சினேகா – பிரசன்னா மகனின் பெயர் என்ன தெரியுமா?

பிரசன்னா சினேகா தம்பதியர் தங்களின் மகனுக்கு விஹான் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சினேகா. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சில படங்களில் நடித்து வந்தார்.

Actress Sneha Actor Prasanna son as Vihaan

டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சில சினேகா கர்ப்பமானதைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி காலை சென்னையில் பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தங்களின் குழந்தைக்கு தற்போது விஹான் என்று பெயரிட்டுள்ளனர். விஹான் என்றால் ‘காலை' என்கிறது அகராதி. இந்த தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவைச் சந்தித்து பேசினேன். அவர் தன் குழந்தைக்கு விஹான் (Vihaan) எனப் பெயரிட்டுள்ளதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் அறிவித்தார். நடிகை நந்திதா தாஸும் தனது மகனுக்கு அந்தப் பெயரைத்தான் சூட்டியுள்ளார் என்றும் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

 

கோடம்பாக்கத்தை பரபரக்க வைத்த விஷாலின் நற்பணிகள்!

கடந்த ஓராண்டு காலமாகவே விஷால் செய்யும் நற்பணிகள் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகின்றன. இவர் என்ன நோக்கத்தில் இந்த உதவிகளையெல்லாம் செய்கிறார் என்று கேட்க வைத்துள்ளன.

இவற்றுக்கு விஷால் தரும் ஒரே பதில்: "நிச்சயம் அரசியல் இல்லை... ஏழைகளுக்கு உதவ வேண்டும், ஏழைக் குழந்தைகள் நன்கு படித்து நல்ல எதிர்காலத்தை அடைய வேண்டும் என்பதே!"

Vishal celebrates his birthday with good cause

இன்று விஷாலுக்குப் பிறந்த நாள். இந்த நாளில் வழக்கமாக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல்கள் அல்லது பண்ணை இல்லத்தில் விருந்துண்டு கொண்டாடும் பழக்கத்தை இன்று முதல் விட்டொழித்து விட்டதாக அறிவித்துவிட்டார் விஷால்.

அடுத்து, இன்று காலை இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர்களுடன் தங்கி, உதவி அளித்து, உணவு பரிமாறினார்.

அடுத்து திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஷால் தங்க மோதிரங்களைப் பரிசாக அளித்தார். இந்தக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும் பரிசாக அளித்தார்.

அடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏழை, எளியவர்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். பாரிமுனையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தைக்கு தேவி என்று தன் தாயார் பெயரை விஷால் சூட்டினார்.

போகும் இடங்களிலெல்லாம் விஷாலை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.

 

விநாயகர் சதுர்த்தியன்று மிரட்ட வரும் கோப்பெருந்தேவி பேய்!

பேயுடன் ரொம்ப சினேகமாக குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. கோடம்பாக்கத்தில் அடுத்து வரும் பேய் கோப்பெருந்தேவி. ரொம்ப நாளாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் இந்தப் பேய் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகிறது.

புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கியுள்ளார். சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரித்துள்ளார்.

Kopperunthevi on September 17th

இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்ளிட்ட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஆராத்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய முதல் படம் இதுவே என்கிறார் இயக்குநர்.

Kopperunthevi on September 17th

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது எனும் விஷயம் தெரியாமல் அவர்கள் அந்த பேயிடம் மாட்டி என்னவெல்லாம் சின்ன பின்னமாகிறார்கள் என்பதுதான் கதையாம்.

இந்தப் படம் வெளியாகும் தேதியில் ருத்ரமாதேவி உள்ளிட்ட 5 பெரிய படங்களும் வெளியாகின்றன. அவற்றிடம் இந்தப் பேய் சிக்கிக் கொள்ளுமா, தப்பிப் பிழைக்குமா.. பார்க்கலாம்!

 

கம்பத்தில் உலகத் திரைப்பட விழா தொடங்கியது: 9 நாடுகளைச் சேர்ந்த 15 படங்கள் திரையிடல்!

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நிழல் திரைப்பட சங்கம், திரை இயக்கம் ஆகியன நடத்தும் கம்பம் உலகத் திரைப்பட விழா-2015, வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது

கம்பம் அமராவதி திரை அரங்கில் விழா தொடங்குவதற்கு முன், மாரியம்மன் கோயிலில் இருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் பேரணி நடைபெற்றது. பின்னர், அமராவதி தியேட்டர் முன்பாக மறைந்த இயக்குநர்கள் ருத்ரய்யா, கே. பாலசந்தர் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர்களது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தத் திரைப்பட விழாவில், அமெரிக்கா, இத்தாலி, சீனா, போலந்த், தைவான், பாலஸ்தீனம், ரஷ்யா, இந்தியா என 9 நாடுகளைச் சேர்ந்த 15 திரைப்படங்கள் தொடர்ந்து 3 நாள்கள் திரையிடப்படுகின்றன.

முதல் நாள் காலை, தமிழ் திரைப்படமான ருத்ரய்யா இயக்கிய அவள் அப்படித்தான், ஏக் தின் பாரடைசின் என்ற பெங்காளி திரைப்படமும், லக்கி என்ற அமெரிக்கா திரைப்படமும், சினிமா பாரடைஸ் என்ற இத்தாலி திரைப்படமும், கோல்டன் ஈரா என்ற சீனப் படமும் திரையிடப்பட்டன.

மாலையில் நடந்த விழாவில், தமிழக அரசின் முன்னாள் தில்லி சிறப்புப் பிரதிநிதி பெ. செல்வேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், நடிகர் ஜோ. மல்லூரி, வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆண்டுதோறும் கம்பத்தில் உலகத் திரைப்பட விழா நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

திரைப்பட விழாவையொட்டி, பிரபல திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடுகின்றனர்.

 

முகாமில் இலங்கை அகதிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய விஷால்!

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து நடிகர் விஷால் இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை அகதிகளுடன் நற்பணி நாளாக கொண்டாடினார்.

இன்று விஷாலின் பிறந்த நாள். இந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்துள்ள அவர், நண்பர்களுடன் கேளிக்கை விருந்து கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டார்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

இன்று நாடு திரும்பவிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

நான் தாமிரபரணி படபிடிப்புக்காக இராமேஸ்வரத்தில் இருந்த போதுதான் அங்கு இருக்கும் இலங்கை அகதிகள் முகம் பற்றி எனக்கு தெரியவந்தது. எனக்கு முகாமை பற்றிய இன்னும் பல தகவல்களை என் அண்ணி ஸ்ரேயா அவர்களின் தோழியான பூங்கோதை சந்திரஹாசன் மூலமாக தெரிந்துகொண்டேன். மேலும் அவர் இயக்குனராக இருக்கும் ஆஃபர் (OFERR) தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றி என்னிடம் கூறியவுடன் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து நற்பனி செய்ய ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து செய்து வருகிறேன்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

ஒவ்வொரு முறை நான் அங்கு சென்று திரும்பும் போது என்னுள் புத்துணர்ச்சி ஏற்படுவதை நான் உணர்கிறேன். என்னுள் அரசியல் நோக்கம் இருப்பதால்தான் நான் இதை போன்ற நற்பணிகளை செய்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனக்கு சத்தியமாக அதைபோன்ற அரசியல் நோக்கம் துளி கூட இல்லை.

நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. அதை மட்டும் சரியாக செய்தால் போதும் என்று நான் நினைகிறேன். மேலும் நான் ட்ராபிக் கான்ஸ்டபிள் போல இருந்து நற்பணி ஆற்ற நினைபவர்களுக்கு சரியான வழியைக் காட்டவே விரும்புகிறேன்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

நடிகர் கார்த்தி நேற்று இரவு என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது பெண் குழந்தைகள் பலர் தாங்கள் படிக்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் அவர்களுடைய படிப்பையே நிறுத்திவிட்டுச் சென்றதாகவும், அதை கருத்தில் கொண்டு பாரீசில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு அவருடைய அகரம் அறகட்டளை மூலமாக ஒரு இலட்சம் ருபாய் செலவில் கழிப்பறை கட்டிகொடுத்ததையும் சொன்னார். அதை போலவே ஒரு லட்சம் ருபாய் கொடுத்தால் வேறு ஒரு பள்ளியில் கழிப்பறை கட்டி கொடுக்கலாம் என்ற செய்தியை என்னிடம் தெரிவித்தார். நானும் அதை நிச்சயம் செய்ய உள்ளேன்," என்றார்.

Vishal celebrates his b'day with Sri Lankan Tamil refugees

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாணவர்களுக்கும், ICSAவை சேர்ந்த முப்பது மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் ஒரு லட்சத்தி அறுபத்தி ஏழாயிரம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார். அது போக அவர்களுக்கு காலணி மற்றும் காலுறைகளை வழங்கினார். மேலும் காலுறைகள் வழங்க தன்னுடைய நற்பணி மன்றத்தினர் மூலமாக மக்களை அணுகி நிதி பெற்று மேலும் இதை சிறப்பாக செய்யவுள்ளதாகவும் கூறினார்.

 

மு களஞ்சியம் இயக்கத்தில் சீமான்.. கம்யூனிஸ்ட் மகேந்திரன் மகன் அறிமுகம்!

அஞ்சலியைத் துரத்தித் துரத்தி ஓய்ந்த மு களஞ்சியம் மீண்டும் சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அந்த ஊர்சுற்றிப் புராணத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது புதிய படத்தை அறிவித்துள்ளார். தலைப்பு: முந்திரிக்காடு.

இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சிபிஎம் தலைவர்களுள் ஒருவரான சி மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக அறிமுகமாகிறார்.

Seeman in Kalanjiam's Munthirikkadu

கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஏஆர் ரஹ்மானின் இசைப் பள்ளி மாணவர் ஏகே பிரியன் இசையமைக்க. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மு களஞ்சியம்.

படம் குறித்து இப்படிச் சொன்னார் களஞ்சியம்:

"முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதும், அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, காக்கி சட்டைக்கே உரிய கௌரவத்தை காப்பாற்றும் அன்பரசன் அந்த காதலர்களை சேத்து வைக்க எடுத்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் கதை.

Seeman in Kalanjiam's Munthirikkadu

படப்பிடிப்பு தஞ்சை மாவட்டம், நெல்லை மாவட்டம் மற்றும் ஆந்திராவின் நகரி மற்றும் சென்னை போன்ற இடங்களிள் 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. கடலூர், பாண்டி உள்ளிட்ட இடங்களில் மீதிப் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது."

 

தூங்காவனம் போஸ்டர் வெளியானது! மேன்லி லுக்கில் உலக நாயகன் கமல்!!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தூங்காவனம் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அசத்தலான லுக்கில் கமல் காட்சியளிக்கிறார். விரைவிலேயே டிரைலர் வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு 'தூங்காவனம்' என தலைப்பிட்டப்பட்டுள்ளது. திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் திரில்லர் வகை கதையாகும். மற்றொரு சிகப்பு ரோஜாக்களாக இப்படம் அமையும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Kamal's Thoongavanam poster released

இந்நிலையில் படத்தின் போஸ்டர் இன்று மாலை வெளியாகியுள்ளது. டிரைலர் வெகு விரைவில் வெளியாகும் என்று படக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது வெளியாகியுள்ள படத்தில் கமல் சற்றே இளமை லுக்குடன் லேசான தாடியுடன் காணப்படுகிறார். அவரது லுக் மிகவும் மேன்லியாக உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

 

பிரபல நடிகையின் நிர்வாண படங்கள் லீக்!

மும்பை: பிரபல நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப் படம் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி டிவி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை, பிரீத்தி குப்தா. ககானி என்ற நெடுந்தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, இந்தி பேசும் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார். இதற்கிடையில் பிரீத்தி நடித்த, அன்பிரீடம் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானதால், இந்தியாவில் திரையிட அதற்கு தடை விதிக்கப்பட்டது.

Preeti Gupta nude picture leaked

பெண் ஓரினச்சேர்க்கை கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், பிரீத்தி நடித்த முத்தக் காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. திடீரென இத்திரைப்படத்தில், பிரீத்தி நடித்த நிர்வாணக் காட்சிகளின் புகைப்படங்களும், வீடியோக்களும், சமூக வலைதளங்களில் நேற்று கசியத் துவங்கின.

இதைப்பார்த்து பரபரப்பான ரசிகர்கள், தமது நண்பர்களுக்கு உடனடியாக பகிர்ந்ததை அடுத்து, காட்டுத் தீ போல, பிரீத்தியின் நிர்வாணப் படங்கள் பரவத்துவங்கின.

அனுராக் காஷ்யப் தயாரித்த குறும்படத்தில், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சிகள், வாட்ஸ் ஆப் மூலம் சில மாதங்களுக்கு முன், காட்டுத் தீ போல பரவின. அதைத் தொடர்ந்து தற்போது, பிரீத்தி குப்தா நடித்த நிர்வாணக் காட்சிகளின் வீடியோக்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இனி நோ பர்த்டே பார்ட்டி... குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம்! - விஷாலின் புதுமுடிவு

இனி பிறந்த நாள் விழா விருந்துகளில் பங்கேற்கப் போவதில்லை. மலர்க்கொத்து போன்ற அன்பளிப்புகளை வாங்குவது கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கப் போகிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாயும் புலி விரைவில் வெளியாகிறது. அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Vishal's new resolution

இன்னொரு பக்கம் நடிகர் சங்க விவகாரத்தைக் கையிலெடுத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

படப்பிடிப்பு, நடிகர் சங்க வேலைகளில் தீவிரமாக இருந்தாலும், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்விக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.

நாளை பிறந்த நாள் கொண்டாடும் விஷால், இந்த ஆண்டு புதிய முடிவை எடுத்துள்ளார். இந்த பிறந்த நாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடுகிறார். அதேபோல, இனி பிறந்த நாள் விருந்துகளிலும் கலந்துக் கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.

பள்ளி குழந்தைகளின் கல்வி குறித்து இனி அதிக அக்கறை காட்டப் போகிறாராம்.

இனி மாலை, பொக்கே போன்றவற்றை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சாதனங்களை வாங்கித் தரப் போகிறாராம்.

 

பாயும் புலி... இன்னும் தொடரும் பிரச்சினை.. செப் 4-ல் ரிலீசாகுமா?

விஷாலின் பாயும் புலி படத்துக்கு இன்னும் சிக்கல் தீரவில்லை. திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது.

விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளபடம் ‘பாயும் புலி'. சுசீந்திரன் இயக்கியுள்ளார். வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள இந்தப் படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ‘பாயும் புலி' படத்துக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திடீர் தடை விதித்துள்ளது.

Paayum Puli issue: Talks going on for smooth release

செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு, திருச்சி போன்ற பகுதிகளில் மட்டும் இந்த படத்தை திரையிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர். ‘லிங்கா' படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இன்னும் ஈடுகட்டாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இதற்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல் என்றும் கண்டித்துள்ளது. தடையை நீக்காவிட்டால் தமிழக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டுசெல்லப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ‘பாயும் புலி' படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

சென்னையில் நேற்று மாலை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரிடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்கிறது.

 

பிரபு தேவா தயாரிக்கும் வினோதன்... ஹீரோவாகிறார் ஐசரி வேலன் பேரன்!

பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான 'வினோதன்' படத்தில் நடிக்கும் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் புது முகம் வருண் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு இணையாக வேதிகா நடிக்கிறார். இதுகுறித்து வேதிகா கூறுகையில், "இயக்குvர் விக்டர் என்னிடம் கதை சொல்ல அணுகும் போது, பிரபு தேவா சாருடைய நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் என்றவுடன் மிகவும் உற்சாகமானேன்.

Isari Velan's grandson makes debut in Vinothan

கதையைக் கேட்டவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, அவ்வளவு நேர்த்தியான கதை. 'பரதேசி', 'காவிய தலைவன்' ஆகிய படங்களின் கதாபாத்திரத்தைப் போலவே வித்தியாசமான, மிகவும் சவாலான கதாபாத்திரம்தான் இந்தப் படத்திலும் எனக்கு.

'வினோதன்' மனோதத்துவத்தின் பின்னணியில் உருவாகும் ஒரு த்ரில்லர் கதை. இயக்குநர் விக்டர் தன்னுடைய கதா பாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதைக் குறித்து ஒரு ஆய்வே செய்து வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் எனக்கும், கதாநாயகன் வருனுக்கும் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். இந்த வகுப்பு வளர்ந்து வரும் என்னை போன்ற நடிக -நடிகையருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

'வினோதன்' மூலம் என்னுடைய நெடு நாள் கனவு நிறைவு பெற உள்ளது. நான் சிறு வயதில் இருந்தே பிரபு தேவா சாருடைய தீவிர விசிறி. இப்பொழுது ஒரு நடிகையாக அவருடைய தயாரிப்பில் நடிக்க போவதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய இயக்கத்திலும், அவருக்கு இணையாகவும் நடிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்," என்றார்.

 

அடுத்த படம் குடியும் குடித்தனமும் இல்லை... - இயக்குநர் ராஜேஷ்

தனது அடுத்த படத்துக்கு குடியும் குடித்தனமும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

மேலும் சினிமாவில் எல்லோரும்தான் குடிக்கிற காட்சிகளை வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Rajesh denies Kudiyum Kudithanamum

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - விஎஸ்ஓபி- படத்தில் அத்தனை காட்சிகளிலுமே குடிக்கிற காட்சிகளை வைத்திருந்தார் ராஜேஷ். ஒரு காட்சியில் கதாநாயகியே குடிப்பார்.

இதெல்லாம் கடுமையான விமர்சனங்களை படத்துக்கு எதிராகக் கிளப்பின. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குடியும் குடித்தனமும் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இதில் எரிச்சலடைந்த இயக்குநர் ராஜேஷ், "நிச்சயம் இது அல்ல என் அடுத்த படத் தலைப்பு. அதேநேரம், என்னமோ நான்தான் குடிக்கும் காட்சிகளை வைப்பது போல சிலர் பேசுகிறார்கள். எல்லோரும்தான் அந்த மாதிரி காட்சிகளை வைக்கிறார்கள். கதைக்கு தேவை என்பதால் அப்படி வைக்க வேண்டியிருக்கிறது," என்று கூறியுள்ளார்.

அதற்காக சதா சர்வகாலமும் டாஸ்மாக் பாரிலேயே திரைக்கதை நொண்டியடித்தால் எப்படி ராஜேஷ்!

 

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அஜீத்துக்கு முன்பே கலக்கியவர் ரஜினிதாங்க!- ரசிகர்கள்

சால்ட் அன்ட் பெப்பர்.. அதாவது பாதி நரைச்ச மீதி நரைக்காத தலை முடி பாணி.. இந்தப் பெயர் அஜீத்தின் மங்காத்தா படம் வெளியான பிறகு அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று படங்களில் அஜீத்தும் இந்த கெட்டப்பிலேயே நடித்துவிட்டார். இதனால், சால்ட் அன்ட் பெப்பர் லுக் என்றாலே அஜீத்தான் என பேசி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Rajini fans reply to Ajith fans

இந்த நிலையில், ரஜினி அடுத்து நடிக்கும் கபாலி படத்தில் அவருக்கும் இந்த சால்ட் அன்ட் பெப்பர் லுக்தான் என்பது உறுதியாகிவிட்டது.

இதனால், தல வழியில் தலைவரும் இப்போது சால்ட் அன்ட் பெப்பரில் நடிக்கிறார் என அஜீத் ரசிகர்கள் சமூக இணைய தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

உடனே ரஜினி ரசிகர்கள் அதற்கு பதில் அளித்துள்ளனர்.

Rajini fans reply to Ajith fans

"தல-க்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் நல்லாதான் இருக்கு. ஆனா அதுக்கு வழிகாட்டியே நம்ம தலைவர்தான். அவர் ஆரம்ப காலத்தில் நடிச்ச 6லிருந்து 60 வரை படத்திலேயே சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சில காட்சிகள் வருவார். அடுத்து தர்மதுரையில் அரை மணி நேரம் இந்த கெட்டப்தான். வள்ளி படத்தில் மேக்கப்பே இல்லாமல், உண்மையான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே தோன்றினார்... தல-க்கு வழிகாட்டி தலைவர்தான்," என்று கூறி தர்மதுரை, வள்ளி பட ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.

அஜீத் ரசிகர்களும் இதனை விவாதமாக்காமல், உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா..."ஏ"

சென்னை: டார்லிங் நாயகன் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது சென்சார் போர்டு.

ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படம் நகைச்சுவை கலந்த காதல் படமாக தயாராகியிருக்கிறது.

‘Trisha Illana Nayanthara’ Movie Gets ‘A’ Certificate

செப்டம்பர் 17 ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சார் போர்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு வயது வந்தவர்கள் (18 வயது மேற்பட்டவர்கள்) மட்டும் பார்க்கும் வகையில் ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கின்றனர்.

படத்தில் இடம்பெறும் அளவுக்கு அதிகமான முத்தக் காட்சிகள் மற்றும் பாடல் போன்ற காரணங்களுக்காக படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றது சென்சார் போர்டு.

தமிழில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற பெயரில் வெளியாகும் இத்திரைப்படம் தெலுங்கில் த்ரிஷா லேடா நயன்தாரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.

செப்டம்பர் 17 ம் தேதி வெளியாகும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் மற்றும் கவுண்டமணியின் 49 ஓ ஆகிய படங்களுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தம் சீனியர் கவுண்டமணியுடன் மோதத் தயாராகி விட்டார் ஜி.வி.பிரகாஷ், வெற்றிக்கனியை பறிப்பாரா பார்க்கலாம்...

