நடிகர் ஜெய்க்கு வந்த சிக்கல்... அறிக்கைக்கு புதிய விளக்கம்!


ஒரு நடிகையை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று நடிகர் ஜெய் அறிவித்தது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

நடிகை என்றால் அவ்வளவு கேவலமா என்று திரையுலகில் கண்டனக் குரல் ஒலித்ததால் தனது அறிக்கைக்கு புதிய விளக்கம் தந்துள்ளார்.

அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்ற செய்தி பரவியதால், இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என அஞ்சலியும், அஞ்சலியை நான் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணவும் மாட்டேன் என்று ஜெய்யும் மாறி மாறி அறிக்கை விட்டனர். ஜெய் ஒரு படி மேலே போய், வாழ்க்கையில் ஒரு நடிகையை திருமணம் செய்வதாக இல்லை என்று கூறிவிட்டார். இது சக நடிகைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் நடிகைகள் பற்றி அவதூறாக பேசுவதா? என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது. ஜெய்யுடன் நேரில் பேசியும் கண்டித்தனர்.

இதையடுத்து தனது அறிக்கைக்கு ஜெய் அளித்துள்ள விளக்கம்:

நடிகை பற்றி நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டுள்ளனர். நான் சொல்ல வந்த அர்த்தம் வேறு.

நான் நடிகன் என்பதால் உள்ளூர்-வெளியூர் என்று படப்பிடிப்பில் இருப்பேன். என் மனைவியும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமாக இருக்குமா? என்ற அர்த்தத்தில்தான் நடிகையை திருமணம் செய்ய கொள்ள மாட்டேன் என்றேன். மற்றபடி நடத்தை பற்றியோ ஒழுக்கம் பற்றியோ நான் எதுவும் பேசவில்லை," என விளக்கம் அளித்துள்ளார்.
 

நடிகைகளின் தற்கொலைகளை மையமாகக் கொண்ட ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’


தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் உள்ளிட்ட நடிகைகளின் தற்கொலைகளை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள படம்தான் சோனியா அகர்வால் நாயகியாக நடித்துள்ள “ஒரு நடிகையின் வாக்குமூலம்”. இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளாக இருந்த “பசி” ஷோபா, சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, மோனல், திவ்யாபாரதி, உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனர். பிரதீஷா கொலை செய்யப்பட்டார். இதன் உண்மைக் காரணங்களை மையமாக வைத்து ஒரு நடிகையின் கதை என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகைகளுக்கு சமர்ப்பணம்

இத்திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறியதாவது:

நடிகைகளுக்கு அன்பு, குடும்ப பாசங்கள் கிடைப்பது இல்லை. எனவே காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். சிலர் மது பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். ஏக்கம், விரக்தி போன்றவற்றால் தற்கொலை செய்து கொண்ட நடிகைகளுக்கு இப்படத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்றார்.

இத்திரைப்படத்தில் இயக்குநர்கள் விக்ரமன், ஏ. வெங்கடேஷ், ராசு மதுரவன், செல்வபாரதி, சுராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவே நடித்துள்ளனர். சதன், நிக்கோல், ஜோதிலட்சுமி, மனோபாலா, கஞ்சா கருப்பு, கோவை சரளா, யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

புன்னகைப் பூ கீதா தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கி உள்ளார். விரைவில் வெளிவர உள்ள இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நடத்தையில் சந்தேகம்... கன்னட நடிகை சவுமியாவை 13 முறை கத்தியால் குத்திய காதலன்!


பிரபல கன்னட நடிகை சவுமியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன் அனில்குமார் அவரை 13 முறை உடல் முழுக்க கத்தியால் குத்தினார். சவுமியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. பெங்களூரைச் சேர்ந்த அனில் குமாரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அனில்குமார் ஏற்கெனவே ரஜனி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

ரஜனியை விவாகரத்து பெற முயற்சித்து வருகிறார். இந்த விவாகரத்துக்கான வழக்குச் செலவைக்கூட சவுமியாதான் கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில் சவுமியா நடத்தையில் அனில்குமாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. சினிமா உலகில் வேறு சிலருடன் சவுமியா தொடர்பு வைத்து இருப்பதாக கருதினார். இதனால் அவரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தார். சவுமியா சில இளைஞர்களுடன் நெருக்கமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பாய்ந்து சென்று சவுமியாவை கத்தியால் குத்தினார்.

கழுத்து, வயிறு, வலதுகை போன்ற பகுதிகளில் பலமுறை சர மாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சவுமியாவை யலஹங்காவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தகவல் அறிந்ததும் போலீசார் அனில்குமார் வீட்டுக்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அனில்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சில தினங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மனைவியைக் குத்திக் கொல்ல முயன்றது நினைவிருக்கலாம்.
 

தருண் சத்ரியாவின் தயக்கமும் ஷிகா தந்த தைரியமும்!


இன்றைய வளரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் தருண் சத்ரியா. காளை படத்தில் சிம்புவுக்கு வில்லனாக தருண் கோபியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இன்று தனி கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

சொந்த ஊர் வேலூருக்குப் பக்கத்தில் ஆம்பூர். இந்த மாவட்ட மக்களைப் பொறுத்தவரை தலைநகரம் பெங்களூர்தான். சென்னையை விட மிக அருகிலிருப்பது ஒன்று, அதிக வேலை வாய்ப்புகள் கிடைப்பது இன்னொரு முக்கியமான காரணம் என்பதால் தருண் சத்ரியாவும் பெங்களூருக்குப் போய்விட்டார்.

இவர் தந்தை கன்னடத்தில் பல படங்களைத் தயாரித்துள்ளார். முதல் பட வாய்ப்பு தந்த இயக்குநர் தருண் கோபிதான், சுலீல் குமார் என்ற இவரது பெயரை தருண் சத்ரியாவாக மாற்றிவிட்டார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் நடித்த குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் அவருக்கு தனித்த அடையாளத்தைத் தந்தது. இந்தப் படத்தில் இவர் மெயின் வில்லன். பார்த்த அத்தனை பேரும் பாராட்டினர்.

அடுத்து தருண் நடித்தது ஆண்மை தவறேல். தொடர்ந்து சுந்தர் சியின் நகரம் படத்திலும் மெயின் வில்லன் வேடம். ஸ்டன்ட் மாஸ்டர் விஜயனின் சொந்தப் படம் மார்கண்டேயன் உள்பட அரை டஜன் படங்களைச் செய்த பின்னர், படம் பார்த்து கதை சொல் படத்தில் தருணுக்கு தனி நாயகன் வேடம் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஷிகா என்ற கன்னட நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் எதுவும் அவரிடம் இல்லை. விளைவு இப்போது அவர் கைவசம் ஐந்து படங்கள். மயங்கினேன் தயங்கினேன். கண்டுபிடி கண்டுபிடி, பகல் கொள்ளை, முப்பொழுதும் உன் கற்பனைகள், படம் பார்த்து கதை சொல் போன்ற படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

தருண் சத்ரியாவைச் சந்தித்தோம்...

அவர் அளித்த பேட்டி:

எந்தப் பின்னணியில் சினிமாவுக்கு வந்திருக்கிறீர்கள்?

எனக்கு எந்தப் பின்னணியும் இல்லை. வேலூர் மாவட்டத்தில் பொதுவாக கூத்து, நாடகம் என கலைகள் அதிகம். ஆனால் சினிமாவில் இந்த மாவட்டத்துக் கலைஞர்கள் அதிகமாக இல்லை. கடவுள் அருளால் எனக்கு இப்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது. என் தந்தை கன்னடத்தில் படம் எடுத்துள்ளார். ஆனால் அவர் உதவி எதுவும் எனக்குக் கிடையாது.

பெங்களூரில் மியூசிக் ஷாப் வைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் நமக்கு சினிமாதான் சரியாக வரும் என்று தெரிந்தது. அப்படியே ஒரு வருடம் நடிப்புப் பயிற்சி எடுத்தேன். தேவையான அளவு நடனம், ஸ்டன்ட் கத்துக்கிட்டேன். சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடியபோது, நண்பர்கள் மூலம் தருண் கோபி அறிமுகம் கிடைத்தது. நடிகனாகிவிட்டேன்.

வில்லனாக இருந்து ஹீரோவாகிவிட்டீர்கள்... டூயட்டெல்லாம் பாட வேண்டியிருக்குமே.. எப்படி உணர்கிறீர்கள்?

அதாங்க ரொம்ப கஷ்டம். வில்லனா சண்டை போடறது, சவால் விட்டுப் பேசறதெல்லாம் கூட ஓகே. ஆனா டூயட் பாடறது கஷ்டம்தான். டான்ஸ் போடணும், அப்படியே ஜோடியா நடிக்கிறவங்க உணர்ச்சியை கவனிக்கணும், அவங்க பாடி லாங்வேஜுக்கு ஏத்த மாதிரி மாறணும். இதெல்லாம் பெரிய சவால்தான்.

ஹீரோயின் ஷிகாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளதாக செய்திகள் வந்ததே...

அதெல்லாம் இல்லீங்க. இயக்குநர் சொன்னபடி நடித்தேன். உண்மையில் அந்தசக் காட்சிகளில் நடிக்க எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது. டூயட் பாடும்போதுகூட கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது. ஆனா ஷிகா ஏற்கெனவே கன்னடத்துல நடிச்சவங்க. அதனால என் தயக்கத்தைப் போக்கும் வகையில் நடந்துக்கிட்டாங்க.

உங்கள் நடிப்பைப் பார்த்து சக நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள் பாராட்டியிருக்காங்களா...

வெளியில நண்பர்கள்தான் பாராட்டியிருக்காங்க. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் நடிச்சப்போ தயாரிப்பாளர் எஸ்பிபி சரண், 'இயற்கையா நடிக்கிறே... நீ பெரிய இடத்துக்கு வருவே..." என்று பாராட்டினார். இயக்குநர்கள் தருண் கோபி, சுந்தர் சி ஆகியோரும் பாராட்டியுள்ளனர். ஆனா சக நடிகர்கள் யாரும் பாராட்டவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

ஒரு படத்தை ஒப்புக் கொள்ளும் முன் கதை கேட்பீர்களா?

இல்லை. என் ரோல் என்ன என்று மட்டும்தான் கேட்பேன். இன்னும் நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்பது ஒரு காரண்ம். வளர்ந்த பிறகும் கூட, அவசியமென்றால் கதை கேட்பேன். மற்றபடி இயக்குநர்கள் சொன்னதைக் கேட்பேன்.

