?

சென்னை: நடிகர் கார்த்தி அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக ஃபேஸ்புக்கில் படம் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நடிகர்களில் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் எந்தக்கட்சிக்கும் ஆதரவு தருவதாக கூறியதில்லை.

ஆனால் விழுப்புரம் தனித்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து, நடிகர் கார்த்தி வாக்கு கேட்பது போல புகைப்படத்தை போட்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

அதிமுகவில் எப்ப சேர்ந்தார் கார்த்தி?

நடிகர் கார்த்தி சகுனி திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பார். வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வருவார் அந்த போட்டோவை எடுத்து இரட்டை இலையோடு ஒட்ட வைத்துவிட்டனர். ஆனால் இந்த விபரம் நடிகர் கார்த்திக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினருடன் நட்பு பாராட்டி வருபவர் முதல்வர் ஜெயலலிதா, அந்த நம்பிக்கையில் அதிமுகவினர், கார்த்தியின் படத்தை எடுத்து அதிமுகவிற்கு வாக்கு கேட்பது போல இணைத்து விட்டனர்.

ஃபேஸ்புக்கில் இதனைப் பார்த்த நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

'மோக்கியா'வை பார்த்து கடுப்பில் இருக்கும் ஹீரோக்கள்

சென்னை: மோக்கியா ஹீரோ அவதாரம் எடுத்துள்ளது அவருடன் நடித்த ஹீரோக்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து காமெடியில் கொடி கட்டிப் பறக்கிறார் மோக்கியா. சில படங்கள் ஹீரோவை விட அவருக்காக ஓடியது என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். இந்நிலையில் அவர் ஹீரோவாகவும் பதவி உயர்வு பெற்றுவிட்டார். ஹீரோவாகிவிட்டதால் ஜிம்மிக்கு சென்று கும்மென்று ஆகியுள்ளார்.

இந்நிலையில் அவருடன் நடித்த ஹீரோக்களுக்கு மோக்கியா ஹீரோவானது சுத்தமாக பிடிக்கவில்லையாம். காமெடியன்கள் ஹீரோவானால் காணாமல் போய்விடுவார்கள் என்று சில ஹீரோக்கள் மோக்கியாவிடம் தெரிவித்தார்களாம். மேலும் சில ஹீரோக்கள் மோக்கியாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்களாம். மோக்கியா ஹீரோவானதை அடுத்து தங்கள் படங்களில் பரோட்டா நடிகரை போடுமாறு கூறுகிறார்களாம் சில ஹீரோக்கள்.

ஹீரோக்களின் இந்த செயல் மோக்கியாவுக்கு தெரிய வந்துள்ளது. ஹீரோக்கள் காண்டுல இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் ஹீரோயின்களோடு பாட்டு பாடி டான்ஸ் ஆட நான் மட்டும் அவர்களுக்கு நண்பேன்டாவாகவே இருக்கணுமா என்கிறாராம் மோக்கியா. இப்படி தான் நான் சினிமாவில் நடிக்க வந்தபோது டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் எல்லாம் நடிக்க வந்துவிட்டான் என்று நக்கலடிதத்தார்கள். இப்போது காமெடியன் எல்லாம் ஹுரோவாகிவிட்டான் என்று கிண்டல் செய்கிறார்கள். நான் எப்படி காமெடியில் ஜெயித்தேனோ அதே போன்று ஹீரோவாகவும் ஜெயித்துக் காட்டுவேன் என்று மோக்கியா தனது நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.

 

ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கவில்லை...: தேர்தல் ஆணையத்திற்கு அமீர் கான் விளக்கம்

மும்பை: தான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி விளக்கமளித்துள்ளார் நடிகர் அமீர் கான்.

பிரபல இந்தி நடிகரான அமீர் கான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியினர் சிலர், சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பி வருகின்றனர். ஒருசிலர் பிரச்சார போஸ்டர்களிலும் அமீர்கான் படத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கவில்லை...: தேர்தல் ஆணையத்திற்கு அமீர் கான் விளக்கம்

இந்நிலையில், ஆம் ஆத்மி உட்பட தான் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என நடிகர் அமீர் கான் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் அமீர்கான். அதில் தான் தொடக்கத்தில் இருந்தே எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளிக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும், எனவே எந்த ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது பிரச்சாரம் செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளாராம். இத்தகவலை அமீர்கானின் செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார்.

அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பிரச்சாரப் படங்களில் அமீர்கான் படத்தை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ விளம்பரப்பிரிவு பயன் படுத்தவில்லை என தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத்துக்கு பயிற்சி அளிக்கும் பாலிவுட் ஸ்டார்களின் ஃபிட்னஸ் டிரெய்னர்கள்

சென்னை: கௌதம் மேனன் படத்திற்காக அஜீத்துக்கு ஷாருக்கானின் பிட்னஸ் டிரெய்னர்கள் பயிற்சி அளிக்கிறார்களாம்.

அஜீத் கௌதம் மேனன் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரம் நல்லவனாகவும், மற்றொரு கதாபாத்திரம் கெட்டவனாகவும் இருக்கும். இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக அதுவும் கெத்தான அதிகாரியாக வருகிறாராம்.

அஜீத்துக்கு பயிற்சி அளிக்கும் பாலிவுட் ஸ்டார்களின் ஃபிட்னஸ் டிரெய்னர்கள்

இதற்காக அவர் ஏற்கனவே ஜிம்முக்கு சென்று 7 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு விபத்துகளில் சிக்கிய அஜீத் முதுகுவலி, கால்வலியால் அவதிப்படுவதால் அதிகமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் பிரச்சனையாகிவிடும்.

அதனால் ஷாருக்கான் உள்ள பாலிவுட் நட்சத்திரங்களின் பிட்னஸ் டிரெய்னர்களை வரவழைத்து அஜீத்துக்கு பயிற்சி அளிக்கிறார்களாம்.

பாலிவுட்டில் நடிகர் அனைவருமே பாடியை பில்ட்அப் செய்ய முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'ஏம்பா தினேசு.. போனை எடுக்கவே மாட்டேங்குறியாமே!'

