என்னைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்து பெண்ணை மணந்தேனோ, அன்னைக்கே...: ரகுமான்

சென்னை: என்றைக்கு ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் பெண் எடுத்தேனோ அன்றே என் திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது என்று நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தவர் ரகுமான். அவர் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு,

நான் எப்பொழுது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டேனோ அப்போதில் இருந்து எனது திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது. பெயருக்கு எனக்கு வாய்ப்பு அளித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானை தங்கள் படத்திற்கு இசையமைக்க வைக்க பேசுங்கள் என்று அவரிடம் நேரடியாக கேட்க முடியாதவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

சுபாஷ்கய் தனது படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று 4 ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு நேரம் இல்லாமல் போனது. ஏ.ஆர். ரஹ்மான் எங்கோ உள்ளார். அவர் எப்படி நான் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்க முடியும். அவரை இசையமைக்க கேட்க மாட்டேன் என்றால் என் மீது கோபப்படுகிறார்கள். ரஹ்மானிடம் நான் கேட்டால் அவர் சம்மதிக்கலாம். ஆனால் அவரிடம் கேட்க கூச்சமாக உள்ளது. அவரை தர்மசங்கடத்தில் தள்ள விரும்பவில்லை என்றார்.

 

ஹரி-விஜய் கூட்டணி: ஆடி முடிந்த உடன் அறிவிப்பு?

ஹரி-விஜய் கூட்டணி: ஆடி முடிந்த உடன் அறிவிப்பு?

சென்னை: இயக்குனர் ஹரி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளாராம்.

இயக்குனர் ஹரி முதலில் விஜய்யிடம் தான் சிங்கம் கதையை தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் அந்த படத்தில் சூர்யா நடித்தார். சிங்கம் 2 படமும் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

சிங்கம் 2 படத்தை முடித்த உடன் ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஹரி விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளார்.

இது குறித்து விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆடி மாதம் முடிந்த பிறகு புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

ஏராளமான ரசிகர்கள் உள்ள விஜய் ஹரியின் மாஸ் படத்தில் நடித்தால் சூப்பராகத் தான் இருக்கும்.

 

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

Rating:
2.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, ஐஸ்வர்யா அர்ஜுன்
இசை: தமன்
தயாரிப்பு: மைக்கேல் ராயப்பன்
இயக்கம்: ஜி பூபதி பாண்டியன்

திருச்சி மலைக்கோட்டை வரும் ஹீரோ, அங்கே ஒரு அழகான பெண் (கதைப்படி!), அவளைப் பார்த்ததும் காதல், அவளுக்கு ரவுடிகளால் பிரச்சினை, பிரச்சினைகளையே போத்திக்கிட்டுத் தூங்கும் ஹீரோ உதவப் போகிறார்... க்ளைமேக்ஸில் காதலியை கரம் பிடிக்கிறார். நடு நடுவே மானே தேனே பொன்மானே மாதிரி காமெடியன்களும் வில்லத்தனம் என்ற பெயரில் காமெடி பீஸ்களும் வந்து வந்து கிச்சு கிச்சு மூட்டுவார்கள். பாட்டு என்ற பெயரில் இசையமைப்பாளர் சீரியஸாகக் கொலை முயற்சியில் இறங்கியிருப்பார்!

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

-அட இருய்யா... இந்தக் கதையை நான் நிறைய படங்களில் பாத்துட்டேன், என்கிறீர்களா... பாவம், இந்த பேருண்மை, இதே மாதிரி மலைக்கோட்டை என்ற படத்தை எடுத்து வெற்றியும் கண்ட இயக்குநர் பூபதிபாண்டியனுக்குத் தெரியவில்லை.

படத்தின் ஹீரோ என்று நியாயமாக சந்தானத்தின் பெயரைத்தான் போட்டிருக்க வேண்டும். அவ்வளவாக சிரிப்பு வரவில்லைதான் என்றாலும் அவரும் மயில்சாமியும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் பார்ப்பவர் கழுத்தில் ரத்தம் வந்திருக்கும்!

முதலாளி சந்தானத்தை திருச்சிக்கு ஓட்டல் வைக்கலாம் என்று கூட்டி வரும் விஷால் அன்ட் கோ, திருச்சியில் இறங்கியதும் சந்தானத்தின் பணத்தை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டு அவரை மட்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அவரும் போகிறார். நீங்க ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டே இருங்க, நாங்க பணத்தோட வர்றோம் என்று கூறுகிறார்கள். அவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார். ஹீரோ விஷால், ஹீரோயின் ஐஸ்வர்யாவைப் பார்த்து வழிந்து கொண்டே பணத்தைக் கோட்டை விடுகிறார். அதைத் தேடுகிறோம் பேர்வழி என இவர்கள் அடிக்கிற கூத்து, சிரிப்புக்கு பதில் மகா கோபத்தை வரவழைக்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் பொறுப்பின்மையை விதைக்கும் நச்சுக் காட்சிகள் இவை.

ஆனாலும் 'இந்தத் திருட்டில் இசைஞானிக்கும் பங்கிருக்கிறது' என போலீஸ் ஸ்டேஷனில் மயில்சாமி சொல்லுமிடம் குபீர்!

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

விஷால் ஏதோ மெஷின் மாதிரி வருகிறார். அடிஅடியென்று அடிக்கிறார். சத்தம் காது கிழிகிறது. நியாயமாக அந்த அடிக்கு அப்போதே வில்லன்கள் அத்தனைபேரும் செத்து படமும் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அடிபட்டவர்கள் டாம் & ஜெர்ரியில் உடல் துண்டுத் துண்டான பிறகும் சேர்ந்து கொள்வது போல, மரண அடி வாங்குகிறார்கள்... திரும்ப வருகிறார்கள். போங்கய்யா நீங்களும் உங்க சண்டையும்!

ஹீரோயின் ஐஸ்வர்யா பற்றி மனதில் இருப்பதை அப்படியே சொன்னால் மனசு ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதனால் சிம்பிளாக... 'ஸாரி'!

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

மெயின் வில்லனைப் பார்த்ததும் யார்றா இவன் ஜெராக்ஸ் எடுத்த காட்ஸில்லா மாதிரி என்று வர்ணிப்பார் சந்தானம். அந்தக் காட்சியில் அந்த வில்லன் நிஜமாகவே அப்படித்தான் தெரிகிறார்!

இடைவேளை கடந்து படம் க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க, வில்லன்களும் அவர்களின் அடியாட்களும் பக்கா காமெடியன்களாகி படத்தை பணாலாக்கிவிடுகின்றனர்.

ஏற்கெனவே நொண்டியடிக்கும் திரைக்கதையை இன்னும் தடுமாற வைக்கிறது தமனின் இசை. சிவாஜி கணேசனின் படத்தில் இடம்பெற்ற 'இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை...' பாடலை கொஞ்சம் ஸ்லோவாக்கி ஜவ்வாக ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார். இவ்வளவு மோசமாகக் கூட ஒரு ஆக்ஷன் படத்துக்கு பின்னணி இசை தரமுடியும் என நிரூபித்திருக்கிறார்.

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

நகைச்சுவை - ஆக்ஷன் இரண்டையும் பக்காவாக மிக்ஸ் பண்ணுவதில் வல்லவரான பூபதி பாண்டியனின் கலவை இந்த முறை தப்பாகிவிட்டது.

காமெடிக்காக எதையும் தாங்கும் இதயம் இருப்பவர்களுக்கான பட்டத்து யானை இது!

 

படம் ரிலீஸாகாத வருத்தத்தில் கருவி பட இயக்குநர் கபிலன் செ தற்கொலை

சென்னை: கருவி பட இயக்குனர் கபிலன் சே தனது படம் ரிலீஸாகாத வருத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பலர் கலைந்த கனவுகள் பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து விட்டதாக செய்தி வெளியிட்டு விட்டதால் குழப்பமாகி விட்டது.

பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கபிலன்(28). சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். அவர் கடந்த 2012ம் ஆண்டு கபிலன் சே என்ற பெயரில் கருவி என்ற படத்தை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான அது நிதி பிரச்சனையால் ரிலீஸாகாமல் போனது. முதல் படமே முடங்கியதால் கபிலனுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் பணக் கஷ்டத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் வளசரவாக்கம் திருமலை நகரில் வசித்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சத்யாவை அவரது தாயாரின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த உடன் மனைவிக்கு போன் செய்து முதல் படம் ரிலீஸாகவில்லை, கடன் தொல்லை தாங்க முடியவில்லை அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட சத்யா பதறியடித்து வளசரவாக்கம் வந்துள்ளார். ஆனால் அவர் வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு படுக்கையறையில் கபிலன் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கபிலன் சே தற்கொலை செய்து கொண்டது கலைந்த கனவுகள் இயக்குனர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பரவியது. இதையடுத்து கலைந்த கனவுகள் கபிலன் தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்தார். இதேபோன்று தான் நேற்று நடிகை கனகா புற்றுநோயால் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்த கனகா பிரஸ் மீட் வைத்து தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைவா - யுஏவை நீக்குமா ரிவைசிங் கமிட்டி?

விஜய் நடித்த தலைவா படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறுபரிசீலனை செய்ய, இன்று ரிவைசிங் கமிட்டிக்கு படத்தைப் போட்டுக் காட்டிகிறார்கள்.

யுஏ சான்றிதழை மறுபரீசீலனை செய்வார்களா இல்லையா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

தலைவா - யுஏவை நீக்குமா ரிவைசிங் கமிட்டி?

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது.

படத்தை தணிக்கைக் குழுவுக்குப் போட்டுக் காட்டிய போது யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டனர். இதனால் படத்துக்கு கேளிக்கை வரி விலக்குப் பெறுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

வரிவிலக்கு பெற அனைவரும் பார்க்கத்தக்கது என யு சான்று பெற வேண்டும். எனவே தலைவாவுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு போயுள்ளார் தயாரிப்பாளர்.

இன்று ஹைதராபாதில் ரிவைசிங் கமிட்டி தலைவா படத்தைப் பார்க்கிறது. யு சான்றிதழ் கிடைக்குமா தலைவாவுக்கு என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

 

'மூணாவது’ லட்டு தின்ன ஆசைப்படும் நடிகர்

கோட் சூட் போட்ட அல்டிமேட் நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கடவுள் நடிகரும் நடித்து வருகிறார். கடவுள் நடிகருக்கு ஜோடி களத்தில் ஆடிய டாப் நடிகை.

ஷூட்டிங் சமயத்தில் எல்லாம் டாப் நடிகையுடன் தான் கடலையில் பொழுது போக்குகிறாராம் கடவுள் நடிகர். நைன் நடிகையுடன் காதல், யோகா டீச்சருடன் பார்ட்டியில் ஆட்டம், விரைவில் திருமணம் என ஏற்கனவே சார் ரொம்ப பிஸியோ பிசி.

அம்மணியும் பார்ட்டி ப்ராளத்தில் சிக்கியவர் தான். இப்போது ஜாடிக்கேத்த மூடியா இருவரும் போடும் கடலையைப் பார்த்து, யூனிட்டில் உள்ளவர்கள் ‘கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா..?' எனக் கிண்டலடிக்கிறார்களாம்.

 

சூர்யாவின் அடுத்த கால்ஷீட் இயக்குநர் விஜய்க்கு... அப்போ கவுதம் மேனன்?

சூர்யாவின் அடுத்த கால்ஷீட் இயக்குநர் விஜய்க்கு... அப்போ கவுதம் மேனன்?

லிங்குசாமி படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

‘சிங்கம்-2' படத்திற்கு பிறகு லிங்குசாமி மற்றும் கவுதம் மேனன் படங்களில் நடிக்க சம்மதித்திருந்தார் சூர்யா. ஆனால் கவுதம் மேனன் படத்தில் நடிப்பாரா இல்லையா என்று தெரியாத நிலை.

அதேநேரம், இயக்குநர் சீமானின் பகலவன் கதையை காப்பியடித்துதான் சூர்யாவுக்கு கதை பண்ணியிருக்கிறார் லிங்குசாமி என புகார் கிளம்பியது. உடனே கதையை மார்றினார் லிங்கு. சூர்யாவும் அதில் நடிப்பதை உறுதிப்படுத்திவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் 27-ந் தேதி சென்னை அல்லது மதுரையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

லிங்குசாமி படம் முடிந்ததும் அடுத்து இயக்குநர் விஜய் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா.

‘தலைவா' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இயக்குனர் விஜய்-சூர்யா இருவரும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்த சந்திப்பில் இருவரும் அடுத்த படத்தில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘தலைவா' படம் வெளியானவுடன் இயக்குனர் விஜய் மிக குறுகிய பட்ஜெட்டில் ‘தெய்வத்திருமகள்' சாராவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். அதற்குள் சூர்யாவும் லிங்குசாமி படத்தை முடித்துவிடுவார். அதன் பிறகு சூர்யா - விஜய் படம் தொடங்கும்.

ஆக, கவுதம் மேனன் காத்திருக்க வேண்டிய நிலை.

 

கமல்ஹாசனின் அடுத்த வாரிசு அக்ஷரா தெலுங்கில் அறிமுகம்?

சென்னை: கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிக்ரகளின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது தங்கை அக்ஷரா ஹாஸனும் நடிக்க வருகிறார் என்று கூறப்படுகிறது.

மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கிறார் அக்ஷரா. அவருக்கு திரையில் நடிப்பதை விட திரைக்குப் பின்னால் இருப்பிதிலேயே அதிக ஆர்வம். அதனால் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

கமல்ஹாசனின் அடுத்த வாரிசு அக்ஷரா தெலுங்கில் அறிமுகம்?

இந்நிலையில் அவர் ஸ்ருதியுடன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஸ்ருதி நடனமாட சென்றபோது அவருக்கு நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யா கம்பெனி கொடுத்துள்ளார். இதையடுத்து நாக சைதன்யா ஜோடியாக தெலுங்கு படத்தில் அக்ஷரா நடிக்கப் போவதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.

 

இயக்குநர் கபிலன் தற்கொலை… தவறான செய்தி வெளியானதால் பரபரப்பு

இயக்குநர் கபிலன் தற்கொலை… தவறான செய்தி வெளியானதால் பரபரப்பு

சென்னை: கலைந்த கனவுகள் திரைப்பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய தினம் நடிகை மரணம், இயக்குநர் தற்கொலை போன்ற செய்திகள்தான் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது. மதிய நேரத்தில் கனகா மரணச் செய்தி பரபரப்பானது. பின்னர் கனகாவே ஊடகங்களின் முன்பு தோன்றி பேசி தெளிவு படுத்தினார்.

அதேபோல் கலைந்த கனவுகள் திரைப்பட இயக்குநர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக மாலை நாளிதழ்கள், சில தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தி ஒளிபரப்பானது.

இந்த செய்தியைப் பார்த்துப் பதறிப் போன கபிலன், நம்மைத் தொடர்பு கொண்டு, நாளிதழ்களில் தவறான செய்தியைப் போட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்பொழுது நான் சென்னையில்தான் இருக்கிறேன். கலைந்த கனவுகள் படப்பிடிப்பு லொகேசன் பார்ப்பதற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் புதன்கிழமையன்று நாமக்கல் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 8ல் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் இயக்குநர் கபிலன் தெரிவித்தார். இதுபோன்ற தவறான செய்திகளைப் போடுவதன் மூலம் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை போய்விடும் என்றும் அவர் கூறினார்.