நடிச்சா இனி ஹீரோதான் என்று ஏதாவது கொள்கை வைத்திருக்கிறீர்களா?

இல்லையில்லை... ஹீரோவோ குணச்சித்திரமோ வில்லனோ... நல்ல வாய்ப்பாக, கதைக்கு தேவையான முக்கிய பாத்திரமாக இருந்தாலும் போதும். ஒவ்வொரு படியாக ஏறி, இந்த சினிமாவில் எனக்கும் ஒரு இடம் இருப்பதை உறுதி செய்துள்ளேன். இதுவே என்னைப் பொறுத்தவரை பெரிய சாதனை. நல்ல வாய்ப்புகளை தேடிப் போய் பயன்படுத்திக் கொள்ளவும் நான் தயார்.

இன்றைய இளம் நடிகர்களில் உங்கள் நண்பர்கள் யார்?

நடிகர்களை விட இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்களில்தான் எனக்கு அதிக நண்பர்கள் உள்ளனர். காரணம், ஆரம்பத்திலிருந்தே நான் அவர்களுடனே இருப்பதால் கூட இருக்கலாம். உண்மையில், காளை முடித்த பிறகு நான் உதவி இயக்குநராக ஏ எம் ரத்னம் தயாரித்த நீ ஓட நான் துரத்த படத்தில் வேலை பார்த்தேன். இதை இயக்கியவரும் தருண் கோபிதான். பின்னர் இந்தப் படம் கைவிடப்பட்டுவிட்டது. எனக்கும் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் வாய்ப்பு வந்தது.

கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என்றார்களே... என்ன நடந்தது?

பத்திரிகைகளில் வந்தது போல அல்ல. அதைவிட மிக சிக்கலான காட்சி. மயங்கினேன் தயங்கினேன் படத்துக்காக கம்பம் பக்கத்தில் ஒரு கிணற்றுத் தண்ணீருக்குள் நான்கு பேருடன் நான் சண்டை போடுவது போல காட்சி. தண்ணீருக்குள் சண்டை போடும்போது, என்னுடன் நடித்தவர்கள் பயத்தில் என் கை, கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இதனால் என்னால் மேலே வந்து கையை ஆட்டி உதவி கேட்கக் கூட முடியவில்லை. நிறைய தண்ணீர் குடித்து மயங்கிவிட்டன். உயிர் போய்விடுமோ என்ற ஆபத்தான கட்டத்தில் ஒரு எம்பு எம்பி தண்ணீருக்கு மேல் கையை ஆட்ட, உடனே என்னைக் கட்டியிருந்த கயிறைப் பிடித்திழுத்தனர். 2 மணி நேரம் மூச்சுப் பேச்சின்றி கிடந்து பின்னர் பிழைத்தேன். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்," என்றார்.
 

நசிருதீன் ஷாவுடன் நடித்தது சவுகரியமாகவே இருந்தது-வித்யா பாலன்


சில்க் ஸ்மிதாவின் கதையாக கூறப்படும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்துள்ள வித்யா பாலன், அதிக வயதான நசிருதீன் ஷாவுடன் இணைந்து நடித்தது எந்த சங்கடத்தையும் தனக்கு ஏற்படுத்தவில்லை என்றும், மிகவும் சவுகரியமாகவே தான் உணர்ந்ததாக கூறியுள்ளார்.

இருவரும் இணைந்து நடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்துள்ளார் வித்யா என்கிறார்கள். எனவே நசிருதீன் ஷாவுடன் இணைந்து நடித்தபோது வித்தியாசமாக இருந்ததா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குத்தான் மேற்கண்டவாறு பதிலளித்தார் வித்யா.

இதுகுறித்து அவர் கூறுகையில், இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் ஷூட்டிங்கின்போது தெரியவில்லை. அதுகுறித்து நான் கவலைப்படவும் இல்லை. மேலும் இது ஒன்றும் ஆபாசப் படம் அல்ல. அருமையான கதையுடன் கூடிய படம்தான்.

நசிருதீன் ஷா போன்ற பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கும்போது நமக்கு நடிப்பு எளிதாகி விடுகிறது. அவர் மிகச் சிறந்த நடிகர். முன்பும் கூட அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். எனவே எனக்கு எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. அவருடன் நடிப்பது மிகவும் சவுகரியமான ஒன்றாகவே இருக்கிறது என்றார் வித்யா.

ஏற்கனவே இருவரும் இணைந்து இஷ்கியா படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

டர்ட்டி பிக்சர்ஸ் படம் டிசம்பர் 2ம் தேதி திரைக்கு வருகிறது. அன்றுதான் சில்க் ஸ்மிதான் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள்வியும் கமலின் அதிரடி பதிலும்


ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு அது. நடிகர் கமல்ஹாசன்தான் இதன் தலைவர் என்பதால், அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், இணையதளங்கள் திரைப்படத்துறைக்கு எந்த அளவு உறுதுணையாக உள்ளன என்பதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதிலளித்த கமல், எல்லா மேடைகளிலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவரும் என்னிடம் எதற்கு இந்த கேள்வி. நானே விரைவில் இணையதளப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நான் உங்கள் கட்சி, என்றார்.

அடுத்து ஒரு நிருபர், ரஜினி, நீங்க, பாலிவுட்ல அமிதாப் பச்சன் போன்றவர்கள் எல்லாம் ஓய்வு பெறலாமே, என்றார்.

சற்றும் தயங்காமல் கமல் அளித்த பதில்:

ஏன்...நீங்கள் எதற்காக வருகிறீர்கள்.. வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே!, என்று பதிலளிக்க அத்தோடு நிருபர் அமைதியாகிவிட்டார்!
 

கோலிவுட்டில் மீண்டும் களமிறங்க ஆசை : பிரியங்கா சோப்ரா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். பாலிவுட்டில் அசத்தி வரும் பிரியங்கா முதலில் சினிமாவிற்கு அறிமுகமானது தமிழில் தான். இளைய தளபதி விஜய்யுடன் 'தமிழன்' படத்தில் நடித்த பிரியங்கா, பாலிவுட் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி தவிர எந்த ஒரு மொழி படத்தையும் அவர் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. இதனையடுத்து, இந்தி பட ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்த பிரியங்கா, மீண்டும் தமிழ் படத்தில் ஆசையாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சரியான கதை தமிழில் அமைந்தால் நான் மீண்டும் தமிழில் நடிப்பேன் என்று அவர் கூறினார்.


 

"3" படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கெஸ்ட் ரோல் கிடையாது?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. '3' படத்தின் 'why this kolaveri di' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வருவதா, படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சியில் உள்ளது. எல்லா தகவலை விட தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல் தான் ரொம் எத்£பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில்  தனது அப்பாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா முயிற்சி எடுத்து வருகிறார் என செய்திகள் வெளியாகின. சமீபத்தில் இந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ரா 1' படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் தன் மகள் கேட்டுக்கொண்டால் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் '3' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கமாட்டார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இதனால் '3' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கெஸ்ட் ரோலில் நடிப்பது வதந்தி என தெரியவந்துள்ளது.


 

மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு சிறை


லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான மருத்துவர் கான்ராட் முர்ரேவிற்கு நான்காண்டு சிறை தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவர் மீது ஜாக்சன் வைத்திருந்த நம்பிக்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பாப் உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். வலி நிவாரணி மருந்தை அவரின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகமாக எடுத்து கொண்டதே மரணத்துக்கு காரணமாக கூறப்பட்டது. அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனை பரிசோதித்த மருத்துவர்கள் வலிநிவாரணி மருந்தை அதிகம் உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என கூறினர்.

இதற்கு அவரது குடும்ப மருத்துவரான முர்ரே கொடுத்த ஆலோசனை தான் என கூறப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடந்த 7ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறி தீர்ப்பு வழங்கியது. முர்ரேவின் கவனக்குறைவாலேயே மைக்கேல் ஜாக்சன் மரணமடைய நேரிட்டது என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு ஆண்டு தண்டனை

இதைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையன்று தண்டனையை அறிவித்த நீதிபதி முர்ரே தனது ஐ போனில் மைக்கேல் ஜாக்சனுடன் பேசிய உரையாடலை 6 வாரங்கள் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த பதிவில் ஜாக்சனுக்கு அளவுக்கதிகமான மருந்துகளை மருத்துவர் அளித்தது தெளிவாகியுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த உரையாடல் பதிவை ஊடகங்களுக்கு அளித்து அதன் மூலம் முர்ரே பணம் சம்பாதிக்க நினைத்திருந்தது நிரூபணமாகிறது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

முர்ரே செய்த தவறுக்காக அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. மேலும் நூறு மில்லியம் டாலர் அபராதமாக அவர்களின் மூன்று குழந்தைகளுக்கு வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் அவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.

அதிகபட்ச தண்டனை தேவை

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்சனின் தாயார் காத்ரீனா, நான்காண்டு தண்டனை மட்டும் போதாது என்று கூறியுள்ளார். இந்த தண்டனை தனது மகனை மீண்டும் உயிர்பிழைக்க வைக்காது என்று கூறிய அவர், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்களுக்கு இந்த தீர்ப்பு சற்றே ஆறுதல் அளிக்கும் என்று நம்பலாம்.
 

காந்தம் பட இசை வெளியீடு


காந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டனர்.

காந்தம் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாக நடிக்கிறார் தேஜ். இவர் ஏற்கெனவே கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் நாயகனாக நடித்தவர். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் ரஷ்மி.

அன்பால் அனைவரையும் ஈர்க்க முடியும்... அன்பே அத்தனைப் பிரச்சினைக்கும் சரியான தீர்வு என்பதை இந்தப் படம் சொல்கிறது என்கிறார் இயக்குநர் ஷரவணா. இவருக்கும் இது முதல் படம்.

இந்தப் படத்தில் மலேஷியாவைச் சேர்ந்த நடிகை பூவேஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரேம் சங்கர் ஒளிப்பதிவு செய்ய, பிரதாப் இசையமைத்துள்ளார்.

இதே படம் அயஸ் காந்தம் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகிறது.

காந்தம் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை அபிராமி மெகா மாலில் நடந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினர்.
 

