காஞ்சனா 2 பாடல் அருவருப்பின் உச்சம்! - இயக்குநர் வேலு பிரபாகரன்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள காஞ்சனா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் மிக ஆபாசமாக உள்ளதாகக் கூறி, கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் வேலு பிரபாகரன்.

இந்தப் பாடல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

Velu Prabhakaran condemned Kanchana 2 song

"பாட்டு கேட்டேன்.. குழி காய்ந்து கிடக்குது வாய்யா... மொட்டை பையன் கெட்ட பையன்...அருவருப்பின் உச்சம்.

பாடலாக எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் எழுதலாம், டான்ஸ் மூவ்மென்டாக உடலுறவு அசைவுகளையும் செய்யலாம். அதை சென்சாரும் விட்டுவிடும்... மக்களும் குடும்பத்தோடு பார்த்து ரசிப்பார்கள். சமூக பொறுப்பு என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தால் எதையாவது செய்து பணம் சேர்க்கலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள கவிஞர் சினேகனும், தன் பங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பாடலை எழுதியிருப்பவர் விவேகா ஆகும். இதைக் குறிப்பிட்டுள்ள சினேகன், "விவேகாவுக்கு இது வழக்கமான ஒன்றுதான்" என்றும் தெரிவித்துள்ளார்.

 

அகலக்கால் வைத்து அகப்பட்டுக்கொண்ட ஆஸ்கார் ரவி.. சொத்துகள் பறிமுதல்!!

'என்ன காரணத்துக்காகவும் தனது புகைப்படம் பத்திரிகைகளில் வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதற்காகவே தனது சொந்தப்பட விழாக்களில் கூட அவர் தலைகாட்டுவதில்லை.

ஆனால் காலத்தின் கோலம் பாருங்கள். இன்று அவரது சில சொத்துக்களை வங்கிகள் ஏலம் போடும் விளம்பரத்தில் அவர் படம் தினசரிகளில் வெளியாகியிருக்கும் அவலம் நிகழ்ந்திருக்கிறது.

Aascar Ravichandiran's properties come to bank auction

ஆரமபத்தில் சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்த ஆஸ்கார் ரவி, அன்னியன், தசாவதாரம் படங்களை 30 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து மெகா பட்ஜெட்டில் தயாரித்தார்.

அடுத்து, ஐ படத்தை 75 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார். அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

அதாவது சுமார் 100 கோடி ரூபாயை ஒரே நேரத்தில் படத்தயாரிப்பில் முதலீடு செய்தார் ஆஸ்கார் ரவி.

இப்படி அகலக்கால் வைத்ததுதான் ஆஸ்கார் ரவிக்கு ஆபத்தாகிவிட்டது.

சில வருடங்களுக்கு முன்புவரை சாதாரண விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிக்கு ஏது இவ்வளவு பணம் என திரையுலகினர் பொறாமையில் பொசுங்கிப் போயினர்.

திமுக ஆட்சி இருந்தபோது... சன் டிவியின் பினாமிதான் ஆஸ்கார் ரவி என்று சொல்லப்பட்டது.

அதிமுக ஆட்சி மாறியதும்...சசிகலாவின் பினாமி என்றனர்.

உண்மையில் ஆஸ்கார் ரவி, ஐடிபிஐ, ஐஓபி போன்ற வங்கிகளில்தான் பல கோடி கடன்களை வாங்கி படங்களைத் தயாரித்திருக்கிறார். குறிப்பாக ஐ படத்துக்காக மட்டுமே சுமார் 80 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருக்கிறார்.

ஐ படத்தின் பேரில் பல கோடி கடன் பெற்ற ஆஸ்கார் ரவி, கடனை அடைக்காமலே சாமர்த்தியமாக படத்தை வெளியிட்டார். இது தொடர்பாக ஐஓபி வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாதினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி.

ஐ படத்தின் வசூல்தான் அமோகம்.. அதுக்கும் மேல என்று சொல்லிக் கொண்டிருந்தாரே ஆஸ்கர் ரவி... அதில் இந்த கடனை கட்ட வேண்டியதுதானே!

ஆனால் ஆஸ்கார் ரவி மிகப்பெரிய கில்லாடி. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையில் பாதிக்குக்கூட தேறாது. திட்டமிட்டே இந்த ஏல ஏற்பாட்டுக்கு வழிவிட்டு வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

 

'காந்தியால் செய்ய முடியாததை கமல் ஹாஸன் செய்ததாக இருக்கட்டுமே!'

உத்தம வில்லனுக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், சில மதவாத கட்சிகள் அந்தப் படத்துக்கு எதிராக தினமும் எதையாவது செய்து கொண்டுதான் உள்ளன.

இந்தப் படத்தை சில இந்து அமைப்புகளும் எதிர்க்கின்றன. இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்க்கின்றன. காரணம் ஒன்றுதான். மதம். படத்தைப் பார்க்காமலே, காதில் விழுந்த ஏதாவது ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு போராட ஆரம்பித்துவிடுகிறார்கள். கடந்த வாரம், கமல் ஹாஸனை கைது செய்ய வேண்டும் என்று கூட ஒருவர் போலீசில் புகார் தந்தார்.

I achieved what Gandhi couldn't, says Kamal

இதுகுறித்த ஒரு கேள்விக்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பதில் சுவாரஸ்யமானது.

அந்தக் கேள்வி: உங்கள் படத்தை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போராடுகின்றனவே?

கமலின் பதில்: கமல் ஹாஸன் படத்தை எதிர்க்க வேண்டும் என்றால் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். காந்தியால் கூட செய்ய முடியாததை, கமல்ஹாஸன் செய்ததாக இருக்கட்டுமே!

-அதான் கமல்!!

 

இன்று மாலை பாபநாசம் ட்ரைலர் வெளியீடு

கமல் ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தம வில்லன் திரைப்படத்துக்குப் பிறகு கமல் நடித்திருக்கும் படம் பாபநாசம்.

Kamal's Pabanasam trailer to release today evening

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்'. இந்தப் படத்தை இயக்கிய அதே இயக்குநர், அதை தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

இதில் கமல்ஹாசனுடன் கௌதமி, சார்லி , கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசைமைத்திருக்கிறார்.

பாபநாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

அதன் முதல் கட்டமாக படத்தின் டிரைலரை இன்று மாலை வெளியிடவிருப்பதாக ஆடியோ உரிமையை கைப்பற்றியிருக்கும் ‘திங்க் மியூசிக்' நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அத்தனைக்கும் ஆசைப்படு... இயக்குநராக மாறிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி.

அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸில் பணியாற்றியவர். அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக மாறினார்.

Producer Suresh Kamatchi turns director

கங்காருவுக்குப் பிறகு, அடுத்து தயாரிக்கும் படத்தை தானே இயக்குகிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார். நாயகியாக கங்காரு படத்தில் நடித்த ப்ரியங்காவே நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார்.

ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்ய, சீனிவாஸ் இசையமைக்கிறார்.

திடீரென இயக்குநராக மாறியது ஏன்? என்று கேட்டதற்கு, "நான் சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். திடீரென ஆகவில்லை. கொஞ்சம் தாமதமாக என் ஆசை நிறைவேறுகிறது.

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

Producer Suresh Kamatchi turns director

இந்தப் படத்தை பாலச்சந்திரன் படைப்பகம் என்ற எனது இன்னொரு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்குகிறேன். அடுத்த வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்," என்றார்.

படத்துக்கு தலைப்பு: அத்தனைக்கும் ஆசைப்படு!

 

சென்சாருக்கு போய் ரத்தம் சிந்தாமல் பத்திரமாக வந்த 'சிவப்பு'

சென்னை: சத்யசிவா இயக்கியுள்ள சிவப்பு படம் சென்சாரில் கத்தரிபடாமல் வெளியே வந்துள்ளது.

கழுகு படம் மூலம் இயக்குனரான சத்யசிவா இலங்கை தமிழரின் வாழ்கையை அடிப்படையாக வைத்து எடுத்துள்ள படம் சிவப்பு. அகராதி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ள நவீன் சந்திரா இந்த படத்தில் ஹீரோவாகவும், ரூபா மஞ்சரி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் (பி) லிட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

Sivappu comes uncut from censor

சிவப்பு படத்தில் ரூபா மஞ்சரி மேக்கப் போடாமல் நடித்துள்ளார். இருப்பினும் அழகாகவே தெரிகிறார். படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் படம் சான்றிதழ் பெற சென்சார் போர்டுக்கு சென்றது.

