பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யவில்லை : குஷ்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபுதேவா, நயன்தாராவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றார் குஷ்பு. காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரபு தேவா, நயன்தாரா சமீபத்தில் பிரிந்தனர். இதையடுத்து நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலை யில் பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையே சமரசம் ஏற்படுத்த குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து குஷ்பு கூறியதாவது:

பிரபுதேவா, நயன்தாரா இருவரும் எனது நல்ல நண்பர்கள். பிரபு தேவாவை அவர் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே எனக்கு தெரியும். அவர் என்னுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையில் நான் மீடியேட்டராக இருக¢கவில்லை. காதலர்களாக இருந்த அவர்களுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அவ்வளவுதான். மற்றபடி அந்த பிரச்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது அவர்களின் சொந்த பிரச்னை. அதில் நான் தலையிட விரும்பவில்லை. இதற்கிடையே நான் தலையிட்டு அவர்களை சமரசம் செய்து வைக்க முயல்வதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.


 

திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றேனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தான் கட்டிய கல்யாண மண்டத்தை, தனது திருமண செலவுக்காக சினேகா விற்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் பதிலளித்துள்ளார். நடிகை சினேகா, பிரசன்னா காதல் திருமணம் வரும் மே 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இதற்கிடையில் திருமண செலவுக்காக பண்ருட்டியில் தான் கட்டிய கல்யாண மண்டபத்தை சினேகா விற்றுவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இது குறித்து சினேகா கூறியதாவது: எனக்கு சொந்தமான சொத்தை ஒரு நல்ல காரியத்துக்காக விற்றிருக்கிறேன். இதைபெரிய விஷயமாக ஏன் பேசிக் கொண்டி ருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும் முதலீட்டில் கட்டப்பட்ட அந்த சொத்தை வெறும் திருமண செலவுக்காக விற்றேன் என்று கூறுவது சரியல்ல. கடவுள் எனக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறார். எனது முதலீடுகள் அப்படியே இருக்கிறது. திருமண செலவுக்காக மண்டபத்தை விற்றால் அது எனக்கு வருத்தத்தைதான் தந்திருக்கும்.

என் குடும்பத்தில் எனது கல்யாணம்தான் கடைசி திருமணம். எனவே இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திருமணத்தையொட்டி நடக்கவுள்ள விசேஷங்களில் கட்டுவதற்காக பலவிதமான உடைகள் வித்தியாசமான டிசைன்களில் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். எனது திருமண நாளுக்காக நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆவலாக காத்திருக்கிறேன். இவ்வாறு சினேகா கூறினார். திருமணத்தையொட்டி புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் சினேகா. இதற்கிடையில் குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதில் மட்டும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது.


 

தமிழுக்கு வரும் மலையாள ஆவி கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாளத்தில் வினயன் இயக்கிய படம் யக்ஞையும் யானும். காதல் ஜோடிகளை வில்லன் கொல்ல, அந்த ஆவிகள் மோதிரம் வழியாக ஹீரோவின் உடம்புக்குள் புகுந்து தன்னை கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறது என்ற கருவை மையமாக வைத்து உருவானது. இப்படம் தெலுங்கில் லங்கேஸ்வரி என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழில் ஜக்கம்மா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

காதல் ஜோடி ஆவிகளாக கவுதம், மேக்னா ராஜ் நடித்துள்ளனர். வில்லன்களாக தேவ், திலகன், ராஜ் நடித்துள்ளனர். இது பற்றி பட வசனகர்த்தா பாலா.ஆர் கூறும்போது, மலையாளத்தில் இப்படத்திற்காக அமைக்கப்பட்ட இசை எபெக்ட் பகுதிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, புதிதாக 15 நாட்கள் சவுண்ட் மிக்ஸிங் செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கு சில பகுதிகள் ரீ ஷூட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டது. மோகினி வேடத்தில் கவர்ச்சியாக  நடித்திருக்கிறார் மேக்னா ராஜ் என்றார்.


 

‘பில்லா’ ரீ ரிலீஸ்: ரஜினி-அஜீத் ரசிகர்கள் சரமாரி மெயில்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி, அஜீத் நடித்துள்ள 'பில்லா' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் சரமாரியாக இமெயில் அனுப்பி உள்ளனர். பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்யும் பாணி 'கர்ணன்' படம் மூலம் தொடங்கியது. அந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்ட புதிய படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. திரையுலகில் நடக்கும் வேலை நிறுத்தத்தால் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் அடுத்த 2 மாதத்துக்கு ரிலீஸ் ஆகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சக்ரி இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 'பில்லா 2' ரிலீஸும் தள்ளிப்போகிறது. வரும் மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாள். அந்த நேரத்தில் அவர் நடித்து ஏற்கனவே வெளியான 'பில்லா' படத்தை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் இமெயில் மூலம் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் ரஜினியின் 'கோச்சடையான்' படமும் தீபாவளியை ஒட்டியே வரும் என்பதால் அவர் நடித்த பழைய 'பில்லா' படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் அவரது மன்ற வெப் சைட் மூலம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.


 

பெப்சி - தயாரிப்பாளர் பிரச்னையால் வாய்ப்பை இழந்தார் பிந்து மாதவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெப்சி, தயாரிப்பாளர்கள் மோதலால் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையால் ஒப்பந்தமான பட வாய்ப்பை இழந்துள்ளார் பிந்து மாதவி. 'வெப்பம்', 'கழுகு' படங்களில் நடித்திருப்பவர் பிந்து மாதவி. சீனு ராமசாமி இயக்கும் 'நீர் பறவை' படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமானார். இதன் ஷூட்டிங் இம்மாதம் தொடங்க இருந்தது. ஆனால் சம்பள விவகாரம் தொடர்பாக பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மே 2ம் தேதி முதல்தான் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் 'நீர் பறவை' ஷூட்டிங்கை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்தது. அந்த நேரத்தில் தெலுங்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் 'நீர் பறவை' படத்தில் நடிக்க முடியாத சூழல் பிந்து மாதவிக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இது பற்றி சீனு ராமசாமி கூறுகையில்,'ஸ்டிரைக் பிரச்னையால் ஷூட்டிங் தள்ளிப்போகிறது. அந்த நேரத்தில் கால்ஷீட்டை மாற்றியமைக்க முடியாத நிலையில் பிந்து மாதவி இருக்கிறார். இதனால் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்கிறோம்' என்றார். இப்போது பிந்து மாதவிக்கு பத¤லாக 'நீர் பறவை' படத்தில் சுனேனா நடிக்க உள்ளார்.


 

மருத்துவமனையில் இருந்து மனோரமா டிஸ்சார்ஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, மூட்டு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். பிறகு டீலக்ஸ் வார்டுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றார். உடல்நிலை தேறிய அவர், நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறகு தி.நகரிலுள்ள வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். மனோரமாவை அவரது மகன் பூபதி உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்.


 

டான்ஸ் மாஸ்டர் வீட்டில் பார்ட்டி : வாரம்தோறும் நடிகைகள் சந்திப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வாரம்தோறும் பிரபல நடிகைகள் தனி பார்ட்டி நடத்தி, தங்கள் வாழ்க்கை ரகசியங்களை விவாதிக்கும் புது டிரெண்ட் கோலிவுட்டில் பரவி உள்ளது. ஹீரோயின்கள் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு விலகிய காலம் மாறி இப்போது வாரம்தோறும் தனி பங்களாவில் சந்தித்து பார்ட்டி கொடுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதுபோல் ஒரு பார்ட்டி, சத்தம் இல்லாமல் சமீபகாலமாக சென்னையில் டான்ஸ் மாஸடர் பிருந்தாவின் பங்களாவில் நடக்கிறது. கடந்த வாரம் நடந்த பார்ட்டியில் குஷ்பு, த்ரிஷா, சுகாசினி, பிரியா ஆனந்த், ஐஸ்வர்யா தனுஷ், நடன இயக்குனர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டி அணைத்து வரவேற்றுக்கொண்டவர்கள், பின்னர் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். தொடர்ந்து அவர்களுக்குள் விளையாட்டு நடத்தி ஜாலியாக பொழுதை கழித்தனர். பின்னர் நடந்த விருந்தில் கலந்துகொண்டனர். இது குறித்து த்ரிஷா கூறும்போது, 'எனக்கு சில நெருங்கிய தோழிகள் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக அவர்களை எனக்கு தெரியும். அவர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் எனக்கு அவ்வளவு முக்கியமானவர்கள்.  இந்த சந்திப்பின்போது விருந்து உண்டு ஜாலியாக இருப்போம். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை பகிர்ந்துகொள்வோம். சீனியர் நடிகைகள் அதற்கேற்ப அட்வைஸ் தருவார்கள். ஆனால் சினிமா பற்றி இதில் பேச மாட்டோம்' என்றார்.