மறைந்த நடிகர் கே.ஏ. தங்கவேலுவின் பேரன் அஸ்வின் அறிமுகமாகும் படம் கலைந்த கனவுகள் என்பது நினைவிருக்கலாம்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

காதலனைக் காணக் கடல் கடந்த ‘கடவுள்’ நடிகை

கடவுள் படத்தில் கண் பார்வையற்றவராக கஷ்டப்பட்டு நடித்தும், கை கொடுக்கவில்லை தமிழ் சினிமா. சொந்த மொழியில் நடிக்கிறேன் என கடக் கடந்து சென்றவர், அங்கு ஒரு காதலை வாங்கி வந்தாராம்.

பட வாய்ப்புகள் இல்லாமல் தனியார் கம்பெனியில் பணிக்கு சேர்ந்த பின்னரும் காதலன் நினைவால் வாடினாராம் நடிகை. இதனால், நடிப்பும் வேண்டாம், வேலையும் வேண்டாம் என எல்லாவர்றிற்கும் சேர்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு, மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தனது தாயகத்திற்கே பறந்து விட்டதாம் இந்த ஜேஜே என்றிருக்கும் கிளி.

சீக்கிரமே டும் டும் செய்தி அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்து நண்பர்கள்.

 

‘தேவதாசிகள்’ பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சொர்ணமால்யா

‘தேவதாசிகள்’ பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சொர்ணமால்யா

சென்னை: கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ஒன்றில் தேவதாசிகள் குறித்து பேசிய நடிகை சொர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னை தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை இரு தினங்களுக்கு முன்னர் கருத்தரங்கம் ஒன்று நடத்தியது. முதலில் "தேவதாசி முறைமையும், பரதநாட்டியமும்" (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு, பின்னர் பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக "பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்" (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது.

கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா, ‘கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர்' என கூறியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும், ‘தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் லாபம் கருதியே தேவதாசி முறையை ஒழித்தனர் என்றும் விமர்சித்துள்ளார்.

அத்தோடு, காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி 'தேவதாசி முறை ஒழிப்பு'க்கு எதிராக வாதித்த கருத்துகளையும் தனது பேச்சில் நினைவு கூர்ந்துள்ளார் ஸ்வர்ணமால்யா. தேவதாசி முறை மூலம் பெண்களின் கண்ணியம் குறித்து தவறாக பேசியதாக அவர் மீது பெண்ணியவாதிகள் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

 

எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நல்லாதான் இருக்கேன்- நடிகை கனகா பேட்டி

எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நல்லாதான் இருக்கேன்- நடிகை கனகா பேட்டி

சென்னை: எனக்குப் புற்றுநோய் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று நடிகை கனகா நேரில் தெரிவித்தார்.

நடிகை கனகா பற்றி கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்றோருக்கான கேரளா மருத்துவமனையில் உருக்குலைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி பரவியது.

இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக இன்று சில செய்தி ஏஜென்சிகள், ஆங்கிலப் பத்திரிகைகளின் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் செய்தி வெளியாகி பரபரப்பேற்படுத்தியது.

இப்படி செய்தி வெளியான சில நிமிடங்களில் கனகா நன்றாக இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டனர். சென்னை காளியப்பா மருத்துவமனையில் கனகா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

ஆனால் இதுவும் தவறான செய்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கனகா பிரஸ் மீட் தகவல் கிடைத்தது.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். கண்ணாடி அணிந்திருந்த கனகா, முன்பு ஆவி அமுதா வழக்கில் நீதிமன்றத்தில் பார்த்ததை விட தெளிவாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்பட்டார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "என்னைப் பற்றி யாரோ தவறாக சொன்ன தகவல்களை வைத்து இப்படி செய்தி வெளியானது வேதனையைத் தருகிறது.

யாரோ சொன்னதை வைத்து ஏன் செய்தி போடறீங்க.. நான் ஆலப்புழா போனது ப்ரெண்டைப் பார்க்கக்கூட இருக்கலாம்ல. நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு கேன்சரெல்லாம் கிடையாது. எங்கும் சிகிச்சையும் பெறவில்லை!," என்றார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

ஆர்யா - அனுஷ்கா மகா நெருக்கம்... எப்போ கல்யாணம்?

ஆர்யா - அனுஷ்கா மகா நெருக்கம்... எப்போ கல்யாணம்?

ஊரெல்லாம் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல், ரகசியமா குடும்பமே நடத்துறாங்கன்னு பேச்சா கிடக்கு. ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது.

ஆர்யாவுடன் ரொம்ம்ப்ப நெருக்கமாக இருப்பது அனுஷ்காதான் என்கிறார்கள். இரண்டாம் உலகம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே இருவரும் தங்களுக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழ ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் யூனிட்டில்.

இரண்டாம் உலகம் படம் முடிந்த பிறகும் கூட, இருவரும் மிக நெருக்கமாக உள்ளார்களாம்.

சமீபத்தில் நடந்த சிங்கம் 2 வெற்றி விழா பார்ட்டிக்கு ஹைதராபாதிலிருந்து ஜோடியாகவே வந்த அனுஷ்காவும் ஆர்யாவும் விடியும் வரை விருந்தில் இருந்துவிட்டு, விடியலில் ஜோடியாகவே புறப்பட்டார்களாம்.

அதுமட்டுமல்ல, ருத்ரமாதேவி படத்துக்காக வாள் சண்டைப் பயிற்சிக்குப் போன அனுஷ்காவுக்கு பாதுகாப்பாக கூடவே இருந்தாராம் ஆர்யா.

இப்படி பல கதைகளை ஆந்திர திரையுலகப் பத்திரிகைகளும் இணையதளங்களும் தொகுத்து வெளியிட்டு வருகின்றன.

நெசமா பொய்யா என்பது சம்பந்தப்பட்டவர்கள் ஜோடி மாற்றும்வரை தெரியப் போவதில்லை!

 

சிம்பு கூடவா நடிக்கப் போறீங்க: ஹன்சிகாவை எச்சரித்த சிலர்

சிம்பு கூடவா நடிக்கப் போறீங்க: ஹன்சிகாவை எச்சரித்த சிலர்

சென்னை: சிம்பு படத்தில் நடிக்கும் முன்பு ஹன்சிகாவை சிலர் எச்சரித்துள்ளனர்.

ஹன்சிகா வாலு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் முன்பு அவரிடம் சிம்புவை பற்றி சிலர் எச்சரித்துள்ளார்களாம். ஷூட்டிங் துவங்கிய பிறகு கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று சொல்கிறார்களே அது ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் சிம்புவை பற்றி ஹன்சிகாவிடம் ஆஹா, ஓஹோ என்று பேசியுள்ளார்களாம்.

இதை கேட்டு ஹன்சிகா சிம்புவிடம் மனதை பறிகொடுத்துவிட்டாராம். வழக்கமான காதல் ஜோடிகள் போன்று அவர்களும் நாங்கள் காதலர்கள் இல்லை நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திடீர் என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம், திருமணமும் செய்துகொள்ளப் போகிறோம் என்று அறிவித்தனர்.

திருமணம் செய்து கொண்டு அஜீத், ஷாலினி போன்று வாழப் போகிறார்களாம்.

 

மரியானை கேட்டு வாங்கிப் பார்த்த ரஜினி

மரியானை கேட்டு வாங்கிப் பார்த்த ரஜினி

சென்னை: ரஜினிகாந்த் தனது வீட்டில் உள்ள திரையரங்கில் மருமகன் தனுஷ் நடித்த மரியான் படத்தை பார்த்துள்ளார்.

படங்களை விளம்பரப்படுத்த விரும்புவோர் அதை ரஜினிகாந்துக்கு போட்டு காட்டி சூப்பர் ஸ்டார் எங்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்று அறிவித்துவிடுவார்கள். அடடா ரஜினி பாராட்டியுள்ளாராமே என்று அந்த படத்திற்கு மவுசு அதிகரித்துவிடும். இப்படி பலர் தங்களின் படங்களை விளம்பரப்படுத்துவதை பார்த்த ரஜினி படம் பார்ப்பதை தவிர்த்தார்.