தமிழ் சினிமாவில் ஒரு நிருபர் போன் செய்தால் உடனே அதை எடுத்துப் பேசும் அளவுக்கு இயல்பாக உள்ள ஹீரோக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஆனால் பெரும்பாலான ஹீரோக்கள் ஒரு வாரத்துக்கொரு போன் நம்பர் மாற்றுவார்கள் அல்லது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியமாக ஒரு நம்பரை வைத்திருப்பார்கள்.

ஜெய், சூரி, சந்தானம், ஆர்யா, ஜீவா, தனுஷ், சிவகார்த்திகேயன் என இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரது நம்பர் எதுவென்று கேட்டால் எந்த நிருபருக்கும் தெரியாது அல்லது அவர்களிடம் உள்ள நம்பர் உபயோகத்தில் இல்லாததாகவே இருக்கும்.

'ஏம்பா தினேசு.. போனை எடுக்கவே மாட்டேங்குறியாமே!'

இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ள நடிகர் தினேஷ். அட்டகத்தி, குக்கூ படங்களின் நாயகன். தொடர்ந்து இரண்டு படங்கள் சுமார் ஹிட்டடித்த மிதப்பில் மீடியாக்காரர்கள் யாருடைய போனையும் எடுப்பதே இல்லையாம்.

குக்கூ பிரஸ் மீட்டுக்கு வந்திருந்த தினேஷ், மாய்ந்து மாய்ந்து பிரஸுக்கு நன்றி என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான், ஏம்பா, இங்கே இவ்வளவு பேசறீங்க, போன் அடிச்சா எடுக்கக்கூட மாட்டேங்கறீங்க.. அவ்வளவு பெரிய ஹீரோவாயிட்டீங்களா? என ஒரு நிருபர் மடக்கினார்.

உடனே பதறுவது போல காட்டிக் கொண்ட தினேஷ், "அப்படியெல்லாம் இல்லை. நான் சினிமாவுக்கு புதுசு. நிருபர்களுக்கு பதில் சொல்லத் தெரியாம ஏதாவது உளறிட்டா என்ன பண்றதுன்னுதான், தெரியாத நம்பர்களிலிருந்து போன் வந்தா எடுப்பதில்லை. ஆனா எஸ்எம்எஸ் பண்ணா உடனே பதில் அனுப்பிடுவேன். இனிமே போன் வந்தா கண்டிப்பா எடுக்கிறேன்," என்றார்.

 

ச்சே.. பாலா படம் கைவிட்டுப் போயிருச்சே...! - மகா வருத்தத்தில் ஸ்ரேயா

பாலாவின் தாரை தப்பட்டை பட வாய்ப்பு போன வருத்தத்தில் இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

பாலா - இளையராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்டக் கலையை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது.

இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் ஸ்ரேயாதான்.

தமிழில் சுத்தமாக வாய்ப்புகளே இல்லாத நிலையில், பாலா பட வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தார் ஸ்ரேயா.

ச்சே.. பாலா படம் கைவிட்டுப் போயிருச்சே...! - மகா வருத்தத்தில் ஸ்ரேயா

இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் பட உலகில் இன்னொரு ரவுண்ட் வரும் கனவோடு, சென்னையிலேயே கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தார் ஸ்ரேயா.

ஆனால் திடீரென 'சைஸ் ஜீரோ' அழகியான ஸ்ரேயாவை கழற்றிவிட்ட பாலா, சரத்குமார் மகள் வரலட்சுமியை ஹீரோயினாக்கிவிட்டார்.

கரகாட்ட கலைஞருக்கான பாடி லாங்குவேஜ் வரலட்சுமிக்கு சரியாக இருந்ததாலேயே அவரை ஹீரோயினாக்கியதாக பாலா தரப்பில் சொல்கிறார்கள்.

இந்த செய்தி கேட்டதிலிருந்து ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம் ஸ்ரேயா. நல்ல வாய்ப்பு போயிடுச்சே.. இது யாரோட சதியா இருக்கும் என புலம்புகிறாராம்.

 

உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

இது இனமா... ராஜபக்சேவின் பணமா?

இப்படித்தான் கேள்வி எழுப்பியுள்ளனர் இனம் படத்தைப் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் பலரும்.

சந்தோஷ் சிவன் இதற்கு முன் ஈழப் பிரச்சினையின் பின்னணியில் டெரரிஸ்ட் போன்ற படங்களை எடுத்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தவர். ஆனாலும் தொடர்ந்து அவர் ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறார்.

அப்படி சமீபத்தில் அவர் எடுத்த படம்தான் இனம். இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.

உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

இதைவிட ஒரு அரைவேக்காட்டுத்தனமான படம் இருக்க முடியாது என்றும், திட்டமிட்டு நடந்த ஒரு கோரமான இனப்படுகொலையை மறைக்க இதுபோன்ற படங்கள் உதவும் என்றும் விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன.

ஆனாலும் பிரபல சினிமாக்காரர்கள் சிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். 'இப்படியொரு படம் மூலமாகவாவது தமிழர் படுகொலை செய்யப்பட்டதை காட்ட முடிந்திருக்கிறதே பெரிய விஷயம்' என்ற அளவில் திருப்திப்பட்டுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்த இனம் படத்தை வெளிநாடுகளில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என உலகத் தமிழர் அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

மேலும், இந்தப் படத்தை வெளியிடும் லிங்குசாமி தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.

உத்தம வில்லன் படம் கமல் ஹாஸன் நடிக்கும் படம். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இப்போதுதான் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்துக்கு இனம் படம் நிஜ வில்லனாகியிருப்பது கமல் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

எனக்கு வயசு பதினாறுதான்.. நடிச்சே ஆகவேண்டிய கட்டாமில்லை! - குக்கூ நாயகி மாளவிகா

சென்னை: பார்க்க பெரிய மனுஷி லுக்கிலிருக்கும் குக்கூ நாயகி மாளவிகா மேனன், தனக்கு பதினாறே வயதுதான் ஆகிறதென்றும், நடித்தே தீர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி, செய்தியாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது படத்தின் நாயகி மாளவிகா நாயர் கூறுகையில், "ஆக்ஷுவலா நான் மலையாளி (அதைச் சொல்லித்தான் தெரியணுமா...). தமிழ் சினிமா பெரிய இன்டஸ்ட்ரி. கமர்ஷியலா பெரிய படங்கள் பண்றாங்க. அதனால் நாம அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்.. என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, ராஜூ முருகன் என்னை அழைத்து கதை சொன்னார். பார்வையற்ற நாயகி பாத்திரம். என்னால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை முதலில்.