சென்சார் போர்டு படத்தில் வரும் எந்த காட்சிக்கும் கத்தரி போடாமல் யு சான்றிதழ் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உள்ளம் உள்ளவரை... கோடம்பாக்கத்தில் தொடரும் பேயாட்சி!

கோடம்பாக்கத்தில் தொடர்ந்து பேய்ப் படங்கள் தயாரிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள். காஞ்சனா 2-ன் வெற்றி அவர்களுக்கு பேய் மீது தனி காதலையே உண்டாக்கிவிட்டிருக்கிறது.

அந்த பேய்ப்பட வரிசையில் விரைவில் வரவிருக்கும் படம் உள்ளம் உள்ளவரை.

Ullam Ullavarai is another horror movie in Kollywood

இந்தப் படத்தை இந்துஜா பிலிம்ஸ் சார்பில் நாமக்கல் கே.சண்முகம் தயாரிக்கிறார்.

இப்படத்தை விஷ்ணு ஹாசன் இயக்குகிறார். இவர், ஜெயராம் நடித்த ‘புது நிலவு' படத்தை இயக்கியவர். ஹீரோவாக தெலுங்குப் பட நாயகன் சங்கர் நடிக்கிறார். மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனா ராய் மற்றும் காம்னா சிங் என நான்கு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, மதன் பாப், மீரா கிருஷ்ணன், சித்ரா லெட்சுமணன், பரவை முனியம்மா, நந்தகுமார் ஆகியோர் நடிக்க, கராத்தே சிவவாஞ்சி, நியாமத்கான் மற்றும் தயாரிப்பாளர் நாமக்கல் கே.சண்முகம், அஸ்வின்குமார் ஆகிய நான்கு பேரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

Ullam Ullavarai is another horror movie in Kollywood

பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, சதிஷ் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். அநியாயமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, இன்னொரு பெண்ணின் உடம்புக்குள் புகுந்து கொண்டு தன்னை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 3 பேர்களை பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம், 'உள்ளம் உள்ளவரை'.

சென்னை, பொள்ளாச்சி, ராசிபுரம், பெங்களூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

 

இஸ்லாமிய மதத்துக்கு மாறுகிறாரா நடிகை விஜயலட்சுமி?

நடிகை விஜயலட்சுமி இஸ்லாமிய மதத்துக்கு மாறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, உதவி இயக்குநராக உள்ள பெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இப்போது பெற்றொர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

Vijayalakshmi denies conversion reports

சமீபத்தில், இனிமேல் நடிப்பதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தார் விஜயலட்சுமி. 'நடித்தது போதும், விரைவில் தயாரிப்பாளர் ஆகிறேன். படம் பற்றிய விவரத்தை விரைவில் அறிவிக்கிறேன். அனைவருடைய ஆதரவும் எனக்குத் தேவை' என்று அவர் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டார். இதையடுத்து விஜயலட்சுமியின் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

விஜயலட்சுமி - பெரோஸ் முகமதுவின் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

விஜயலட்சுமி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொள்வதால் விரைவில் மதம் மாறிவிடுவார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து விஜயலட்சுமி ஒரு பேட்டியில், "பெரோஸூம் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பர்களாக உள்ளோம். எங்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டார்கள்.

பெரோஸ், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் மதம் மாறவில்லை. இந்த விஷயத்தில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். நான் நானாக இருப்பேன். அவர் அவராக இருப்பார்" என்றார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்பதிலும் உறுதியாக உள்ளார்.

 

உத்தம வில்லன்... அமோகமான முன்பதிவு!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்' படம் வரும் வெள்ளியன்று வெளியாகிறது.

இந்தப் படத்துக்கான ரிசர்வேஷன் இன்று தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் மூன்று தினங்களுக்கான படத்தின் மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

Uthama Villain gets big response

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளன.

கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, மாளவிகா மேனன், நாசர், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

 

ரஜினி - ஷங்கர் படம்... ஏ ஆர் ரஹ்மான் இசை!

ரஜினியின் புதிய படம் குறித்து பல்வேறு செய்திகள், யூகங்கள், வதந்திகள் உலா வரும் நிலையில், ஷங்கருடன்தான் அடுத்து படம் செய்கிறார் ரஜினி, அதற்கு இசை ஏ ஆர் ரஹ்மான்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ரஜினியின் புதுப் படத்தை இயக்குகிறார்கள் என்று பலரது பெயர்களும் அடிபடுகின்றன.

இப்போதைக்கு ஷங்கர் - ரஜினி கூட்டணி குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது.

AR Rahman to compose for Rajini - Shankar movie

இந்தப் படத்துக்கு இசை யார் என்பது வரை தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதல் அனிருத் இசையமைப்பார் என்றார்கள். அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை என்றார்கள். காரணம், ரஹ்மான் ரொம்பவும் பிஸியாக இருப்பதாலும், லிங்காவில் கொஞ்சம் அவர் இசை எடுபடாமல் போனதாலும், ஹாரிஸ் இசையமைப்பார் என்றார்கள்.

ஆனால் இப்போது, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும், அவரிடம் சமீபத்தில் ஷங்கரும் ரஜினியும் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

ரஜினியை இயக்க ராகவா லாரன்ஸுக்கும் ஆசையிருக்கு!

ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசை எந்த இயக்குநருக்குத்தான் இருக்காது. காஞ்சனா புகழ் ராகவா லாரன்ஸுக்கும் அப்படி ஒரு ஆசை ரொம்ப நாளாக.

அதை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமே தெரிவித்துமிருக்கிறார்.

சமீபத்தில் காஞ்சனா 2 படத்தை பார்த்த ரஜினி லாரன்ஸை பாராடியுள்ளார்.

Now Raghava Lawrence wants to direct Rajini

அப்போதுதான் தனது ஆசையை ரஜினியிடம் கூறியுள்ளார். ரஜினிக்கும் சந்திரமுகி மாதிரி ஒரு காமெடி த்ரில்லர் செய்யும் ஆசை இருப்பதால், மாஸ்டரின் அப்ளிகேஷனை மனதில் வாங்கிக் கொண்டாராம்.

இப்போதைக்கு அவர் கவனம் முழுவதும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில்தான் என்கிறார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினியை இயக்கும் அதிர்ஷ்டம் லாரன்சுக்கு கிடைக்கக் கூடும் என்கிறார்கள்.

 

அவுகளுக்கு கல்யாணமாமே..!?

டிவி செய்திவாசிப்பாளருக்கு கல்யாணம்... வில்லியின் சின்னத்திரை ரிட்டர்ன்... இசை தொகுப்பாளினியின் ஆசை என இன்றைய சின்னத்திரை திரை மறைவில் சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சின்னத்திரை சீரியலை பார்ப்பதை விட இதுபோன்ற கிசுகிசு படிப்பதில்தான் வாசகர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். எனவே சத்தம் போடாம கம்முன்னு படிங்க...

அவகளுக்கு கல்யாணமாமே...

அந்த தலைமுறை டிவியில் துறு துறு செய்திவாசிப்பாளராக இருந்த ப்ரியமானவர் நட்சத்திர தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாண சீரியலில் நடித்து வருகிறார். செய்திவாசிப்பதை விட சீரியல் நடிப்பு சூப்பர் என்று பாராட்டுக்கள் குவியவே நகைக்கடை விளம்பரம் ஒன்றிலும் தலைகாட்டி வருகிறார். விரைவில் அவருக்கு டும் டும் டும் கொட்டப்போகிறார்களாம். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த மாப்பிள்ளை என்பது கூடுதல் தகவல்.

அண்ணாச்சி நீங்களுமா?

சூரிய தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சிகளை நடத்திவரும் அண்ணாச்சிக்கு குழந்தைகள் மத்தியில் தனி பிரியம். குழந்தைகளின் பேச்சுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே. இதுநாள்வரை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இருந்து புதிய மாற்றம் செய்துள்ளது நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு. சிறப்பு விருந்தினராக நடிகரை வரவழைத்து அவர்களுடன் குழந்தைகளை பேச வைக்கின்றனர். குழந்தைகளின் பேச்சுக்கு சிறப்பு விருந்தினரும் கமெண்ட் கொடுக்கிறார். கடந்த வாரம் பெரிய நாட்டாமையின் மகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இது நட்சத்திர டிவி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த குழந்தைகள் நிகழ்ச்சியை உயர்த்த வேண்டும் என்பது தலைமையின் உத்தரவாம்.

