
சென்னை : 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறியதாவது: 'தென்மேற்குப் பருவக்காற்று' ஷூட்டிங் நடக்கும்போதே விஜய் சேதுபதியை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தேன். முதலில் அவரை தேர்வு செய்ய தயங்கினேன். பிறகு கதை சொன்னேன். அதில் சஸ்பென்ஸ் பகுதியையும் சொன்னேன். பிறகு மனம் அமைதியில்லாமல் தவித்தேன். இவர் வேறு யாரிடமாவது இதன் கதையையோ, சஸ்பென்ஸ் பற்றியோ சொல்லிவிட்டால், ரகசியம் வெளிப்பட்டு விடுமே என்று பயந்தேன். நல்லவேளை, விஜய் சேதுபதி யாரிடமும் சொல்லவில்லை. பிறகு நடிகர்களுக்கு அலுவலகத்திலேயே ஒரு மாதம் பயிற்சி நடத்தப்பட்டது.
இதனால், ஷூட்டிங்கில் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது. விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோரை தவிர அனைவரும் புதுமுகங்கள். இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கட்டிப் போடுவார்கள் என்று நம்புகிறேன். படம் நாளை ரிலீஸ் ஆகிறது. நல்ல வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன்.
Post a Comment