 

சிம்புவின் அடுத்த அதிரடி .. நாளை முதல் அச்சம் என்பது மடமையடா... டீசர்!

சென்னை: இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து படத்தின் டீசரை நாளை வெளியிடத் தீர்மானித்து இருக்கின்றனர் படக்குழுவினர், படத்தின் நாயகன் சிம்பு இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியை உறுதி செய்திருக்கிறார்.

Achcham Yenbathu Madamaiyada Teaser

விண்ணைத்தாண்டி வருவாயா மாபெரும் வெற்றிக்குப் பின்னர் கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தாமரை ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

சிம்பு, ராணா, மஞ்சி மோகன் இணைந்து நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கவுதம் மேனன்.

இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " ஒரு அழகான ரொமாண்டிக் படமாக உருவாகியிருக்கும் அச்சம் என்பது மடமையடா, திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. கடவுள் அருளால் படத்தின் டீசர் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்"என்று கூறியிருக்கிறார்.

சிம்புவின் திரைவாழ்க்கையில் இனி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லுவது, போன்று அடுத்தடுத்த படங்கள் சாரின் பங்களிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.

நீங்க கலக்குங்க எஸ்.டி.ஆர்.....

 

'சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட...'- பா.விஜய்க்கு தாஜ்நூர் போட்ட மாடர்ன் கானா!

கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் நடுவே எப்போதும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். அதிலும் இரண்டு முக்கியமான திரைப்பட பாடலாசிரியர்களாக தமிழ் திரையுலகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பா.விஜய்யும், சினேகனும் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கிறார் என்றால் தாஜ்நூர் இளம் கவிஞர்களின் செல்ல சினேகன் என்பது சொல்லாமலே விளங்கும்! யெஸ்... விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஸ்டாபெர்ரி' திரைப்படத்திற்கு தாஜ்நூர்தான் இசை.

Taj Noor's modern Gana for Pa Vijay

இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதற்கப்புறம் சினேகன் ஹீரோவாக நடித்து கவரும் ‘கள்ளன்' என்ற புதிய திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார் தாஜ்நூர். இந்த படங்கள் குறித்தும் அதில் இசையமைப்பாளர் தாஜ்நூரின் பங்களிப்பு பற்றியும் பேசினோம்...

Taj Noor's modern Gana for Pa Vijay

ஸ்டாபெர்ரி படத்தில் சக இசையமைப்பாளர்களையே பாட வச்சுருக்கீங்களாமே?

ஆமாம்... இசையமைப்பாளர்கள் டி.இமான், மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் அற்புதமான இரண்டு ட்யூன்களுக்கு பாடிக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரபல ஹீரோ சித்தார்த்தும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த மூன்று பாடல்களும் வெஸ்டர்ன் ஸ்டைலில் அமைக்கப்பட்டது. அதற்கப்புறம் ஒரு பாடலை நேஷனல் அவார்டு வின்னர் உத்ரா பாடியிருக்கிறார். இவர் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள். இது முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டது.

Taj Noor's modern Gana for Pa Vijay

அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட பின்பு, அதே பாடலை வீட்டில் போய் பாடிக் காட்டினாராம் உத்ரா. அதை கேட்ட உன்னி கிருஷ்ணனும் அவரது மனைவியும் நேரில் வந்து கைகொடுத்து, "மூணு நாள் என்னை உறங்க விடாமல் செய்துவிட்டது" என்று பாராட்டிவிட்டு போனது என்னால் மறக்கவே முடியாது. அது போலவே இன்று முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் டி.இமானும், ஜி.வி.பிரகாஷ்குமாரும் நேரம் ஒதுக்கி பாடிக் கொடுத்ததையும் மறக்க முடியாது.

Taj Noor's modern Gana for Pa Vijay

ஸ்டாபெர்ரியில் வேறென்ன விசேஷம்?

இதில் மாடர்ன் கானா என்றொரு ஸ்டைலை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட... என்று துவங்கும் அந்த பாடலை நோபில் என்றொரு புது பாடகர் பாடியிருக்கிறார். பாருங்கள்... அதுதான் இந்த வருஷம் எல்லா ஏரியாவிலும் நின்று அடிக்கப் போகிறது. அதற்கப்புறம் பின்னணி இசை கோர்ப்புக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டோம்.

கிட்டதட்ட 300 மணி நேரம் ரீரெக்கார்டிங் டி.டி.எஸ் மிக்சிங்குக்காக மட்டும் ஆகியருக்கிறது. அதுமட்டுமில்ல... அந்த பின்னணி இசைக்காக புதுசாவே சவுண்ட் டிசைன் பண்ணியிருக்கோம். ஹாலிவுட்லேர்ந்து ஆன் லைன்ல புதுசு புதுசா ஒலிகளையும் எபெக்ட்சையும் முறைப்படி அனுமதி வாங்கி பயன்படுத்தியிருக்கோம். படம் மிரட்டலா வந்துருக்கு.

வேறு என்னென்ன படங்களுக்கு இசையமைத்து வருகிறீர்கள்?

ஸ்டாபெர்ரி, கள்ளன் தவிர, ‘வெங்காயம்' படத்தின் மூலம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சங்ககிரி ராச்குமாரின் ‘நெடும்பா' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறேன். காந்தாரி, யானைமேல் குதிரை சவாரி, வெள்ளிக்கிழமை 13 ம் நாள் என்று வரிசையாக நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.

Taj Noor's modern Gana for Pa Vijay

நெடும்பா திரைப்படம் முடிந்து பின்னணி இசையமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த படம் மலையகவாசிகள் தொடர்பான படம் என்பதால், நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. நானும் ராச்குமாரும் காடுகளில் பல நாட்கள் திரிந்து காட்டுவாசிகள் பயன்படுத்தும் விதவிதமான இசைக்கருவிகளை வாங்கி வந்தோம். வெறும் மரத்தால் செய்யப்பட்ட கருவிகளும், மூங்கில், தோல் கருவிகள், மூச்சுக்காற்றை பயன்படுத்தும் கருவிகளால் பின்னணி இசையமைத்து வருகிறேன். இந்த படம் ராச்குமாரை இந்தியா முழுக்க பிரபலமாக்கிவிடும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஏனென்றால் அந்த கதை அப்படி. அதுமட்டுமல்ல, இந்த படத்திற்காக சென்னை தமிழ், கோவை தமிழ் போலஅவரே ஒரு புதுத் தமிழை உருவாக்கியிருக்கிறார். அது எல்லோராலும் கவனிக்கப்படும்.

வளைகுடா இளைஞர்களின் கண்ணீர் வாழ்க்கை

இது தவிர ‘தமிழ் பிள்ளை' என்றொரு இசை ஆல்பம் தயாராகி வருகிறது. இலங்கை தமிழர்கள் தாயகம் விட்டு பல்வேறு மண்களில் தவித்து வருவதை இசையாக சொல்லிவிட்டோம். ஆனால் நமது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு போய் அவதிப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்ணீரோடு வெளிப்படுத்துகிற ஆல்பமாக இது இருக்கும். கவிக்கோ அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, இன்குலாப், பழனிபாரதி, யுகபாரதி, இஷாக், இக்பால் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

விரைவில் வளைகுடா நாடுகளில் இந்த ஆல்பத்தை லைவ் ஆஸ்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்தி வெளியிடப் போவதாகவும் குறிப்பிட்டார் தாஜ்நூர்.