புவன நடிகையின் வில்லி ஆதிக்கம்

சின்னத்திரையில் அறிமுகமாகி சீரியலில் வில்லியான புவன நடிகை சினிமாவில் காலூன்றினார். வழக்கு வம்பு என்று சிக்க அரசியல் பக்கம் எட்டிப்பார்த்தார். கொஞ்சகாலம் மீடியா கண்களில் படாமல் இருந்த புவன நடிகை சூரிய தொலைக்காட்சி சீரியல்களில் மீண்டும் வில்லியாக தலைகாட்டத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மறுபடியும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கைதானாம்.

சங்கீத தொகுப்பாளினியின் ஆசை

அந்த இசைச்சேனலின் சங்கீதமான தொகுப்பாளினிக்கு மதுரை பூர்வீகமாம். படித்த உடன் சென்னைக்கு பேக் அப் ஆனவருக்கு ஐடி வேலையோடு அம்மணிக்கு காம்பயர் வேலையும் கிடைத்துள்ளது. சூர்ய தொலைக்காட்சியின் இசைச்சேனலில் தற்போது காம்பயர் வேலை செய்யும் சங்கீத தொகுப்பாளினிக்கு ரியாலிட்டிஷோ, விருது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆசையாம்...

நெகிழ வைத்த தளபதி

நகைக்கடை விளம்பரத்தில் தளபதி நடிகர் தன் கார் டிரைவரின் மகள் ஐ.ஏ.எஸ் பாஸ் செய்ததற்காக நகை வாங்கி கொடுக்கிறார். முதலாளி - தொழிலாளி உறவை பலப்படுத்துவதாக அமைந்திருந்த இந்த விளம்பரம் எடுக்கப்பட்ட விதம், நேர்த்தி ஆகியவை மனதுக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டுகின்றனராம் ரசிகர்கள்.

 

தூக்கு மர பூக்கள்... ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள் கதை படமாகிறது!

ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது.

இந்தப் படத்துக்கு தூக்கு மர பூக்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் - ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

A movie on 20 Tamils Killing in Andhra

முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கின்றனர். திரைக்கதை, வசனத்தை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத, கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.

செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து அப்பாவிகளைக் கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்றார்கள் இயக்குனர்கள்.

சுனில் சேவியர் இசையமைக்க, பாபு ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாக இயக்குநர்கள் தெரிவித்தனர்.

 

'தப்பா செய்தி பரப்பாதீங்க.. அந்தக் காரை நான் வாங்கல!' - அஜீத்

நடிகர் அஜித், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று ஒரு செய்தி பரவியது.

அந்த காரை வடபழனி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக கொண்டுவந்தபோது எடுத்த படங்கள் என வெள்ளை நிற பிஎம்டபிள்யூ ஐ-8 காரின் படங்களும் இணையம் முழுக்க வலம் வந்தன.

'Ajith not purchased BMW I 8 car'

கார் ரேஸில் பிரியம் கொண்டவர் என்பதால், அஜித் இதை வாங்கியிருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில், 'பாத்தீங்களா.. நம்ம தல காரை' என அஜித் ரசிகர்கள் பரவசப்பட்டார்கள்.

ஆனால், "அஜித், பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் என்கிற செய்தி தவறு. தேவையில்லாத செய்திகளைப் பரப்பவேண்டாம்," என்று அஜித் தரப்பிலிருந்தே விளக்கம் வெளிவந்துள்ளது.

 

வரும் ஞாயிறு காலை எட்டரை மணிக்கு நிழல்கள் ரவியைப் பார்க்க மறந்துடாதீங்க!

ஞாயிறன்று வீட்டுக்கு விருந்தினர் வந்தாலே மகிழ்ச்சிதான்.

வேந்தர் டிவியில் திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.00 மணிமுதல் 9.00மணிவரை ஒளிபரப்பாகும் பல்சுவை நிகழ்ச்சி 'புத்தம் புது காலை' இந்த நிகழ்ச்சியில் ஆன்மீகம், பொதுஅறிவு, ராசிபலன் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டு நேயர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

Nizhalgal Ravi on Vendhar TV

இந்த நிகழ்ச்சியின் தனித்தன்மையாக, ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு தங்கள் திரைப்பட அனுபவங்களையும் முக்கிய நிகழ்வுகளைவும் நேயர்களோடு பகிர்ந்து கொள்ளும் சிறப்பு புத்தும் புது காலையாக ஒளிபரப்பாகிறது.

Nizhalgal Ravi on Vendhar TV

அந்த வகையில் வரும் ஞாயிறன்று பிரபல நடிகர் நிழல்கள் ரவி, தன்னுடைய திரை அனுபவங்களை நேயர்களோடு பகிர்ந்துகொள்கிறார். இந்த சிறப்பு புத்தும் புது காலை வரும் ஞாயிறு அன்று காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

நடிக்க வந்த காமெடி டைம் தொகுப்பாளினி

சூர்ய தொலைக்காட்சியில் காமெடி டைம் தொகுத்து வழங்கிய அர்ச்சனை தொகுப்பாளினி திருமணத்திற்கு பின்னர் பிரேக் விட்டார். மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது நட்சத்திர சேனலில் திருமண நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

அவ்வப்போது சினிமா ஆடியோ விழாவையும் தொகுத்து வழங்கி வந்தவர் இப்போது சினிமாவில் நடிக்கப் போகிறாராம். அதற்கான வாய்ப்பு அவர் தொகுத்து வழங்கிய பட இயக்குநர் மூலமே வந்துள்ளதாம். ஹீரோயினியின் அக்காவாக பிரியாணி கடை நடத்தும் அட்ராசிட்டி பெண்ணாக நடிக்கும் அந்த தொகுப்பாளினி ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து நடிப்பை தொடர முடிவு செய்துள்ளாராம்.

அது வேற இதுவேற... பூ வின் கட் அட் ரைட் பேச்சு

பூ நடிகை தேசிய கட்சியில் சேர்ந்தாலும் சேர்ந்தார். அவரை எப்படியாவது தங்கள் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி செய்ய வைத்துவிடவேண்டும் என்று ஆசையோடு அணுகியுள்ளனர் அந்த கட்சியைச் சேர்ந்த இரு சேனல் அதிபர்கள். ஆனால் பாலிடிக்ஸ் வேற... தொழில் வேற என்று கட் அட் ரைட் ஆக கூறி கையெடுத்து கும்பிட்டு விட்டாராம் பூ.

புது தலைவிக்கு வந்த தலைவலி

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நளினமான நாயகிக்கு இப்போது ஏகப்பட்ட சிக்கல்கள். டப்பிங் தொடர்கள் மூலம் ஒரு சிக்கல் என்றால் வரும் புகார்கள் எல்லாமே அதேமாதிரியான புகார்கள் தான் வருகிறதாம்.

முன்பெல்லாம் சம்பள பிரச்சினையை விட அந்தமாதிரி பிரச்சினைகள் அதிகமாக வரவே கமுக்கமாக பேசி முடித்தார்களாம். இப்போது புது தலைவிக்கு இது தலைவலியாக போகவே, இதென்னடா இந்த சின்னத்திரை சங்கத்திற்கு வந்த சோதனை... இந்த தலைவலியை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவியாய் தவிக்கிறாராம் சின்னப்பாப்பா.

நாட்டாமை ஆளை மாத்து

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி சேனல் ரொம்பவே தடுமாறுதாம். அதனால அதிக அளவில் ஆண்களுக்கும் இடம் கொடுத்து கான்செப்டை மாத்த முடிவு செய்துள்ளதாம். இனியாவது 7ஆம் நம்பர் 1ஆம் நம்பருக்கு வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர்.

 

தள்ளிப் போனது பாகுபலி... ஜூலையில்தான் தரிசனம் கிடைக்கும்!

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தெலுங்குப் படமான பாகுபலி வெளியாவது இரண்டு மாதங்கள் தள்ளிப் போயின.