ரஜினி தான் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு க்யூப் தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கு ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்நிலையில் அவர் ரவிச்சந்திரனை அழைத்து நீங்கள் தயாரித்த மரியான் படத்தை கொஞ்சம் போட்டுக் காட்டுங்களேன் என்று கூறியுள்ளார்.

ரஜினியே கேட்டுவிட்டார் என்று மரியான் பிரிண்ட் ஒன்றை ரவிச்சந்திரன் அனுப்பி வைத்துள்ளார். அதை தனது க்யூப் தொழில்நுட்ப திரையரங்கில் போட்டு பார்த்து ரசித்துள்ளார் ரஜினி.

மரியான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ், இசையமைத்துள்ளதோ கோச்சடையான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சித்தார்த் வரலியே... - வருத்தத்தில் சமந்தா

சித்தார்த் வரலியே... - வருத்தத்தில் சமந்தா  

நான் விருது வாங்கியதைப் பார்க்க என் நெருங்கிய நண்பர் சித்தார்த் வராதது வருத்தத்தைத் தந்தது என்று சமந்தா கூறியுள்ளார்.

சித்தார்த்தும் சமந்தாவும் கிட்டத்தட்ட கணவன் மனைவி எனும் அளவுக்கு நெருக்கமாக உள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் எங்கும் இணைந்தே காணப்படுகிறார்கள்.

குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சமந்தாவுக்கு நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்ததற்காக சமந்தாவுக்கு இரு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன.

விருது கிடைத்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி என்றாலும், அந்த தருணத்தை நேரில் வந்து தனது காதலர் பார்க்கவில்லையே என்ற வருத்தம் சமந்தாவுக்கு நிறைய இருந்தது. அதை அவர் ட்விட்டரிலும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய இரு படங்களிலும் சிறப்பான நடிப்பைக் காட்ட முடிந்தது. எனது இயக்குநர்களுக்கு நன்றி.

நான் விருது வாங்கிய விழாவில் சித்தார்த் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது என்று ட்விட்டரில் குறிப்பிட்டது பற்றி பலரும் பேசுகின்றனர். நான் எல்லோரிடமும் பாசமாக இருக்கிறேன். சித்தார்த் என் நெருங்கிய நண்பர். குடும்பத்தில் ஒருவர். எனவேதான் விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என எதிர்ப்பார்த்தேன்," என்றார்.

 

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்!

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்!

நடிகை நக்மா மீண்டும் நடிக்க வருகிறார். இந்த முறை அவர் ஏற்கவிருப்பது அம்மா வேடம்.

தொன்னூறுகளில் தமிழ், தெலுங்கில் முதல் நிலை நடிகையாக வலம் வந்தவர் நக்மா.

ரஜினிக்கு நாயகியாக பாட்ஷாவில் நடித்ததின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். சினிமா நடனத்தில் சிறந்த நடிகை எனப் பெயர் பெற்ற நக்மாவுக்கு, சரத்குமார் உருவில் வந்தது சோதனை.

இருவரும் அரவிந்தன், ஜானகிராமன், ரகசிய போலீஸ் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தனர். ஒருகட்டத்தில் இருவரும் மிக நெருக்கமாக இருந்தனர். திடீரென இருவருக்கும் பிரிவு வர, நக்மா சென்னையைக் காலிசெய்து விட்டு மும்பைக்கே போய்விட்டார்.

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் நடித்த படம் சிட்டிசன். ஆனாலும் தமிழில் தொடரவில்லை. போஜ்புரி படங்களில் பிஸியாக இருந்தார்.

தங்கை ஜோதிகாவுக்கு திருமணமான பிறகு, சினிமாவைவிட்டு ஒதுங்கி அரசியலில் சேர்ந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தர்மா தேஜா இயக்கும் புதிய படத்தில் இளம் அம்மா வேடத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு மிக முக்கிய வேடம். கதையை யோசிக்கும்போதே இந்த வேடத்துக்கு நக்மாதான் என்று முடிவு செய்துவிட்டேன், என்று இயக்குநர் தேஜா கூறினார்.

நக்மா கடைசியாக நடித்த தெலுங்குப் படம் அல்லாரி ராமுடு. 2002-ல் வெளியானது.

 

வினயன் உதவியாளர் இயக்கத்தில் விதார்த்!

பிரபல மலையாள இயக்குநர் வினயனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சஜின் வர்கீஸ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விதார்த்.

காசி, அற்புதத் தீவு, என்மனவானில் உள்ளிட்ட படங்களில் வினையனிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் சஜின்வர்கீஸ்.

வினயன் உதவியாளர் இயக்கத்தில் விதார்த்!

இந்தப் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

படம் குறித்து சஜின்வர்கீஸ் கூறுகையில், "இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத புதுமையான கதையமைப்பு கொண்ட படமாகவும், அனைவராலும் பேசப்படக்கூடிய படமாகவும் இந்த படம் இருக்கும். அனைத்து தரப்பு மக்களுடைய மனநிலையை பிரதிபலிக்கின்ற படமாகவும் இப்படம் இருக்கும்." என்றார்.

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஷிகாஜூதின் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளரான முரளிராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

 

நடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்!

சென்னை: நடிகை கனகா புற்று நோயால் மரணமடைந்துவிட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அவர் உயிரோடு தன் சென்னை வீட்டில் உள்ளார்.

தான் உயிரோடு உள்ளதை நிரூபிக்க இன்று அவசரமாக பிரஸ் மீட் வைத்து செய்தியாளர்கள் முன்பு தோன்றினார்.

நடிகை கனகா... குழப்பியடித்த செய்திகள்.. உயிரோடு செய்தியாளர்கள் முன் தோன்றினார்!  

கரகாட்டக்காரனில் அறிமுகமாகி தென் இந்திய சினிமாவின் முதல் நிலை நாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். 40 வயதான கனகா பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, உடல் நலம் குன்றியிருந்தார். கடந்த சில மாதங்களாக அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

திடீரென அவரை கேரளாவில் ஆதரவற்றோருக்காக நடிகர் ஜெயராம் நடத்தும் ஆலப்புழா மருத்துவமனையில் சினிமா பிரமுகர் ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகே கனகா பற்றி தெரிய வந்தது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகல் மரணம் அடைந்ததாக செய்தி ஏஜென்சிகள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால் கனகா மரணமடையவில்லை என்றும், அவர் கேரள மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரது அப்பாவும் சித்தப்பாவும் ஊடகங்களுக்கு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கனகா செய்தியாளர்களைச் சந்திப்பதாக தகவல் வெளியானதும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்கள் குவிந்தனர்.

சில நிமிடங்களில் செய்தியாளர்கள் முன் தோன்றிய கனகா, தான் உயிரோடு இருப்பதாகவும், கேரளாவில் சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்பட்டதில் உண்மை இல்லை என்றும் கூறினார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

ஸ்கின் அலர்ஜியால் தவிக்கும் நயன்தாரா... கேரளாவில் ரகசிய சிகிச்சை?

ஸ்கின் அலர்ஜியால் தவிக்கும் நயன்தாரா... கேரளாவில் ரகசிய சிகிச்சை?  

ஸ்கின் அலர்ஜி காரணமாக மேக்கப் போட முடியாமல் தவிக்கும் நயன்தாரா, இதற்காக ரகசிய சிகிச்சை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அமலா பால், ஹன்சிகா, அனுஷ்கா என எத்தனை நாயகிகள் வந்தாலும், நயன்தாராவுக்கு மவுசு குறையவில்லை.

ஆனால் இந்த நேரம் பார்த்து நயன்தாராவின் உடல் நிலை குறித்து ஏகப்பட்ட வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக ஆந்திரத் திரையுலகில், நயன்தாராவுக்கு சரும நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் புதிய பட ஷூட்டிங்குகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளனர் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள்.