 

மற்ற நடிகைகள் படத்தை பார்க்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆக்ஷன் வேடத்துக்காக மற்ற நடிகைகள் நடித்த படங்களை பார்க்க மாட்டேன் என்றார் ஹன்சிகா மோத்வானி. இது பற்றி ஹன்சிகா கூறியதாவது: மற்ற படங்களில் சிரித்த முகத்துடன் என்னை பார்த்திருப்பீர்கள்.  'வேட்டை மன்னன்Õ படத்தில் சிம்புவுடன்  முறைத்தபடிதான் நடிக்கிறேன். ஆக்ஷன் ஹீரோயினாக துப்பாக்கியும் கையுமாக வில்லன்களுடன் மோதும் பாத்திரம். இதனால் சிரிக்கக்கூடாது என்று இயக்குனர் கூறிவிட்டார். 'ஆக்ஷன் காட்சியில் நடிப்பதற்காக மற்ற நடிகைகள் நடித்த ஆக்ஷன் படங்களை பார்ப்பீர்களா?Õ என கேட்கிறார்கள். யார் படத்தையும் பார்க்க மாட்டேன். அதைப்பார்த்தால் அந்த பாணியில் நடிக்கவே எண்ணம்போகும்.  என் பாணியில் எப்படி நடிக்க வருமோ அதுபோல் நடிப்பேன். கன்னட படத்தில் நடிக்க ஆசை. ஆனால் ஏற்கனவே தமிழ், தெலுங்கில் 4 படங்களில் நடித்து வருகிறேன். அதனால் கன்னட படம் ஏற்க முடியவில்லை. இதுதவிர 'சிங்கம் 2Õ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். 'மற்ற ஹீரோயின்கள் பாலிவுட் படங்களில் நடிப்பதுபோல் நீங்களும் பாலிவுட்டுக்கு போய்விடுவீர்களா?Õ என்கிறார்கள். எனக்கு அப்படி எந்த அவசரமும் இல்லை. சிறுவயதில் நிறைய பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் நடிக்க ஆசைதான். ஆனால் இந்தி படங்களில் நடிக்க இப்போதைக்கு எனக்கு அவசரம் இல்லை. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.


 

வெங்காயம் மறு ரிலீஸ் ஏன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் சத்யராஜ், வெற்றி, பவீனா, எஸ்.எம்.மாணிக்கம் நடித்த படம், 'வெங்காயம்'. சில மாதங்களுக்கு முன் ரிலீசான இப்படத்தை இயக்குனரும், நடிகருமான சேரன் மறு ரிலீஸ் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 'அன்னக்கிளி', 'ஒருதலை ராகம்', 'சித்திரம் பேசுதடி' ஆகிய படங்கள், ரிலீசானபோது சரியான வரவேற்பு பெறவில்லை. ஆனால், மறுரிலீஸ் செய்தபோது அப்படங்களின் மகத்துவம் தெரிந்து, ரசிகர்கள்  கொண்டாடினார்கள்.

அப்படங்கள்தான் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராகவும் மாறின. அதுபோல், சில மாதங்களுக்கு முன் ரிலீசான 'வெங்காயம்' படம் பற்றி கேள்விப்பட்டு பார்த்தேன். புதுமுக இயக்குனர் ராச்குமார், அற்புதமான படத்தை கொடுத்திருந்தார். சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துகளை தைரியமாகச் சொல்லியிருந்தார். இன்றைய தலைமுறையினருக்கு தேவையான மெசேஜ் சொல்லும் படமாக, இது உருவாகியிருந்தது. இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் சேர வேண்டும். மேலும், இயக்குனர் ராச்குமாரின் உழைப்புக்கு ரசிகர்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து மதுரை தவிர தமிழகம் முழுவதும் 52-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்துள்ளேன். இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தை பார்த்து ரசித்து வியந்த பல இயக்குனர்கள், தங்கள் கருத்துகளை வீடியோவில் பதிவு செய்து கொடுத்தனர். அதுவும் இப்படத்துக்கு உற்சாக டானிக்காக அமைந்துள்ளது. அவர்களுக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு. நல்ல படங்களை இதுபோல் தொடர்ந்து ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறேன்.


 

ஹீரோயின் வேண்டாம் கேரக்டர் ரோல் போதும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஹீரோயின் வாய்ப்பு வேண்டாம், கேரக்டர் வேடமே போதும் என்றார் சோனியா அகர்வால். இயக்குனர் செல்வராகவனை மணந்து விவாகரத்து பெற்று பிரிந்தவர் சோனியா அகர்வால். நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். 'ஹீரோயின் வேடங்களில் நடித்து மீண்டும் எனக்குரிய இடத்தை பிடிப்பேன்Õ என்றார். அதன்படி 'ஒரு நடிகையின் வாக்குமூலம்Õ படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படம் வெளியாகி எடுபடாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஓய்வுக்காக சண்டிகர் சென்றார். அவரது சகோதரர் பிறந்த தினத்தையொட்டி சமீபத்தில் சென்னை திரும்பினார்.

தனது வீட்டில் நண்பர்கள், நெருக்கமான உறவினர்களுக்கு விருந்து அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சி நிறைந்த பெண்ணாக நானிருக்கிறேன். முன்பு எப்போதும் இருந்ததைவிட இப்போது எல்லாவற்றையும் முறையாக அணுகி செயலாற்றுகிறேன். என் வாழ்க்கை மீண்டும் புதிதாக வடிமைத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இனி வரும் படங்களில் கேரக்டர் வேடங்களில் மட்டும் நடிப்பேன்.


 

தமிழ் ஸ்டார் இமேஜ் இந்தியில் எடுபடாது

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
தமிழ் சினிமா ஸ்டார் இமேஜ் பாலிவுட்டில் எடுபடாது என்றார் மாதவன். இது பற்றி மாதவன் கூறியதாவது: கோலிவுட் ஹீரோக்களை பாலிவுட் ரசிகர்கள் ஏற்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இது மொழி, மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. தமிழில் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒரு ஹீரோ இந்தியிலும் அதே இமேஜுடன் நடிக்க வேண்டுமென்றால் எடுபடாது.

10 வருடத்துக்கும் மேலாக இந்தியில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் நல்ல கதைகளையும், எனக்கேற்ற வேடங்களையும் ஏற்று நடிப்பதுதான். லுங்கி கட்டிக்கொண்டு பரிதாபமான காட்சியில் நடிப்பதற்கு எனது உடல்வாகோ, முகமோ பொருத்தமானதில்லை. இதை சொல்லிக்கொடுக்க எனக்கென்று யாரும் குரு கிடையாது. நானே படிப்படியாக உணர்ந்துகொண்டேன். பிறகு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்து படங்களை ஒப்புக்கொண்டேன்.ரீமேக் படங்கள் இந்தியில் இப்போது நன்றாக ஓடுகிறது.

அதற்காக எல்லா படங்களையும் அப்படி செய்துவிட முடியாது. தமிழில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படம் இந்தியில் 'ஏக் தீவானா தா' என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆனால் அது எடுபடவில்லை. ஆக்ஷன் படங்கள் கடந்த சில வருடங்களாக இந்தியில் உருவாகாமல் இருந்தது. அது ரீமேக் என்ற வகையில் உருவானபோது வெற்றி பெற்றது.