ராஜமவுலி இயக்கும், சரித்திரப் படமான இதில் நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர் மற்றும் சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்க, படத்தின் எடிட்டிங்கை கோட்டகிரி வெங்கடேஷ்வரராவ் கவனிக்கிறார்.

Bahubali release postponed to July

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இதனைத் தயாரித்து வருகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாகுபலி படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.

படம் மே 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விட்டது. படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "பாகுபலி படத்தின் முதல் பாகத்தை மே 15ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தோம். திட்டமிட்டபடி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளை முடிக்க முடியவில்லை. அதனால் பாகுபலி வெளியீட்டை ஜுலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம். படத்தின் டிரைலரை மே 31ம் தேதி வெளியிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். பாகுபலி படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது," என்று கூறியுள்ளார்.

 

ரஜினி என் இன்ஸ்பிரேஷன், தலைவர், கடவுள் - சிவகார்த்திகேயன் உருக்கம்

ரஜினி என் இன்ஸ்பிரேஷன், தலைவர், கடவுள்.. அவர் பெயர் என் படத் தலைப்பில் அமைந்தது என் வாழ்நாள் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சூரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Sivakarthikeyan thanked Rajini

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் மே மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ரஜினி முருகன் என்ற தலைப்பில் படம் அமைந்தது, சிவகார்த்திகேயனை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, "என்னுடைய கடவுள், என்னுடைய இன்ஸ்பிரேஷன், என்னுடைய தலைவர் ரஜினி அவர்களின் பெயரில் என்னுடைய படம் அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருந்தன்மையுடன் இந்த தலைப்பை அனுமதித்த தலைவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

 

"நம்பருக்கு"க் கல்யாணம்.. இருந்தும் படங்கள் குவிவதால் பிற நடிகைகள் “திகுதிகு”

சென்னை: கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னரும் கூட மூணு சா நடிகைக்கு படங்கள் கமிட்டாகி வருகின்ற காரணத்தினால் மற்ற நடிகைகள் கடுப்ஸ் ஆப் இண்டியாவாக உள்ளனராம்.

மேரேஜ் எங்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது. இனி அவ்வளவுதான் என்று நினைக்கப்பட்டு வந்தார் அந்த நம்பர் நடிகை. இதனால் மற்ற நடிகைகள் சற்று நிம்மதியுடன் காணப்பட்டனர்.

இனி மூணு நடிகைக்குப் போகும் வாய்ப்புகள் எல்லாம் தங்கள் பக்கம் திரும்பி வரும், நாமும் சந்தோஷமாக இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனாலும், மூணு சா நடிகைக்கு தொடர்ந்து படங்கள் கமிட்டாவதால் கடுப்பாகியுள்ளனராம் சக ஹீரோயின்கள். குறிப்பாக வேர்ல்ட் ஹீரோவுடன் மீண்டும் இவர் இணைவது எரிச்சலை அதிகப்படுத்தியுள்ளதாம்.

ஆனால் தற்போது மூணு சா நடிகையின் திருமணமே பெரும் கேள்விக்குறியாகியுள்ளதால் நடிகைகள் மத்தியில் பெரும் குழப்பமாகியுள்ளதாம். மறுபடியும் முதல்ல இருந்தா என்ற டென்ஷனுக்கு அவர்கள் போய் விட்டனராம்.

 

வெளியானது உத்தம வில்லன் 3 வது ட்ரைலர்!

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் 3வது ட்ரைலர் நேற்று வெளியானது.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘உத்தம வில்லன்'. இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

'உத்தம வில்லன்' படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படம் சென்சார் ஆனதைத் தொடர்ந்து மே 1ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உத்தமவில்லன் படத்தின் 3-வது டிரைலர் வெளியாகி உள்ளது. 1.11 நிமிடம் ஓடும் இந்த ட்ரைலர் மறைந்த பாலச்சந்தருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

காஞ்சனா-2 விளம்பரத்துக்காக புதிய பாடலைப் படமாக்கும் லாரன்ஸ்

வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தின் விளம்பரத்துக்காக சில்லாட்ட பில்லாட்ட என்ற பாடலை புதிதாக படமாக்கவிருக்கிறார்கள்,

ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி வெளிவந்த ‘காஞ்சனா 2-' படம் கடந்த வாரம் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் பேய்ப் படமாக எடுத்திருந்தார்.

கோடையில் குடும்பத்துடன் போய் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள்.

New promo song for Kanchana 2

படத்தின் பாடல்கள் பெரிதாக பேசப்படும் அளவுக்கு இல்லை என்றாலும், அவற்றைப் பார்க்கும்படி படமாக்கியிருந்தார் லாரன்ஸ்.

இந்தப் படத்துக்கு ரசிகர்களை மேலும் ஈர்ப்பதற்காக ஒரு விளம்பர பாடலை படமாக்கப் போகிறார் லாரன்ஸ். படத்தில் இடம்பெறும் சில்லாட்ட பில்லாட்ட என்ற பாடலையே அதற்கு பயன்படுத்தப் போகிறாராம். இதில் நித்யா மேனன், டாப்சியுடன் லாரன்ஸ் ஆட்டம் போடப் போகிறார். மூவரும் பங்கு பெரும் பாடல் காட்சி படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

நகைச்சுவைையை தொடர்ந்து கவுரவிக்கும் சத்யபாமா பல்கலைக் கழகம்

சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக்குக்கு சத்யபாமா பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக நகைச்சுவைக் கலைஞர்களை கவிரவித்துள்ளது இந்த பல்கலைக் கழகம்.

விவேக்குக்கு முன் நடிகை மனோரமாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது சத்யபாமா பல்கலை.

Vivek gets honorary Doctorate

திரைப்படங்களில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களுடன் காமெடி செய்து வருபவர் விவேக். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இவரது நகைச்சுவைக்கு பெரும் வரவேற்பு உண்டு.

கடவுள் பக்தி உள்ளவர் என்றாலும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து திரையில் பிரச்சாரமே செய்து வருபவர் விவேக் என்றால் மிகையல்ல. சாமி, திருநெல்வேலி, காதல் சடுகுடு, தூள் போன்ற படங்களில் இவரது நகைச்சுவை அத்தனை சிறப்பாக இருக்கும்.

அதேபோல, உத்தம புத்திரன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் விவேக்கின் நகைச்சுவை வயிறு குலுங்க வைத்தவை.

தமிழ் திரைப்படத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்டவர். தற்போது தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டத்தை கையிலெடுத்து முன்னின்று நடத்தி வருகிறார்.

சுமார் 25 ஆண்டுக்ளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நகைச்சுவையைத் தந்து வரும் கலைஞனான விவேக்கைப் பாராட்டி சத்யபாமா பல்கலைக்கழகம் ‘டாக்டர்' பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

ஏற்கெனவே, இயக்குநர் கே பாலச்சந்தர், நடிகர் கமல் ஹாஸன் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது சத்யபாமா பல்கலைக்கழகம்.

நகைச்சுவை நடிகர்களுக்கு வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் இதுபோன்ற கவுரவ டாக்டர் பட்டங்கள் அளிக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

 

உத்தம வில்லனை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது ஸ்டுடியோ கிரீன்!

உத்தம வில்லன் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

சமீப காலமாக ஸ்டுடியோ கிரீனுக்கு சுக்கிர தசைதான்... அந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கொம்பன் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து, இந்த நிறுவனம் பெற்ற படம் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி. இந்தப் படமும் நன்றாகவே போனது.

Studio Green to release Uthama Villain in Tamil Nadu

இதையெல்லாம் பார்த்துதானோ என்னமோ, இப்போது உத்தம வில்லனை தமிழகத்தில் வெளியிடும் பொறுப்பை ஸ்டுடியோ கிரீனுக்கு தந்துள்ளது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.

உத்தம வில்லனின் உலகளாவிய உரிமை ஈராஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது.

 

உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது - விஷ்வ இந்து பரிஷத் மனு தள்ளுபடி!

சென்னை: கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்தது.

விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருப்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' என்ற திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

HC dismisses Petition against Uthama Villain

அதில், ‘என் உதிரத்தின் விதை' என்று தொடங்கும் பாடலில், ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்' என்ற வரி வருகிறது. இந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.

இந்து மதத்தில் பசு, மீன், காக்கை, அணில், குரங்கு, மரம் என்று அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை செலுத்தி, அவற்றை வழிபடுவது வழக்கம். இந்து மத கடவுள், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளனர். இவற்றை எல்லாம் அவமதிக்கும் விதத்தில், இந்த பாடல்கள் உள்ளன.