இதற்கிடையில் தனது சருமப் பிரச்சினைக்காக கேரளாவில் ரகசியமாக நயன்தாரா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
 

நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்: மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்: மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது

சென்னை: நடிகர் சாந்தனு பெயரில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி அவரது ரசிகையிடம் ஆயிரக்கணக்கில் பண மோசடி செய்ததாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் பாக்கியராஜியின் மகனும், நடிகருமான சாந்தனு கடந்த மாதம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது பெயரில் ஃபேஸ்புக் இணையளத்தில் போலி பக்கம் உருவாக்கப்பட்டு, தனது ரசிகர்-ரசிகைகளிடம் மோசடி நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை பெற்ற பெருநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ், அப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சைபர் குற்றப்பிரிவின் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபடுவது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சலாலுதீன் மகன் ரியாஸ்கான் (22) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சாந்தனுவின் ரசிகையை ஏமாற்றி ரூ. 10 ஆயிரம் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ரியாஸ்கானை போலீஸார் தேடி வந்தனர்.

கேரளத்தில் தலைமறைவாக இருந்த ரியாஸ்கான் திங்கள்கிழமை சென்னை வந்தார். இதனையறிந்த போலீஸார் ரியாஸ்கானை உடனடியாக கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பிரபல தனியார் டி.டி.எச். சேவை நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும் அவர், அனிதா என்ற பெண்ணிடம் ஃபேஸ்புக் மூலம் சாந்தனு தொடர்பு கொள்வதுபோல கொண்டு தான் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், பண நெருக்கடியில் இருப்பதாகவும், தனக்கு ரூ. 10 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளார். தனது நண்பரை அனுப்பிவைப்பதாகவும், பணத்தை அவரிடம் கொடுக்குமாறும் சாட் செய்துள்ளார். அதை நம்பிய அனிதா அந்த பணத்தை கொடுத்துள்ளார். ரூ. 10 ஆயிரத்தை அனிதாவிடம் நேரில் சென்று ரியாஸ்கானே சென்று வாங்கியுள்ளார். அப்போது ரியாஸ்கான், தான் சாந்தனுவின் நெருங்கிய நண்பர் எனக் கூறி அனிதாவை ஏமாற்றினாராம்.

இது தொடர்பாக ரியாஸ்கானிடம் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே!

ஜில்லாவில் விஜய் சம்பளம் ரூ 20 கோடியாமே!

ஜில்லா படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ 20 கோடிவரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்துவதில் தமிழ் ஹீரோக்களுக்கு இணை கிடையாது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் தங்கள் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாய் சம்பளம் பெற்றதில்லை.

ஆனால் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, அட.. சிவகார்த்திகேயன் உள்பட பலருக்கும் கோடி ரூபாய் என்பது ஆரம்ப கட்ட படங்களிலேயே கிடைத்துவிட்டது.

விஜய்யைப் பொறுத்தவரை, பூவே உனக்காக படம் வரை அவருக்கு பெரிய சம்பளம் என சொல்லிக் கொள்ளும்படி யாரும் தந்ததில்லை. ஆனால் காதலுக்கு மரியாதைக்குப் பிறகு அவரது சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ 18 கோடி என்றும், அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் அவருக்கு ரூ 20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி

படத்தை கைவிட்டுவிட்டு நண்பர்களாக பிரிந்த கார்த்தி, ஹரி

சென்னை: ஹரி இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

சிங்கம் 2 படத்தை முடித்த பிறகு ஹரி கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளால் படம் கைவிடப்பட்டுள்ளது. ஹரியும், கார்த்தியும் நண்பர்களாக பிரிந்து சென்றனர் என்று கூறப்படுகிறது.

சிங்கம் 2 படத்தை அடுத்து கார்த்தியின் அருவா எப்பொழுது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 4 மாதங்களில் ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்தியின் பிரியாணி படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவராக மீண்டும் எஸ்ஏ ராஜ்குமார் பதவி ஏற்பு!

திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தலைவராக மீண்டும் எஸ்ஏ ராஜ்குமார் பதவி ஏற்பு!

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவராக இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் மீண்டும் பதவி ஏற்றார்.

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற உறுபினர்களுக்கு பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தலில் வெற்றிபெற்ற இசைக் கலைஞர்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

விழாவில் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகர் மனோ மற்றும் பெப்சி செயலாளர் ஜி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடகி சின்மயி விழாவை தொகுத்து வழங்கினார்.

பொறுப்பேற்றுக் கொண்ட புதிய நிர்வாகிகள்:

தலைவர் - எஸ் ஏ ராஜ்குமார்
செயலாளர் - டோம்னிக் சேவியர்
பொருளாளர் - விஆர் சேகர்
அறக்கட்டளை தலைவர் - பிஜி வெங்கடேஷ்
அறக்கட்டளை செயலாளர் - டி.சங்கரன்.

 

தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.... சின்னப் படங்கள் இன்னும் 2 வாரம் காத்திருக்க வேண்டும்!

விஜய்யின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை.

விஜய் நடித்துள்ள தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.... சின்னப் படங்கள் இன்னும் 2 வாரம் காத்திருக்க வேண்டும்!  

அதற்கு அடுத்த வாரமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது. பொதுவாக இந்த நாளில் பண்டிகைக்கு வெளியாவது போல நான்கைந்து படங்கள் வருவது வழக்கம். இந்த முறையும் 6 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஆனால் தலைவாவுக்கே அதிக தியேட்டர்கள், அதுவும் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டுள்ளதால், மற்ற படங்களுக்கு போதிய அரங்குகள் இல்லை. எனவே தேசிங்கு ராஜா மற்றும் ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் மட்டும் இருக்கும் தலைவாவுக்கு ஒதுக்கியது போல மிச்சமிருக்கும் தியேட்டர்களில் வெளியாகின்றன.

தங்க மீன்கள், ரகளபுரம் போன்றவை இந்த முறையும் தியேட்டர்களின்றி காத்திருக்கின்றன.

 

மும்பையில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் விபச்சாரம் செய்த 5 டிவி, திரைப்பட நடிகைகள் கைது

மும்பை: மும்பை லோகந்த்வாலாவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து 5 விபச்சார அழகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 5 பேரும் இந்தி சீரியல் மற்றும் போஜ்பூரி பட நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை லோகந்த்வாலா பகுதியில் உள்ள மீரா டவர்ஸில் பிளாட் பி எண் 1402ல் விபச்சாரம் நடப்பதாக அறிந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 5 நடிகைகள் மற்றும் அவர்களின் தரகர் இம்தியாஸ் கான் ஆகியோர் சிக்கினர். அதில் சிலர் இந்தி டிவி சீரியல்களிலும், மீதமுள்ளவர்கள் போஜ்புரி மற்றும் சி கிரேட் படங்களிலும் நடித்துள்ளனர்.

அவர்கள் விபச்சாரம் நடத்திய வீடு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது. அவரிடம் வீட்டை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் வாடிக்கையாளர் போன்று நடித்து இம்தியாஸை அணுகினோம். முதலில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நடிகைக்கு ரூ.1 லட்சம் கேட்ட இம்தியாஸ் பிறகு ரூ.25,000க்கு நடிகையை அனுப்ப ஒப்புக் கொண்டார். இதையடுத்து நாங்கள் அந்த வீட்டுக்கு சென்ற உடன் வாடிக்கையாளர் என்று நினைத்து நடிகை ஒருவர் வெளியே வந்தார். அப்போது நாங்கள் வீட்டை சோதனை செய்து அவர்களை கைது செய்தோம் என்றனர்.

 

ஆபாச பட நடிகையை வரவேற்பீங்க, ஆனால் என்னை எதிர்ப்பீங்க: பூனம் பாண்டே

மும்பை: ஆபாச பட நடிகையை நாம் வரவேற்போம் ஆனால் சொந்த மண்ணைச் சேர்ந்த பெண்ணை எதிர்ப்போம் என்று இந்தி நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

பூனம் பாண்டே நடிப்பில் வெளிவந்துள்ள முதல் இந்தி படம் நஷா. அந்த படத்தின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதற்கு மும்பை மற்றும் டெல்லியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு இடங்களிலும் நஷா போஸ்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நஷா போஸ்டர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது தான் பூனமை பாதித்துள்ளதாம்.