 

பெப்சி- தயாரிப்பாளர் பிரச்னை எதிரொலி : தள்ளிப்போகிறது பெரிய ஹீரோ படங்களின் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெப்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை இழுத்துக்கொண்டே செல்வதால் அடுத்த மாதம் வெளியாக வேண்டிய பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகிறது. பெரிய ஹீரோக்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் நடந்து வந்தது. இப்பிரச்னை இழுபறியில் இருப்பதால் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் நடைபெறவில்லை. இதனால் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் மே மாதம் வெளிவர வேண்டிய பெரிய பட்ஜெட் படங்கள், ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்தி நடித்துள்ள 'சகுனி' ஏப்ரல் 14-ம் தேதியும் அஜீத் நடித்த 'பில்லா 2' ஏப்ரல் 27ம் தேதியும் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இன்னும் ஷூட்டிங் பாக்கி இருப்பதால் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதே போல மே மாத ரிலீஸுக்கு முடிவு செய்திருந்த சூர்யாவின், 'மாற்றான்', கமலின் 'விஸ்வரூபம்' படங்களும் தள்ளிப்போக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழ்ப் புத்தாண்டுக்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாதது இப்போதுதான் எனக் கூறப்படுகிறது.

''பொதுவாக, கோடையில் தியேட்டர் வசூல் அதிகமாக இருக்கும். இந்த வருடம் அதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏப்ரலில் ஐபிஎல் தொடங்குவதால் சிறு பட்ஜெட் படங்கள் வழக்கமாக ரிலீஸ் ஆகாது. பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய ஹீரோ நடித்த படங்களுக்கு ஐபிஎல் பிரச்னை இல்லை என்பதால் அப்போது ரிலீஸ் ஆவது வழக்கம். இந்த வருடம் பெப்சி- தயாரிப்பாளர்கள் ஊதிய பிரச்னை காரணமாக படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அதனால், சிறு பட்ஜெட் படங்கள் அதிகமாக ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது'' என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


 

நடிகைகளுக்குள் ஈகோவா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது ஆரோக்கியமாக இருக்கிறது என்று அசின் கூறினார். இந்தியில், 'ஹவுஸ்புல் 2' என்ற படத்தில் நடித்துள்ளார் அசின். இதில் அக்ஷய்குமார் ஹீரோ. மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிரியங்கா ராவத், சஷான் பதம்ஸி ஆகிய நடிகைகளும் நடிக்கின்றனர். காமெடி படமான இதன் ஷூட்டிங்கில் ஹீரோயின்களுக்குள் ஈகோ மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டபோது கூறியதாவது:
ஒரே படத்தில் இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிப்பது இந்தி சினிமாவில் புதிதில்லை. அதிகமான படங்களில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் கேரக்டர்கள் இருக்கிறது.

இதனால் பொதுவாக எல்லா நடிகைகளும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வருகிறது. இப்படி நடிப்பது ஆரோக்கியமானதுதான். 'ஹவுஸ்புல் 2' படத்தில் நடித்தபோது எங்களுக்குள் ஈகோ எட்டிப் பார்த்தது என்று வரும் தகவல்களில் உண்மையில்லை. ஷூட்டிங் முடிந்த பல நாட்கள் ஆகியும் இப்போதும் நாங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருடனும் எனக்குப் போட்டியில்லை. இந்தியில் ஆமிர்கான், சல்மான்கானுடன் நான் நடித்த படங்கள்தான் பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிறார்கள். வெற்றியை அவர்களுடன் நானும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு பெருமைதான்.

சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும்போதுதான் கமர்சியலாக நிலைக்க முடியும். 'நீல் நிதின் முகேஷூடன் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்கிறார்கள். என்னுடன் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் நான் நட்புடன் இருக்கிறேன். நீல் நிதினை நான் இரண்டு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அவர் எனக்கு நண்பர் கூட கிடையாது. அப்படியிருக்கும்போது அவருக்கும் எனக்கும் என்ன பிரச்னை இருக்க முடியும்? இவ்வாறு அசின் கூறினார்.


 

ஷாம் நடிக்கும் படம் கவர்னர் தொடங்கி வைத்தார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்'. தமிழ், தெலுங்கில் தயாராகும் இதில் ஷாம், அல்லரி நரேஷ், வைபவ், ராஜூ சுந்தரம், சினேகா உல்லால், நீலம் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனில் சங்கரா தயாரித்து இயக்குகிறார். சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு. பப்பிலஹரி மகன் பப்பாலஹரி இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. கவர்னர் ரோசய்யா துவக்கி வைத்தார். நடிகர்கள் தியாகராஜன், சிம்பு, ஸ்ரீகாந்த், பிரசாந்த், மகதி, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உட்பட பலர் கலந்துகொண்டனர். படம் பற்றி அனில் சங்கரா கூறும்போது, ''இது, 3டி படம்.  காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்படுகிறது. முதல்கட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் பாங்காக்கில் நடக்கிறது'' என்றார்.


 

சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னையில் வாழும் ஒரு தம்பதியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகிறது. இதுபற்றி கன்னடப் பட இயக்குனர் நாகாஷேகர் கூறியதாவது:
பல்வேறு கொலை வழக்குகளை கையாண்ட உதவி போலீஸ் கமிஷனர் அசோக்குமார் என்பவர் சொன்ன உண்மை கதைகளில் ஒரு கதையை படமாக்க இருக்கிறோம். ஏனென்றால் இந்த கதை அவ்வளவு சுவாரஸ்யமானது. ஒரு பெண்ணுக்காக பல கொலைகளை செய்தவனின் கதை இது.

ஏன் அப்படி செய்தான் என்பதற்கான காரணங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். இது உண்மை கதை. இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளாமல் இப்போதும் சென்னையில் வசித்து வருகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக, சரத்குமார் நடிக்கிறார். ஹீரோவாக சேத்தனும் ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கிறார்கள். உடல் ஊனமுற்றவராக இவர் நடிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.


 

கன்னடத்திலும் தங்கையாக நடிக்கிறார் சரண்யா மோகன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சமுத்திரம்' படத்தின் கன்னட ரீமேக்கில், காவேரி நடித்த தங்கை கேரக்டரில் நடித்து வருகிறார் சரண்யா மோகன். இதுகுறித்து அவர் கூறியதாவது:
'சமுத்திரம்' எனக்கு மிகவும் பிடித்த படம். பத்து முறையாவது பார்த்திருப்பேன். அதன் ரீமேக்கில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதிலும் காவேரி கேரக்டர் பவர்புல்லானது. படத்தை பலமுறை பார்த்திருந்தாலும் காவேரியை காப்பி அடிக்கவில்லை. எனது ஸ்டைலில் நடித்து வருகிறேன். இதுதவிர நான் நடித்த இன்னொரு கன்னடப்படம் விரைவில் வெளிவருகிறது. மலையாளத்தில் அப்பா மகள் உறவை சித்தரிக்கும் 'பேரினொரு மகன்' என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் இரண்டு கதைகளுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.


 

மனிதநேய பண்பாளர்களை அரசு அங்கீகரிக்க வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரா.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண் தான முகாம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி சுரேஷுக்கு, 'சிறந்த மனிதநேயன் விருது' வழங்கப்பட்டது. நீதிபதி சந்துரு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து சுரேஷின் வாரிசுகள் படிக்க, 50 ஆயிரம் ரூபாய் வழங்கிய விவேக், பேசியதாவது:

60 வயதை தாண்டிய அய்யப்பன் என்பவர், வறுமை காரணமாக, சுரேஷ் கடையில் லாட்டரி சீட்டுகள் வாங்கினார். அதற்கான பணம் 250 ரூபாயைக் கொடுக்க முடியவில்லை. சுரேஷிடமே கொடுத்துவிட்டார். மறுநாள் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. விஷயத்தை அய்யப்பனிடம் சுரேஷ் சொன்னபோது, 'லாட்டரி சீட்டுகளுக்கான பணத்தை உங்களிடம் கொடுக்காத எனக்கு இந்த பரிசு கிடைப்பது நியாயம் இல்லை' என்று மறுத்தார். ஆனால் சுரேஷ் விடாப்பிடியாக, 'இது உங்களுக்கான சீட்டு. இதற்கான தொகை 250 ரூபாய் கொடுங்கள். நியாயமாக ஒரு கோடி ரூபாய் பரிசு உங்களுக்கே சேர வேண்டும்' என்று கொடுத்துவிட்டு சென்றார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொண்ட சுரேசுக்கு, மனிதநேய மன்றம் விருது கொடுத்திருப்பதன் மூலம் பார்த்திபன் உயர்ந்துவிட்டார்.

