மணிரத்னம் இயக்கத்தில் கவுதம், துளசி, அர்ஜுன், அரவிந்த்சாமி நடித்து வரும் படம் கடல்.
காதலும் மீனவர் பிரச்சினையும் பின்னிப் பிணைந்த கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஏற்கெனவே வெளியான நெஞ்சுக்குள்ள பாடல் ரசிகர்களைக் கிறங்கடித்துவிட்டது.
இந்த நிலையில் முழுப் பாடல்களையும் விரைவில் வெளியிட உள்ளனர். படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
ரூ 2 கோடிக்கு ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சோனி நிறுவனத்தின் தெற்குப் பகுதி பொறுப்பாளர் அசோக் பர்வானி கூறுகையில், "ரஹ்மானின் அருமையான இசையில் உருவாகியுள்ள கடல் பட பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு அவரது 3வது ஆல்பத்தை வளியிடுகிறோம். அடுத்த ஆண்டு ரஹ்மானின் மேலும் சில ஆல்பங்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளோம்," என்றார்.
Post a Comment