ஆபாச பட நடிகையை வரவேற்பீங்க, ஆனால் என்னை எதிர்ப்பீங்க: பூனம் பாண்டே

இந்நிலையில் இது குறித்து பூனம் கூறுகையில்,

இது என்னை நோகடிப்பதாகும். என் முதல் படத்திலேயே என்னை இப்படி எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. என்னை திரையுலகில் வரவேற்க யாரும் இல்லை. திரையுலகில் எனக்கு என்று எந்த காட்ஃபாதரும் இல்லை. ஆனால் அதற்காக இந்த முறையில் வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் அப்படி என்ன பெரிய குற்றத்தை செய்துவிட்டேன்.

நான் லிமிட்டை தாண்டவில்லை. என் பட போஸ்டர்களை விட மோசமானவற்றை எல்லாம் நான் பார்த்துள்ளேன். என் போஸ்டர்களில் அப்படி ஒன்றும் இல்லை. என் அந்தரங்க உறுப்புகளை நான் காட்டவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் ஆபாச பட நடிகைக்கு நம் நாட்டு மக்கள் மரியாதை அளிப்பார்கள். ஆனால் நான் ஆபாசம் என்று கூறும் வகையில் எதுவும் செய்யவில்லை. நஷா ஒன்றும் ஆபாச படம் இல்லை.

நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், ஒரு பாரம்பரியமான பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவள். என் செயல்கள் எனது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார்.

 

சிறையில் வாழும் ‘போலீஸ் கிரி’க்கு இன்று 54வது பிறந்தநாள்

சிறையில் வாழும் ‘போலீஸ் கிரி’க்கு  இன்று 54வது பிறந்தநாள்

மும்பை: இன்று நடிகர் சஞ்சய் தத்தின் 54 வது பிறந்த நாள்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத். இன்று அவரது 54 வது பிறந்த நாள். சிறையில் இருக்கும் அவரை சில திரையுலக நண்பர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாக செய்திகள் பரவியது.

ஆனால், இதுவரை அதுபோன்று யாரும் அதிகாரப்பூர்வமாக சஞ்சய் தத்தை சந்திக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஞ்சய் தத்தின் மனைவி மானயதா தத் மட்டும் நேர்ல் வந்து வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, சஞ்சய் தத்தின் இந்தப் பிறந்த நாள் சிறையில் அமைதியாக கழியும் எனத் தெரிகிறது.

 

பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்!

பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்!

தனது பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி பேஸ் புக்கில் இணைந்தார் தனுஷ்.

தனுஷ் தனது 30வது பிறந்த நாளை நேற்று லண்டனில் நண்பர்கள் புடை சூழ கொண்டாடினார்.

இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நாளில் தனது பேஸ்புக் பக்கத்தை தொடங்கிய தனுஷ், அதில் தனது படங்கள், அவை குறித்த செய்திகளை பதிவு செய்தார்.

ஏற்கெனவே ட்விட்டரில் தனுஷ் ரொம்பப் பிரபலம். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரைத் தொடர்கின்றனர்.

பேஸ்புக்கில் இணைந்தது குறித்து தனுஷ் கூறுகையில், "நாம் சொல்ல நினைக்கும் விஷயங்களை நேரடியாக ரசிகர்களுக்குச் சொல்ல சமூக வலைத் தளங்கள் மிகச் சிறந்த வழயாக மாறியுள்ளது,' என்றார்.

இப்போதைக்கு தமிழில் நய்யாண்டி படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும், விரைவில் புதிய இந்திப் படத்தை அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனுஷின் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/dhanushchannel

 

அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா?

அனாதைகள் மருத்துவமனையில் நடிகை கனகா: புற்றுநோய்க்கு சிகிச்சையா?

திருவனந்தபுரம்: நடிகை கனகா ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் நடிகை தேவிகாவின் மகள் கனகா. அவர் ராமராஜனுடன் சேர்ந்து நடித்த கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து

படுபிசியான நடிகையாக ஆன கனகா ரஜினி, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால் 90ம் ஆண்டு இறுதிகளில் அவரை அவ்வளவாக படங்களில் பார்க்க முடியவில்லை.

திருமணம் செய்து கொள்ளாத கனகா 2000ம் ஆண்டில் தனது தாய் இறந்த பிறகு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர்

உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாக செய்திகள் வந்தன. பின்பு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள

திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற அங்கு

சென்றார். அந்த மருத்துவமனையில் அனாதைகள் மற்றும் கவனிக்க ஆளில்லாமல் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அங்கு புற்றுநோயால் அவதிப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த மருத்துவமனையில் கனகா சிகிச்சை பெறுவதைப் பார்த்த அந்த பிரமுகர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தனது நண்பர்களிடம் கூற விஷயம் அப்படியே பரவியது. கனகா புற்றுநோய்க்கு தான் சிகிச்சை பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இப்படி கவனிக்கக் கூட ஆளில்லாமல் தன்னந்தனியாக கனகா சிகிச்சை பெறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

வேடிக்கை பார்க்கக் கூடிய ரசிகர்களைப் பார்த்து 'தூ'... வென்று துப்பிய ஜஸ்டின் பீபர்

வேடிக்கை பார்க்கக்  கூடிய ரசிகர்களைப் பார்த்து 'தூ'... வென்று துப்பிய ஜஸ்டின் பீபர்

லாஸ் ஏஞ்சலெஸ்: பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரைப் பார்க்க அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து ஜஸ்டின் தூவென்று துப்பியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள ஒரு ஹோட்டலில் பீபர் தங்கியிருந்தார். இதையடுத்து அவரைப் பார்க்க திரளான ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்தனர்.

அப்போது பால்கனிக்கு வந்த ஜஸ்டின் தனது ரசிகர்கள் பெரும் திரளாக கூடியிருப்பதைப் பார்த்தார். பின்னர் திடீரென கீழே நோக்கி தூ வென்று துப்பினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைப் பார்த்த ஜஸ்டின் சுதாரித்துக் கொண்டு உள்ளே போய் விட்டார். பின்னர் அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், இன்று காலை நான் விழித்து எழுந்து பார்த்தபோது நிறைய ரசிகர்கள் எனக்காக காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. உலகிலேயே சிறந்த ரசிகர்கள் இவர்கள்தான் என்று ஐஸ் வைத்து பேசியிருந்தார்.

துப்பிட்டுப் பேசுற பேச்சைப் பாரு...!

 

சருமப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக.. நிர்வாணமான மைலி சைரஸ்

சருமப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக.. நிர்வாணமான மைலி சைரஸ்

லாஸ் ஏஞ்சலெஸ்: சருமப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைததுள்ளார் நடிகை மைலி சைரஸ்

பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ், டிசைனர் மார்க் ஜேக்கப்பின் சரும புற்றுநோய் நிதி சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக இந்த நிர்வாண போஸைக் கொடுத்துள்ளார்.

20 வயதான மைலியின் இந்த நிர்வாணப் படத்தை, டிசைனர் மார்க், தனது சருமப் புற்றுநோயிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தவுள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியானது, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சருமப் புற்றுநோய் மையத்திற்கு அளிக்கப்படவுள்ளது.

தான் நிர்வாண போஸ் கொடுத்தது குறித்து டிவி்ட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் மைலி.

இந்தப் புகைப்படத்தில் ஆடை எதுவும் இல்லாமல் இருக்கிறார் மைலி. தனது இரு கைகளால் அந்தரங்கப் பகுதிகளை மறைத்தபடி காட்சி தருகிறார். படத்தில், உங்களது சருமத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

 

சஞ்சய்தத்தின் பெயரை ‘மோதிரமாக’ டாட்டூஸ் போட்டுக் கொண்ட மானயதா தத்!