எனவே, இந்த என் உதிரத்தின் விதை என்று தொடங்கும் பாடலில், வெக்கங்கெட்டு என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என்று திரைபட தணிக்கை வாரியத்தின் தலைவர், தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 6-ந் தேதி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில், வருகிற மே 1-ந் தேதி 'உத்தமவில்லன்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 'உத்தமவில்லன்' படத்தை செய்ய முடியாது என்று உத்தரவிட்டு, தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.

 

ரஜினி - ஷங்கர் புதுப்படம்.. மே 15-ல் அறிவிப்பு?

ரஜினி - ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. விசாரித்த வரையில் அத்தனை பேரும் இதை உறுதியாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் ரஜினி தரப்பிலிருந்து சொல்லும் வரை எதுவும் நமக்கு உறுதியற்ற தகவல்தானே...

இருந்தாலும், கோடம்பாக்கத்தில் உலாவரும் செய்திகளின் தொகுப்பு இது.

Rajini - Shankar movie to announce on May 15?

படத்துக்கு பட்ஜெட் ரூ 250 கோடி என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் அதே அய்ங்கரன்.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் நேரடிப் படமாகவே தயாரித்து பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு முன் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படம் எந்திரன் 2-ஆ வேறு படமா? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.

காரணம் எந்திரன் 2 என்றால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும். அதற்குள் முடிக்க வேண்டும் என்றால் வேறு கதைதான் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் நிச்சயம் கமல் ஹாஸன் இல்லை. ரஜினிக்கு இரட்டை வேடம் என்றும், அவருக்கு இணையான வேடத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். வெளிநாடு சென்றிருக்கும் விக்ரம் திரும்பக் காத்திருக்கிறாராம் ஷங்கர்.

இப்போது ரஜினி தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும், வரும் மே 15-ம் தேதி வாக்கில் பட அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

 

சூர்யா - வெங்கட் பிரபுவின் மாஸ்... முதல் டீசர் வெளியானது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் மாஸ் திரைபடத்தின் முதல் டீசர் நேற்று இரவு வெளியிடடபட்டது.

இந்த டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. இதில் சூர்யா பல்வேறு தோற்றங்களில் வந்து அசத்துகிறார்.

Surya's Mass Teaser released

மாஸ் படம் திகில் திரில்லர் பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்ட படம் என்பதை தெளிவாக உணர்த்துகிறது இந்த முன்னோட்டக் காட்சி. சூர்யாவுக்கான வசனங்கள் மிகவும் பவர்புல்லாக உள்ளன.

அதன் பின்னணியில் விசுவல் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளும் அபாரம்.

Surya's Mass Teaser released

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து எடுத்த படமான மங்காத்தாவில் பயன்படுத்திய 'It's my f***kng game' என்ற வசனத்தை இதிலும் பயன்படுத்தி உள்ளார்.

இந்த முன்னோட்டக் காட்சியில் பிரேம்ஜி அமரன், சந்தானம், நயன்தாரா, பிரனிதா ஆகியோரும் தோன்றுகின்றனர்.

 

இது சின்னத்திரை திரைமறைவுகள்… கம்முன்னு படிங்க

சின்னத்திரையில் தினந்தோறும் திருவிழாதான் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என ஏதாவது ஒன்றை ஒளிபரப்பிப்கொண்டுதான் இருப்பார்கள். எதுவுமே இல்லை என்றாலும் போட்ட நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்வார்கள்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குப் போனவர்கள் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புவதும். பெரியதிரை நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்தவார கிசுகிசு இருவரைப் பற்றியும் உள்ளது சும்மா கம்முன்னு படிங்க சரியா.

அடுத்த குடும்பத் தொடர்

இலை தொலைக்காட்சியில் செல்வம் இயக்குநரின் அடுத்த குடும்பத் தொடர் ஆரம்பமாகிவிட்டது. இதுவும் குடும்பத் தொடர்தான். சூரிய தொலைக்காட்சியில் சீரியல் பயணத்தை ஆரம்பித்து இலை தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பயணித்து வரும் செல்வம் இயக்குநருக்கு இன்னமும் சரியாக சினிமா பாதை செட் ஆகவில்லை என்கின்றனர்.

திருட்டுமுழி இயக்குநரின் சீரியல் ஹீரோ அவதாராம்

யுக தொலைக்காட்சியில் பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்திய திருட்டுமுழி இயக்குநர் கம் நடிகர் தற்போது சீரியலில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். காமெடியும் தங்கைகள் சென்டிமென்டும் கலந்த இந்த சீரியல் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

சின்னத்திரைக்கு முழுக்கு போடும் தொகுப்பாளினி

மலையாள தேசத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்த அவர் தமிழில் சூரிய டிவி தொகுப்பாளரை காதல் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். கொஞ்ச நாட்களிலேயே மறுபடியும் தொலைக்காட்சிக்கு வந்தார். ஆனால், தொலைக்காட்சி வாய்ப்புகளைவிட சினிமா வாய்ப்பு அதிகமாக வரவே பெரிய திரைபக்கம் போனார். கணவனும், மனைவியும் இணைந்து தேடியும் சின்னச் சின்ன வாய்ப்புகள்தான் கிடைத்தன. இதனால் மீண்டும் டிவி பக்கம் ஒதுங்கலாமா என்று யோசிக்கும் போது தற்போது தொகுப்பாளினி நாயகியாக நடித்த படத்திற்கு பாராட்டு கிடைத்துள்ளது. அதனால், இனி சின்னத்திரை வேண்டாம், பெரிய திரையே போதும் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால் தொகுப்பாளரான கணவர்தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறாராம்.

கடைசியில இவரும் வந்துட்டாரா

தீப்பிடிக்க தீப்பிடிக்க நடனமாடிய அந்த நாயகி தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் சொந்த மொழியான பஞ்சாபி படங்களிலும் நடித்தார். அங்கும் வாய்ப்பு குறையவே இந்திக்குப் போன அவர் பாலிவுட் சீரியல்களில் நடித்தார். அதுவும் அக்கா கதாபாத்திரம்தான் கிடைத்தது. 5 ஆண்டுகள் கழித்து இந்த பாலிவுட் தொடர்கள் டப்பிங் செய்யப்பட்டு மாம்பழ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. விரைவில் நேரடி தமிழ் சீரியலில் இந்த தீ நாயகி தலைகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிலநடுக்கம் ஏற்பட்டபோது நேபாளத்தில் சிக்கித் தவித்த நடிகை பூஜா

காத்மாண்டு: நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா நேபாளத்தில் இருந்துள்ளார்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், பழமையான கட்டிடங்கள், சரித்திர பெருமைவாய்ந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்திற்கு இதுவரை 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தான் நேபாளத்தில் இருந்ததாக பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Pooja Mishra in Nepal as the earthquake happens!

இது குறித்து அவர் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

நிலநடுக்கத்தால் நேபாளமே பீதியில் உள்ளது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து மக்கள் மீது விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

நிலநடுக்கத்தையடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களை அறைகளை விட்டு காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். ஹோட்டல் கட்டிடம் இடிந்துவிடுமோ என்ற பயத்தில் அவ்வாறு தெரிவித்துள்ளனர். மக்கள் தெருக்களிலும், புல்வெளியிலும் தூங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி பலியான தெலுங்கு நடிகர் கே. விஜய்!

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகர் கே.விஜய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் கே.விஜய் (25). இவர் தற்போது எட்டகாரம் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

elugu actor K. Vijay dies in Nepal earthquake

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எட்டகாரம் படக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். ஆனால், படத்தின் நடன இயக்கத்தையும் ஏற்றுக் கொண்ட விஜய், அதற்கான ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார். எனவே, ரிகர்சலை முடித்து விட்டு தனிக்காரில் சென்றுள்ளார் விஜய்.

அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவரது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக பலியானார். மேலும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கே.விஜய் பலியானதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். உடனடியாக விஜயின் உடலை ஆந்திரா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் படி அம்மாநில அரசுக்கு தெலுங்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் கிஷன் ஹைதராபாத்தில் கூறுகையில், ‘விஜய் மரணமடைந்திருக்கும் தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது அவர்களின் கார் கவிழ்ந்து இறந்துள்ளார் விஜய். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். உடன் வந்த 3 பேர் காயமடைந்தனர்' என்றார்.