நடிகர் ரவீந்தர் தலைமையில் கோவாவில் மலையாள பத்திரிக்கையாளர்கள் அடாவடி- தமிழகத்தினர் பதிலடி


சென்னை: கோவாவில் நடந்து வரும் 42வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் நடித்துப் பிரபலமான கேரளாவைச் சேர்ந்த நடிகர் ரவீந்தர் தலைமையில் கேரளத்து பத்திரிக்கையாளர்கள் சிலர் கூடி ஊர்வலமாகப் போய் முல்லைப் பெரியாறு அணை இடியப் போகிறது என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்து கொந்தளித்து விழாவுக்கு வந்திருந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்ற கோஷத்துடன் பதிலடி ஊர்வலம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென 50க்கும் மேற்பட்ட தமி்ழ் மாணவர்கள் கூடியதால், மலையாளத்துப் பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பனாஜியில் 42வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் டேம் 999 படத்தைத் திரையிட கேரளாவைச் சேர்ந்த சிலர் முயற்சித்தனர். ஆனால் அதை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முறியடித்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் 30 பேர் கூடி ஊர்வலமாக சென்றனர். முல்லைப் பெரியாறு அணை இடியப் போகிறது. அதை இடிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இந்த திடீர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் நடிகர் ரவீந்தர்.

இவர் வேறு யாருமல்ல, ஒரு தலைராகம், சகலகலாவல்லவன், தங்கமகன் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் அந்தக் காலத்தில் வில்லனாக நடித்தவர். தமிழ் சினிமாவில் நடிக்கப் போய்த்தான் இவர் பிரபல நடிகராக மாறினார். அடிப்படையில் இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்தத் திடீர் போராட்டத்தைப் பார்த்து வெகுண்டனர், விழாவுக்கு வந்திருந்த பல்வேறு பகுதி திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். அதிரடியாக 50க்கும் மேற்பட்டோர் கூடி, அவர்களும் ஒரு ஊர்வலத்தை நடத்தினர்.

8 ஆயிரம் ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும், அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும், அன்பிற்குரிய கேரள மக்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க வேண்டும், அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி? என்று அவர்கள் கோஷமிட்டதால் கேரள போராட்டக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் போராட்டங்களால் விழா நடந்த இடத்தில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது.

அத்தோடு நிற்காத தமிழ் மாணவர்கள், அங்கு கூடியிருந்த சர்வதேச பத்திரிக்கையாளர்கள் இந்திய பத்திரி்ககையாளர்களை திரட்டி அவர்களிடம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உண்ணை நிலவரத்தை விளக்கிக் கூறினர்.

இதற்கிடையே போலீஸார் விரைந்து வந்து தமிழ் மாணவர்களைக் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் முதலில் கேரள குழுவினரை கலைந்து போகச் சொல்லுங்கள். அவர்கள் போனால்தான் நாங்கள் போவோம். அவர்கள் போராட்டம் நடத்தினால் நாங்களும் நடத்துவோம் என்று உறுதிபடக் கூறி விட்டனர். இதையடுத்து கேரளக் குழுவினர் கலைந்து போனார்கள். அதன் பிறகே தமிழ் மாணவர்களும் கலைந்து சென்றனர்.

கேரளக் குழுவினரின் திடீர் போராட்டத்தால் நிலை குலைந்து போகாமல் டக்கென திரண்டு தமிழ் மாணவர்கள் நடத்திய பதிலடி போராட்டத்தால் அங்கிருந்தவர்கள் வியப்பில் மூழ்கினர்.
 

தமிழ் சினிமா ரொம்ப மாறிடுச்சி! - தேவயானி


தமிழ் சினிமா ரொம்பவே மாறிடுச்சி.. இனி நல்ல வாய்ப்பு வந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன். இல்லாவிட்டால் டிவியே போதும், எனகிறார் நடிகை தேவயானி.

கும்பகோணத்தில் படப்பிடிப்புக்காக வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், "சினிமாவில் முன்பு பிஸியாக இருந்தேன். தற்போது 'திருமதி தமிழ்' என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தற்கால சமுதாய நடப்புகளை வெளிப்படுத்தும் கதை இது.

மேலும் பல தமிழ்படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால் நான் தமிழ்ப் படங்களை ஒப்புக் கொள்வதில்லை.

தமிழ் சினிமா முன்ன மாதிரி இல்லை. ரொம்பவே மாறிடுச்சி. புதிய படங்களின் தயாரிப்பு மற்றும் கதையம்சம் இப்படி மாறிப்போகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

ஏதாவது நல்ல கதையம்சங்களுடன் உள்ள படங்கள் வந்தால் நான் நிச்சயம் ஒப்புக் கொள்வேன்.

திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும் இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ் ரசிகர்களை மறக்க முடியாது.

நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு கடமைப்பட்டவள். சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தக் காரணம், இதில் உள்ள வசதி. எக்கச்சக்க ரசிகர்கள். சினிமாவில் சொல்ல முடியாத பல விஷயங்களை சின்னத் திரையில் சொல்ல முடிகிறது," என்றார்.
 

பிசியாக இருக்கும் அஞ்சலி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கண்ணன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், 'கரிகாலன்'. சரித்திரப் பின்னணி கதை கொண்ட இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இதில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார் அஞ்சலி. 'தற்போது வசந்தபாலனின் 'அரவான்', விமலுடன் 'மசாலா கபே' படங்களில் நடித்து வருகிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அவரது தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் நான்தான் ஹீரோயின். 'கரிகாலன்' படத்தில் ஏற்றுள்ள கேரக்டருக்காக, குதிரை சவாரி, வாள் வீசும் பயிற்சி பெற்று வருகிறேன். டிசம்பர் 10ம் தேதி முதல், ஐதராபாத்தில் விக்ரமுடன் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாகிறது' என்றார் அஞ்சலி.


 

சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு வைத்து 'வடசென்னை' என்ற படத்தை இயக்குகிறார். இயக்குனர் வெற்றிமாறன் 'ஆடுகளம்' ஹிட்டுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால், இப்போதிருந்தே 'வடசென்னை' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கிறார். இதற்கிடையில் சிம்புக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்து வரும் ஆ‌ண்ட்‌ரியா, வடசென்னை படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.


 

அந்துருண்டை கண்ணழகி

 

டுவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் நான் இல்லை : நயன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நயன்தாரா பெய‌ரில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி போலியாக செய்திகள் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைமில் புகார் தந்துள்ளார் நயன்தாரா.
டுவிட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் நயன்தாரா இல்லை. ஆனால் சில விஷமிகள் நயன்தாரா பெய‌ரில் அக்கவுண்ட் ஓபன் செய்து அவர் பெய‌ரில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இது நடிகை நயன்தாராதான் என்று நினைத்து ரசிகர்களும் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் டேம் 999 படத்துக்கு நயன்தாரா ஆதரவு அளித்தது போல் அதில் செய்தி வெளியிட்டுள்ளனர். விஷயம் விப‌‌ரீதமாவதை அறிந்த நயன்தாரா தனது பெய‌ரில் இணையத்தில் இயங்கி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைமில் புகார்



 

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக ராதிகா தேர்வு!

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, ராணா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படத்தில் சிம்புவுடன், தெலுங்கு நடிகர் ராணா நடிக்கிறார். தனுஷ், டாப்ஸி நடித்த 'ஆடுகளம்' படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம், 'வடசென்னை'. இதில் சிம்பு, தெலுங்கில் 'லீடர்' படத்தில் நடித்த ராணா நடிக்கிறார்கள். ஹீரோயின்களாக திவ்யா, ஆண்ட்ரியா நடிக்கின்றனர். கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம், இதுவரை பார்க்காத வடசென்னையின் இன்னொரு முகத்தை காட்டும் என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.


 

பாலிவுட்டுக்கு போகும் "அக்னி நட்சத்திரம்"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 1988ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, சூப்பர் ஹிட் படமான ''அக்னி நட்சத்திரம்' பாலிவுட்டுக்கு செல்கிறது. இந்தி நடிகர் அஜய் தேவகன் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அவரே படத்தை தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு-கார்த்திக் நடித்த இந்த படம், இருதாய் வயிற்றில் பிறந்த சகோதர்களின் மோதல் அழகாக காட்டினார் மணிரத்னம். இதனையடுத்து இந்தி ரீமேக்கையும் மணிரத்னம் இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. இதனைய அஜய் தேவகன் முழுமையாக மறுத்துள்ளார். படத்தை ரோஹித் செட்டி இயக்குகிறார்.



 

"டர்ட்டி பிக்சர்" சில்க் கதை இல்லை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை, 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் இந்தியில் படமாக எடுத்துள்ளனர். இதற்காக சில்க் ஸ்மிதாவின் படங்களைப் பார்த்தும் அவரிடம் நெருங்கி பழகியவர்களிடம் பல தகவல்களை சேகரித்து அதை படமாக்கியுள்ளனர். இதில் சில்க் ஸ்மிதாவாக, இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சில்க் ஸ்மிதாவின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் வித்யா பாலன், திடீரென பல்டி அடித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகையை பற்றிய கதைதான் இது. ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை அல்ல. சில்க் என்ற பெயரில் நடனக் கலைஞராக நான் நடிக்கிறேன். சூரியகாந்த் என்ற கேரக்டரில் நஸ்ரூதின் ஷா நடிக்கிறார். அவர் சீனியர் நடிகர். இருந்தாலும் அவருடன் நடிக்கும்போது அந்த கேரக்டரைத்தான் பார்த்தேன். எண்பதுகளில் நடப்பது போல் படத்தின் கதை செல்வதால் அந்த காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் எந்த மாதிரியான உடை அணிந்தார்களோ அது படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் முழுவதுமாக, நூறு உடைகள் அணிந்து நடித்துள்ளேன். படத்தில் மெசேஜ் என்று எதுவும் இல்லை. என்டர்டெயின்ட்மென்ட்டாக இருக்கும். இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.


 

தெலுங்கிற்கு செல்லும் தபாங் படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியில் சல்மான் கான் நடித்த 'தபாங்' சூப்பர் ஹிட்டானதுடன், வசூல் சாதனையும் புரிந்தது. இந்நிலையில் 'தபாங்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஒஸ்தி'-யில் சிம்பு நடித்துள்ளார். தரணி இயக்கியுள்ளார். டிசம்பர் 8ந் தேதி 'ஒஸ்தி' வெளியாகிறது. இதனையடுத்து இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்கிறார். சோனாக்‌சி சின்காவின் வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.