எனக்கு வயசு பதினாறுதான்.. நடிச்சே ஆகவேண்டிய கட்டாமில்லை! - குக்கூ நாயகி மாளவிகா

பின்னர் 7 நாட்கள் நடந்த பயிற்சி முகாம் போய், பார்வையற்றவர்களுடன் பழகி நடிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு நடிப்பு என்பது தொழில் இல்லை. பைலட் ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஒரு பொழுதுபோக்காகத்தான் நடிக்கிறேன்.

ஜெர்மனியில் பயணிகள் விமான பயிற்சி கல்விக்கு விண்ணப்பித்துள்ளேன். கிடைத்தவுடன் சென்றுவிடுவேன். கிடைக்கும் இடைவெளியில் குக்கூ மாதிரி சவாலான காதாபத்திரம் கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.

ரொம்ப ஸேஃபா விளையாடுது பாப்பா!!

 

உடல் எடை குறைத்து உற்சாக மறுபிரவேசம் செய்யும் கவுசல்யா!

உடல் எடை குறைத்து உற்சாக மறுபிரவேசம் செய்யும் கவுசல்யா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி இயக்கும் விஷால் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வந்தார். நடிக்க வந்த போது மெல்லிய தேகத்துடன் காணப்பட்ட கவுசல்யா, இப்போது பருத்த உடலுடன் காணப்பட்டார்.

இதைத் தொடர்ந்து உடல் எடையை இயக்குநர் குறைக்கச் சொன்னதால், யோகா மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.

இப்போது 100 கிலோவிலிருந்து 79 கிலோவாகக் குறைந்துவிட்டதாக உற்சாகமாகத் தெரிவித்த கவுசல்யா, ஹரி - விஷால் படத்தில் நடிக்க வந்துள்ளார். மேலும் சில படங்களில் கேரக்டர் வேடங்கள் செய்யவும் பேசி வருகிறார்களாம்.

 

குக்கூ பட வெற்றி.. இயக்குநர் ராஜூ முருகனுக்கு டஸ்டர் கார் பரிசு!

சென்னை: குக்கூ படத்தின் வெற்றி பெற்றதால், அதன் இயக்குநர் ராஜூ முருகனுக்கு புதிய டஸ்டர் காரை பரிசளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

பாக்ஸ் ஸ்டார் - தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்கள், பாராட்டுகளைச் சந்தித்துள்ள படம் குக்கூ. இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்து, நேற்று அதைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினர்.

குக்கூ பட வெற்றி.. இயக்குநர் ராஜூ முருகனுக்கு டஸ்டர் கார் பரிசு!

அப்போது குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகனுக்கு புதிய டஸ்டர் காரை பரிசளிப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்தனர்.

அதே மேடையில், தங்களின் அடுத்த படத்தை இயக்கப் போவதும் ராஜு முருகன்தான் என தி நெக்ஸ் பிக் பிலிம்ஸ் சார்பில் தெரிவித்தனர்.

அப்போது ஒரு நிருபர், "இப்படித்தான் ஆரம்பத்தில் எல்லா தயாரிப்பாளர்களும் ஆர்வத்துடன் அடுத்த படமும் இவருக்கே என்பார்கள். ஆனால் கடைசியில் சொன்னபடி செய்ய மாட்டார்கள். கொடுத்த அட்வான்ஸைக் கூட கேட்காமல் அமைதியாக ஒதுங்கிவிடுவார்கள். நீங்கள் எப்படி?" என்றார்.

குக்கூ பட வெற்றி.. இயக்குநர் ராஜூ முருகனுக்கு டஸ்டர் கார் பரிசு!

கொஞ்சம் ஜெர்க் ஆன தயாரிப்பாளரும் இயக்குநரும்... "உண்மையாகவே அடுத்த படத்தையும் நான்தான் இயக்குகிறேன். கதை ரெடி," என்றார்.

 

பிக்கப் டிராப் நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை

சென்னை: பிக்கப் டிராப் நடிகருடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நயன நடிகை கூறிவிட்டாராம்.

பிக்கப் டிராப் நடிகருக்கும், நயன நடிகைக்கும் காதல் என்று பேச்சாக கிடந்து ஓய்ந்துள்ளது. இந்நிலையில் நயன நடிகைக்கும் அவரது முன்னாள் காதலரான விரல் நடிகருக்கும் இடையே மீண்டும் காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஆண்டே அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து பாஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. நயனம் இல்லாத பாஸ் படமா என்று நடிகர் கவலையில் உள்ளாராம்.

நடிகர் என்ன தான் கோரிக்கை வைத்தாலும் நடிகை இறங்கி வருவதாக இல்லையாம். பிக்கப் டிராப் நடிகரை விட்டு விலகி இருப்பது தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறாராம் நடிகை.

 

இந்த ஹீரோ கேட்கிற சம்பளத்தில் நான் 3 படம் எடுத்திடுவேனே: இயக்குனர்

சென்னை: சீயான் நடிகர் கேட்ட சம்பளத் தொகையை கேட்டு சோடா பட இயக்குனர் அதிர்ச்சி அடைந்தாராம்.

சீயான் நடிகர் பிரமாண்ட இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் ரூ.8 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்நிலையில் அவர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லையாம்.

இந்நிலையில் தான் சோடா பட இயக்குனர் நடிகரை பார்த்து கதை சொன்னாராம். கதை நடிகருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து தனது புதிய சம்பளத்தை இயக்குனரிடம் தெரிவித்து நல்ல தயாரிப்பாளருடன் வாருங்கள் என்றாராம் நடிகர்.

சரி என்று கூறி விட்டு வந்த இயக்குனர் அவர் கேட்கிற சம்பளத்தை வைத்து நான் மூன்று படங்களை எடுத்துவிடுவேனே என்று தனது நண்பர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.