உயிரிழந்த விஜய் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பபட்லாவைச் சேர்ந்தவர்.

 

மே 22ஆம் தேதி வெளியாகிறது 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்'

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' படம் வரும் மே 22-ம் தேதி வெளியாகிறது.

ஜே சதீஷ்குமார், லியோ விஷன்ஸ் மற்றும் 7சி என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்'.

அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார்.

Naalu  Polisum Nalla Irundha Oorum to release on May 22nd

"நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு சாதாரண போலீஸ் கதையல்ல, ஒரு பராக்கிரமம் பொருந்திய போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறித்தனத்தை தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை. அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதை கதை விவரிக்கிறது.

அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' மே 22ஆம்தேதி வெளியாகும்", என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

லிங்குசாமி தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதிய படம்

அஞ்சான் படத்துக்குப் பிறகு லிங்குசாமியும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள். இந்த முறை லிங்குசாமி படத்தை தயாரிக்கிறார். இயக்கப் போகிறவர் ஏற்கெனவே நாம் கூறியிருந்த சதுரங்க வேட்டை வினோத்.

லிங்குசாமிக்கும் சரி, சூர்யாவுக்கும் சரி, மறக்க முடியாத படமாக அமைந்தது அஞ்சான் படம். இந்தப் படத்தை விமர்சனம் என்ற பெயரில் கண்டபடி எழுதி நாசப்படுத்தினர் சமூக வலைத் தளங்களில். படத்தை இயக்கிய லிங்குசாமிக்கும் இதில் பெரிய மனவருத்தம்.

Surya joins with Lingusamy again

ஆனாலும் அதிலிருந்து மீண்டு இப்போது லிங்குசாமி இரண்டு புதிய படங்களை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார். சூர்யா இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் லிங்குசாமியுடன் இணைகிறார் சூர்யா. இந்த முறை படத்தை லிங்குசாமி தயாரிக்க, இயக்கும் பொறுப்பை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். இதனை இன்று உறுதிப்படுத்தியுள்ளனர் லிங்குசாமியும் சூர்யாவும்.

 

செம்மரக் கடத்தலில் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பிவிட்டனர் - நடிகர் சரவணன்

திருவாரூர்: செம்மர கடத்தலில் என்னை பற்றி தவறான தகவலை பரப்பி விட்டனர் என்று வலங்கைமானில் நடிகர் சரவணன் கூறினார்.

சினிமா நடிகரும், அ.தி.மு.க. பேச்சாளருமான சரவணன் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடைகட்டி மகாமாரியம்மன் கோவிலுக்கு தனது மனைவி சூர்யாஸ்திரியுடன் வந்து சாமி கும்பிட்டார்.

actor saravanan speaks about red sandalwood contorversy

பின்னர் குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக வலங்கைமானில் நடிகர் சரவணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில்,"தற்போது முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வருகிறேன். பலதரப்பு ஆதரவுடன் இருக்கும் எனக்கு செம்மர கடத்தலில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது பெயரை கொண்ட வேறொரு நடிகருக்கு தொடர்பு இருந்ததால் என்னை பற்றி தவறான தகவலை பரப்பி விட்டனர்.

அ.தி.மு.க.வில் தலைமை கழக பேச்சாளராகவும், பொறுப்பு மிக்க கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். சமுதாய அக்கறை உள்ளவராகவும் இருந்து வருகிறேன். நான் செம்மர கடத்தலில் ஈடுபட எந்த சாத்திய கூறுகளும் இல்லை. தற்போது மாணவர்கள், இளைஞர்களிடையே ஒழுக்கம் இல்லை

இளைஞர்கள் சினிமா நடிகர்களை ரோல் மாடலாக நினைப்பது ஆபத்தானது. எந்த ஒரு நடிகரையும் இளைஞர்கள் பின்பற்ற கூடாது. சினிமாக்களை பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே நினைக்க வேண்டும். சினிமாக்களில் இடம்பெறும் நல்ல தகவல்களை வாழ்க்கையில் பின்பற்றலாம்" என்று தெரிவித்தார்.

 

இயக்குனர் சமுத்திரக்கனிக்கு ஹேப்பி பர்த்டே... ஆளுயர மாலை போட்டு கேக் வெட்டிய ”அச்சமின்றி” படக்குழு!

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தன்னுடைய பிறந்தநாளை "அச்சமின்றி" படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

"சுப்ரமணியபுரம்", "நாடோடிகள்", "நிமிர்ந்து நில்" ஆகிய தரமான படங்களை தந்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி.

இயக்குனராக பளிச்சிட்டாலும், தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Director Samuthirakani's birthday today

குணச்சித்திர நடிகர்:

"சாட்டை", "வேலையில்லா பட்டதாரி" ஆகிய படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

கையில் அரை டஜன் படங்கள்:

தற்போது இவரது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. மேலும், படங்களை இயக்கும் பணியையும் விடாமல் தொடர்ந்து வருகிறார்.

Director Samuthirakani's birthday today

இன்று பிறந்தநாள்:

இந்நிலையில், சமுத்திரகனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் "அச்சமின்றி" படக்குழுவுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

கேக் வெட்டிக் கொண்டாட்டம்:

"அச்சமின்றி" படத்தில் விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டி இயக்கிவருகிறார். இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆள் உயர மாலை அணிவித்த படக்குழு:

சமுத்திரகனியின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

 

கணவர், குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட வீணா மாலிக்!

மும்பை: பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் சர்ச்சை நாயகி வீணா மாலிக் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் போயுள்ளார்.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் வீணா மாலிக். இந்தியில் புகுந்து அதி பயங்கர கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். திடீரென அவர் நடிப்பை விட்டு விட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பினார். அசாத் பசீர் கான் என்பவரை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார்.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

இந்தத் தம்பதிக்கு தற்போது அப்ராம் கான் என்ற ஏழு மாதக் குழந்தை உள்ளது. தங்களது குழந்தையுடன் வீணாவும், அவரது கணவரும் உம்ரா புனித யாத்திரை போயுள்ளனர்.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

ஒவ்வொரு முஸ்லீமின் கனவே உம்ரா அல்லது ஹஜ் யாத்திரையை வாழ்நாளில் ஒருமுறையாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதுதான். இது எல்லோருக்கும் கை கூடி வந்து விடாது என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்தோர் புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவார்கள்.

இந்த நிலையில் 2வது முறையாக சமீபத்தில் உம்ரா கடமையை முடித்துள்ளார் வீணா. இதுகுறித்து அவர் கூறுகையில், புனித கப்பாவில் வழிபட்டதை பெருமையாக கருதுகிறேன். மனசெல்லாம் நிறைந்துள்ளது. அல்லாவிடம், எனது குடும்பத்தையும், என்னையும், எனது சமூகத்தையும் காக்குமாறு வேண்டிக் கொண்டேன். இந்தியா, பாகிஸதானில் வாழும் அனைத்து மக்களும் அமைதி, நிம்மதி, வளர்ச்சியுடன் திகழ வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன் என்றார் வீணா.

Actress Veena Malik Khan & Asad Bashir Khan perform Umrah with their adorable son Abram Khan

சவூதியில் ஒரு வாரம் தங்கும் வீணா மாலிக் குடும்பத்தினர் மதீனா பார்க்குக்குக்கும் செல்கஇறார்கள். அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்ற பிந்னர் பாகிஸதான் திரும்புவார்களாம்.

 

ஜூனியர் கேப்டனுக்கு கதை ரெடி பண்ணும் 2 இயக்குனர்கள்

சென்னை: தனது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் தோல்வி அடைந்த கவலையில் உள்ளாராம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்.

சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த அவர் திடீர் என்று ஒரு நாள் அரசியல் கட்சியை துவங்கினார். நல்ல நடிகர், நல்ல மனிதர் நிச்சயம் நமக்கு அவர் நல்லது செய்வார் என மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். இந்நிலையில் நடிகர் தனது இரண்டாவது மகனை தனது வழியில் ஹீரோவாக்கினார்.

