சென்னை: என்றைக்கு ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் பெண் எடுத்தேனோ அன்றே என் திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது என்று நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தவர் ரகுமான். அவர் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
நான் எப்பொழுது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டேனோ அப்போதில் இருந்து எனது திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது. பெயருக்கு எனக்கு வாய்ப்பு அளித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானை தங்கள் படத்திற்கு இசையமைக்க வைக்க பேசுங்கள் என்று அவரிடம் நேரடியாக கேட்க முடியாதவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
சுபாஷ்கய் தனது படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று 4 ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு நேரம் இல்லாமல் போனது. ஏ.ஆர். ரஹ்மான் எங்கோ உள்ளார். அவர் எப்படி நான் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க முடியும். அவரை இசையமைக்க கேட்க மாட்டேன் என்றால் என் மீது கோபப்படுகிறார்கள். ரஹ்மானிடம் நான் கேட்டால் அவர் சம்மதிக்கலாம். ஆனால் அவரிடம் கேட்க கூச்சமாக உள்ளது. அவரை தர்மசங்கடத்தில் தள்ள விரும்பவில்லை என்றார்.