இதுபோல் மனித நேயத்தில் சிறந்து விளங்குபவர்களை அரசு அங்கீகரித்து, உயர்ந்த விருதை வழங்க வேண்டும். இவ்வாறு விவேக் பேசினார். விழாவில், கே.பாக்யராஜ், பிரசன்னா, ரோகிணி, டாக்டர்கள் முருகப்பன், சுஜாதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

கிசு கிசு - இசைஇயக்கம் திடீர் மோதல்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
உலக அழகி போட்டியில கலந்துகிட்ட பார்வதியான நடிகை, தல படத்துல நடிக்கிறாரு. ஏற்கனவே மலையாளத்துல நடிகை நடிச்ச படம் ஓடல. தல படம் ரிலீசாகப்போறதால அந்த மல்லுவுட் படத்தை தூசி தட்டி எடுக்கிறாங்களாம்... எடுக்கிறாங்களாம்... தல படம் வந்ததும் அந்த மல்லு படத்தை தமிழ்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ண தயாரிப்பு முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...

பாஸ் படம் தந்த இயக்கத்துக்கும் யுவ இசைக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்துச்சு. இப்போ திடீர்னு இயக்கத்துக்கும் இசைக்கும் முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... காட்டன் வீர ஹீரோவை வச்சு இயக்கம் பண்ணப்போற படத்துல யுவ இசை ஒர்க் பண்ண மாட்டாராம்... மாட்டாராம்... ஈகோ பிரச்னைதான் இதுக்கு காரணம்னு இண்டஸ்ட்ரில பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

காதல் நடிகைக்கு தமிழ்ல படங்களே இல்ல. மலையாளத்துல மட்டுமே வாய்ப்புகள் வருதாம்... வருதாம்... கிடைக்கிற செகண்ட் ஹீரோயின், மூணாவது ஹீரோயின் ரோல்கள்ல நடிகை திருப்தியா இருக்காராம். சொந்த ஊரான மலையாள தேசத்துல லீசுக்கு வீடும் எடுத்திருக்காராம். மல்லுவுட்ல பிசி ஆயிட்டா, அங்கேயே தங்கவும் முடிவு எடுத்திருக்காராம்... எடுத்திருக்காராம்...


 

இசை அமைப்பாளர், காமெடியனுக்கு கோடி, லட்சத்தில் சம்பளம் வேஸ்ட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இசை அமைப்பாளர், காமெடி நடிகர்களுக்கு கோடி, பல லட்சங்களில் சம்பளம் தருவது வேஸ்ட் என்றார் இயக்குனர் விக்ரமன். புதுமுகங்கள் ஸ்ரீதரன், ஜெயசேகர், வெண்ணிலா, என்.பி.ராஜ சேகரன் உடையார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'அமிர்தயோகம்Õ. இதன் பாடல் கேசட்டை இயக்குனர் விக்ரமன் வெளியிட இயக்குனர் திருமலை பெற்றார். பிறகு விக்ரமன் பேசியதாவது:

என் படங்களுக்கு நானேதான் நகைச்சுவையும் எழுதுவேன். ஷூட்டிங் நேரத்தில் யாரும் சிரிக்க மாட்டார்கள். தியேட்டரில் வரவேற்பு இருக்கும். அதிகபட்சமாக காமெடி நடிகருக்கு 1 லட்சம்தான் தந்திருக்கிறேன். காமெடி காட்சிக்கு கவுண்டமணியை நடிக்க கேட்டால் 40 லட்சம் ரூபாய கேட்பார். அந்த பணத்தில் முக்கால்பாகம் படத்தை முடித்துவிடுவேன். இளையராஜாவை இசை அமைப்பாளராக போட்டால் அவரது பேருக்காக 10 லட்சம் ரூபாய் கூடுதல் வியாபாரம் இருக்கும். அவர் வாங்கும் சம்பளத்தைவிட யாருக்கும் அதிகமாக தருவது எனக்கு உடன்பாடில்லை.

எதற்காக இசைக்காக மட்டும் ஒன்றைகோடி ரூபாய் தர வேண்டும். என் படம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அதில் பிரபல கவிஞரை பாடல் எழுத அணுகினேன். திருத்தங்கள் சொன்னபோது கோபப்பட்டார். நான் சிறப்பு தமிழ் படித்திருக்கிறேன். எனக்கும் இலக்கணம் தெரியும். முட்டாள் இல்லை. உடனே அந்த கவிஞரை வேண்டாம் என்று பழனிபாரதி போன்ற புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளித்தேன். ஒருவர் வாய்ப்பை மறுக்கும்போது இன்னொருவர் புதிதாக உருவாகிறார். ஒரு படத்துக்கு ராஜா மறுத்ததால்தான் ரகுமான் உருவானார். ரஜினி நடித்த 'அண்ணாமலை' படத்தை இயக்க மாட்டேன் என்று வசந்த் சொன்னதால்தான் சுரேஷ் கிருஷ்ணா உருவானார்.இவ்வாறு விக்ரமன் கூறினார்.இயக்குனர் ஏ.மாணிக்கராஜ் வரவேற்றார்.


 

இளையராஜா அசத்தும் "நீதானே என் பொன்வசந்தம்" பாடல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், 'நீதானே என் பொன்வசந்தம்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ஜீவா, சமந்தா ஜோடியாக நடிக்கின்றனர். தெலுங்கில் ராம் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஜீவா, ரகு என்ற என்ஜினீயரிங் மாணவராக நடிக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பொதுவாக காதல் படம் என்றால் இளையராஜா பாடல்படு சூப்பாராக இருக்கும். அதுவும் கௌதம் மேனன், இளையராஜா கூட்டணி என்றால் நிச்சயம் பாட்டு சூப்பராக இருக்கும். இந்நிலையில் படத்தின் பாட்டுக்கு இப்போது இருந்தே பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து படத்தின் பாடல்களை இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார். ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் மேனனும் உடன் சென்றுள்ளார்.

 

பூலோகம் படத்திலிருந்து அமலா பால் விலகல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'ஆதிபகவான்'. நீது சந்திரா ஜோடி. பாங்காங்கில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குன‌ரின் இயக்கத்தில் ஜெயம் ரவி 'பூலோகம்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆக்ஷன் த்‌ரில்லரான இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆதி பகவானுக்காக ஜெயம் ரவி தாடி மீசை வளர்த்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் ஒபந்தம் ஆகியிருந்தார். ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.



 

மே 25ல் பில்லா 2?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத்தின் அடுத்த அதிரடியான 'பில்லா 2' தமிழகம் தொடங்கி ஐரோப்பா வரையிலும் 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. டைட்டில் பாடலுடன் ஒரு வார 'பேட்ச் ஒர்க்' மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 'பில்லா 2' பட பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதமாக வந்துள்ளதாக படக்குழுவை சேர்ந்தவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இப்போதைக்கு கேள்விக்குறியுடன்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஸ்டிரைக் ஸ்பீடு பிரேக்கர் போட்டதால் நினைத்தபடி படத்தை முடிக்க முடியவில்லையாம் பில்லா டீமால். தல யின் பிறந்த நாளுக்கு பில்லா வராது என்பது உறுதி. இவையெல்லாம் மே ஒன்றில் சாத்தியமில்லை என்பதால் மே 25 க்கு படத்தை தள்ளி வைத்திருப்பதாக புதிய செய்தி உலவுகிறது.