 

'கோச்சடையானை பொம்மைப் படம் என கிண்டலடிப்பதா?'- ரஜினி மன்ற நிர்வாகிகள் கண்டன அறிக்கை

சென்னை: இன்னும் வெளி வராத ரஜினியின் கோச்சடையான் படம் குறித்து தவறான தகவல் பரப்பும் விஷமிகளைக் கண்டிப்பதாக சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைமை நிர்வாகிகள் அறிக்கை விடுத்துள்ளனர்.

ரஜினி இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

'கோச்சடையானை பொம்மைப் படம் என கிண்டலடிப்பதா?'- ரஜினி மன்ற நிர்வாகிகள் கண்டன அறிக்கை

இந்த நிலையில் கோச்சடையான் பொம்மை படம், கார்ட்டூன் படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்றும் இண்டர்நெட்டில் சிலர் செய்தி பரப்பி உள்ளனர். படமே இன்னும் வரவில்லை. ஆனால் அதற்குள் இப்படி விஷமத்தனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோச்சடையான் டிரைலர் காட்சிகளை 3டி பரிமானத்துடன் புதிய தொழில் நுட்பத்துடன் பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தியது.

டிரையிலரை ரசித்து மகிழ்ந்த ரசிகர்கள் மெயின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதுவரை தலைவரின் எந்தப் படத்துக்கும் கிடைக்காத வசூலும், வெற்றியும் கோச்சடையானுக்குக் கிடைக்கும்.

'கோச்சடையானை பொம்மைப் படம் என கிண்டலடிப்பதா?'- ரஜினி மன்ற நிர்வாகிகள் கண்டன அறிக்கை

டிரைலர் வெளியீடு அன்று தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களை விட வெளியே சூப்பர் ஸ்டாரை பார்க்க நின்ற ரசிகர்கள் கூட்டம் பலமடங்கு. ரசிகர்களை பார்த்த சூப்பர்ஸ்டார் படத்தின் வெற்றி விழாவை ரசிகர்கள் முன்னிலையில் நடத்துவேன் என்று கூறினார்.

முத்து படம் வெற்றி மூலம் ஜப்பான் பாராளுமன்றத்தில் நமது பிரதமர் மன்மோகன் சிங் முன் ஜப்பான் பிரதமர் பாராட்டியது போல், ஐ.நா.சபையில் கோச்சடையான் படத்தை உலக தலைவர்கள் பாராட்ட வேண்டும். அதுதான் எங்கள் லட்சியம்.

கோச்சடையான் படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு வைரக் கல்லாகவும் அதே வகையில் தமிழ் மண்ணின் பெருமையை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமையும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.

கோச்சடையான் கார்ட்டூன் பொம்மை படம் என சில விஷமிகள் வதந்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது. இது தலைவர் படம். அது ஒன்றுபோதும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

முருகதாஸ் - விஜய் படத்துக்கு தலைப்பு.. 'கத்தி'!

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்துக்கு கத்தி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை இயக்குநர் முருகதாஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அய்ங்கரன் ஃபிலிம்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. 'வாள்', 'அடிதடி', 'தீரன்' என்று படத்துக்கு பல்வேறு டைட்டில்கள் வைத்ததாக தகவல் கிளம்புவதும், பின் அதை முருகதாஸ் மறுப்பதுமாக இருந்தது.

முருகதாஸ் - விஜய் படத்துக்கு தலைப்பு.. 'கத்தி'!

ஆனால், இப்போது படத்தின் டைட்டில் 'கத்தி' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதை தன் ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

'கத்தி' படத்தின் ஷூட்டிங் படுவேக வேகத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கே மாதங்களில் படத்தை முடித்துவிட வேண்டுமென்று வெகுவேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது படக்குழு.

படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

 

ரூ 20 ஆயிரம் ரூம் வாடகைக் கொடுத்து ‘பால்’ நடிகையை பராமரிக்கும் பாதுகாவலர்....

சென்னை: கேரளாவில் இருந்து பறந்து வந்த இந்த மைனா நடிகை தமிழில் முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அவ்வப்போது படப்பிடிப்புகளுக்காக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் நடிகை பிரபல ஓட்டல் ஒன்றில் அறையை குத்தகைக்கு எடுத்துள்ளாராம். நாளொன்றுக்கு வாடகை ரூ 20 ஆயிரம் ரூபாயாம்.

மாதக்கணக்கில் இந்த அறையில் தான் நடிகை வசித்து வருகிறாராம். ஆனால், ஹோட்டல் அறைக் கட்டணத்தை அம்மணி கொடுப்பதில்லையாம். அதை அவருடனே சுற்றி வரும் பாதுகாவலர் சார் தான் கொடுக்கிறாராம்.

 

இளையராஜா பேன்ஸ் கிளப்: கார்த்திக் ராஜாவுக்கு பதில் பவதாரிணி தலைவர்

சென்னை: இளையராஜா பேன்ஸ் கிளப் தலைவராக கார்த்திக் ராஜாவுக்கு பதில், பவதாரிணி செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜா பேன்ஸ் கிளப் (ஐஎப்சி) துவக்க விழா நடைபெறுகிறது .

இளையராஜா பேன்ஸ் கிளப்: கார்த்திக் ராஜாவுக்கு பதில் பவதாரிணி தலைவர்

இந்த அமைப்புக்கு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா தலைவராகவும், தயாரிப்பாளர் வேலுச்சாமி, இயக்குநர் ரத்னகுமார் ஆகியோர் மேனேஜிங் ட்ரஸ்டிகளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இப்போது அதில் ஒரு மாற்றம். கார்த்திக் ராஜாவுக்கு உள்ள வேலை பளு காரணமாக அவருக்கு பதில் இளையராஜா மகள் பவதாரணி தலைவராக செயல்பட உள்ளார்.

இந்த பேன்ஸ் க்ளப் துவக்க விழாவில் யுவன்ஷங்கர் ராஜா,கார்த்திக்ராஜா, பவதாரணி மூவருமே பங்கேற்கின்றனர்.

இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடுகிறார்.