 

இந்திக்கு செல்கிறார் ரிச்சா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மயக்கம் என்ன, ஒஸ்தி என தமிழில் தன் கேரியரை ஓப்பனிங் செய்திருக்கும் ரிச்சாவிற்கு அதற்குள் பாலிவுட் வாய்ப்புகள் வந்துள்ளன. அதுவும் தமிழ் இயக்குனர் இயக்கத்தில். யார் அந்த இயக்குனர் தெரியுமா?... நம்ம சுசி கணேசன். கந்தசாமி படத்திற்கு பிறகு, தமிழில் அடுத்த பட வாய்ப்புகள் வராததால், தனது முந்தைய படமான 'திருட்டுப்பயலே' படத்தை இந்தியில் எடுக்க திட்டமிட்டார் சுசி. படத்தின் சோனியா அகர்வால் கதாபாத்திரத்துக்கு தமிழில் ரிச்சாவிடம் சுசி கேட்டுள்ளதாக தெரிகிறது.


 

பிரசாந்த் எதிர்பார்த்த பிரேக் மம்பாட்டியான் படத்தில் கிடைக்கும் : தியாகராஜன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தியாகராஜன் நடிப்பில் 28 வருடங்களுக்கு முன் வெளியான மலையூர் மம்பட்டியானைதான் மம்பட்டியா‌ன் என்ற பெய‌ரில் பிரசாந்தை வைத்து ‌ரீமேக் செய்திருக்கிறார் தியாகராஜன். தயா‌ரிப்பும், இயக்கமும் தியாகராஜன். இந்த‌க்கால இளைஞர்களுக்குப் பிடிக்கும் வகையில் படத்தை எடுத்திருக்கிறேன். பிரசாந்த் எதிர்பார்த்த பிரேக் இந்தப் படத்தில் அவருக்கு கிடைக்கும் எனவும் தியாகராஜன் நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார்.


 

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதுபடம் 'கோச்சடையான்'. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார்.  இதனையடுத்து படத்தின் ஹீரோயின் பற்றி புதுதகவல் வந்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. கோலிவுட் வேகமாக பரவி வரும் இந்த செய்திக்கு இதுவரை, படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே இந்த செய்தி வதந்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


 

நடிகையின் வாக்குமூலம் கற்பனை கதைதான்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒரு நடிகையின் வாக்குமூலம்' கற்பனை கதைதான் என்று சோனியா அகர்வால் கூறினார். 'புன்னகை பூ' கீதா தயாரிக்கும் படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்'. சோனியா அகர்வால் நடிக்கும் இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு வெளியிட்டனர். பின்னர் சோனியா அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்கிறேன். ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ரகசியங்கள் இருப்பது போல், நடிகையின் வாழ்க்கையிலும் இருக்கும். என் வாழ்க்கையிலும் இருக்கிறது. கண்டிப்பாக அதை சொல்ல மாட்டேன். இந்தப் படத்தின் கதைக்கும், என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. இது கற்பனைக் கதை. இந்தியில் 'டர்ட்டி பிக்சர்' ரிலீசாகிறது. தமிழில் இப்படம் உருவாகி, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் இதுபோன்ற கதையுடன் படம் வந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்த விஷயம்தான். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ராஜ்கபூர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமலன் தொகுத்து வழங்கினார். இறுதியில் ராஜ்கிருஷ்ணா நன்றி கூறினார்.


 

இலியானா வேண்டாம் தெலுங்கு ஹீரோ பிடிவாதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கு ஹீரோ ஜுனியர் என்டிஆரோடு இலியானா நடித்த படம், 'சக்தி'. இது தமிழிலும் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடித்தபோது பலவிதமான பிரச்னைகளை சந்தித்ததாகப் புகார் கூறினார் இலியானா. இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 'சொன்ன கதை ஒன்று எடுத்த கதை ஒன்று' என்று இயக்குனரையும் ஜூனியர் என்டிஆரையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், சீனு வைட்லா இயக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக, இலியானாவிடம் கேட்கலாம் என்று இயக்குனர் கூறினார். கடுப்பான ஹீரோ, 'தயவு செய்து இலியானா வேண்டாம். வேறு யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாகப் போட்டுக்கொள்ளுங்கள்'என்றாராம். தெலுங்கு பட உலகில் இச்செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'இலியானாவும் ஜூனியர் என்டிஆரும் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளனர். அவர்களுக்குள் பிரச்னை ஏதும் இல்லை. இந்தப் படத்தில் கண்டிப்பாக இணைவார்கள்' என்கிறது இலியானா தரப்பு.


 

காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடினார் திவ்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதலருடன் தனது பிறந்த நாளை கேரளாவில் நேற்று கொண்டாடினார் திவ்யா. திவ்யாவுக்கு நேற்று 29வது பிறந்த நாள். இதை தனது காதலர் ரபேலுடன் கொண்டாட விரும்பினார் திவ்யா. இதையடுத்து கடவுளின் தேசமான கேரளாவுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.  அவர் கூறியதாவது: கோவாவை விட கேரளாதான் மிகவும் அழகானது. அதனால் எனது இந்த பிறந்த நாளை அங்கு கொண்டாட முடிவு செய்தேன். இன்னும் சில நாட்கள் கேரளாவில் ஓய்வெடுக்க இருக்கிறேன். இப்போது கன்னடத்தி உபேந்திராவுடன் 'கடரி வீரா' என்ற படத்தில் நடிக்கிறேன். 2டி மற்றும் 3டியில் இந்தப் படம் உருவாகிறது. ஒவ்வொரு ஷாட்டும் இரண்டு முறை எடுக்கப்படும். இதில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இதில் இந்திரக் கடவுளின் மகளாக நான் நடிக்கிறேன். இதற்கான மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்கு பல மணிநேரங்கள் ஆகும். இதில் எமனாக அம்ப்ரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு படமும் கன்னடத்தில் சில படங்களும் நடிக்கிறேன்.


 

மீண்டும் மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி நடிக்கும் புதுப்படத்துக்கு ''கோச்சடையான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ''கோச்சடையான்' இந்தியாவில் தயாராகும், நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3டி படமாகும். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாரான 'அவதார்', ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் உருவான 'டின் டின்' ஆகிய படங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் 'கோச்சடையான்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தர்யா அஸ்வின் இயக்குகிறார். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்குகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த படத்தில் பாண்டிய நாட்டு மன்னனாக நடிக்கிறார். கிபி.670 முதல் கிபி -710 ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பெயர் 'கோச்சடையான்'. கோ என்றால் அரசன், சடையான் என்றால் சிவன் பக்தர் என்று அர்த்தமாம் ஏற்கனவே தீவிர சிவன் பக்தனான சூப்பர் ஸ்டார், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என தனது முந்தைய படங்களில் சிவனை குறிப்படும் பெயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் தல!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கக்கூடும் என்கிறார்கள். பில்லா 2 ல் கவனம் செலுத்தி வரும் அ‌ஜீத், அடுத்து விஜயா புரோடக்ஷன் நாகரெட்டி சார்பில் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். ஹீரோயினாக அனுஷ்கா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



 

அம்மா ஆனார் அனிதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'தாய்வீடு', படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை அனிதா ராஜ். கமல்ஹாசன், சஞ்சய் தத், தர்மேந்திரா உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இதுபற்றி அனிதா ராஜ் கூறியதாவது: 1981ம் வருடம் 'பிரேம் கீத்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானேன். பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2007ம் ஆண்டு, 'தொடீ லைஃப் தொடா மேஜிக்' என்ற படத்தில் ரீ என்ட்ரி ஆனேன். அந்தப் படத்தை மக்கள் பார்க்கவில்லை. அதனால் நல்ல கேரக்டருக்காக காத்திருந்தேன். இப்போது சமீர் கார்னிக் இயக்கும் 'ஜார் தீன் கி சாந்தினி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். ஹீரோவுக்கு அம்மாவா என்பதை இப்போது நான் சொல்ல இயலாது. அதை இயக்குனர்தான் சொல்ல வேண்டும். படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு அனிதா ராஜ் கூறினார்.


 

கிசு கிசு - ஹீரோ மீது நடிகைகள் உர்ர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஜெயிக்கிற ஹீரோவோடு லவ்வுன்னு வந்த கிசுகிசுவை கேட்டு திக்கான அங்காடி ஹீரோயின், உடனே மறுத்தாரு. பதிலுக்கு ஹீரோவோ ஒரு படி மேல போயி, 'நான் நடிகையை மணக்க மாட்டேன்'னு சொன்னாரு... சொன்னாரு... இதனால சில ஹீரோயினுங்க கோபமாயிட்டாங்களாம். 'நடிகையின்னா மரியாதைக்குறைவா போச்சாÕன்னு கேட்கிறாங்களாம்... கேட்கிறாங்களாம்... இதை கேள்விப்பட்ட ஹீரோ, 'நடிகைகளை தப்பா சொல்லணும்னு இப்படி சொல்லல. வீட்ல பாக்குற பெண்ணைத்தான் கட்டிக்குவேனுங்கிற அர்த்தத்துலதான¢ அப்படி சொன்னேன்'னு புது விளக்கம் தர்றாராம்...தர்றாராம்...  

வெற்றியான இயக்கம், தன்னோட படத்துக்கு ஆண்ட ஹீரோயினை நடிக்க கேட்டாராம். அவரும் ஓகே சொல்லிட்டாராம். ஆனாலும் படத்துக்கு ஹீரோயினை தேடிட்டிருக்கேன்னு இயக்கம் சொல்றாராம். இது பற்றி கேட்டா, படத்துல ஆண்ட நடிகை செகண்ட் ஹீரோயின்தான்னு சொல்றாராம். இதை கேள்விப்பட்டு நடிகை ஷாக் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...

செல்வ இயக்கத்தோட தவுசண்ல ஒருத்தன் செகண்ட் பார்ட்ல பைய நடிகரு நடிக்கலையாம்... நடிக்கலையாம்... வேற யார்கிட்ட வருஷ கணக்குல கால்ஷீட் வாங்குறதுன்னு இயக்கம் யோசிச்சாராம். ஒரே சாய்ஸ் தன்னோட பிரதர் நடிகர்தான்னு முடிவு பண்ணிட்டாராம். இப்பவே பிரதர் நடிகர்கிட்ட ஸ்கிரிப்ட் பற்றி பேசி கால்ஷீட்டுக்கு பிராக்கெட் போட ஆரம்பிச்
சிட்டாராம்... ஆரம்பிச்சிட்டாராம்...


 

தனுஷ் பாட்டைக் கிண்டல் செய்ய வேண்டாம் - சொல்கிறார் சிம்பு


கொலவெறிடி பாட்டில் தமிழைக் கொலை செய்கிறார் தனுஷ் என்று தனது ரசிகர்கள் கிண்டலடித்து வருவது தவறு என சிம்பு கூறியுள்ளார்.