 

பாலாவின் "பரதேசி"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாலா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அதர்வா. 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம் நடிகர் அத்ர்வாவுக்கு ஒரளவுக்கு பெருமை தேடித் தந்தது. இந்தப் படத்தை அடுத்து, பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அதர்வா, இந்த படம் அதர்வாவின் நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 'அவன்- இவன்' படத்துக்கு பிறகு புதுமுகங்கள் நடிக்கும் படத்தை பாலா இயக்குவதாக கூறப்பட்டது. இப்போது, அதர்வா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை 'ராஜபாட்டை' படத்தை தயாரிக்கும் பிவிபி சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. அந்த நாவலின் பெயரையே - எரியும் தணல் - படத்துக்கு பாலா வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. எரியும் தணல் என்று படத்துக்கு பெயர் வைத்தது நமது கற்பனை போலிருக்கிறது. பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் பெயர் 'பரதேசி'.


 

கமலின் முயற்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எழுதி, இயக்கி, கமல்ஹாசன் நடிக்கும் படம் விஸ்வரூபம். தீவிரவாதம் தொடர்பான பின்னணியில் இப்படக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷங்கர்-எஹசான்-லாய் இசையமைக்கிறார். பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே விஸ்வரூபத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட கமல் முயன்று வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவிலும் விஸ்வரூபம் திரையிடப்படும் என தெரிகிறது.



 

மீண்டும் யுவனுடன் கூட்டணி சேரும் ராஜேஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஆல் இன் ஆல் அழகுராஜா' இது தான் கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் பெயர். இயகக்குனர் யார் தெரியுமா... எப்போதும் காமெடி படங்களை எடுத்து வரும் நம்ம ராஜேஷ். 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், அடுத்த கார்த்தியுடன் கை சேர உள்ளார். படத்தின் கதையை ஒரு வரியாக, கார்த்தியிடம் கூறியிருக்கிறார் ராஜேஷ். கதை பிடித்துப் போனதால் ராஜேஷூக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி தற்போது, இயக்குனர் சங்கர் தயாள் இயக்கத்தில் 'சகுனி' படத்திலும், சுராஜ் இயக்கும் பெயரிடாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்-வுடன் கூட்டணி வைத்தார். தற்போது 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார் ராஜேஷ். வழக்கம் போல், தனது படத்திற்கு வித்தியசமான தலைப்பை தேர்வு செய்யும் ராஜேஷ், இந்த படத்திற்கு 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்று பெயர் வைத்துள்ளார். படத்திற்கு காமெடியாக யாராக இருக்கும்... இதில் என்ன சந்தேகம் நம்ம சந்தானம் தான்...



 

பில்லா -2 இசை: ரஜினி வந்ததும் வச்சிக்கலாம்!


அஜீத் நடிக்கும் பில்லா -2 படத்தின் இசை வெளியீடு எப்போது என்பதில் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை படக்குழுவினர்.

காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதே நேரம் இந்த நிலைக்கு அவர் எந்த வரையிலும் காரணமல்ல.

படத்தயாரிப்பு தரப்பில், மார்ச் மாத இறுதியில் படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என முடிவு செய்திருந்தனர். ஆனால், ஏப்ரலில்தான் பாடல் வெளியீடு நடக்கும் என்று தெரிகிறது.

காரணம் முன்பு 'பில்லா' படத்தினைத் துவக்கி வைத்து, பாடல் வெளியிட்டு வாழ்த்திய ரஜினிகாந்த் இப்படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்களாம். ஆனால், ரஜினி தன் 'கோச்சடையான்' படத்திற்காக லண்டன் சென்றுவிட்டார்.

படப்பிடிப்பு முடித்து, சென்னைக்கு ஏப்ரல் மத்தியில் தேதி வருகிறார்.

எனவே, இசை வெளியீட்டை அவர் வந்த பிறகு, ஏப்ரல் மாதத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

பிழைக்கத் தெரிஞ்சவங்க!

 

2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!


நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,

திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். சிம்பு மனதில் யாராவது இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டாராம். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமாம். அதனால் தான் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.

சிம்பு கடந்த காலத்தில் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக அவரது நெருக்கமான வட்டத்தில் நயன்தாரா இருந்தார். அதையடுத்து ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து சென்றனர். நயன்தாரா, பிரபுதேவா பக்கம் சாய்ந்தார். இருந்தாலும் சிம்பு சோலோவாகவே இருந்து வந்தார். நயனதாராவும் கூட, சமீபத்தில் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டார்.

இந்த நிலையில்தான் சிம்பு தனது அம்மாவிடம் பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.


 

பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி - அமீர் குற்றச்சாட்டு


சென்னை: சினிமா தொழிலாளர்களின் மிக வலுவான அமைப்பான பெப்சியை உடைக்க தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மோதல் நீடித்து வருகிறது. நடிகர் கார்த்தியின் படத்துக்கு இடையூறு செய்ததாகக் கூறி பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

நேற்று சென்னையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் அழைப்பை தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு பெப்சி சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு பெப்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதெல்லாம் தங்களை பயமுறுத்த தயாரிப்பாளர் செய்யும் வேலை என்று கூறியுள்ளனர் பெப்சி நிர்வாகிகள்.

இயக்குநர் அமீர் பெப்சி தலைவர் எம். ராமதுரை, பொதுச் செயலாளர் ஜி. சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், "1996-ல் திரையுலகில் நடந்த ஸ்டிரைக் 7 பேர் உயிர் போக காரணமாக அமைந்தது. பெப்சியை உடைத்து உயிர்ப்பலி ஏற்படும் நிலையை உருவாக்கக் கூடாது. தயாரிப்பாளர்களுடன் 4 வருடமாக சம்பள உயர்வு கேட்டு போராடி வருகிறோம். ஆனால் சம்பளத்தை உயர்த்த மறுக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்கம் பெப்சியையும் அமீரையும் குற்றச்சாட்டி அறிவித்த படப்பிடிப்பு ரத்து என்பது நடைபெறவே இல்லை. நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 34 படப்பிடிப்புகள் சிறப்பாக நடந்தன. தயாரிப்பாளர் சங்கம் படம் எடுக்காதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

40 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் பெற்று மூன்று முதல்வர்களால் வார்த்தெடுக்கப்பட்ட பெப்சியை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என சவால் விடுவதை கண்டிக்கிறோம். 15 சங்கங்கள் ஊதிய உயர்வு பேசி முடிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர் நல ஆணையத்தையும் அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசையும் உதறி விடுவது போன்று நடப்பது சரி அல்ல.

உண்மையான தயாரிப்பாளர்களுக்கு பெப்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பெப்சியை உடைக்க யார் முயன்றாலும் உயிரை கொடுத்து காப்போம். முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்தித்து பேசுவோம்," என்றனர்.


 

விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படத்துக்கு ஒசாகா திரைப்பட விழாவில் விருது!


ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவில், விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடித்து, விஜய் அழகப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம், 'தெய்வத்திருமகள். 5 வயது மனநிலையில் உள்ள ஒரு இளைஞனையும், அவனுடைய பெண் குழந்தையையும் பற்றிய படம் இது.

விக்ரமுடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், பேபி சாரா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து மோகன் நடராஜன் தயாரித்திருந்தார். இந்த படம் ஏற்கெனவே சில திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விழா விருது விழாவிலும் இந்தப் படம் பங்கேற்றது. ஆசியாவின் மிக முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக ஓசாகா விழா பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்பட விழாவில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இதில் விக்ரமின் 'தெய்வத்திருமகள்' படம், 'God's own Child' என்ற பெயரில் ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிடப்பட்டது.

இந்தப் படத்துக்கு கிராண்ட் பிரிக்ஸ் சிறந்த படம் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு படம் ஆகிய 2 விருதுகள் அளிக்கப்பட்டன.

விழாவில் நடிகர் விக்ரம், டைரக்டர் விஜய் அழகப்பன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு, விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

 

அழகுக்காக ஆண்டுக்கு ரூ 72 லட்சம் செலவழிக்கும் 43 வயது நடிகை!


பிரபல ஆலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தன் அழகைப் பாதுகாக்க மட்டும் ஆண்டுக்கு ரூ 72 லட்சம் செலவழிக்கிறாராம்.

43 வயதாகும் ஜெனிபர் அனிஸ்டன் இபபோதும் கூட ரசிகர்களின் விருப்ப நாயகியாக உலா வருகிறார். இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் (Hottest woman of all time) என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றார்.

