மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதி

|

Manisha Koirala Hospital

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா திடீர் என்று மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் வந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த மனீஷா திருமணத்திற்கு பிறகு அம்மா வேடத்திற்கு வந்துவிட்டார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Manisha Koirala is admitted at the Jaslok hospital in Mumbai on wednesday. It is told that she is doing fine now.

 

Post a Comment