3 படத்துக்காக தனுஷ் எழுதிப் பாடியுள்ள வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் இன்று இந்தியா முழுக்க முணுமுணுக்கப்படும் பாடலாகிவிட்டது. பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், அவர் மகன் நடிகர் அபிஷேக் பச்சன் என பலரும் இந்தப் பாடலை தங்களுக்குப் பிடித்த ஒன்றாகக் கூறியுள்ளனர்.

வட இந்திய செய்திச் சேனல்கள் இந்தப் பாடலை வைத்து அரசியல் தலைவர்களை கிண்டலடித்து அரசியல் காமெடி நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆரம்பித்துள்ளன.

ஆனால் சிம்புவின் ரசிகர்களோ, தமிழ்க் கொலை செய்கிறார் தனுஷ் என இணையதளங்கள், போஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தச் செயலை கண்டித்துள்ளார் நடிகர் சிம்பு.

தனது பேஸ்புக்ஸகில் இதுகுறித்த அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது பாடல்களுடன் ஒப்பிட வேண்டாம். தனுஷ் சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர். இருவருமே ஒரே துறையில் இருக்கிறோம்.

ஒரு பாடலை எழுதி பாட எல்லோருக்கும் உரிமை உண்டு. தற்போது சிறு சிறு ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பாடலாக்குவது ஒரு ட்ரெண்டாகிவிட்டது.

அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எனவே பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள். பாட்டை கேலி செய்த ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள்," என்று கூறியுள்ளார்.
 

தமிழ் ரசிகர்களை இழிவாகப் பேசினேனா? - நடிகர் கார்த்தி விளக்கம்


தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் கார்த்தி சர்ச்சையில் சிக்கியுள்ள கார்த்தி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் கார்த்தி ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்த்தியிடம், 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா?' என கேள்வி கேட்டார் விழாவைத் தொகுத்தளித்த பெண்.

அதற்கு கார்த்தி, "நிச்சயமாக தெலுங்கு ரசிகர்களைத்தான் பிடிக்கும். தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கைதட்டி விசிலடிப்பார்கள். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லை," என்று பதில் சொல்வது போல் வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ் ரசிகர்களை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி கார்த்தி வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டுள்ளோம் என்று ஒரு கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

கார்த்தி கூறுகையில், "தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் எனது பெற்றோர் போன்றவர்கள். பெற்றோரை பற்றி யாராவது தவறாக பேசுவார்களா? கனவில் கூட யாரையும் நான் தவறாக நினைத்தது கிடையாது. தமிழக மக்களுக்கு என்னை பற்றி தெரியும். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது.

தமிழ் ரசிகர்கள் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள். தமிழ் ரசிகர்கள் படங்களோடு உணர்வு பூர்வமாக ஒன்றி போக கூடியவர்கள். தெலுங்கு ரசிகர்கள் பொழுதுபோக்கு அம்சமாகத்தான் படங்களை பார்ப்பார்கள்.

ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ஆந்திராவில் எனது படங்களை பார்த்து வரவேற்பு கொடுப்பதற்காக தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்னேன். தெலுங்கில் பேசியதால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது," என்றார்.
 

மனைவியுடன் நடிகர் சினேகன் கள்ளத் தொடர்பு: தந்தையுடன் குழந்தை வசிக்க நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சினேகனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைக்காமல், தன்னுடன் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற மடிப்பாக்கம் எஞ்ஜினீயர் பிரபாகரன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற குடும்பரநல கோர்ட் ஏற்றுக் கொண்டது.

மனுவை விசாரித்த பின் பிறப்பித்த உத்தரவில், தந்தை பிரபாகரனுடனே குழந்தை வசிக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

மடிப்பாக்கம் சக்திநகரை சேர்ந்த பிரபாகரன் தனது மனைவியுடன் நடிகர் சினேகன் தொடர்பு வைத்து இருப்பதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், "என் மனைவி ஜமுனா கலாதேவிக்கும் நடிகர் சினேகனுக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது. ஜமுனாவிடம் சினேகன் நாட்டியம் கற்றார்.

எனது மனைவியிடம் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆக்குவதாக ஆசைவார்த்தை கூறினார். என் பேச்சை கேளாமல் ஜமுனா சினேகனுடன் சுற்ற தொடங்கினார். அவர்கள் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்று கூறிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

எங்களுக்குப் பிறந்த 5 வயது பெண் குழந்தை என்னுடன் வசிக்கிறாள். குழந்தையை அபகரிக்க ஜமுனா முயற்சிக்கிறார். என்னிடமே குழந்தை வாழ உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜாசொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குழந்தை சஞ்சனாஸ்ரீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாள். குழந்தை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். தொடர்ந்து அப்பாவுடன் இருப்பதாக கூறினாள். இதையடுத்து பிப்ரவரி 1-ந்தேதி வரை தந்தையுடன் குழந்தை சஞ்சனாஸ்ரீ வசிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 

கோவா பட விழாவில் எம்.எப். ஹுசைன் படம் உள்பட 2 ஆவணப் படங்களுக்கு தடை- தமுஎகச கண்டனம்


கோவா: கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் 2 திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கோவாவில் ஆண்டுத்தோறும் நடைபெறும் இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, திரைப்பட ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிற ஒரு நிகழ்வாகும். தற்போது 42வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா - கோவா 2011 திரையிடலில் இருந்து 2 முக்கியமான படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரைப்பட ஆர்வலர்களுக்கும், கருத்து சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியர் அமரர் எம்.எப்.உசேன் இயக்கிய ‘த்ரூ தி அய்ஸ் ஆஃப் தி பெயின்டர்’ என்ற ஒரு ஓவியரின் பார்வையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற ஒரு ஆவணப் படம் இந்த விழாவில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்த படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (நவ.27), அதன் திரையிடல் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு ஒன்று இந்தப் படத்தைத் திரையிட்டால் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்று அச்சுறுத்தியதன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் 2 நாட்களுக்கு முன்பாக ‘இன்குலாப்’ என்ற குறும்படத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கவுரவ் சாப்ரா இயக்கிய இந்தக் குறும்படம் பகத்சிங் தியாகத்தை பின்னணியாகக் கொண்டு, இன்று நாட்டில் தலைவிரித்தாடும் சமத்துவமின்மை, மதவெறி, சாதியம், ஊழல், வேலையின்மை, பன்னாட்டு நிறுவனங்களுக்காக வளைக்கப்படும் சட்டங்கள், மரபணு நீக்கப்பட்ட விதைகளுக்கு அனுமதி போன்ற கேடுகள் பற்றி 2 இளைஞர்கள் உரையாடுவதாக அமைந்ததாகும்.

தேச விரோத கருத்துகளை இந்தப் படம் கொண்டிருப்பதாகக் கூறி, இதற்கு தணிக்கைச் சான்று வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளது. இதனால் இந்த விழாவில் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த 2 படைப்புகளும் அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மக்கள் தங்கள் தேர்வுப்படி கலையாக்கங்களைக் காணும் சுதந்திரத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும். எனவே இந்திய பன்னாட்டு திரைப்பட விழா அமைப்பாளர்கள் இந்த 2 திரைப்படங்களையும் தடையின்றித் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தணிக்கைக் குழு ‘இன் குலாப்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஜெயம் ரவி குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!


ஜெயம் ரவியின் தந்தையும் தயாரிப்பாளருமான எடிட்டர் மோகனுக்கு நேற்று 70 வது பிறந்த நாள். இயக்குநர் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி ஆகியோருக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறந்த பின்னரும் இன்றும் ஒரு கூட்டுக்குடும்பமாகவே வசித்து வருகின்றனர்.

தந்தையின் 70வது பிறந்த நாளை இந்த குடும்பம் சந்தோஷத்துடன் கொண்டாட ஆரம்பித்த தருணத்தில், அவர்களை உற்சாகத்தின் எல்லைக்குப் போகவைத்தது ஒரு சம்பவம்... அது அவர்களே சற்றும் எதிர்ப்பார்க்காத சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகை.

இப்போதெல்லாம் அவர் எந்த நிகழ்ச்சிக்கு வருவார், எப்போது வருவார் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. உடல் நிலை காரணமாக அவரை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே அவர் விருப்பப்படி, திடீரென வந்து பலருக்கும் இன்ப அதிர்ச்சி தந்து வருகிறார் ரஜினி.

ரஜினியின் வருகையால் துள்ளிக் குதித்த ஜெயம் ரவி, உடனே தனது ட்விட்டரில், "இன்று எங்கள் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி... அப்பாவின் 70 வது பிறந்த நாளுக்கு நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி சார்... என் குழந்தை ஆரவ்வின் கைகளைப் பிடித்து ரஜினி சார் கொஞ்சியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது...", என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயம் ரவிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி இன்னும் பலருக்கும் கிடைக்கட்டும்!
 

சினேகனுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - குழந்தையையாவது என்னுடன் வாழ விடுங்கள் - கணவர் வழக்கு


சென்னை: நடிகர் சினேகனுடன் எனது மனைவிக்கு தொடர்பு இருப்பது உண்மையே. இப்போது என் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். எனவே குழந்தையாவது என்னுடன் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். சினேகனும் என்மனைவி ஜமுனா கலாதேவியும் இதற்கு இடையூறு செய்வதை தடை செய்ய வேண்டும்' என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை குடும்பநல கோர்ட்டில் மடிப்பாக்கம் சக்திநகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த ஏ.பிரபாகரன் (வயது 35) தாக்கல் செய்த மனுவில், "எனது சகோதரியின் மகனை நாட்டியப் படிப்புக்காக அழைத்து செல்லும்போது 2002-ம் ஆண்டு ஜமுனா கலாதேவி (29) எனக்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2 ஆண்டுகளாக இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம்.

கடுமையான எதிர்ப்புக்கு இடையே 1.12.04 அன்று வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டு, திருமணத்தை பதிவு செய்தோம். என்னை திருமணம் செய்வதற்காக கட்டிய துணியோடு ஜமுனா வந்துவிட்டார். எல்லா செலவுகளையும் நானே கவனித்துக் கொண்டேன்.

நாட்டியப் பள்ளி

நான் தனியார் கம்பெனி நிறுவனம் ஒன்றின் மேலாளர். 7.10.06 அன்று எங்களுக்கு சஞ்ஜனாஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்தது. நாட்டியப் பள்ளி வேண்டுமென்று என்னை ஜமுனா வற்புறுத்தியதால், அதற்கு நான் அனுமதி அளித்தேன்.