 

நானும் ரவுடிதான் பர்ஸ்ட் லுக் - கழுத்தில் துண்டு நெற்றியில் திருநீறுடன் தரிசனம் தரும் விஜய் சேதுபதி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருக்கும் ‘நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டார், நேற்று வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.


சிவப்புக் கலர் சட்டை, கழுத்தில் ஆரஞ்சு கலரில் துண்டு மற்றும் நெற்றியில் திருநீறு என முற்றிலும் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் காட்சியளிக்கிறார்.

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் பங்களிப்பில் 'நானும் ரவுடிதான்' படம் உருவாகியிருக்கிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ‘போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார், படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது.


இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் "அக்டோபர் 2ம் தேதி ‘நானும் ரவுடிதான்' படத்தை வெளியிடுவது என்று உறுதி செய்திருக்கிறோம். மேலும், படத்தின் டீஸர், பாடல்களை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.இதனை படத்தின் நாயகி நயன்தாராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

அக்டோபர் 2 ம் தேதி விஜயின் நடிப்பில் வெளியாகும் புலி திரைப்படத்துடன் விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் படத்தின் மூலம் மோதவிருக்கிறார்.

 

நட்புப் படத்தின் தயாரிப்பாளரை சுற்றலில் விட்ட தளபதி நடிகர்

சென்னை: தளபதியான அந்த நடிகர் சில வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்து மார்க்கெட் இறங்கிப் போயிருந்தபோது,சக நடிகர்களுடன் இணைந்து நட்பான படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் வெளியான ஒரிஜினல் படம் தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குனரால் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது, படம் ஓரளவு நன்றாக ஓடி நடிகரின் சரிந்த மார்க்கெட்டை சற்று நிமிர்த்திக் கொடுத்தது.

ஆனால் எல்லோருக்கும் நட்பான அந்தப் படம் தயாரிப்பாளர் தரப்பில் லாபத்தைக் கொடுப்பதற்கு பதிலாக நஷ்டத்தை அளித்து விட்டதாம். இதனைக் கேட்ட நடிகர் அடுத்து உங்கள் பேனரில் ஒரு படம் நடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம்.

இதனை நம்பிய தயாரிப்புத் தரப்பு சமீபத்தில் நடிகரை சந்திக்க நடிகரோ நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டாராம்.

அடுத்தவங்க படத்துக்கெல்லாம் நல்லது செய்றாரு சொந்தப் படத்துக்கு வந்த பிரச்சினையை தீர்த்து வைக்க மாட்டேன் என்கிறாரே, என்று சகட்டுமேனிக்கு தயாரிப்பாளர் தற்போது புலம்பி வருகிறாராம்.

 

விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்களால் ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு

ஈரோடு: ஈரோட்டில் தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதால் புதுபடத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

புதிய தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள மேவானி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து திடீர் என வந்த தேனீக்கள் படக்குழுவினரை விரட்டி விரட்டி கொட்டியது.

Crew of Film Unit Injured in Bee Attack in Tamil Nadu, Shooting Cancelled

சிலர் அந்த இடத்தை விட்டு ஓடினர். மேலும் சிலர் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தனர். தேனீக்களிடம் கடி வாங்கிய நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினரில் சிலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மற்றவர்களுக்கு கிராம மக்களே முதலுதவி அளித்தனர். இந்த சம்பவத்தால் நேற்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேனீக்கள் தொல்லையால் படப்பிடிப்பு ரத்தானது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

 

அருண்பாண்டியன் சார் பொத்தாம் பொதுவாக யாரையும் சொல்லாதீங்க- ட்விட்டரில் விஷால் பதிலடி

சென்னை: தமிழ் சினிமா மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளது. எடுத்த படத்தை வெளியிட முடியாத நிலை. இதனால்தான் ஒரு தயாரிப்பாளர் சிலை கடத்தல் வரை போயிருக்கிறார்.

என்று சினிமாவின் மோசமான நிலையை 2 தினங்களுக்கு முன்பு தான் சொந்தமாக தயாரிக்கும் சவாலே சமாளி, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் எடுத்துரைத்தார் நடிகரும் எம்எல்ஏ வுமான அருண்பாண்டியன்.

மேலும் அவர் பேசுகையில் ஒரு படம் தயாரிக்கும் போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத்தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பாளருக்கு யாரும் உதவி செய்வதில்லை.

Please Don't Generalize Arun Pandian Sir - Vishal Says in Twitter

படத்தின் சேட்டிலைட் உரிமைகள் கூட விற்பதில்லை,அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்" என்று கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பையும் சலசலப்பையும் ஒருசேர ஏற்படுத்திய இந்தப் பேச்சுக்கு தற்போது நடிகர் விஷால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "தயாரிப்பாளர்களுக்கு யாரும் உதவுவது இல்லை என்று பொதுவாக சொல்லாதீர்கள் அருண்பாண்டியன் சார், சில நடிகர்கள் (என்னையும் சேர்த்து) படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் செய்து செய்கிறோம்.

நீங்கள் கூறியது நல்ல கருத்துதான் ஆனால் யார் அப்படி செய்கிறார்களோ அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டே சொல்லுங்கள் என்று அருண்பாண்டியனுக்கு எதிராக தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் விஷால்.

விஷாலின் இந்தக் கருத்தை நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து விஷாலிற்கு ஆதரவளித்திருக்கிறார்.குஷ்பூவும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அநியாயம் எங்கே நடந்தாலும் புரட்சித்தளபதி பொங்கிடுறாரு.....

 

கம்பத்தில் உலகத் திரைப்பட விழா.. நாளை தொடங்குகிறது!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் உலகத் திரைப்பட விழா நாளை தொடங்குகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சிறிய நகரமான கம்பம் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளிலிருந்து எத்தனையோ இளைஞர்கள் திரைத் துறையில் கால் பதித்துள்ளனர்.

இந்த கம்பம் நகரில் முதல் முறையாக உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிழல் திரைப்பட சங்கம்.

International film festival in Cumbam

நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்கள் நடக்கும் இந்த விழாவுக்கான "டீஸர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த உலகத் திரைப்பட விழா கம்பம் அமராவதி திரையரங்கில், வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில், இந்தியா, சீனா, போலந்து, ரஷியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

 

உதயநிதிக்கு கிடைக்காத சந்தானம் கால்ஷீட்... 'உள்ளே வந்தார்' விவேக்!

ஹீரோயின் இல்லாமல் கூட நடிப்பேன்.. ஆனால் சந்தானம் இல்லாமல் ஷூட்டிங்குக்கே வர முடியாது என்கிற அளவுக்கு, தன் படங்களில் சந்தானம் இருந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் உதயநிதி.

ஆனால் சினிமா கூட்டணிகள் எந்தக் காலத்திலும் நிலையாக இருந்ததே இல்லை. மாறிக் கொண்டே இருக்கும்.

Why Santhanam says no to Udhayanidhi?

அந்த நிலை உதயநிதி - சந்தானம் கூட்டணிக்கும் வந்துவிட்டது. ஆனால் இது நட்பு முறிவால் வந்த மாற்றமில்லை. சந்தானம் ஏக பிஸியாக இருப்பதால் வந்த மாற்றம்.