அவரது அழகு மற்றும் கவர்ச்சியின் ரகசியம் என்ன என்பதற்கு ஷைன் இணையதளம் விடையளித்துள்ளது.

இவர் அழகு மருத்துவத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ.72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறாராம். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூ.20 ஆயிரம் ஒதுக்குகிறார். யோகா பயிற்சிக்கு ரூ.48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூ.46 ஆயிரமும் செலவு செய்கிறாராம்.

ஹாஹாஹா...

இந்த செய்தியை இணையதளத்தில் படித்ததும் சிரித்து மகிழ்ந்தாராம் ஜெனிபர்.

'அழகைப் பராமரிப்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு கலை. அதை ரசித்து செய்கிறேன். அதனால் என்னால் இப்படி இருக்க முடிகிறது. ஆனால் இந்த மாதம் இதில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு செலவழிக்கவில்லை', என்று பதிலளித்துள்ளார் ஜெனிபர்.

 

கோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் - ஹீரோயின் நயன்தாரா!


கோபிசந்த் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.

ஜெயம் படத்தில் அதிரடி வில்லனாக வந்தவர் கோபிசந்த். பின்னர் தெலுங்கில் ஹீரோவாக பிஸியாகிவிட்டார்.

இப்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழில் நேரடிப் படமாகும். தெலுங்கிலும் வெளியாகிறது.

தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், தரணி இயக்கிய ஒஸ்தி, விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சமரன் போன்ற படங்களைத் தயாரித்த ஜெய்பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தேவதையைக் கண்டேன், மலைக்கோட்டை, திருவிளையாடல் என வெற்றிப் படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

எகிப்து, சீனா, துருக்கி போன்ற நாடுகளின் வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளது.

 

இன்று 'திருமதி' ஆகிறார் ரீமா சென்!


தென்னிந்தியாவின் கவர்ச்சி மிகு நாயகிகளில் ஒருவரான ரீமா சென் இன்று இல்லற பந்தத்தில் நுழைகிறார். இன்று மாலை நடைபெறும் திருமண விழாவில் ரீமா சென், தனது காதலரான ஷிவ் கரன் சிங்கை கரம் பிடிக்கிறார்.

மின்னலே படம் தமிழ் ரசிகர்களின் மனதில் மின்னலாகப் பாய்ந்தவர் ரீமா சென். அதன் பின்னர் திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் தனது அபாரமான நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

நீண்ட காலமாக தனது உறவினரும் பப் உரிமையாளருமான ஷிவ் கரன் சிங்கை காதலித்து வந்தார். இதுகுறித்து கிசுகிசுக்கள் வந்தபோதெல்லாம் அதை தொடர்ந்து மறுத்து வந்தார். சமீபத்தில்தான் தனது காதலையும், திருமணத்தையும் அவர் உறுதி செய்தார்.

சமீபத்தில் இவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் நிச்சயம் செய்தனர். இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு டெல்லி அருகே உள்ள ஷிவ் கரன் சிங்குக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.

இதில் இரு வீட்டுக்கும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்திலிருந்து நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட ரீமாவுக்கு நெருக்கமான சிலர் பங்கேற்கின்றனர்.

 

காதல் ஜோடிகளுக்காக 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' ஸ்பெஷல் ஷோ!


ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற புதிய படம், 50 காதல் ஜோடிகளுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்டப்பட்டது.

படத்துக்கு ஒரு வித்தியாசமான விளம்பரமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

சேரனின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷண்முகராஜ் எழுதி இயக்கியுள்ள படம் இது. மொத்தம் 71 புதுமுகங்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு 372 நாட்கள் நடிப்புப் பயிற்சி கொடுத்த இயக்குநர், முழுக் காட்சிகளையும் முதலில் ஒரு ஹேண்டி கேமில் பதிவு செய்து படமாக்கி, அதை வைத்துக் கொண்டு, தனியாக சினிமாவுக்கென்று ஒரு ஷூட்டிங் நடத்தினார்.

இதனால் காட்சிகள் நினைத்த மாதிரியே வெகு நேர்த்தியாக வந்ததாம்.

'உங்க காதல் ஜெயிக்க, 5 டி (T)யை பாலோ பண்ணுங்க... கண்டிப்பா சக்ஸஸ்தான்' என்று இந்தப் படத்துக்காக விளம்பரம் செய்யப்பட்டதால், அந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள காதலர்கள் எக்கச்சக்க ஆர்வம் காட்டினார்களாம்.

எனவே, ஒரு வித்தியாச முயற்சியாக, படத்தையே காதலர்களுக்கு சிறப்புக் காட்சியாக போட்டுக் காட்ட முடிவு செய்தார் இயக்குநர்.

அதன் படி தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னைத் தொடர்பு கொண்டவர்களில் 50 காதல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியை திரையிட்டுக் காட்டினர்.

படம் பார்த்த ஜோடிகள் அனைவரும் திருப்தியும் பாராட்டும் தெரிவித்ததோடு, காதல் ஜெயிக்க என்ன பண்ணனும் என்ற ரகசியம் தெரிஞ்சிடுச்சி என்றனர் உற்சாகத்துடன்!

மெய்யாலுமாவா?!


 

குவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசனை


அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிவதால் சம்பளத்தை உயர்த்தலாமா என்று நடிகை ஹன்சிகா மோத்வானி யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து ஊத்திக் கொண்ட படங்களிலேயே நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் நடித்தி ராசியோ, என்னவோ அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

சூர்யாவுடன் சிங்கம் 2, சிம்புவுடன் வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் ஏக குஷியாக உள்ளார். அது தான் நம்மைத் தேடி இத்தனை வாய்ப்புகள் வருகிறதே, சம்பளத்தை உயர்த்தினால் என்ன என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்.

அவர் நடிக்க வந்ததில் இருந்தே பெரிய ஹீரோக்கள் படங்களாகத் தான் கிடைக்கிறது. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சூர்யா என்று முன்னணி நாயகர்களுடன் நடிக்கிறார். முதல் ஒரு சில படங்களில் சொதப்பினாலும் தற்போது அவர் தேறி வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை புரிந்து வைத்துள்ளார் ஹன்சிகா.


 

சைப்-கரீனாவின் 'ஏஜென்ட் வினோத்' படத்திற்கு பாக்.கில் தடை


சைப் அலி கான் தயாரித்து நடிக்கும் ஏஜெண்ட் வினோத் படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தயாரி்த்து நடிக்கும் படம் ஏஜெண்ட் வினோத். இதில் அவருக்கு ஜோடியாக அவரது காதலி கரீனா கபூர் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் தயாரித்துள்ள இந்த படத்தை சைபுடன் சேர்ந்து தினேஷ் விஜன் தயாரித்துள்ளார்.

சைப் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த த்ரில்லர் படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதில் அவர் உளவாளியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ பற்றி பேசப்பட்டுள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் வரும் பியார் கி பங்கி என்ற பாடலின் இசை காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய இசைக்குழுவான பாரோபாக்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த பாடலின் இசை காப்பியடித்ததில்லை என்று இணை தயாரிப்பாளர் தினேஷ் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா?


நடிகை சினேகா தனது திருமண செலவுக்காக பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று பரபரப்பாக கூறப்படுகின்றது.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும். இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். முதலில் காதல் குறித்து மௌனமாக இருந்து வந்த அவர்கள் பிறகு ஒப்புக் கொண்டனர். இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே அவர் விரைவில் தம்பதிகளாகின்றனர்.

அவர்களின் திருமணம் வரும் மே மாதம் 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமணத் தேதி நெருங்குவதால் சினேகா தான் ஒப்புக் கொண்ட படங்களை வேக, வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.

முன்னதாக கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க சினேகா தேர்வானார். ஆனால் படப்பிடிப்பு மே மாதத்தில் நடக்கும் என்று கூறியதால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது திருமணச் செலவுக்காக சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள தனது திருமண மண்டபத்தை விற்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மண்டபம் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் சினேகா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.