2 directors write story for junior captain

தானே தயாரித்து ஒரு படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை அவரது கட்சியினர் தான் ஆஹா, ஓஹா என்று கொண்டாடினார்களே தவிர ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனை பேரிடம் கதை கேட்டு இதை தேர்வு செய்தும் வீணாகிவிட்டதே என்று அவர் கவலையில் உள்ளாராம்.

மேலும் உட்கார்ந்து, உட்கார்ந்து கதை கேட்டீங்களே இது தான் நீங்க கதை கேட்ட அழகா என்று மனைவி மீதும், மைத்துனர் மீதும் அவருக்கு கோபமாம். இந்நிலையில் அவர் தனது மகனை வேறு இயக்குனர்களின் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்கிறாராம்.

இதற்காக அவர் கபடி கபடி இயக்குனர் மற்றும் தேசிய விருது வாங்கிய படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஆகியோரிடம் கதை தயார் செய்யுமாறு கூறியுள்ளார். மகனே, நீ கவலைப்படாதே உன்னை நான் நல்ல படத்தில் நடிக்க வைப்பேன் என்று ஆறுதல் கூறி வருகிறாராம்.

 

கங்காரு பட வாய்ப்பு என் பாக்கியம் - இசையமைப்பாளர் சீனிவாஸ்

பிரபல​ ​பாடகராக பல பாடல்கள் பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம்தான் 'கங்காரு'.

அவர் தன் முதல் பட அனுபவங்களை இங்கே கூறுகிறார்...

Singer cum music director Srinivas speaks about Kangaroo

"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் உண்டு. ஆர்வமுண்டு. நம்பிக்கை உண்டு. ஆனால் இசையமைப்பதைத் தேடிப் பயணப் படவில்லை. காரணம் பாடகராகவே நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அப்படியும் வஸந்த் சார் இயக்கத்தில் 'ஏய்நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தில்​ ​ஒரு பாடலுக்கு இசையமைத்தேன்.

'இனி நானும் நானில்லை' என்கிற அந்தப்​ ​படலும் ஹிட்தான். மீண்டும் இசை அமைக்க நேரமில்லை. இந்நிலையில் நண்பர் மூலம் சாமி வந்தார். கதை கேட்டேன். ரொம்பவும் நேர்மையாக இருந்தது. பாடல் உருவானது பாடல் பிடித்து தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி சம்மதித்தது அவரது ரசனையின் மதிப்பைக் காட்டியது.

Singer cum music director Srinivas speaks about Kangaroo

வைரமுத்து சாரின் வரிகளைப் பாடியிருக்கிறேன். அவர் வரிகளுக்கு இசையமைப்பேனா என்று கனவு கூட கண்டதில்லை. அப்படி நடந்தது என்பாக்கியம். அவர் பாடல்கள் படத்துக்குப் பெரியபலம். படத்தில் 5பாடல்கள் . அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து​ ​2பாடல்களும் மெட்டுக்கு எழுதி 3பாடல்களும் என்று இசையமைப்பில் இருவேறு அனுபவங்களும் கிடைத்தன. பாடல்கள் பெரிய வெற்றி. ஐ ட்யூன்களில் நம்பர் ஒன்.

காதல், பாசம், தத்துவம் என எல்லாவகை பாடல்களும் உள்ளன. பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து படமும்​ ​வெற்றி பெற்றிருப்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்..,'' என்கிறார் ஸ்ரீநிவாஸ்.

 

க்யூப், யுஎப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக உண்ணாவிரதம்!- தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் உரிமைகளை முடக்கி வரும் 'க்யூப்' மற்றும் 'யூஎஃப்ஓ' நிறுவனங்களின் செயல்பாடுகளை தமிழக அரசின கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ்த் திரையுலகம் சார்பில் மே மாத முதல் வாரத்தில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

Producers announces fight against Qube, UFO

"க்யூப்', "யூஎஃப்ஓ' நிறுவனங்கள் அரசுக்கு சேவை வரி செலுத்துவதாகக் கூறி, அதை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கின்றனர். ஆனால், அந்தத் தொகை அரசுக்கு செலுத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை. மேலும் திரைப்படங்களை வெளியிடும் போது தயாரிப்பாளர்களின் அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய் "க்யூப்' நிறுவனங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு சிறிய தொகை கூட கிடைப்பதில்லை. திரைப்படங்களை வெளியிடும்போது பெரிய தொகையை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கின்றனர்.

தங்களது நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டுமென்ற தனி நபர் ஆதிக்கத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் உரிமைகளை அவர்கள் முடக்கி வருகின்றனர்.

இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அரசின் ஒப்புதலோடு தமிழ்த் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம்," என்று தாணு குறிப்பிட்டுள்ளார்.

 

விரைவில் ‘என்னை அறிந்தால்’ தெலுங்குப் பதிப்பு

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப் பதிப்பு விரைவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்'.

Yennai Arinthaal Telugu dubbed version soon

இந்த ஆண்டில் வெளியான வெற்றிப் படங்களில் முக்கியமானது என்னை அறிந்தால்.

இந்தப் படம் நேரடி தமிழ்ப் படமாகவே ஆந்திராவில் வெளியானது. ஆனால் இப்போது படத்தை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

த்ரிஷா, அனுஷ்கா இருவருக்கும் தெலுங்கில் நல்ல பெயர். தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டப் செய்யப்பட்டு வெளியாகும் தமிழ்ப் படங்களைப் பார்க்க ஆந்திர ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே என்னை அறிந்தால் டப்பிங் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விரைவில் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அநேகமாக மே 2வது வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.

 

கங்காரு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: அர்ஜூன், ப்ரியங்கா, தம்பி ராமையா, வர்ஷா, ஆர் சுந்தர்ராஜன், கலாபவன் மணி, சுரேஷ் காமாட்சி, வெற்றிக் குமரன்

ஒளிப்பதிவு: ராஜரத்னம்

இசை: ஸ்ரீனிவாஸ்

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இயக்கம்: சாமி

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதைகளைப் படமாக்கி வந்த சாமி, தனக்குத் தானே வேப்பிலை அடித்துக் கொண்டார் போலிருக்கிறது. அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசத்தில் எந்த வில்லங்கமும் பண்ணாமல், ஒரு கங்காருக்கும் அதன் குட்டிக்குமான தாய்மையுடன் ஒப்பிட்டிருக்கிறார் இந்த கங்காருவில்.

Kangaroo Review

கைக்குழந்தயாக தங்கையை தூக்கிக் கொண்டு அந்த கொடைக்கானல் மலை கிராமத்துக்கு வருகிறான் ஒரு சிறுவன். அங்குள்ள கடைக்காரர் தம்பி ராமையா ஆதரவில் வளர்ந்து, தங்கையை கண் இமைக்குள் வைத்துக் காக்கிறான். முரட்டுத்தனமும் கொஞ்சம் மனநிலை பிறழ்ந்த தோற்றமுமாகத் தெரியும் அவன் பிழைப்புக்கு டீக்கடை. மீதி நேரம் பூராவும் தங்கைக்காகவே செலவழிக்கிறான். அதனாலேயே ஊர் அவனை கங்காரு என்கிறது. அவனை உருகி உருகிக் காதலிக்கிறார் வர்ஷா. ஆனாலும் கங்காரு கண்டு கொள்ளாமல் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பதில் கவனமாக இருக்கிறான்.

அதற்கு வேலை வைக்காமல் தங்கையே ஒருவனைக் காதலிக்க, அது தெரிந்து அவனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். ஆனால் திருமணத்துக்கு முன்பு அந்தப் பையன் மலையிலிருந்து விழுந்து இறந்துவிட, அடுத்த சில தினங்களில் வேறொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவனும் கரண்ட் கம்பியில் சிக்கி உயிரை விடுகிறான்.

தன்னால் இரு உயிர்கள் பலியாகிவிட்டதே என்ற வருத்தத்திலிருக்கும் தங்கையை, ஆர் சுந்தரராஜன் அட்வைஸ்படி வேறு ஊருக்கு கூட்டிக் கொண்டு போகிறான் கங்காரு.

Kangaroo Review

அங்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமண நேரத்தில் இந்த புதுமாப்பிள்ளைக்கும் விபத்து.. அப்போதுதான் தெரிகிறது, அதுவரை நடந்ததெல்லாம் விபத்து அல்ல, கொலை என்பது. இதை துப்புத் துலக்க போலீஸ் களமிறங்க, முன்கணிக்க முடியாத அளவு திருப்பங்களுடன் க்ளைமாக்ஸ்.