இனிமே இப்படித்தான் படத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வசூலைப் பார்த்து, சந்தானத்தை 3 புதிய படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படங்களில் சந்தானம் படுபிஸியாகிவிட்டார்.

Why Santhanam says no to Udhayanidhi?

இதனால் நெருங்கிய நண்பனான உதயநிதியின் புதிய படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. எனவே விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். உதயநிதியுடன் விவேக் இணைவது இதுவே முதல் முறை.

Why Santhanam says no to Udhayanidhi?

நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். ஓகே ஓகே வெற்றிக்குப் பிறகு இருவரும் இணையும் படம் இது. இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறவுள்ளது.

 

யாரை கேட்டு பட ரிலீஸை தள்ளிப் போட்டிங்க: இயக்குனருக்கு டோஸ் விட்ட 'லீடர்'

சென்னை: விலங்கின் பெயர் கொண்ட படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதை அடுத்து லீடர் நடிகர் இயக்குனரை திட்டியதாகக் கூறப்படுகிறது.

லீடர் நடிகர் விலங்கின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினர். தலைவா, படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Leader actor reportedly scolds his director

படம் அடுத்த மாதம் ரிலீஸாகும் கொண்டாடித் தீர்க்கலாம் என்று இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முழுதாக முடியவில்லை என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

சொன்ன நேரத்தில் படத்தை வெளியிடாததால் லீடர் நடிகர் கோபத்தில் உள்ளாராம். வேலைகள் முடியவில்லை என்றால் எதற்காக ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு பின்னர் அதை தள்ளி வைத்தீர்கள் என்று இயக்குனரை திட்டினாராம் நடிகர்.

படம் தள்ளிப் போயுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனரே என்ற ஆதங்கம் தான் லீடருக்கு அதிகமாக உள்ளதாம்.

 

'ப்ரூஸ் லீ' நாயகியாகிறார் நயன்தாரா?

சென்னை: பிரசாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதிக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' . இப்படம் வரும் செப்டம்பர் 17ம் தேதி ரிலீசாகிறது.

Nayanthara in G V Prakash's ‘Bruce Lee’

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் இயக்கத்தில் 'ப்ரூஸ் லீ', 'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

ப்ரூஸ் லீ படத்தை இயக்கும் பிரசாந்த், இயக்குநர் பாண்டிராஜிடன் இணை இயக்குநராக பணியாற்றியவர். இப்படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுத, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் இப்படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

நயன்தாராவிற்கு கதை பிடித்து விட்டதாகவும், எனவே விரைவில் அவர் நாயகியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சோனமுத்தா… போச்சா?!! கலங்க வைத்த காமெடி நிகழ்ச்சி

தொலைக்காட்சிகளில் பிரம்மாண்டமாக ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதும் நடுவர்களுக்கு பல லட்சம் சம்பளம் கொடுத்து அழைத்து வருவதும் சாதாரண விசயமாக இருக்கிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கிய சில எபிசோடுகளிலேயே விரைவில் மூடுவிழா காண்பதும் அதைவிட சாதாரண விசயம்.

வட இந்தியாவை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடுவர்களை மாற்றிவிட்டு கம்மி சம்பளத்தில் நடுவர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளதாம்.

நடனநிகழ்ச்சி என்றால் நடிகைகள், டான்ஸ் மாஸ்டர்கள் நடுவர்களாக வருகின்றனர். அதேபோல பாடகர்களுக்கான ரியாலிட்டி ஷோ என்றால் மார்க் போட மார்க்கெட் போன பாடகர்களோ அல்லது மார்க்கெட்டில் இருக்கும் பின்னணி பாடகர்களோ வந்து சிலபல குறைகளை சொல்லி மனதை நோகடித்து அப்புறம் போனால் போகிறதென்று மதிப்பெண்களை போடுகின்றனர்.

காமெடி நிகழ்ச்சிகளுக்கு சினிமாவில் காமெடி என்ற பெயரில் கொலை செய்த நடிகர்கள், நடிகைகளை அழைத்து வந்து மார்க் போட வைக்கின்றனர். நட்சத்திர சேனல் எப்படியோ செலவில்லாமல் அவர்களின் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்கள், காமெடியன்களை வைத்தே ஒப்பேற்றி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காமெடியில் சொதப்புபவர்களை வெளியேற்ற இரண்டு குண்டர்களையும் அடியாட்களாக நியமித்துள்ளனர்.

ஆனால் வடஇந்தியாவை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனலில் தொடங்கப்பட்ட காமெடி நிகழ்ச்சி தற்போது வருத்தப்பட வைக்கிறதாம். பிரம்மாண்ட செட்... நான்கு நடுவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் என தயாரிப்பு செலவு ஏகத்திற்கும் எகிறிவிட்டதாம். என்னசெய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்த சேனல் தரப்பு முதலில் செட்டை வேறு இடத்திற்கு இடம் மாற்றிவிட்டதாம்.

அது மட்டுமல்லாது விரைவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடுவர்களை மாற்றிவிட்டு கம்மி சம்பளத்தில் நடுவர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளதாம் சேனல் தரப்பு.

வருத்தப்படாம இருக்கணும்னு ஆரம்பிச்ச நிகழ்ச்சி இப்படி வருத்தப்பட வச்சிருச்சே என்று புலம்புகின்றனராம் சேனல் நிர்வாகத்தினர்.

 

பாயும்புலிக்கு தடையா?: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்!

லிங்கா நஷ்ட ஈட்டுப் பிரச்சினைக்காக வேந்தர் மூவீஸின் பாயும் புலி படத்துக்கு தடை விதிப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

‘ராக்லைன் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘லிங்கா' திரைப்படம் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டு தொகைக்காக ‘வேந்தர் மூவிஸ்' நிறுவனத்தின் தயாரிப்பான ‘பாயும் புலி' தமிழ் திரைப்படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட தடைவிதித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

Producers Council condemns Theaters owners Assn

இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் ஆகும். மேலும், இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல். ‘லிங்கா'வில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ‘பாயும் புலி' திரைப்படத்துக்கு தடை விதிப்பது எந்தவிதத்திலும் தொழில் தர்மம் அல்ல.

எனவே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உடனடியாக ‘பாயும் புலி' திரைப்படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அப்படி தடையை நீக்காதபட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சிவாஜி மணி மண்டபம்.. நடிகர் சங்கத்துக்கு அவமானம்! - விஷால் அணி

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் அமைக்காதது அந்த சங்கத்திற்கே அவமானம் தரக்கூடியது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணசேனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு நடிகர்கள் கமல், பிரபு உள்பட பல்வேறு திரையுலகில் நன்றி தெரிவித்துள்ளனர்.

Nadigar Sangam fails to construct Sivaji Mani Mandapam - Vishal team

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 2002ஆம் ஆண்ட நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மணிமண்டபம் அமைக்கப்படவில்லை.

நியாயமாக இந்த மணிமண்டபத்தை நடிகர் சங்கம்தான் அமைத்திருக்க வேண்டும். அப்படித்தான் தமிழக அரசிடம் முதலில் நடிகர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் செய்யவில்லை.

இதிலிருந்தே நடிகர் சங்கத்தின் நிர்வாகம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டாதது நடிகர் சங்கத்துக்கு அவமானம்தான்,'' என்றார்.