 

ராதிகா கடனைத் தீர்க்க எந்த சொத்தையும் விற்கவில்லை-விஷால்


நடிகை ராதிகாவின் கடனை அடைக்க தனது வீட்டை விற்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், சமீரா ரெட்டி நடத்த வெடி படத்தை அவரது அண்ணன் விஷால் கிருஷ்ணா தயாரித்தார். இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந்நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும் அதில் ரூ. 9 கோடியை தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்தார். அந்த புகார் மனுவில், "விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்யும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ. 9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார்.

அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணமின்றி திரும்பி வந்துவிட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைடுத்து விஷால் அண்ணா நகரில் தனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாக வந்த செய்தி வெறும் வதந்தியே. சென்னையிலும், ஹைதராபாத்திலும் எனது பெயரில் சொத்துக்களே இல்லாதபோது அதை எப்படி விற்க முடியும். சொத்துக்கள் வாங்குவதும், விற்பதும் சகஜம். ஆனால் அதை கடன் பிரச்சனையோடு தொடர்புபடுத்தி பேசுவது வருத்தமாக உள்ளது.

ராதிகாவுக்கு பணம் கொடுக்க வேண்டியது எனது அண்ணனுக்கும், அவருக்கும் உள்ள பிரச்சனை. அதில் தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டனர். மேலும் அந்தப் பிரச்சனை முடிந்து விட்டது என்றார்.

 

படப்பிடிப்பில் அஜ்மல் காயம்!


வெற்றிச் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அஜ்மல் காயம் அடைந்தார்.

நடிகர் அஜ்மல் கதாநாயகனாகவும், ராதிகா ஆப்தே கதாநாயகியாகவும் நடிக்கும் படம் வெற்றிச்செல்வன். இப்படத்தை ருத்ரன் இயக்கி வருகிறார். நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை இது. ஆனால் அவரால் நடிக்க முடியாததால், அஜ்மல் நடிக்கிறார்.

வெற்றி செல்வன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் கதாநாயகன் அஜ்மல், கதாநாயகி ராதிகா ஆப்தே ஆகியோர் ஒரு ஆட்டோவில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது திடீரென ஆட்டோ ரோட்டின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. தடுப்பு சுவர் தடுக்காவிட்டால் ஆட்டோ பள்ளத்தில் உருண்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆட்டோ கவிழ்ந்ததில் கதாநாயகன் அஜ்மல், காதாநாயகி ராதிகா ஆப்தே, இயக்கநர் ருத்ரன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை படப்பிடிப்பு குழுவினர் மீட்டனர்.

இதுகுறித்து ருத்ரன் கூறுகையில், "அந்த தடுப்பு சுவர் இல்லாவிட்டால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். இந்த சம்பவத்தில் இருந்து மீள வெகு நேரமாகிவிட்டது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்லவேளை பெரிய விபரீதம் ஏதும் இல்லாமல் தப்பித்தோம்," என்றார்.


 

சூப்பர் ஸ்பீடில் துப்பாக்கி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். காஜல் ஹீரோயின். இந்தப் படத்தைதான் இந்தியில் அக்சய்குமாரை வைத்து ‌‌ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ். உள்ளூரில் போராட்டம், வேலை நிறுத்தம் என சூழல் சூடாகிப் போனதால் பாங்காக்கிற்கு பறந்திருக்கிறது விஜய் உள்ளிட்ட துப்பாக்கி டீம்.



 

யுவனவை தொடர்ந்து செல்வராகவன் படத்தி லிருந்து ஜி.வி.பிரகாஷ் நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து செல்வராகவன் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷும் நீக்கப்பட்டுள்ளார். செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வந்தார். இந்நிலையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியபோது, அதிலிருந்து யுவன் ஷங்கர் ராஜாவை நீக்கினார் செல்வராகவன். இனி சேர்ந்து படம் பண்ணுவதில்லை என இருவரும் முடிவு செய்தனர். இதற்கு, இருவருக்கும் இடையே பணப் பிரச்னை ஏற்பட்டதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். இனி தனது படங்களில் பிரகாஷ்தான் பணியாற்றுவார் என செல்வராகவன் தெரிவித்தார். தொடர்ந்து, 'மயக்கம் என்ன' படத்துக்கும் பிரகாஷ் இசையமைத்தார். இதையடுத்து ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் 'இரண்டாம் உலகம்' படத்தை ஆரம்பித்தார் செல்வராகவன். இதிலும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில் இப்போது திடீரென பிரகாஷ் நீக்கப்பட்டு, ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் விரும்பிய மெட்டுகள் கிடைக்காததால் அவர் இசையமைப்பாளரை மாற்றிவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையை டுவிட்டரில், "ஹாரிஸ் இசையில் கார்த்திக் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது. வைரமுத்து பாடலை எழுதியிருக்கிறார். சூப்பர் மெலடியாக இந்த பாடல் உருவாகியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.


 

சர்வதேச திரைப்பட விழாவில் ‘தெய்வத்திருமகள்’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' பெரிய வரவேற்புடன் மெகா ஹிட்டானது. படத்தில் மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கேரக்டரில் விக்ரம் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் 'தெய்வத்திருமகள்' படம் ஜப்பானில் ஒசாகா என்ற இடத்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறது.


 

"3" படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் அவரது கணவரும் நடிகருமான தனுஷ் நடித்த படம் '3'. இப்படத்துக்காக அவர் பாடிய 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடல் சர்வதேச அளவில் பிரபலமாகி உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இந்நிலையில் '3' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளது.



 

பாவனா படத்துக்கு திடீர் சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியிலிருந்து காப்பி அடித்த படத்தில் நடித்ததாக பாவனா நடித்த படம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய படம் 'நோ என்ட்ரிÕ. சல்மான் கான், அனீல் கபூர், பிபாஷா பாசு, லாரா தத்தா, செலினா ஜெட்லி நடித்த படம். இப்படத்தை மலையாளத்தில் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற பெயரில் காப்பி அடித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ஜெயராம், ஜெயசூர்யா, பாவனா, சம்விருதா, ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். 'நோ என்ட்ரி' கதைப்படி சல்மான், அனீல்கபூர் இருவரும் திருமணம் ஆனவர்கள். பிபாஷா பாசு கால்கேர்ள். அவரை தேடி போகின்றனர். இதனால் இருவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்கிறது படம். இதே பாணியில் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்Õ கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படம் பற்றி மும்பை தயாரிப்பாளருக்கு தகவல் போனது. இதையடுத்து அவர் தன் படத்தை அனுமதி இல்லாமல் காப்பி அடித்ததாக மலையாள தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதுபற்றி மலையாள தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, 'எந்த படத்தையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை. தமிழில் வெளியான 'சார்லி சாப்ளின்' படத்தை பார்த்த பாதிப்பில் இக்கதை உருவானது' என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' படக் குழு, கோவாவில் ஷூட்டிங் நடத்தி வருகிறது.


 

இனி வில்லன் இல்லை: கரிகாலன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கரிகாலன் கூறினார். 'அரவான்' படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கும் கரிகாலன் நிருபர்களிடம் கூறியதாவது: 'சோலையம்மா' படத்தில் வில்லனாக அறிமுகமானேன், 'தாய்மனசு', 'அடிமை சங்கிலி', 'அம்மன் கோவில் வாசலிலே' உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தேன். 'வைரவன்' என்ற படத்தை இயக்கி நடித்தேன். பிறகு நடிப்பை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன். 7 வருட இடைவெளிக்குப் பிறகு 'அரவான்' வாய்ப்பு வந்தது. அதுவும் வில்லன் வாய்ப்புதான் என்றாலும் நடித்தேன். அது நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இனி வில்லான நடிக்க மாட்டேன். எனது எடையை 30 கிலோ குறைத்திருக்கிறேன். இனி நல்ல கேரக்டர்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்.