அதன் பிறகு நாட்டியத்திலேயே ஜமுனா கவனம் செலுத்தியதால், குழந்தையை முழுக்க முழுக்க நானே கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜமுனா பெற்றோரும் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை.

இந்த நிலையில் மற்றொரு நாட்டியப் பள்ளியை 2009-ம் ஆண்டு செப்டம்பரில் வேளச்சேரியில் ஜமுனா தொடங்கினார். தொடக்க நிகழ்ச்சிக்கு 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா' என்ற பாடலை எழுதிய சினிமா பாடகர் சினேகன் வந்திருந்தார்.

அதன்பின்னர் நாட்டியப் பள்ளிக்கும், வீட்டுக்கும் சினேகன் அடிக்கடி வரத் தொடங்கினார். பல தவறான வாக்குறுதிகளை ஜமுனாவுக்கு அளித்து, அவரது மனதை கலைத்துவிட்டார்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே நாட்டியம் கற்றுத்தர வேண்டும் என்ற பள்ளி விதியை மீறி சினேகனுக்கு ஜமுனா நாட்டியம் கற்றுத் தந்தார். சினிமாவில் நாட்டிய இயக்குனராக வாய்ப்பு வாங்கித் தருவதாக ஜமுனாவிடம் சினேகன் ஆசை காட்டியுள்ளார்.

இதற்கு ஆசைப்பட்ட ஜமுனாவும், எனது பேச்சை கேளாமல் சினேகனுடன் சுற்றத் தொடங்கினார். அவர்களின் சினேகம் கட்டுப்பாட்டை தாண்டிச் சென்றது. தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர்.

நான் தூங்கிய பிறகு மொட்டை மாடிக்குச்சென்று இரவு முழுவதும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். இதுபற்றி நான் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவற்றை ஜமுனா நிராகரித்தார். என்னையும், குழந்தையையும் கவனிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்றும், பெற்றோர் வீட்டுக்கு செல்லப் போவதாகவும் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பரில் கூறினார். அதன் பின்னர் எல்லா உடமைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

எதையுமே அவரது பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரவில்லை என்றாலும், பல நகைகளை வீட்டில் இருந்து கொண்டு சென்றுவிட்டார். புதிய உறவு ஏற்பட்டதால் நாட்டிய பள்ளியை கவனிக்க முடியாமல் அவற்றை மூடினார்.

எனக்கு கடந்த மார்ச் மாதம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நான் விரும்பவில்லை. ஆனாலும் என்னுடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

குழந்தையையாவது வாழ விடுங்கள்...

என்னை விட்டு ஜமுனா பிரிந்து சென்று, தனது சகோதரர் விஜய் ஆதிராஜ், தாயார் விஜயகுமாரி, மற்றும் தந்தையுடன் சேர்ந்து எனது குழந்தையை அபகரிக்க முயன்றார்.

தற்போது என்னுடன் குழந்தை வசிக்கிறாள். எனவே என்னிடமே குழந்தை வாழ வேண்டும் என்றும், அதற்கு இடையூறு செய்வதற்கு ஜமுனா, சினேகன் உள்ளிட்டோருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜமுனாகலாதேவி புகார்

இந்த நிலையில் நேற்று காலையில் ஜமுனாகலாதேவி, தனது வக்கீல் வானதி சீனிவாசனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "எனது மார்பில் சினேகன் பெயரை பச்சைகுத்தி இருப்பதாக பொய்யான தகவலை எனது கணவர் பரப்பிவிட்டுள்ளார். நான், எனது மகளின் பெயரைத்தான், பச்சை குத்தி உள்ளேன். எனது மகளை மீட்டுத்தரும்படி நான் ஏற்கனவே மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து, எனது மகளை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். நான் சினேகன் கட்டுப்பாட்டில் இல்லை," என்றார்.

குழந்தையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வழக்குப் போடவிருப்பதாகவும் ஜமுனா கலாதேவி கூறினார்.
 

பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிக்கும் நாடகம்... பிக்கி மாநாட்டில் அரங்கேறுகிறது!


சென்னையில் நடக்கும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) விழாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாஸன் நடிக்கும் புதிய நாடகம் நடக்கிறது. இந்தத் தகவலை கமல்ஹாஸன் நேற்று தெரிவித்தார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில், சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு, சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாடு, இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது.

இந்த தொழிலில் உள்ள சிக்கல்களை எடுத்துரைக்க ஒரு அரங்கம் தேவைப்பட்டது. அதற்காகவே இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய தீர்க்க தரிசனங்களில் நம்பிக்கை உள்ளவர்களில் நானும் ஒருவன்.

மும்பையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை, சென்னையிலும் நடைபெறுவதற்கு நானும், நண்பர் முராரியும் பாடுபட்டோம். தொழில் கட்டுக்கோப்பாக நடப்பதற்கு நம் குரல் மத்திய-மாநில அரசுகளுக்கு கேட்க வேண்டும். இதில், சினிமா மட்டுமல்லாமல் பத்திரிகை உலகமும் புரிந்து கொள்ளும் விஷயங்கள் இருக்கிறது.

கே பி இயக்கத்தில் நாடகம்

சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெவ்வேறு தொழில்நுட்ப அறிஞர்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 800 பேர் கலந்துகொள்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

பிரச்சினைகளை விட, தொழில் முன்னேற்றத்துக்கான விஷயங்கள் அதிகமாக விவாதிக்கப்படும். நமக்கு உரிய உரிமைகள் என்ன என்பதை கலைஞர்கள் புரிந்துகொள்ளும் பயிலரங்கமாக இது இருக்கும்.

மாநாட்டில் ஒரு சின்ன நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர் எழுதியிருக்கிறார். நான் (கமல்ஹாசன்), கிரேஸி மோகன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிக்கிறோம். இது, டிஜிட்டல் சினிமா பற்றிய நகைச்சுவை நாடகமாக இருக்கும்.

தமிழக அரசிடம் நிதி கேட்போம்

சினிமா இன்னும் தொழிலாக அங்கீகரிக்கப்படாததால், படம் தயாரிப்பதற்கு வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன. இதனால்தான் இந்தி பட உலகில் கறுப்புப் பணம் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது.

கடந்த முறை சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. இந்த முறையும் அரசிடம் நிதி உதவி கேட்கப்படும். அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். கேட்பது எங்கள் கடமை,'' என்றார்.

பேட்டியின்போது, இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த லீனா ஜெய்சானி, பி.முராரி ஆகியோர் உடன் இருந்தார்கள். பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.
 

வெளியில் சொல்ல முடியாத என் வாழ்க்கை ரகசியங்கள்! - சோனியா அகர்வால் பேட்டி


"வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, என் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உள்ளன. அவற்றை எப்போதும் சொல்ல மாட்டேன்,'' என்று நடிகை சோனியா அகர்வால் கூறினார்.

ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில், நடிகையாக சோனியா அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா டைரக்டு செய்துள்ளார். புன்னகைப்பூ கீதா தயாரித்து இருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டு பேசினார்.

அவர் பேசுகையில், "எல்லோருடைய வாழ்க்கையையும் போல் நடிகையின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சோகம், இன்பம், துன்பம், ரகசியம் இருக்கும். குறிப்பாக, நடிகையின் வாழ்க்கையில் பல ரகசியங்கள் இருக்கும். வெளியே தெரியாத பக்கங்கள் இருக்கும். அந்த பக்கங்களை இந்த படத்தில் காட்டியிருப்பதாக சொன்னார்கள்.

நடிகையின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் ஆவல் இருக்கும். எனக்கும் அந்த ஆவல் நிறைய உண்டு. இந்தப் படம் எனக்கே பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. இந்தப் படம் பெறவிருக்கும் வெற்றிக்கு அதுவே பெரிய உதாரணம்,'' என்றார்.

சோனியா அகர்வால் பேசும்போது, "நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன். உடன் நடித்தவர்கள், இயக்குநர் போன்றவர்கள்தான் என்னை மிக இயல்பாக இருக்க உதவினர்,'' என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்தப் படத்தில் உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களைச் சொல்லியிருக்கிறீர்களா?

எல்லோருடைய வாழ்க்கையிலும் ரகசியங்கள் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன.

நான் நடிகையாக இருப்பதால், என் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். என் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை. `ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தின் கதைக்கும், என் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை. ஒரு சதவீதம் கூட, என் சொந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் சொல்லவில்லை.

டர்ட்டி பிக்சர் என்று இந்தியில் இதே மாதிரி படம் வருகிறது. மதுர் பண்டார்கரின் ஹீரோயின் படமும் துவங்கப் போகிறது. நடிகை பற்றி படங்கள் அதிகம் வருவது குறித்து...

'டர்ட்டி பிக்சர்' என்ற இந்தி படத்தின் கதை வேறு. நடிகையின் வாழ்க்கையை பற்றிய படங்கள் இதற்கு முன்பு நிறைய வந்துள்ளன. மதூர் பன்டார்கரின் 'ஹீரோயின்', 'திரைக்கதா' போன்ற படங்கள் வருவதெல்லாம் தற்செயலானது. நடிகை பற்றிய ரசிகர்களின் ஆவலைப் புரிந்து எடுக்கிறார்கள். அதேநேரம், அந்த படங்களில் இருந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம், 'ஒரு நடிகையின் வாக்குமூலம்.'

குணச்சித்திர வேடங்கள் வந்தால் நடிப்பீர்களா?

எனக்கு கதாநாயகியாக நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் வருகின்றன. அதனால், குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன்.''

இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு, பட அதிபர் கே.ராஜன், ஒளிப்பதிவாளரும் பட அதிபருமான கேசவன், நடிகர் ராஜ்கபூர் ஆகியோரும் பேசினார்கள்.

பட அதிபர் புன்னகைப்பூ கீதா வரவேற்றுப் பேசினார். இயக்குநர் ராஜ்கிருஷ்ணா நன்றி கூறினார்.

நிகழ்ச்சிகளை பத்திரிகையாளர் அமலன் தொகுத்து வழங்கினார்.
 

பவன் கல்யாண் படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கம்-இலியானா சேர்ப்பு


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ருதி ஹாசன் தற்போது படத்தில் இல்லையாம். அவருக்குப் பதில் இலியானாவை ஹீரோயினாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.

இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். தபாங் ஏற்கனவே தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகியஉள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம்தான் தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் உருமாறி வருகிறது.