 

சூரிக்கு முதல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. டிவிட்டரில் குவியும் "வாழ்த்து பரோட்டாக்கள்"

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இன்றைய சூழ்நிலையில் இளம் நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் சூரியின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது, பல்வேறு வெற்றிப் படங்களின் கூட்டணியிலும் சூரிக்கு ஒரு இடமிருக்கிறது.

Comedy Actor Soori Turns 38

எனவே காமெடி நடிகராக இருந்தாலும் சூரியின் பிறந்தநாளை சிறப்பாக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் சூரியின் ரசிகர்கள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் போன்ற படங்களில் சூரியுடன் சேர்ந்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

"எனது அண்ணன், நல்ல நண்பன் மற்றும் திறமையான நடிகர் சூரி அண்ணாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் மட்டுமின்றி இந்த வருடமே உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று சூரியுடன் தான் முறுக்கு மீசை வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்து சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தான் ஹீரோவாக நடித்த 7 படங்களில் கிட்டத்தட்ட 4 படங்களை சூரியுடன் இணைந்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன், இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று போல் என்றும் வாழ்க.....

 

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் உள்ளே வெளியே இயக்குநர்

சென்னை: இசைக்குடும்பத்தில் இருந்து வந்த அந்த இயக்குநர் சமீபத்தில் அடுத்தடுத்து 2 தோல்விப் படங்களைக் கொடுத்ததால், இயக்குனரின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளராக யாரும் முன்வரவில்லையாம்.

இதனால் தானே தயாரிப்பாளர் ஆகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து தனது திறமையை நிரூபித்த இயக்குநர் கோட் நடிகரின் படத்திற்குப் பின் ஆளே மாறிவிட்டார்.

கோட் நடிகரை வைத்து இயக்கிய உள்ளே வெளியே படம் நன்றாக ஓடியதில் அடுத்து பருத்தி வீரனை வைத்து பிரியாணி கிண்டினார், பிரியாணி வேகாமல் போய்விட்டது.

சற்றும் மனம் தளராமல் அடுத்த படத்தில் சூர்யமான நடிகரை வைத்து பேய்படத்தை இயக்கினார், பேரை மாற்றி விளையாடியவர் திரைக்கதையில் கோட்டை விட்டதில் மாஸான அந்தப் படம் தூசியாகி விட்டது.

மாஸான படம் எதிர்பார்த்த அளவு ஓடாததில் இவரை விடவும் சூரிய நடிகருக்கு தான் பலத்த அடி, படம் வெளிவந்து நடிகரின் ஒட்டு மொத்த மார்க்கெட்டையும் கவிழ்த்து விட்டது.

சரி மீண்டும் கோட் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்குவோம் என்று நடிகருக்கு கதை சொல்லியிருக்கிறார், நடிகர் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து போய்விட்டாராம்.

மேலும் ஒரு காலத்தில் இயக்குனருக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் தற்போது இயக்குனரின் தலையைக் கண்டாலே தெறித்து ஓடி விடுகின்றனராம்.

இதனால் வெறுத்துப் போன இயக்குநர் இறுதியாக தான் இயக்கும் அடுத்த படத்தை, சொந்தப் பணத்தில் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

சொந்தப் படமும் பணமும் இயக்குனருக்கு கை கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ஒட்டு மொத்தத் திரையுலகினரும் அது சரி.

 

சிவாஜி மணிமண்டபம்: நடிகர் திலகத்தை நினைவு கூர்ந்த தமிழக அரசிற்கு நன்றி - கமலஹாசன்

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும், என்ற கோரிக்கையை சிவாஜியின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தனர்.

ஆங்காங்கே உண்ணாவிரதங்கள் கூட இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரங்கேறின, இந்நிலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார்.

Sivaji Manimandapam Actor Kamal Thanked Tamilnadu Government

இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன, சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகமே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் இந்த அறிவிப்பினை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து ‘நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது.

கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன்' என்று தனது அறிக்கையின் மூலம் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார் கமலஹாசன்.

 

அஜீத் 56... முடிந்தது ஷூட்டிங்!

அஜீத் நடித்துவரும் 56 வது படத்தின் வசனப் பகுதிகள் முற்றாகப் படமாக்கப்பட்டுவிட்டன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளைத் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.

அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜீத்தி நடித்து வரும் புதிய படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி கொல்கத்தா மற்றும் இத்தாலியில் நடந்தது. இறுதிப் பகுதி சென்னையில் படமானது.

Ajith 56 talkie potion shooting over

ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன், சூரி ஆகியோர் இந்தப் படத்தில் முதல் முறையாக அஜீத்துடன் கைகோர்த்துள்ளனர்.

படத்தின் வசனப் பகுதிகள் முழுமையாக படமாக்கப்பட்டுவிட்டன. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறங்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் தலைப்பு வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் எனத் தெரிகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அறிவித்துள்ளார்.

 

ஸ்ரேஷா கோஷலுக்கு எதிராக என்னதான் பேசினார் சித்ரா?

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு மலையாளத்தில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதை விமர்சித்தார் சித்ரா என்பதுதான் இப்போது மலையாளப் பட உலகில் பெரிய பேச்சாக உள்ளது.

அப்படி என்னதான் பேசினார் சித்ரா?

கேரள சுற்றுலாத்துறை சார்பாக திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சித்ராவிடம், மலையாளத் திரையுலகில் மற்ற மொழிப் பாடகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

What Chitra spoke against Shreya Goshal?

இதற்குப் பதிலளித்த சித்ரா, "ஸ்ரேயா கோஷல் போன்ற திறமையான பாடகிக்கு மலையாளப் படங்களில் வாய்ப்பு கொடுத்தால் யாரும் புகார் சொல்லமாட்டார்கள். அதேசமயம், கேரளாவில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பளிக்கவேண்டும்.

உண்மையில் கேரளாவில் மற்ற மொழிப் பாடகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு போல, கேரளப் பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை," என்றார்.

 

சிலை கடத்தல் வரை போய்விட்டது சினிமா தொழில்! - அருண்பாண்டியன் பேச்சு

சென்னை: தமிழ் சினிமா மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளது. எடுத்த படத்தை வெளியிட முடியாத நிலை. இதனால்தான் ஒரு தயாரிப்பாளர் சிலை கடத்தல் வரை போயிருக்கிறார், என்றார் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான அருண்பாண்டியன்.

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் ஏ & பி குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், எஸ்என் ராஜராஜன் தயாரிக்கும் படம் 'சவாலே சமாளி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

Film producing become very tough these days, says Arunpandian

விழாவில் நடிகர் நாசர் பேசுகையில், "சென்ற ஆண்டு இதே நேரத்தில் நான் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தேன். எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற போது அங்கே ஏர்போட்டில் அருண்பாண்டியன் அவர்கள் எனக்காக காத்திருந்து உங்கள் மகன் விரைவில் குணமடைவான் என்று சொல்லி பூங்கொத்து கொடுத்து வரவேற்று மருத்துவ ஏற்பாடுகளை செய்து முதல் கட்ட சிகிச்சைக்கு பணமும் செலுத்தி உதவி செய்தார்.