 

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - லண்டன் அமைப்பு வழங்கியது!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது லண்டனைச் சேர்ந்த ஒன்டர்புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் விடுத்த அறிவிப்பில், "சாதாரண குடும்பத்தில் பிறந்து பல்வேறு நிலைகளில் கஷ்டப்பட்டு திரைப்படத் துறையில் முன்னேறி சாதனை படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - லண்டன் அமைப்பு வழங்கியது!

அவருக்கு எங்கள் அமைப்பு சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளோம். இது தமிழகத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முதலாவது வாழ்நாள் சாதனையாளர் விருது.

இதற்கான சான்றிதழை நேற்று முன்தினம் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்று வழங்கினோம். அங்கு ரஜினிகாந்த் இல்லாததால் அவருடைய மனைவி லதாவிடம் சான்றிதழை ஒப்படைத்தோம்.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு எங்கள் அமைப்பு சார்பில் ஏற்கனவே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து சாதனையாளர் விருது வழங்க முடிவெடுத்துள்ளோம்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

பழம் பெரும் இந்தி நடிகை நந்தா மரணம்

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை நந்தா, மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.

75 வயதுடைய நடிகை நந்தா மும்பை வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவர் மரணமடைந்தார்.

நடிகை நந்தாவின் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான இந்தி நடிகர், நடிகைகள் அவரது வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பழம் பெரும் இந்தி நடிகை நந்தா மரணம்

அதன்பின்னர் இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடிகை நந்தாவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

நடிகை நந்தா குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் கால் பதித்தவர். தனது முதல் படமான ‘தூபன் அவுர் தியா'வில் தனது சொந்த மாமாவுடன் நடித்தார். இந்த படம் கடந்த 1956-ம் ஆண்டு வெளிவந்தது.

பின்னர் ‘பாபி', தேவ் ஆனந்தின் ‘கலாபசார்', 'தி ட்ரெயின்' மற்றும் ‘தூல் கா பூல்' ஆகிய திரைப் படங்களில் கேரக்டர் வேடங்கள் செய்தார். 1959-ம் ஆண்டில் வெளியான ‘சோட்டி பெஹன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது முழு திறமையையும் நிரூபித்த நந்தா, மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

பழம் பெரும் இந்தி நடிகை நந்தா மரணம்  

தீன் தேவியான், கும்நாம் போன்றவை அவர் நடித்த மேலும் சில படங்கள். அவர் கடைசியாக நடித்தது 1983-ல் வந்த பிரேம் ரோக்.

திருமணம் ஆகாதவர்

மேலும், அவரது நடிப்பில் வெளியான ‘அஞ்சால்' திரைப்படம் வெற்றி பெற்றதன் மூலம் நடிகை நந்தாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகை நந்தா திருமணம் ஆகாதவர். வெர்சோவாவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் அவர் வசித்து வந்தார்.

 

நான் 'பிட்டு' படம் எடுக்கலைங்க...! - இயக்குனர் புலம்பல்

அண்மையில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே'. பாரதியாரின் வரியாச்சே என்று அவர் ரசித்து வைத்த இந்த தலைப்பை, ஏதோ பிட்டு பட ரேஞ்சுக்கு சிலர் விமர்சித்து வருவது பொறுக்காமல் குமுறி தீர்க்கிறார் அப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்.

'சார்... நான் ஒரு டீசன்ட்டான படம் எடுத்திருக்கேன். தமிழ்சினிமாவில் இப்படியொரு கதை இதுக்கு முன்னாடி வந்ததேயில்ல. தியேட்டர்ல படத்தை பார்க்குற பெண்களும், குழந்தைகளும் என்ஜாய் பண்ணிட்டு போறங்க. ஆனால் இந்த தலைப்பை வைத்து இது ஒரு பிட்டு படம் என்ற ரேஞ்சுக்கு தவறான அபிப்ராயத்தை மக்கள் மனதில் பரப்பிக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

நான் 'பிட்டு' படம் எடுக்கலைங்க...! - இயக்குனர் புலம்பல்

எந்த படம் ரிலீசானாலும் அந்த படத்திற்கு எதிராக புரளி கிளப்பும் ஒரு கும்பல்தான் என் படத்திற்கும் எதிராக புரளி கிளப்புகிறாங்க. இது ‘அந்த' மாதிரியான படம்னு புரளி கிளப்புறவங்க படத்துக்கு க்ளீன் யூ சர்டிபிகேட் வாங்கியிருக்குற தகவலையெல்லாம் ஏன்தான் மறந்துட்டு பேசுறாங்களோ தெரியல' என்று கவலைப்பட்டார்.

அதுமட்டுமல்ல, இந்த படத்திற்கு சென்னையில் இருக்கும் பிரபலமான தியேட்டர் வளாகம் ஒன்றும் முதலில் தியேட்டர் தர மறுத்துவிட்டதாம். உங்க படத்தின் தலைப்பு எனக்கு பிடிக்கலே என்று அந்த தியேட்டர் மேனேஜர் கூறிவிட்டாராம்.

அதற்கப்புறம் இந்த படத்தில் பாடல்கள் எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவே அந்த மேனேஜருக்கு போன் செய்து, ‘அது நல்ல படம். உங்க தியேட்டருக்கு ஒரு இழுக்கும் வராது' என்று உத்தரவாதம் கொடுத்த பின்புதான் படத்தை வெளியிட சம்மதித்தாராம்.

நான் 'பிட்டு' படம் எடுக்கலைங்க...! - இயக்குனர் புலம்பல்

இதையெல்லாம் நம்மிடம் சொல்லி புலம்பிய எஸ்.எஸ்.குமரன், ‘உங்க படம் கமர்ஷியலாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைஞ்சதாகவும் இருக்கு' என்று விநியோகஸ்தர்களே வாய் திறந்து பாராட்டுறாங்க. இந்த நேரத்தில் இந்த புரளி கிளப்புகிறவர்கள் அமைதியா இருந்தாலே என் படம் வெற்றி பெரும்' என்றார்.

புரளி சார்களே... வாயை மூடி பேசாமலிருங்க ப்ளீஸ்!

 

'உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்' இளையராஜாவுக்கு பத்திரிகையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை!