ஸ்ருதி ஹாசன் நீக்கத்திற்கான காரணம் தெரியவில்லை. அதேபோல இலியானாவைத் தேடிப் போனதற்கான காரணமும் தெரியவில்லை. ஒருவேளை கவர்ச்சிக்காக இலியானாவைச் சேர்க்க திட்டமிட்டனரா என்பதும் தெரியவில்லை.

ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

சிரஞ்சீவி மகனை இயக்கப் போகிறார் முருகதாஸ்


சிரஞ்சீவியை வைத்து தாகூர் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அவரது மகன் ராம் சரண் தேஜாவை இயக்கப் போகிறார்.

தமிழில் மாபெரும் ஹிட் ஆன படம் விஜயகாந்த் நடித்த ரமணா. அரசியலில் நுழைய நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு இநத்ப் படம் பெரும் பிரேக் கொடுத்தது.

பின்னர் இந்தப் படத்தை சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் இயக்கினார் முருகதாஸ். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. சிரஞ்சீவிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கப் போகிறார் முருகதாஸ்.

தமிழில் சமீபத்தில்தான் முருகதாஸின் 7ஆம் அறிவு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவுள்ளார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்து விட்டு ராம் சரண் தேஜா படத்திற்குப் போகிறார் முருகதாஸ்.
 

'ராமர்' படத்தைத் தொடர்ந்து ராம்கோபால் வர்மா படத்தில் நயனதாரா?


ராம ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்த நயனதாரா மீண்டும் ஒரு புராணப் படத்தில் நடிக்கப் போவதாக தெலுங்கு தேசத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயனதாராவைக் கல்யாணம் செய்வதற்காக காத்திருக்கிறார் பிரபுதேவா. இந்த நிலையில் நயனதாரா நடித்த கடைசிப் படம் என்ற தகவலோடு அவர் தெலுங்கில் நடித்த ராம ராஜ்ஜியம் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு நயனதாரா நடிக்க மாட்டார். பிரபுதேவாவை மணந்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மேலும் ஒரு புராணப் படத்தில் நயனதாரா நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த முறை ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் ராவணன் கதை குறித்த படம் இது என்று கூறப்படுகிறது. நாகார்ஜூனாவை ராவணனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்கிறார் ராம்கோபால் வர்மா. இந்தப் படத்திலும் நயனதாராவையே சீதையாக நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரை அணுகியுள்ளாராம். இதுகுறித்து நயனதாராவும் சிந்தித்து வருவதாக தெரிகிறது.

ராவணனின் வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் இப்படம் தயாராகிறது. ராம்கோபால் வர்மா இயக்குகிறார். ராவணன் வேடத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். நயன்தாராவின் ஸ்ரீராமராஜ்ஜியம் படம் வெற்றிகரமாக ஓடுவதால் ராவணன் பற்றி புராணபடத்தை எடுக்க முன் வந்துள்ளனர்.

இதில் நடிக்குமாறு கேட்டு நயன்தாராவை அணுகியுள்ளனர். இந்த படத்தில் நடித்த பிறகு திருமணத்தை நடத்தி கொள்ளலாமா? என்ற யோசனையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

ராவணன் படத்தோடு தனது திரையுலக வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் யோசித்து வருவதாக தெரிகிறது.

'அவர்' என்ன சொல்வார் என்று தெரியவில்லை!
 

ராணாவில் நடிக்க மாட்டார் தீபிகா படுகோன்?


ராணா படத்தை அதன் தயாரிப்பாளர்கள் கிடப்பில் போட்டு விட்டதால் கடும் அப்செட்டாகியுள்ளாராம் தீபிகா படுகோன். இந்தப் படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி இத்தனை காலமாக காத்திருந்தும், தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், படத்தை நிறுத்தி வைத்ததால் அவர் கடும் அப்செட்டாகி விட்டாராம். இதனால் ராணா படத்தில் நடிக்கும் எண்ணத்தையும் அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் குறித்து பெரும் குழப்பம் தொடர்ந்து நிலவி வந்தது. முதலில் சுல்தான் தி வாரியர் என்ற படத்தைக் கூறி வந்தனர். பின்னர் ராணா என்ற பெயரில் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான பூஜையும் போடப்பட்டது. தீபிகா படுகோன் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தீபிகாவும் உற்சாகமாக இருந்தார். ஆனால் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே, ராணா படப்பிடிப்பு நின்று போனது. அவர் உடல் நலம் குணமடைந்து திரும்பினாலும் கூட அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருப்பதால் அவரை ராணா படத்தில் நடிக்க வைப்பது குறித்து குடும்பத்தினரும், படக்குழுவினரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.

இந்த நிலையில்தான் கோச்சடையான் என்ற புதிய பட அறிவிப்பை வெளியிட்டனர். இந்தப் படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தில், எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவை நாடியுள்ளதாக இப்படத்தின் இயக்குநர் மேற்பார்வைப் பணியைக் கவனிக்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதனால் ராணா பட நாயகி தீபிகா கடும் அப்செட்டாகியுள்ளாராம். ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது குறித்து அவரிடம் கருத்து கேட்போரிடம், அதுகுறித்து என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும். நான் இப்போது மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ராணா படம் குறித்து எனக்கு ஒரு தகவலும் தெரியாது. எனவே அதுகுறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்கிறாராம்.

தீபிகா இப்படி மறைமுகமாக கூறினாலும் கூட இப்படத்தில் நடிக்கும் திட்டத்தை தீபிகா கைவிட்டு விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மாறாக, ராணா படத்துக்காக ஒதுக்கி வைத்திருந்த கால்ஷீட்களை தற்போது புதிய இந்திப் படங்களுக்கு அவர் ஒதுக்கிக் கொடுத்து விட்டாராம். மீண்டும் ராணா படத் தரப்பில் தன்னை அணுகினாலும் அவர் மறுத்து விடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம், ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியப் படங்களிலும் நடிக்க தீபிகாவை அணுகினர். ஆனால் அவர் நடிக்க முன்வரவில்லை. தற்போது ரஜினி படத்திலிருந்தும் அவர் நழுவவுள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

 

6 நிமிடத்தில் 'கொலை வெறி' பிறந்தது-தனுஷ்


எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கொலை வெறிதான். தனுஷ், தமிழையும், ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல்தான் எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு இந்தப் பாடல் மீது இளைஞர்களுக்கு பயங்கர கொலை வெறியாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் அவர்களிடையே பிரபலமாகியுள்ளது.

இதுகுறித்து தனுஷிடம் கேட்டால் பயங்கர குஷியாகி விடுகிறார். அந்தப் பாடலை ஆறே நிமிடத்தில் நான் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும்படியாக இதை எழுத நினைத்தேன். அதன்படியே அதுவும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை.இதுதான் இங்கு ஹைலைட்.

இதை தமிழிங்கிலீஷ் பாடல் என்று கூறி விட முடியாது. நான் ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அதில் தமிழ் வாசனை வீசும் (அப்டியா..??) அனைத்துத் தமிழர்களும் இதைக் கேட்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம் (ஓஹோ...) என்கிறார் தனுஷ்.

தமிழர்கள் அத்தனை பேரும் இதைக் கேட்க வேண்டும் என்பது தனுஷின் விருப்பம். ஆனால் பாலிவுட்டில்தான் இதை மாய்ந்து மாய்ந்து கேட்டு வருகிறார்களாம். எப்படி இப்படியெல்லாம் தமிழில் கலக்குகிறார்கள் என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறதாம். நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.

ரூம் போட்டு சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்தான்...!

புல்லரித்துப் போன அமிதாப்!

இதற்கிடையே, இந்த கொலை வெறிப் பாடல் அமிதாப் பச்சனையும் அசரடித்து விட்டதாம். இதுகுறித்து அவர் புல்லரித்துப் போய் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது...

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடமிடுகின்றன.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷ்தான் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.
 

பாலுமகேந்திராவுக்கு ஒரு பாராட்டு விழா!


தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா எப்போதுமே ஸ்பெஷல். அவரது படைப்புகள் காட்டுவது இன்னொரு உலகம்.

பாலுமகேந்திராவின் படப் பாடல்கள் என்றுமே தனித்த சிறப்பு மிக்கவை. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை... இசைஞானி இளையராஜா. அழியாத கோலங்கள் (சலீல் சவுத்ரி) என்ற ஒரு படம் தவிர, பாலு மகேந்திராவின் மீதி எல்லா படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.

முதல்முறையாக பாலு மகேந்திராவின் பட பாடல்களை மட்டுமே பாடும் கச்சேரி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலைஞர்களை தேடிப் பிடித்து பாராட்டு நடத்துவதில் தனி இடம்பிடித்துவிட்ட ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் தலைவர் சிவசங்கர்.

பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற தலைப்பில் அவர் படங்களில் வந்த மறக்கமுடியாத பல பாடல்களைப் மேடையில் பாடவிருக்கிறார்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபல பாடகர்கள்.

4-12-11 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான பாலா, அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்றவர்கள் வரவிருக்கிறார்களாம்.

பாட்டோடு நின்றுவிடாமல், பாலு மகேந்திரா குறித்த பல சுவையான தகவல்களை மேடையில் சொல்லி சுவாரஸ்யம் தரவிருக்கிறார்கள்.

இலங்கை மட்டக்களப்பு அருகே அமர்தகழி என்ற ஊரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இவரது அண்டை வீட்டுக்காரர்தான் கவிஞர் காசி ஆனந்தன். பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமான அழியாத கோலங்கள் படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் என்றால் நம்ப முடிகிறதா!

உங்களுக்குத் தெரியாத இதுபோன்ற சுவாரஸ்யமான சமாச்சாரங்களை இந்த விழாவில் ரசிகர்களுக்கு பந்தி வைக்கப் போகிறார்கள்!
 

எனக்கு கிடைத்த மரியாதையை என் மகனுக்கும் பெற்றுத் தரும் 'மம்பட்டியான்'! - தியாகராஜன்


மலையூர் மம்பட்டியான்... எண்பதுகளில் ஒரு புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் உருவாக்கிய படம். இளையராஜா இசையில் வெளியான சின்னப் பொண்ணு..., காட்டு வழி... போன்ற பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இருக்காது எனும் அளவுக்கு பட்டி தொட்டியெங்கும் படு பிரபலம்!

இந்தப் படத்தை மறைந்த ராஜசேகர் இயக்கியிருந்தார். இதே படத்தை பின்னர் ரஜினியை வைத்து இந்தியில் கங்குவா என்ற பெயரில் இயக்கி பெரும் வெற்றி பெற்றார் ராஜசேகர்.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தை 'மம்பட்டியான்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தில் மம்பட்டியானாக வருபவர் தியாகராஜனின் மகன் பிரசாந்த்.