Film producing become very tough these days, says Arunpandian

நான், அருண்பாண்டியன், ராம்கி மூவரும் 33 வருடங்களுக்கு முன்பு சினிமா கனவுகளுடன் ஒன்றாகப் போராடினோம். இன்று மூவரும் ஜெயித்து விட்டோம். அருண்பாண்டியன் இப்பொழுது தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார் நிச்சயம் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக இருக்கும்.

படம் தயாரிக்க எனக்கும் ஆசைதான் ஆனால் என் மனைவி காமிலா வீட்டின் கதவை அடைத்துவிடுவார்," என்றார்.

தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பேசுகையில், "முன்பு எல்லாம் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ஈசியாக இருந்தது. பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் நடிகர்கள் அனைவருக்கும் படம் தயாரிப்பில் பங்கு இருக்கும்.

ஆனால் இப்போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத்தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பளாருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட விற்பதில்லை. அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்.

இந்த படத்தை நானே சொந்தமாக உலக முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன் இதை கேள்வி பட்ட அசோக்செல்வன், பிந்துமாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து ஐந்து லட்சம் விட்டு தருவதாக கூறினார்கள். அனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன். இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அந்த படத்தின் வெளியீட்டின் போது அந்த தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன்வருவதில்லை," என்று கூறினார்.

Film producing become very tough these days, says Arunpandian

விழாவில் நடிகர் ராம்கி, நிரோஷா, அசோக்செல்வன், பிந்துமாதவி, பாடலாசிரியர் சிநேகன், ஒளிப்பதிவாளர் பி.செல்வகுமார், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், கவிதாபாண்டியன், எஸ்.என்.ராஜராஜன், கீர்த்திபாண்டியன், படத்தின் இயக்குனர் சத்யசிவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

தமிழ் மண்ணின் நகைச்சுவை அடையாளம்! - சூரிக்கு சீமான் வாழ்த்து

பிரபல நகைச்சுவை நடிகர் சூரிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூரிக்கு நாளைதான் பிறந்த நாள். ஆனால் இன்றே வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் சீமான் கூறியிருப்பதாவது:

Seeman's birthday wishes to comedian Soori

நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாடகக் காலம் தொட்டே நகைச்சுவைக் கலைஞர்களின் ஊடாகவே சுதந்திரம் தொடங்கி சுரண்டல் வரையிலான அத்தனை பிரச்னைகளும் மக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நகைச்சுவை திறமையால் சதுரம் நடுங்க வைத்தார் சார்லி சாப்ளின். அந்த விதத்தில் நாட்டின் நல்லது கெட்டதுகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஆகப்பெரும் கடமை நகைச்சுவை கலைஞர்களுக்கு இருக்கிறது.

தம்பி சூரி தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகவும், தமிழ் வாழ்வியலின் அப்பட்டமான சாட்சியாகவும் ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மூன்றாம் தமிழின் அரிய கலைஞனாக, மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக விளங்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் அரிய சொத்து. வளைந்து நெளியும் உடல்மொழியும் அருமையான வட்டார மொழியுமாய் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சூரி, தமிழ்த் திரையுலகில் இன்னும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி தமிழ் மக்களைக் குளிர்விக்க நாம் தமிழர் கட்சி வாழ்த்துகிறது.

திரைத்துறைத் திறமையிலும் தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து இதயக்கூட்டில் வைத்திருக்கும் சூரி, தமிழ் மண்ணுக்கான நகைச்சுவை அடையாளமாகக் காலம் முழுக்கத் தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கான பக்க பலமாக, ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுமிக்க ஆதரவாக நாம் தமிழர் கட்சி எந்நாளும் விளங்கும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

 

இந்திய ஆஸ்கர் ஜூரியாக அமோல் பாலேகர் நியமனம்!

இந்திய ஆஸ்கர் ஜூரியாக பிரபல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் அமோல் பாலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரைத்துறையில் சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான படங்கள் மற்றும் கலைஞர்களைப் பரிசீலிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

Amol Palekar appointed chairman of India’s Oscar jury

இந்தக் குழுவின் தலைவராக பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அமோல் பாலேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடக்கும் 88வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் படங்களை அமோல் பாலேகர் தலைமையிலான குழுதான் தேர்வு செய்யும்.

இதனை மும்பையைச் சேர்ந்த பிலிம் ஃபெடரேஷன் ஆப் இந்தியாவின் பொதுச் செயலாளர் சுப்ரான் சென் அறிவித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படமான பஹேலியை இயக்கியவர் அமோல் பாலேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இறுதிக் கட்டத்தில் பாலாவின் "தாரை தப்பட்டை"

பாலா இயக்கத்தில் இயக்குநர் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் தாரைதப்பட்டை. இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவை செழியன் கவனித்துக் கொள்கிறார்.

கரகாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் தாரை தப்பட்டை திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படப்பிடிப்பின் நடுவில் படத்தின் நாயகன் சசிகுமாருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக தாரை தப்பட்டையில் சற்று தாமதம் ஏற்பட்டது. சசிகுமாரின் உடல்நிலை சரியானவுடன் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம்.

Tharai Thappattai Now at Final Stage

அண்மையில் தாரை தப்பட்டை படக்குழுவினர் சில முக்கியமான காட்சிகளை அந்தமான் தீவில் சென்று சென்று படம்பிடித்து வந்தனர்.

அந்தமானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி படக்குழுவினர் சென்றுவந்த கப்பலிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கின்றனர், கப்பலில் இயல்பாக நடத்தப்பட்ட படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறதாம்.

தாரை தப்பட்டையின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தஞ்சாவூரில் இன்று தொடங்கவிருப்பதாக கூறுகின்றனர் 15 நாட்கள் இந்தப்படப்பிடிப்பு இருக்கும் என்றும் இந்த 15 நாட்கள் படப்பிடிப்புடன் மொத்தப் படமும் நிறைவடைந்து விடும் என்றும் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

படத்தை இயக்குவதோடு கதையின் மேலுள்ள நம்பிக்கையால் தாரை தப்பட்டையின் தயாரிப்புச் செலவையும் ஏற்றிருக்கிறார் இயக்குநர் பாலா.

தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்..டும்...

 

65 வயதில் காதல் திருமணம்... நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையேப்பா!

சென்னை: உச்ச நடிகரின் நண்பராக நடித்தே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் இந்த சிவப்பு நடிகர்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களுக்கும் தோஸ்த் ஆக பல படங்களில் நடித்தவர் இந்த பாபு. அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட்டும் ஆனவை. உச்ச நடிகர்களின் நண்பர் வேடமா, கூப்பிடு பாபுவை என்று கூறும் அளவுக்கு வலம் வந்தவர் இவர்.

Old Actor to marry a young girl

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்றவர் இவர். தற்போது தெலுங்கு இளம் வயது பத்திரிகையாளர் ஒருவரை லவ் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். நடிகருக்கோ தற்போது 65 வயது. ஆனால், அவர் காதலிக்கும் பெண்ணிற்கோ, அவரது மகள் வயது தான் என்கிறார்கள்.

பத்திரிகையாளரை விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும், இல்லையில்லை ஏற்கனவே திருமணம் முடிந்து இருவரும் சேர்ந்து தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் இரு வேறு தகவல்கள் நடிகரைக் குறித்து உலா வருகிறது.

எது எப்படியோ நடிகரின் 3வது மனைவி அந்த இளம் வயது தெலுங்குப் பத்திரிகையாளர் தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.