சென்னை: உலகின் முதல் 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் சினிமா பத்திரிகையாளர்கள்.

இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா 1000 படங்களைத் தாண்டி இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதோ இன்று கூட ஒரு மெகா பட்ஜெட் தெலுங்குப் படத்துக்கு இளையராஜா இசைதான் வேண்டும் என்று வந்து நிற்கிறார்கள்.

'உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்' இளையராஜாவுக்கு பத்திரிகையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை!

தமிழில் இந்த ஆண்டு அவர் இசையில் 15-க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த நேரத்தில், உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியர் என்ற பெருமை இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. நம்பர் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட கலைஞர் இளையராஜா என்பது நூறு சதவீத உண்மை என்றாலும், இந்த கவுரவம் சாதாரணமானதல்ல. தேசமே கொண்டாட வேண்டியது.

எனவே தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் இளையராஜாவுக்கு மரியாதை செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவைச் சந்தித்த பத்திரிகையாளர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறினர்.

'பொதுவா நாங்கதான் உங்களை அழைத்து செய்தி தருவோம். ஆனா நீங்க என்னைத் தேடி வந்து வாழ்த்து சொல்றீங்க. இந்த அன்புக்கு இணை ஏது.. யாருக்கும் தராத கவுரவத்தை எனக்குத் தந்ததற்கு நன்றி. இதுதான் மிகச் சிறந்த விருது எனக்கு,' என்றார் இளையராஜா பதிலுக்கு.

பின்னர் அவருக்கு பூங்கொத்துகள் தந்து, பொன்னாடை அணிவித்தனர் பத்திரிகையாளர்கள். அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் ராஜா.

இளையராஜாவின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு அனைவர் சார்பாகவும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.

 

விஜய் படத்திற்காக ஆந்திரா வெயிலில் காய்ந்து கருவாடாகும் சமந்தா

ஹைதராபாத்: விஜய் படத்திற்காக வெயிலில் காய்வதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகி சமந்தா தோல் பிரச்சனை காரணமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

விஜய் படத்திற்காக ஆந்திரா வெயிலில் காய்ந்து கருவாடாகும் சமந்தா

இந்நிலையில் தான் விஜய் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாக சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் கொளுத்தும் வெயிலில் வாடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் கடவுளை வேண்டியுள்ளார்.

சமந்தா விஜய் படம் தவிர சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

உங்க மகனை கம்முன்னு இருக்கச் சொல்லுங்க: தாடி டாடியிடம் கூறிய போலீசார்

சென்னை: விரல் நடிகர் அண்மையில் பிரிந்த தனது காதலியின் புகைப்படங்களை எங்கும் வெளியிடக் கூடாது என்று அவரது தந்தையிடம் போலீசார் தெரிவித்துள்ளார்களாம்.

விரல் வித்தை நடிகரும், புஸு புஸு நடிகையும் பிரிந்துவிட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விரல் நடிகரின் காதல் முறிந்தால் அதையடுத்து அவருடன் பழகிய பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை லீக்காவது வழக்கம்.

இந்நிலையில் புஸு புஸு நடிகையின் தாய் ஆந்திரா மற்றும் தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்து என் மகளை காதலித்த காலத்தில் எடுத்த புகைப்படங்கள், வீடியோ எதையாவது அந்த நடிகர் கசியவிட்டுவிடாமல் தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து போலீசார் நடிகரின் தாடிக்கார தந்தையை தொடர்பு கொண்டு நடிகையின் தாய் கூறியவற்றை தெரிவித்து தம்பியை கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்க, இல்லை என்றால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்றார்களாம்.

இதற்கிடையே நடிகையிடம் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் அவரது தாய் அழித்துவிட்டாராம்.

 

சன்னி லியோன் குத்தாட்டம் போடும் வடகறி படத்திலிருந்து விலகினார் யுவன் சங்கர் ராஜா!

சென்னை: தயாநிதி அழகிரி தயாரிப்பில், சன்னி லியோன் குத்தாட்டம் போடும் முதல் தமிழ்ப் படமான வடகறியிலிருந்து விலகினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

யுவனின் பிஸி ஷெட்யூல் காரணமாக அவரால் இந்தப் படத்தில் தொடர முடியவில்லை என்றும், அவருக்குப் பதில் அனிருத்திடம் சவுண்ட் எஞ்ஜினியர்களாகப் பணியாற்றிய இரட்டையர்களான விவேக் - மெர்வின் இசையமைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்னி லியோன் குத்தாட்டம் போடும் வடகறி படத்திலிருந்து விலகினார் யுவன் சங்கர் ராஜா!

இது குறித்து தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:

யுவன் சங்கர் ராஜாவின் பிஸியான ஷெட்யூல் காரணமாக வடகறி படத்தில் தொடர்ந்து அவருடன் பணியாற்ற முடியவில்லை. இந்தப் படத்துக்காக அவர் ஒரு அருமையான மெலடிப் பாடல் தந்துள்ளார். அதை நிச்சயம் இந்தப் படத்தில் பயன்படுத்துவோம்.

படத்தை விரைவாக முடிக்க வேண்டி, யுவனுக்கு பதில் புதிய இரட்டையர்களை இப்படத்துக்கு இசையமைப்பாளராக்கியுள்ளோம்.

இவர்களில் விவேக் சிவாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத்தின் சவுன்ட் எஞ்ஜினியராகப் பணியாற்றியவர் விவேக் சிவா. இவரும் மெர்வின் சாலமனும் இணைந்து இரட்டையர்களாக இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். நான்கு பாடல்கள் மற்றும் படத்தின் பின்னணி இசையை விவேக் - மெர்வின் தந்துள்ளனர்.

இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். ஏஆர் ரஹ்மானின் இசைக் குழுவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

இளையராஜாவின் 999வது படம் ஒரு ஊர்ல... இந்த வாரம் ரிலீஸ்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்!

சென்னை: இளையராஜாவின் 1000வது படம் பாலா இயக்கும் தாரை தப்பட்டை. இந்த செய்தியை உங்களுக்கு முதன் முதலில் தெரிவித்தது ஒன்இந்தியா என்பது நினைவிருக்கலாம்.