 

நிஜ கேரக்டரில் நடிப்பது சவால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் படம், 'வனயுத்தம்'. வீரப்பன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் இதில், கிஷோர், விஜயலட்சுமி, அர்ஜுன் உட்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் அர்ஜுன் பேசியதாவது: வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கேரக்டரில் நடிப்பது சவாலானது. காரணம் அவர்கள், அவர்களையே திரையில் பார்க்கும்போது கொஞ்சம் தவறினால் கூட சம்பந்தப்பட்டவர்களின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். போலீஸ் அதிகாரி விஜயகுமார் கேரக்டரில் நடிக்கிறேன். நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், இதில் யதார்த்தமாக நடித்திருக்கிறேன். வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியும் என்பதால் ஆரம்பத்தில் தயங்கினேன். ஆனால் இயக்குனர் ரமேஷின் 12 வருட ஆய்வு, அவருடைய உழைப்பை பார்த்து வியந்து நடித்தேன். வீரப்பனுடன் வாழ்ந்தவர்களும், அவரால் கடத்தப்பட்டவர்களும் என்னுடன் நடித்திருக்கிறார்கள். இது எனக்கு புது அனுபவம். இந்தப் படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.


 

ஐபிஎல் தொடக்க விழாவில் பிரபுதேவா டான்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த வருடம், ஏப்ரல் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் இதன் தொடக்க விழா நடக்க இருக்கிறது. இதில் ரசிகர்கள் முன்னிலையில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் முன் பிரபுதேவா நடனம் ஆடுவது இதுதான் முதல் முறை. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இல்லாமல், ஒய்எம்சிஏ கிரவுண்டில் இந்த தொடக்க விழா நடக்கும் என்று கூறப்படுகிறது. இதில் தமிழ், ஹிந்தி பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் ஆடுகிறார். அவருடன் இந்தி நடிகர் சல்மான் கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் டான்ஸ் ஆடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். ஏப்ரல் 3-ம் தேதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

குடும்பங்களுக்குள் நடக்கும் கிரைம், திரில்லர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கே.எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், 'அகராதி'. பிரதீப், பவன், ஓவியா, மோனிகா, அர்ச்சனா நடிக்கிறார்கள். நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: ராஜேஷ்குமாரின் 'இரவு நேர வானவில்' என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் படம் இது. குடும்பங்களுக்குள் நடக்கும் கிரைம், திரில்லர் கதை. நாவலை கமர்சியல் சினிமாவுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், திரில்லிங், ரொமான்ஸ், ஆக்ஷன் என அத்தனை அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் 'நிலா காயுது நேரம் நல்ல நேரம்...' பாணியில் பாடலாசிரியர் வாலி, மூட் சாங் எழுதியுள்ளார். இந்த பாடலில் சில வரிகளை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் தருகிறோம்; நீக்காவிட்டால் 'ஏ' தருவோம் என்றார்கள். நீக்க மறுத்து 'ஏ' சான்றிதழ் பெற்றிருக்கிறோம். இந்தப் பாடல் பரபரப்பாகப் பேசப்படும்.


 

சினேகா நடிக்கும் ஹரிதாஸ் பாகவதர் பட ரீமேக் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினேகா நடிப்பில் உருவாகும் ஹரிதாஸ் , தியாகராஜ பாகவதர் நடித்த படத்தின் ரீமேக் இல்லை என்றார் இயக்குனர் குமாரவேலன்.
பிருத்விராஜ் நடித்த நினைத்தாலே இனிக்கும், பரத் நடித்த யுவன் யுவதி படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். அடுத்து ஹரிதாஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:தியாகராஜ பாகவதர் நடித்து 3 தீபாவளிகளை கண்டு, தொடர்ந்து ஒரே தியேட்டரில் ஓடிய படம் ஹரிதாஸ். இப்பட தலைப்பை என் படத்துக்கு வைக்க விரும்பினேன். இதற்காக டைட்டில் அனுமதி வாங்க 2 மாதம் சுற்றினோம். தயாரிப்பாளர் சங்கம், இன்டர்நெட் மூலமாக தேடி சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அனுமதி வாங்கினோம். இது அப்பட ரீமேக் இல்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக கொண்ட படம். தந்தையை ஹீரோவாக நினைக்கும் மகன் அவரைப்போலவே உழைத்து வாழ்வில் எப்படி முன்னேறுகிறான் என்பதுதான் கதையின் கரு. தந்தை தாஸ் என்ற வேடத்தில் கிஷோர். மகன் ஹரி வேடத்தில் பிருத்விராஜ். இவர்களின் இரண்டு கேரக்டர் பெயர்களை சேர்த்துத்தான் ஹரிதாஸ் என்று படத்துக்கு தலைப்பிடப்பட்டது. அமுதவள்ளி என்ற முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார். பரோட்டா சூரியுடன் பலர் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்கிவிட்டது. தயாரிப்பு ராமதாஸ், எஸ்.மஞ்சுளா, வேல்முருகன். ஒளிப்பதிவு ரத்னவேல். இசை விஜய் ஆண்டனி.இவ்வாறு இயக்குனர் குமாரவேலன் கூறினார்.


 

காதலுக்காக வன்முறையில் இறங்கும் ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹேமச்சந்திரன், மேக்னா ராஜ், நாசர், சண்முகராஜன் உட்பட பலர் நடிக்கும்   படம், 'நந்தா நந்திதா'. சூப்பர் டீம் சினிமாஸ் சார்பில் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் தயாரிக்கின்றனர். எழுதி இயக்கும் ராம்சிவா நிருபர்களிடம் கூறியதாவது:  கன்னடத்தில் ரிலீசான 'நந்தா நந்திதா' படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்கி, அதே பெயரில் தெலுங்கிலும், தமிழிலும் படத்தை உருவாக்கினோம். கடந்த வாரம் தெலுங்கில் ரிலீசாகி விட்டது. அதில் ஹேமச்சந்திரன், மேக்னா அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். மேக்னாவுக்கு டி.சூர்யா ஜோடி. ஆனால், தமிழில் ஹேமச்சந்திரன், மேக்னா இருவரும் ஜோடி. மேக்னா அண்ணனாக டி.சூர்யா நடிக்கிறார். இது புதுமையான விஷயம்.  ஹேமச்சந்திரன், குடிகார தந்தையால் அம்மாவை இழக்கிறார். அவரது வாழ்க்கையில் மேக்னாராஜ் குறுக்கிடுகிறார். அவரைக் காதலிக்கும் ஹேமச்சந்திரன், பணத்துக்காக, நாசர் வலையில் சிக்குகிறார். காதல் நிறைவேற வன்முறைப் பாதையில் செல்லும் ஹேமச்சந்திரன், காதலில் வெற்றிபெற்றாரா இல்லையா என்பது கதை. 23ம் தேதி ரிலீசாகிறது.


 

வழக்கு எண் 18/9 தாமதம் ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்கும் படம், 'வழக்கு எண் 18/9'. ஸ்ரீ, மிதுன் முரளி, ஊர்மிளா, மனீஷா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. பிரசன்னா இசை. நா.முத்துக்குமார் பாடல்கள். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசியதாவது: 'காதல்' மூலம் ஹிட் கொடுத்தும் 'கல்லூரி' சரியாகப் போகாததால் அடுத்த படம் இயக்குவதில் குழப்பம் இருந்தது. புது இயக்குனர்கள் வேறு வெவ்வேறு களத்தில் படம் கொடுத்து மிரட்டினார்கள். 'காதல்' படத்தை லிங்குசாமிதான் தயாரிக்க வேண்டியது. அது தவறியதால் அவருக்கு ஒரு படம் இயக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்தக் கதையை தேர்வு செய்தேன். இதை உருவாக்குவதில் தடுமாற்றம் இருந்தது. அதை கதையாகச் சொல்ல முடியவில்லை. அதனால் லிங்குசாமியிடம், 'தயவு செய்து கதை கேட்காதீர்கள். நான் எடுத்து கொடுப்பதை பாருங்கள்' என்றேன். இரண்டு வருடம் ஆலோசித்து ஸ்கிரிப்ட் உருவாக்கினேன். படத்தின் தாமதத்துக்கு நான்தான் காரணம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இதை ஸ்டில் கேமராவில் உருவாக்கினோம். அது வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. பட வெளியீட்டுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் பேசப்படுவார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர்கள் சசி, எழில், எஸ்.எஸ். ஸ்டேன்லி, நா.முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.