தனது லட்சுமி சாந்தி மூவீஸ் பேனரில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கும் தியாகராஜன், படம் குறித்து பேசுகையில், "எனக்கு இந்த இன்டஸ்ட்ரியில் ஒரு இமேஜையும் பெரிய புகழையும் தந்த படம் மலையூர் மம்பட்டியான். அதைவிட பெரிய புகழை என் மகனுக்கும் இந்தப் படம் தரும் என நம்புகிறேன்.

இந்த வேடத்தை பிரசாந்த் மிகச் சிறப்பாக செய்துள்ளார் என்று சொல்வது வழக்கமான வார்த்தை ஆகிவிடும். நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அன்றைக்கு என்னை தியாகராஜன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். மம்பட்டியான் என்றே கூப்பிடுவார்கள். நாளை இந்தப் படம் வந்தபிறகு பிரசாந்தையும் அப்படி அழைத்தால் ஆச்சரியமில்லை," என்றார்.

படத்தின் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு அசத்தலான ட்ரெயிலரை சமீபத்தில் திரையிட்டுக் காட்டினார்கள். பொன்னர் சங்கருக்கு ஒளிப்பதிவு செய்து பலரின் பாராட்டுக்களையும் பெற்ற ஷாஜி குமார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்.

தமன் இசையமைத்துள்ளார். இளையராஜாவின் புகழ்பெற்ற அந்த இரு பாடல்களையும் இதில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார் தமன்.

அன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப மலையூர் மம்பட்டியான் வந்தது. இன்றைய இளைஞர்களை மனதில் வைத்து மாற்றங்கள் செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். பிரசாந்த் எதிர்ப்பார்த்த பிரேக் இதில் கிடைக்கும்," என்கிறார் தியாகராஜன் நம்பிக்கையுன்.

நல்ல நடிகரான பிரசாந்துக்கு இந்த நம்பிக்கை பலிக்க வேண்டும் என்பதே நமது வாழ்த்தும்!
 

மனைவிக்கு மரியாதை தந்தா... கணவனுக்காக அவள் எதையும் செய்வாள்! - செல்வராகவன்


ஒரு கணவன் தன் மனைவிக்கு குறைந்தபட்ச மரியாதை அளிக்க ஆரம்பித்தால் கூடப் போதும், அவள் அவனுக்கா எதையும் செய்வாள், என்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கியுள்ள புதிய படம் மயக்கம் என்ன நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. பலரும் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.

படத்தின் மனைவிக்கு முக்கியத்தும் அளித்திருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, "ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும். குறிப்பாக வாழ்க்கைத் துணை என்ற அந்தஸ்துக்குரிய மனைவிக்கு, கணவர்கள் மரியாதை தரவேண்டும்.

குறைந்தபட்ச மரியாதை தந்தாலே, அவர்கள் கணவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். மயக்கம் என்ன படத்தில் அந்தக் கருத்தை ஒரு பிரச்சாரமாக சொல்லாமல், லேசாக தொட்டுக் காட்டியிருப்பேன்.

இந்தப் படத்தில், பெண்களை, அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்," என்றார்.

அடுத்ததாக வரலாற்றுப் படம் ஒன்றை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் ஆர்யா - அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர்.
 

மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த்?


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 படத்தில் அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் 3 . தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் வரும் 'ஒய் திஸ் கொலைவெறி டி' பாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேட்கிறது. யாரைப் பார்த்தாலும் ஒய் திஸ் கொலைவெறிப் பாட்டைத் தான் பாடுகிறார்கள். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது.

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த பாட்டைக் கேட்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் 3 படத்தில் தனது செல்ல மகளுக்காக ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

உடல் நிலைத் தேறியதும் ஷாருக் கானுக்காக மும்பை சென்று ரா ஒன் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார் ரஜினி. தனது மகள் இயக்கி, மருமகன் ஹீரோவாகவும், தனது நண்பர் கமல் மகள் ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கும் படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரமாட்டாரா என்ன?

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் 3 படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளது. இந்நிலையில் ரஜினி வேற நடித்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் தான்.
 

ட்விட்டர், பேஸ்புக்கில் போலி கணக்கு: சைபர் கிரைம் போலீசில் நயன்தாரா புகார்!


ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூகத் தளங்களில் தன் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி ரசிகர்களுடன் உரையாடி வரும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

டுவிட்டர், பேஸ் புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். அடையாளம் தெரியாத சிலர், நயன்தாரா பெயரில் இவற்றை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்து இருந்தனர். அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களும், அவர் நடித்த படங்கள் பற்றிய விமர்சனங்களும் அனுப்பி வைத்தனர்.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட `டேம் 999' படத்துக்கு நயன்தாரா ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பது போன்ற செய்தியும் அதில் இடம் பெற்று இருந்தது.

இது குறித்து நயன்தாரா, கவனத்துக்கு கொண்டு சென்றதும் அதிர்ச்சியானார். நான் டுவிட்டரிலோ பேஸ் புக்கிலோ இல்லை. போலியாக அவை உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும் என்று நேற்று அறிவித்தார்.

ஆனால் அப்படியும் அவர் பெயரில் அந்த தளங்களில் பக்கங்கள் தொடர்ந்து இயங்கின.

இதையடுத்து அவர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "நடிகை என்பதால் டுவிட்டரில் என் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நான் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டேன். போலியாக உருவாக்கப்பட்ட எனது பெயரை ட்விட்டரில் இருந்து நீக்கி விடும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. எனவே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார்.
 

கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! - சௌந்தர்யா


சென்னை: ராணாவை நிறுத்திவிட்டு கோச்சடையானை ஆரம்பிக்க, ரஜினியின் உடல்நிலை காரணமல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். இந்தப் படத்திலும் முழுமையாக அவர்தான் நடிக்கப் போகிறார், என சௌந்தர்யா ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

கோச்சடையான் என்ற புதிய படத்தை ரஜினி அறிவித்ததிலிருந்து அது தொடர்பாக பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சௌந்தர்யா கூறுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் மோஷன் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் ஒரு நடிகருக்கு படம் தயாராவது அப்பாவுக்குதான் (ரஜினி). கோச்சடையான் என்பது சிவபெருமானின் பெயர். இந்தப் படம் சுல்தான் அல்ல. இது முற்றிலும் புதிய படம்.

அதேநேரம் ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். நிச்சயம் ஆகஸ்ட் 2012-ல் தொடங்கிவிடும்.

கோச்சடையான் வெறும் அனிமேஷன் படம் அல்ல. இந்தப் படத்தில் முழுமையாக அப்பா நடிக்கிறார். அவரது காட்சிகள் ஒரு ஸ்டுடியோவுக்குள் படமாக்கப்பட்டு, மோஷன் கேப்சரிங் முறையில் மாற்றப்படும். உடல்ரீதியாக அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். கோச்சடையான் தொடங்க அவர் உடல்நலம் காரணமல்ல. இந்தப் படத்தில் நடிக்க அப்பாவே விரும்பி, ஆரம்பிக்கச் சொன்னார்.

பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்," என்றார்.
 

அன்புக்கு ஒன்று... ஆசைக்கு ஓன்று! - தன்ஷிகாவுக்கு கிளி சொன்ன ஜோசியம்


தனக்கு வரும் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் என இரண்டு மனைவிகள் கொண்டவராக இருப்பார் என கிளி ஜோசியம் சொன்னதால், ஷாக் ஆனார் நடிகை தன்ஷிகா.

பாலிமர் டிவியில் ஞாயிறுதோறும் ஒன்பது மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் "பேராண்மை'' மற்றும் ''அரவான்'' படங்களின் நாயகி தன்ஷிகா கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

'அயன்' ஜெகன் தொகுப்பாளராக இருந்து நடிகை தன்ஷிகாவோடு மிகவும் மாறுபட்ட முறையில் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

நிகழ்ச்சியின் ஒரு அம்சமான கிளி ஜோசியத்தில் தன்ஷிகா என் வருங்காலக் கணவர் எப்படி இருப்பார்? எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் என்று கேட்டார்.

அதற்கு கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து ஜோசியர், "உங்கள் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் வச்சிருப்பார் என்று பதிலளித்தார்."

உடனே பதறிய தன்ஷிகா, "அய்யய்யோ எனக்கு அப்படிப்பட்ட கணவரே வேண்டாம்... என் கணவர் எனக்காக மட்டுமே வாழும் அன்புகொண்டவராக அவர் இருக்கவேண்டும்," என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களோடுஆடிப்பாடி நிகழ்ச்சியை கலகலப்பூட்டிய நடிகை தன்ஷிகா தனது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'அரவான்' படம் பற்றிய வெளிவராத தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பாலிமர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது!
 

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேனா? - நமீதா விளக்கம்


சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும் கட்டுமானத் தொழிலில் முழு கவனம் செலுத்துவதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நமீதா.

நடிகை நமீதா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். விஜயகாந்த் ஜோடியாக நடித்த முதல் தமிழ் படம் எங்கள் அண்ணா சூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்தார். நமீதா நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் 'இளைஞன்' படம் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் இல்லை. தற்போது மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்.

கட்டுமான நிறுவன தொழில் அதிபர் ஆனதால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக செய்தி பரவியது. இதுபற்றி கேட்டபோது, நமீதா மறுத்தார். அவர் கூறுகையில், "சினிமாவை விட்டு நான் விலக வில்லை. மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி இருப்பது உண்மைதான். அதற்கு நான் உரிமையாளர் மற்றபடி தொழிலை கவனித்துக் கொள்ள நிறைய பேரை நியமித்துள்ளேன்.

நான் சில நாட்கள் மும்பையில் தங்கி தீவிர உடற்பயிற்சி மூலம் எனது உடம்பை குறைத்தேன். இப்போது நிரந்தரமாக சென்னைக்கு குடி வந்துவிட்டேன்.

மங்கை அரிராஜன் இயக்கும் படமொன்றில் நடிக்கிறேன். என்.கே. விஸ்நாதனனின் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற 'ரீமேக்' படத்திலும் நடிக்கிறேன்.

இது தவிர தெலுங்கு படமொன்றுக்கும் ஒப்பந்தமாகியுள்ளேன். அப்படத்தில் முழுக்க சேலை கட்டி நடிக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்து இருக்கிறேன். அப்படி கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.