இதோ, இன்று இளையராஜாவின் 999 வது படம் எதுவென்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரே அறிவித்துள்ளார். அந்தப் படம் ஒரு ஊர்ல.

வேலுச்சாமி தயாரிப்பில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க, கன்னட நடிகை நேகா பட்டீல் நாயகியாக அறிமுகமாகிறார். பாடல்களை மு மேத்தா எழுதியுள்ளார்.

இளையராஜாவின் 999வது படம் ஒரு ஊர்ல... இந்த வாரம் ரிலீஸ்.. தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கே.எஸ்.வசந்தகுமார்.

இளையராஜா இசையில் வெளியாகும் 999 வது படம் என்ற அறிவிப்போடு படத்தை வெளியிடுகிறார் வேலுச்சாமி. பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்திகளிலும் இந்தப் படம் இளையராஜாவின 999வது படம் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் 1000வது படம் பாலா இயக்கும் தாரை தப்பட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரோமியோ - ஜூலியட்... மீண்டும் ஜோடி போடும் ஜெயம் ரவி - ஹன்சிகா

ரோமியோ - ஜூலியட் என்ற படத்துக்காக மீண்டும் ஜோடி சேர்கிறார்கள் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும்.

பிரபு தேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்' படத்தில் இருவரும் முதல் முறை ஜோடியாக நடித்தனர்.

தற்போது ரோமியோ ஜுலியட் என்ற பெயரில் தயாராகும் படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

ரோமியோ - ஜூலியட்... மீண்டும் ஜோடி போடும் ஜெயம் ரவி - ஹன்சிகா

இந்த படத்தை லட்சுமண் இயக்குகிறார். மற்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், 'ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜுலியட்' படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருப்பது உண்மைதான். பிரமாதமான கதை. என்னுடைய கேரக்டர் ரொம்பப் பிடித்தது.

படத்தை பற்றி வேறு விஷயம் எதையும் இப்போது நான் சொல்ல முடியாது.. இயக்குநர் அறிவிப்பார்,'' என்றார்.

 

பாட்டையும் கசியவிட்டுட்டு, புகாரும் கொடுப்பீங்களோ: படக்குழுவை அதிர வைத்த போலீசார்

சென்னை: பாட்டையும் பப்ளிசிட்டிக்காக லீக் செய்துவிட்டு புகாரும் கொடுக்க வருவீர்களோ என்று போலீசார் விரல் நடிகரின் இரண்டு எழுத்து படக்குழுவை எச்சரித்தார்களாம்.

விரல் நடிகர், தனது முன்னாள் காதலியுடன் சேர்ந்து விலங்கின் பின்னால் இருக்கும் உறுப்பின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பே பாடல்கள் இணையதளத்தில் கசிந்துவிட்டன.

இதையடுத்து படக்குழுவினர் வரிந்து கட்டிக் கொண்டு கமிஷனரிடம் புகார் கொடுக்க கிளம்பினார்களாம். இது குறித்து தகவல் கிடைத்ததும் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தே படக்குழுவை அணுகினார்களாம். விளம்பரத்திற்காக நீங்களே பாட்டுகளை இணையதளத்தில் கசியவிடுவீர்கள் பின்னர் எங்களிடம் புகார் கொடுப்பீர்களா என்று கேட்டார்களாம்.

நீங்கள் தான் பாடல்களை கசியவிட்டது என்று எங்களுக்கு தெரியும். அதனால் புகார் கொடுத்து எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று போலீசார் தெரிவித்தார்களாம். இதையடுத்து புகார் கொடுக்க கிளம்பிய படக்குழு சத்தத்தையே காணவில்லையாம்.

 

பனிவிழும் நிலவு - விமர்சனம்

Rating:
2.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஹிருதய், ஈடன், கிருஷ்ணன், கோவை சரளா, பாண்டியராஜன்
இசை: எல்வி கணேசன்
தயாரிப்பு: வீ எஸ் பிக்சர்ஸ்
இயக்கம்: கௌசிக்

கல்லூரி, நண்பர்கள் கலாட்டா, காதல், மோதல் என வழக்கமான அம்சங்களுடன் வந்திருக்கும் படம் பனி விழும் நிலவு.

ஹீரோ ஹிருதய் மகா குறும்புக்காரர். இவர் செய்யும் விளையாட்டுத்தனத்தால் உடன் படிக்கும் ஒரு நண்பன் கல்லூரிக்கே வரமுடியாமல் போகிறது.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

உடன் படிக்கும் ஹீரோயின் ஈடனிடம் ஒரு முறை நண்பனுக்காக காதலைச் சொல்லப் போகிறார் ஹ்ருதய். எனக்கு அவனைப் பிடிக்கல என்று கூறிவிடுகிறார். ஆனால் சில காட்சிகள் போனதுமே ஹ்ருதயும் ஈடனும் காதலர்களாகிவிடுகிறார்கள்.

ஒரு நாள் தனது கடற்கரை பங்களாவுக்கு காதலனை அழைக்கிறார் ஈடன். ஏகப்பட்ட சமாச்சாரங்களை கற்பனை பண்ணிக்கொண்டு ரொமான்டிக் மனநிலையில் போகிறார் ஹ்ருதய். அங்கு போன பிறகுதான், தன்னைப் போலவே தன் வகுப்பு நண்பர்களையும் அழைத்திருப்பதும், ஈடன் தன்னைக் காதலிப்பதாக நடித்திருக்கும் உண்மையும் தெரிய வருகிறது.

வெறுத்துப் போன ஹ்ருதய், அந்த கோபத்துடன் நண்பர்கள் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டே போகிறார்.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

அதன் பிறகு ஒரு திருமணத்துக்கு திட்டமிட்டு ஹ்ருதயை வரவழைக்கிறார்கள் நண்பர்கள். அந்த திருமணத்துக்கு ஈடனும் வருகிறார். பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதை.

நாயகன் ஹ்ருதயால் எல்லாம் செய்ய முடிகிறது. ஆனால் முகத்தில் உணர்வுகளைக் காட்ட இன்னும் முயற்சித்திருக்கலாம். அதேநேரம் வெறுத்துப் போய்த் திட்டுமளவுக்கு மோசமில்லை என்பதே பெரிய விஷயம்தானே.