சஞ்சய்தத்தின் பெயரை ‘மோதிரமாக’ டாட்டூஸ் போட்டுக் கொண்ட மானயதா தத்!

மும்பை: சிறையில் இருக்கும் அன்புக் கண்வர் சஞ்சய் தத்தின் பெயரை தனது மோதிர விரலில் டாட்டூஸாக குத்ஹ்டிக் கொண்டுள்ளார் மானயதா தத்.

ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் மனைவியான, மானயதா தத் மிகவும் பிசியான பெண்மணி. தனது தயாரிப்பு நிறுவன வேலைகளுக்கு மத்தியிலும் தனது கணவர் சம்பந்தமான பாசப் பணிகளைச் செய்ய தவறுவதில்லை மானயதா.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் சஞ்சய்தத். இதனால், கணவன் -மனைவி இருவரும் தினந்தோரும் கடிதம் வாயிலாகவும், அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்கிறார்கள்.

தற்போது, தன் கணவர் சஞ்சய் மீது தான் கொண்ட காதலை காட்டும் விதமாக, தனது மோதிர விரலில் டாட்டூவாக வரைந்துள்ளார் மானயதா தத். தன் அன்பு மனைவியின் செயலைக் கேட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டாராம் சிறையில் இருக்கும் சஞ்சய் தத்.

 

சத்தியம் டிவியில் வரலாற்றின் மறுபக்கம்

சத்தியம் டிவியில் வரலாற்றின் மறுபக்கம்
சத்தியம் தொலைக்காட்சி வழங்கி வரும் ‘வரலாற்றின் மறுபக்கம்' ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

உலக நாடுகளில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் சாதனையாளர்களின் வாழ்க்கை பதிவுகள் வரலாற்றின் மறுபக்கத்தில் இடம் பெறுகின்றன . இதுவரை பார்த்திராத அரிதான நிகழ்வுகள் கொண்ட இந்நிகழ்ச்சியானது , பார்வையாளர்களை ஒவ்வொரு நாளும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது .

தெளிவான ஒளிப்பதிவில் பிரமாதமான தகவல்களை ஆவணக் களஞ்சியமாக வரலாற்றின் மறுபக்கத்தில் எடுத்து வருகிறார்கள். "உலகத்தில் முடிந்து போன பல விஷயங்கள் இனிவரும் காலங்களை புதுமையானதாக மாற்றுவதற்கு பெரும் உதவியாக இருக்கின்றன ."

அந்த வகையில் வரலாற்றின் மறுபக்கமும் பார்வையாளர்களை புதிய சாதனைகளைப் படைக்க நிச்சயம் தூண்டும். தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது . இதன் மறு ஒளிப்பரப்பை அடுத்த நாள் காலை 10.00 மணி அளவில் காணலாம்.

 

ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது 'தலைவா'?

சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா வருமா வராதா என விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கிசுகிசுத்துவரும் நிலையில், படத்துக்கு முதல் சிக்கல் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட யு ஏ சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறார் தயாரிப்பாளர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைவா படம் அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறது 'தலைவா'?

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழு, படத்துக்கு யு ஏ சான்று அளித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் சொல்லவில்லை.

இந்த நிலையில் ரிவைசிங் கமிட்டிக்கு இந்தப் படத்தை அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்.

சமீபத்தில் மரியான் படமும் இதே போல ரிவைசிங் கமிட்டிக்குப் போய் யுஏவை யுவாக மாற்றியது நினைவிருக்கலாம்.

ஏற்கெனவே தலைவா படம் குறித்து மர்மமான முணுமுணுப்புகள் இருந்து வரும் நிலையில், இப்போது சென்சார் பிரச்சினை எழுந்துள்ளது படத்தை 9-ம் தேதி எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் தியேட்டர்காரர்கள்தான்.

 

நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன்!

நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன்!

சென்னை: பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ், கர்நாடக மாநில அரசு மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் உறவினர் என தன்னைக் கூறிக் கொண்டு பலரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை வாங்கி, மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது நண்பரான கேரள நடிகை லீனா மரியா பாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏராளமான வழக்குகள் சுகாஷ் மற்றும் லீனா மீது பதிவு செய்யப்பட்டுத.

கடந்த மே மாதம் லீனா மரியா பாலை டெல்லி பண்ணை இல்லத்தில் சென்னை போலீஸார் கைது செய்தனர். அப்போது நூலிழையில் தப்பிவிட்டார் சுகாஷ்.

சென்னை கொண்டுவரப்பட்ட லீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் பலமுறை மனு செய்தும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லீனா மரியா பால் ரூ.2 லட்சத்துக்கான சொந்த பிணைத் தொகை செலுத்துவதுடன், தலா ரூ.1 லட்சத்துக்கான இரண்டு நபர்களின் உத்தரவாதத்தை அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

சென்சார் அனுமதித்தாலும் ஸ்வேதா மேனன் நிஜ பிரசவ காட்சி உள்ள படத்தை எதிர்ப்போம் - பெண்கள் அமைப்புகள்

ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சி இடம்பெற்று மலையாளப் படத்துக்கு சென்சார் அனுமதி வழங்கினாலும் அந்தப் படத்துக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடரும். ரிலீசாக விடமாட்டோம் என கேரள பெண்கள் அமைப்புகள் எதிர்பிபு தெரிவித்துள்ளன. .

தமிழ், மலையாளத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடிக்கும் அவர், தற்போது மலையாளத்தில் ‘களிமண்ணு' என்ற படத்தில் நடித்துள்ளார்.

சென்சார் அனுமதித்தாலும் ஸ்வேதா மேனன் நிஜ பிரசவ காட்சி உள்ள படத்தை எதிர்ப்போம் - பெண்கள் அமைப்புகள்

இப்படத்தை மலையாள இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார். பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்வேதா மேனன் கர்ப்பமாக இருந்தார். படத்தில் இடம் பெறும் ஒரு பிரசவக் காட்சியை தத்ரூபமாக படமாக்க இயக்குநர் விரும்பினார். எனவே ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சியை படமாக்க முடிவு செய்தார். இதற்கு சுவேதா மேனனும் சம்மதித்தார். அதன்படி, ஸ்வேதா மேனனின் பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்து தத்ரூபமாக அக்காட்சி படமாக்கப்பட்டது.

நிஜ பிரசவ காட்சியை படமாக்கியதற்கு கேரளாவில் பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. படத்தில் இருந்து அக்காட்சியை நீக்கவேண்டும். இல்லையென்றால் படம் வெளியாகும்போது போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.

இந்நிலையில், இப்படத்தை சென்சார் குழுவுக்கு திரையிட்டு காட்டினர். படத்தை பார்த்த சென்சார் குழு, யு/ஏ சானறிதழ் வழங்கியது.

வரும் ஆகஸ்ட் 23ம் தேதி படம் வெளியாகிறது.

சென்சார் அனுமதித்தாலும் ஸ்வேதா மேனன் நிஜ பிரசவ காட்சி உள்ள படத்தை எதிர்ப்போம் - பெண்கள் அமைப்புகள்

பெண்கள் அமைப்புகள் போராட்ட அறிவிப்பு

ஏற்கெனவே இந்தப் படத்துக்காக ஒட்டப்பட்ட ஸ்வேதா மேனனின் கர்ப்பமான வயிற்றைக் காட்டும் போஸ்டர்களை எதிர்த்த பெண்கள் அமைப்புகள், இப்போது ஸ்வேதா மேனன் பிரசவக் காட்சிகளுக்கு சென்சார் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன. படம் வெளியாவதற்கு முன் இந்த போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளன.

கேரள சபாநாயகர் கார்த்திகேயன் இந்தப் படத்தை எதிர்த்துப் பேசியது நினைவிருக்கலாம்.