வசனங்களின்றி, இசையுடன் நகரும் அந்த க்ளைமாக்ஸ் காட்சிகள் யாரும் எதிர்ப்பார்க்காததும்கூட.

முரட்டுத்தனமும் சைக்கோத்தனமும் கொண்ட அந்த கங்காரு அண்ணன் பாத்திரத்துக்கு பக்காவாகப் பொருந்துகிறார் அர்ஜூனா.

தங்கையாக வரும் ப்ரியங்கா இந்தப் படத்தில் அஜீத் ரசிகை. அஜீத் பட சிடிக்களைப் பரிமாறியே காதல் வளர்ப்பது கொஞ்சம் புதுசு.

Kangaroo Review

வர்ஷாவுக்கு அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், 'என் ஏத்தத்துக்கும் இறக்கத்துக்கும் என்னா குறை?' என்று மழையில் ஆட்டம் போட்டு இளசுகளின் பல்ஸை பதம் பார்க்கிறார்.

தம்பி ராமையா அந்த வேடத்துக்கு கவுரவத்தைத் தருகிறார். ரொம்ப டீசன்டான நடிப்பு. கஞ்சா கருப்பு அதிகம் படுத்தாமல் விடைப் பெறுகிறார்.

கலாபவன் மணிதான் வில்லன். அவர் பாணியில் நகைச்சுவை வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

கங்காரு தங்கச்சிக்கு கடைசியாக அமையும் மாப்பிள்ளை யாரென்று பார்த்தால்.. அட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. வெல்கம்... நடிகராகவும் தொடரலாம் எனும் அளவுக்கு நடித்திருக்கிறார் இந்த மாப்பிள்ளை!

பொதுவாக டாக்டர் பாத்திரங்கள் ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆகிவிட்டதால் அதில் யார் வந்தாலும் கேலிக்குள்ளாகிவிடுவார்கள். விதிவிலக்கு இந்தப் படத்தில் நடித்துள்ள வெற்றிக் குமரன். ஒரு காட்சி என்றாலும் பளிச்சென்று மனதில் நிற்கிறார் இந்த டாக்டர்!

பாசமே கூட ஒரு அளவைத் தாண்டினால் பாய்சனாகிவிடும் என்ற கருத்தை கதையாக எடுத்தது நல்லதுதான். ஆனால் திரைக்கதையை, குறிப்பாக முன் பாதியை இன்னும் சிரத்தையுடன் செதுக்கியிருக்கலாம்.

Kangaroo Review

லொகேஷனாக கொடைக்கானல் கிடைத்தபிறகு எந்த காமிராவுக்கும் உற்சாகம் பிறந்துவிடும் அல்லவா... ராஜ ரத்னம் நம்மை அந்த கிராமத்துக்கே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.

இவரென்ன இசையமைத்துவிடப் போகிறார் என்ற அலட்சியத்துடன்தான் அமர்கிறோம். ஆனால் மெல்ல மெல்ல அந்த கங்காரு பாடலில் உள்ளே இழுத்துவிடுகிறார். பின்னணி இசையும் ஓகே.

இயக்குநர் சாமி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வேறு நடித்திருக்கிறார். உறுத்தாத நடிப்பு. அந்த முன்பாதியை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் படமும் எந்த உறுத்தலுமின்றி ரசிக்க வைத்திருக்கும்!

மேட்டுக்குடி காதல்களைக் கொண்டாடும் சினிமா சூழலில், விளிம்பு நிலை மனிதர்களின் பாசம், உறவு, வாழ்க்கை முறையைச் சொன்னதற்காகவே இந்த கங்காருவுக்கு ஆதரவு தரலாம்!

 

நெட்டில் அனுஷ்காவின் “ஆபாசப் படம்”?- இன்டெர்நெட்டில் பரபரப்பு!

சென்னை: நடிகை அனுஷ்கா என்ற பெயரில் ஆபாச படம் ஒன்று இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஹன்சிகா குளியலறையில் இருப்பது போன்ற படம் இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் வெளியானது. பாத்ரூமில் கேமராவை ரகசியமாக மறைத்து வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தனர். அப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று அவர் மறுத்தார்.

Anushka's nude video rounds in internet

பின்னர் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவியது. படுக்கை அறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்று இப்படங்கள் இருந்தன. இந்த ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல என்று ராதிகா ஆப் தேவும் மறுப்பு வெளியிட்டார்.

அதன் பிறகு வசந்தராவின் ஆபாச கிளு கிளு படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. லட்சுமிமேனன் பெயரில் ஆபாச வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அனுஷ்கா என்ற பெயரிலும் ஆபாச வீடியோ இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்களில் பரவி வருகிறது. அந்த படத்தில் இருப்பது அனுஷ்காதானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

 

பஞ்ச தந்திரம், வசூல் ராஜா வரிசையில் உத்தம வில்லன்!- பார்த்தவர்கள் கருத்து

கமலின் உத்தம வில்லன் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தவர்கள், இந்தப் படம் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைப் படமாக உள்ளதாகவும், கமல் பிரமிக்க வைத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பதி பிரதர்ஸ் - ராஜ்கமல் தயாரித்துள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை தனது நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு திரையிட்டுக் காட்டினார் லிங்குசாமி.

Uthama Villain special show

படத்தைப் பார்த்த பிறகு, அவர்களிடம் படம் குறித்த ஒளிவு மறைவற்ற கருத்தைக் கூறுமாறு கேட்டுக் கொண்டாராம்.

அவர்கள் கமலின் நடனம், நகைச்சுவையை வியந்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக, ஒரு பாடல் காட்சியில் கமலின் நடனம் இன்றைய இளம் நாயகர்களை மிஞ்சும் வகையில் அமைந்திருந்ததைச் சொல்லி வியந்துள்ளனர்.

இந்தப் படம் இன்னொரு பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எனும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது என்று கூறியதைக் கேட்டதும் மகிழ்ந்துபோய்விட்டாராம் லிங்குசாமி.

 

காஞ்சனா பேயை வீட்டில் பார்த்து ரசித்த ரஜினி!

இந்த கோடையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தை, ரஜினிகாந்த் தன் வீட்டு குட்டி திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் படத்தின் சில காட்சிகள் மற்றும் ராகவா லாரன்ஸின் விதவிதமான கெட்டப்புகளை ரஜினியிடம் காட்டி ஆசி பெற்று வந்தார் ராகவா லாரன்ஸ்.

மிக வித்தியாசமாகவும், அபார உழைப்புடனும் படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், படம் பெரிய வெற்றியைப் பெரும் என்று வாழ்த்தியனுப்பினார் ரஜினி.

Rajini watched Kanchana 2 at his mini theater

அதேபோல படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் குவிகின்றனர்.

சமீபத்தில் ரஜினியின் வீட்டில் உள்ள குட்டித் திரையரங்கில், க்யூப் மூலம் ரஜினிக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டினர்.

படம் பார்த்த ரஜினி, ராகவா லாரன்ஸை வெகுவாகப் பாராட்டினார்.

 

இயக்குநர் பாக்யராஜ் வீட்ல விசேஷங்க..!

இயக்குநர் -நடிகர் பாக்யராஜ் மகனும், பிரபல நடிகருமான சாந்தனுவுக்கும், டிவி தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி திருமணம் நடக்கிறது.

இதுகுறித்து இன்று மீடியாவுக்கு தன் கைப்பட பாக்யராஜ் எழுதியுள்ள கடிதம்:

அன்பு பத்திரிகையாளர்கள நண்பர்களுக்கு, பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் பணிவான வணக்கம்.

Director Bagyaraj's son to wed TV anchor Keerthi`

ஒரு இனிய நற்செய்தி. எங்க 'வீட்ல விசேஷங்க'. ஆம்! எங்கள் புதல்வன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.

எங்கள் பெண் சரண்யா, சற்றுப் பொறுத்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறிவிட்டதால், வீட்டில் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்கவுள்ளது.

பெண்ணின் வீட்டாரும் நமது கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. பிரபல நடனக் கலைஞர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பதிகளின் கீர்த்தியே மணமகள்.

ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் திருமணமும், 22-ம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.

விரைவில் அழைப்பிதழுடன் முறைப்படி அனைவரையும் அழைக்க உள்ளோம்."