நாயகி ஈடன் பார்க்க அழகாக இருக்கிறார். தேவையான அளவு நடிப்பையும், தேவைக்கு மேலேயே கவர்ச்சியையும் காட்டியிருக்கிறார்.

கல்லூரி நண்பர்களாக வருபவர்கள் ஓகே என்றாலும், காட்சிகளில் கலகலப்பு, நகைச்சுவைப் பஞ்சம்.

பனிவிழும் நிலவு - விமர்சனம்

வெண்ணிற ஆடை மூர்த்தி, கோவை சரளா, பாண்டியராஜனும் உண்டு. இவர்களில் வெண்ணிற ஆடை மூர்த்தி தான் வரும் காட்சிகளில் தன் பாணி இரட்டை அர்த்த வசனங்களை ஏகத்துக்கு அள்ளி விடுகிறார்.

ஒளிப்பதிவு பரவாயில்லை. ஆனால் இசை- பாடல்கள் ஈர்க்கும்படி இல்லை. இரண்டாம் பாதியை இன்னும் கச்சிதமாகத் தந்திருக்கலாம்.

கௌசிக் இயக்கத்தில் போன வாரம்தான் ஆதியும் அந்தமும் என்ற ஒரு த்ரில்லர் பார்த்தோம். இந்த வாரம் கல்லூரி காதலை வைத்து ஒரு படம். ஒரு புது இயக்குநரின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வருவது சாதாரண விஷயமல்ல. ஆனால் இந்த வாய்ப்பை இன்னும் திறம்பட பயன்படுத்தியிருக்கலாம்!

 

பவர் ஸ்டார் சீனிவாசன் சூப்பர் மார்க்கெட்டைச் சூறையாடிய பக்கத்து வீட்டுக்காரர்கள்!

பவர் ஸ்டார் சீனிவாசன் சூப்பர் மார்க்கெட்டைச் சூறையாடிய பக்கத்து வீட்டுக்காரர்கள்!

சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டின் கேட்டை உடைத்து ரூ 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் சூறையாடியுள்ளனர்.

இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் குடியிருப்போரோ, சீனிவாசன் தங்களை மிரட்டுவதாக பதிலுக்கு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரவாயல் அருகே உள்ள வானகரம்-அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார்.

அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10-க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயுள்ளது. குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பதில் புகார்

இதேபோல் குடியிருப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர்கள் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்து பவர் ஸ்டார் சீனிவாசன் தனது சூப்பர் மார்க்கெட் முன்பு செட் அமைத்துள்ளார். அதை அகற்றக்கோரி டிசம்பர் மாதம் வரை கெடு விடுத்து இருந்தோம். ஆனால் அவர் அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம்.

இதற்காக எங்களை அவரது தரப்பினர் மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த புகார்கள் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

 

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் புது சாதனைப் படைக்க வேண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ள, இந்தியாவின் முதல் நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பப் படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

இந்தப் படத்தின் இசை, ட்ரைலர் மார்ச் 9-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை வரவேற்கவும், வெற்றி பெறச் செய்யவும் ரசிகர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள், இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திருப்பதி திருமலைக்கு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை!

ஏப்ரல் 2-ம் தேதி சோளிங்கர் நகரிலிருந்து ஏராளமான ரசிகர்கள் குழுவாக இந்த நடைபயணத்தைத் தொடங்குகிறார்கள்.

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றப் பொருளாளரும், சோளிங்கர் ரஜினி மன்றத் தலைவருமான என் ரவி தலைமையில் இந்த பாதயாத்திரை தொடங்குகிறது.

 

என் வாழ்க்கையில் தலைவா படத்தால் பட்டதை மறக்க முடியாது! - இயக்குநர் விஜய்!

சென்னை: என் வாழ்க்கையில் தலைவா படத்தால் பட்ட பாட்டை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.

நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் முதன் முதலாக இணைந்த படம் தலைவா. இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்து வெளியானது வரை ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தது.

என் வாழ்க்கையில் தலைவா படத்தால் பட்டதை மறக்க முடியாது! - இயக்குநர் விஜய்!

ஒரு வழியாக படம் வெளியானது. படு தோல்வியைச் சந்தித்தது.

ஆனால் அந்தப் படம் வெளியாக முடியாமல் அரசியல் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட நேரத்தில் இரண்டு விஜய்களும் வாயைத் திறக்கவே இல்லை. நடிகர் விஜய் என் படம் எப்படியாவது ரிலீஸ் ஆகணும்.. முதல்வர் நல்லவங்க.. என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இயக்குநர் விஜய் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார். தலைவா அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "இப்போது நான் இயக்கும் சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்பட வேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்து விட்டு தலைவா எடுத்தேன்.

தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல. காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ள முடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம்தான்," என்றார்.

 

நடிகைகளான அக்கா, தங்கைக்கு இடையே பேச்சுவார்த்தையே இல்லையாமே

சென்னை: ஊதா கலரு ரிப்பனுக்கும் அவரது அக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாதாம்.

ஊதா கலரு ரிப்பன் சின்னத் திரையில் இருந்து வந்து பெரிய திரையில் அசுர வேகத்தில் வளர்ந்துள்ள சிவமான நடிகரின் படம் மூலம் பிரபலம் ஆனார். தற்போது இளம் இசையமைப்பாளர் ஒருவருடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரைத் தேடி வரும் பட வாய்ப்புகளுக்கும் ஒன்றும் குறைவில்லை. அம்மணி கோலிவுட்டில் நடித்த முதல் படம் வன மல்லி. அந்த படம் இன்னும் ரிலீஸாகவே இல்லை. இந்த படத்தில் முதலில் ஊதா கலரு ரிப்பனின் அக்காவான ரம்யமான நடிகையை தான் ஒப்பந்தம் செய்தார்களாம். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை ஊதா கலரு ரிப்பனை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்துவிட்டார்கள்.

தான் ஒப்பந்தமான படத்தில் ஊதா கலரு ரிப்பன் நடித்ததால் அக்காவுக்கும், தங்கைக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையாம்.