 

பெப்பர்ஸ் டிவி கோல்டன் மூவிஸ்… ஒரு படம் ஒரே பிரேக்

பெப்பர்ஸ் டிவியின் கோல்டன் மூவியில் ரசிகர்கள் இடைஞ்சல் இல்லாமல் படம் பார்க்கலாமாம்.

தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது ஈஸியான விசயமில்லை முழு படத்தை பார்க்க மணிக்கணக்கில் விளம்பரத்தை பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். போனால் போகட்டும் என்று பிட் பிட்டாக படத்தை காட்டுவார்கள்.

பெப்பர்ஸ் டிவி கோல்டன் மூவிஸ்… ஒரு படம் ஒரே பிரேக்

ஆனால் பெப்பர்ஸ் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரே ஒரு பிரேக்தான் விடுகின்றனராம். இதனால் இடைஞ்சலின்றி படங்களை கண்டு ரசிக்கலாம் என்கின்றனர்.

தினந்தோறும் பகல் 1.30 மணிக்கு கோல்டன் மூவிஸ் நேரத்தில் பழைய படங்களை ஒளிபரப்புகின்றனர். ரசிகர்களிடம் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

 

சூர்யா படம் கைவிடப்படவில்லை... ஆக 21-ல் ஷூட்டிங்! - உறுதி செய்த லிங்குசாமி

சூர்யா படம் கைவிடப்படவில்லை... ஆக 21-ல் ஷூட்டிங்! - உறுதி செய்த லிங்குசாமி

சென்னை: சீமான் கதையை காப்பியடித்த லிங்குசாமியின் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக வந்த செய்தியை லிங்குசாமி மறுத்துள்ளார்.

சூர்யா நடிக்கும் படத்தை தான் இயக்குவது உறுதி என்று தெரிவித்துள்ள லிங்குசாமி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கவுதம் மேனனின் துருவநட்சத்திரம், லிங்குசாமியின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நடிப்பதாக சூர்யா ஒப்பந்தமானார்.

துருவநட்சத்திரம் கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு பின்னர் கதை, கதாநாயகி விஷயத்தில் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே லிங்குசாமி படத்தை உடனடியாகத் தொடங்க முடிவு செய்தார் சூர்யா.

ஆனால் அந்தப் படத்தின் கதை சீமானின் பகலவன் கதையின் ஜெராக்ஸ் காப்பி என்று தெரிய வந்ததால் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.

இந்த நிலையில், லிங்குசாமி படத்தின் கதை மாற்றப்பட்டுவிட்டதாகவும், சூர்யா சம்மதத்துடன் வரும் 21ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் லிங்குசாமியே அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

சோலார் பேனல் மோசடி: மம்முட்டியிடமும் போலீஸ் விசாரணை?

சோலார் பேனல் மோசடி: மம்முட்டியிடமும் போலீஸ் விசாரணை?

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி தொடர்பாக முன்னணி மலையாள நடிகர் மம்முட்டியிடம் கேரள போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

சோலார் பேனல் மோசடியில் கைதான பிஜு ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா நாயரிடம் பண ஆதாயம் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இடம் பெற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டியலில் நடிகர் மம்முட்டியின் பெயரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பிஜு ராதாகிருஷ்ணன்- சரிதாநாயரின் நிறுவனம் கொச்சியில் நடத்திய ஒரு விழாவில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். அந்த விழாவில் மம்முட்டிக்கு விருது வழங்கியதோடு அவருக்கு ரூ.10 லட்சம் பணமும் கொடுத்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் நடிகர் மம்முட்டியிடம் இதுபற்றி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இதனை நடிகர் மம்முட்டி மறுத்துள்ளார். கொச்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு விருதும், ரூ.25 ஆயிரம் பணம் மட்டுமே தரப்பட்டதாகவும், அந்தப் பணத்தைக் கூட ஒரு அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் மம்முட்டி கூறியுள்ளார்.

 

பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்- பிரிட்டன் கருத்துக் கணிப்பில் முடிவு

சென்னை: பாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகராக இந்தி நடிகராக அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்- பிரிட்டன் கருத்துக் கணிப்பில் முடிவு

பிரிட்டிஷ் ஆசிய வாராந்திரப் பத்திரிகை 'இந்தியாவின் சிறந்த 100 பாலிவுட் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் அமிதாப்பச்சன் விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலக சக கலைஞர்கள் போன்ற ஏராளமானவர்களின் வாக்குகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார்.

முதுபெரும் நடிகர் திலிப் குமாருக்கு இரண்டாவது இடமும், ஷாருக்கான் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர். நடிகை ஸ்ரீதேவிக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது.

மற்ற நடிகர்கள் பெற்ற இடங்கள்:

சல்மான் கான்-11, அமீர்கான்-14, தர்மேந்திரா- 15, ஹேமா மாலினி -18, மதுபாலா -24, கஜோல் -30, ஹிரித்திக் ரோஷன் -32, ராணி முகர்ஜி -38, கரீனா கபூர் -43, பிரியங்கா சோப்ரா -86, கேத்ரீனா கைப் - 93.

 

ரூ 100 கோடிக்கு உதயம் காம்ப்ளெக்ஸை வாங்கியது சத்யம்?

ரூ 100 கோடிக்கு உதயம் காம்ப்ளெக்ஸை வாங்கியது சத்யம்?

சென்னை: சென்னையின் பெரிய திரையரங்குகளில் ஒன்றான உதயம் காம்ப்ளெக்ஸை ரூ 100 கோடிக்கு சத்யம் சினிமாஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எண்பதுகளில் கட்டப்பட்ட மிக முக்கியமான தியேட்டர் காம்ப்ளெக்ஸ் உதயம். தென் சென்னை மக்களுக்கு பல நல்ல சினிமாக்கள் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய இந்த அரங்கம், கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகப் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

இந்த காம்ப்ளெக்ஸில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு அரங்குகள் உள்ளன. மொத்தம் 2198 பேர் படம் பார்க்க முடியும்.

இவற்றுக்கு உரிமையாளர்கள் மொத்தம் 53 பேர். 6 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு நீதிமன்றத்துக்குப் போனார்கள்.

இந்த சொத்தை விற்க ஒரு குழு அமைக்கப்பட்டது. நகரின் பிரதான இடத்தில் அமைந்துள்ள இந்த தியேட்டரை வாங்க ஏராளமான நிறுவனங்கள் போட்டி போட்டன. கடைசியில் சத்யம் சினிமாஸ் இதனை ரூ 100 கோடிக்கு பேசி முடித்துவிட்டதாகத் தெரிகிறது.

சத்யம் சினிமாஸ் சென்னை அண்ணா சாலையை ஒட்டி 4 தியேட்டர்களுடன் ஸ்ரீகாம்ப்ளெக்ஸ் என்ற பெயரில் ஆரம்பமானது. பின்னர் அதில் தியேட்டர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது (சத்யம், சாந்தம், செரீன், சீஸன்ஸ், ஸ்டுடியோ 5, சிக்ஸ் டிக்ரீஸ்).

அடுத்து எஸ்கேப் அவென்யூவில் எட்டு திரையரங்குகளை கையகப்படுத்தியது. பின்னர் பெரம்பூரில் எஸ் 2 என்ற பெயரில் 5 திரையரங்குகளையும், திருவான்மியூர் தியாகராஜாவை புதுப்பித்து எஸ் 2 தியாகராஜா என்ற பெயரில் 2 அரங்குகளையும் உருவாக்கியுள்ளது சத்யம்.

அடுத்து போரம் மாலில் 11 அரங்குகள், பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்களை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நடிகர் சங்க வளாகத்தில் 8 அரங்குகளை உருவாக்கத் திட்டமிட்டு, நீதிமன்ற வழக்கு காரணமாக அப்படியே நிற்கிறது.

ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் வண்டலூர் பகுதிகளிலும் புதிய பலதிரை அரங்குகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சத்யம்.