கிசு கிசு - புலம்பும் வாரிசு இயக்குனர் கோபம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
வாரிசை ஹீரோவா அறிமுகப்படுத்தினாரு வெற்றிசித்ர பெண் இயக்குனரு. படத்துல நீளமாவும் ஹீரோ பில்டப்புக்கும் நிறைய வசனங்கள் இருந¢துச்சாம்… இருந்துச்சாம்… இதனாலதான் படம் ஓடலேன்னு ஹீரோ புலம்புறாராம்… புலம்புறாராம்… வாரிசே இப்படி சொல்றானேன்னு நடிகை உர்ரா இருக்கிறாராம¢… இருக்கிறாராம்…
புதுப் பட வாய்ப்புகளை மீரா மல்லிகை நடிகை ஏத்துக்க மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்… சமீபத்துல தமிழ்ல நடிக்க கேட்டதுக்கும் மாட்டேன்னு சொல்லிட்டாராம். கல்யாணத்துக்கு நடிகை ரெடியாகுறாரு. அதனாலதான் வாய்ப்பு மறுக்கிறாருன்னு கோடம்பாக்கம் பட்சி சொல்லுது… சொல்லுது…
மாஸ்டர் பேட்ஸ்மேன் பெயர்ல படம் எடுத்தாரு ரெண்டெழுத்து இயக்குனரு. பல முயற்சிகள் பண்ணியும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கல… கிடைக்கல… நீண்ட வருஷத்துக்கு பிறகு கிடைச்ச வாய்ப்பும் கை நழுவி போயிடுச்சி. இப்போ காதல் நடிகர்கிட்ட கதை சொல்ல முயற்சி பண்றாராம். நடிகரோ ஸ்டார் ரேஞ்சுக்கு அப்போ, இப்போன்னு காலம் தள்ளுறாராம்… தள்ளுறாராம்…


Source: Dinakaran
 

உதயதாராவிடம் மன்னிப்பு கேட்டார் ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'பகவான்’ படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.சைலேஷ் கூறியது: யுவராஜ், உதயதாரா நடிக்கின்றனர். கதைப்படி ஒரு காட்சியில் தன்னை ரவுடிகள் கிண்டல் செய்வதாக யுவராஜிடம் கூறுகிறார் உதயதாரா. அவரை அழைத்துக் கொண்டு கோபமாக செல்கிறார் யுவராஜ். உதயதாரா காண்பிக்கும் ஆட்களுக்கு சமூக சேவைக்கான பாராட்டு விழா நடப்பதை கண்டு அதிர்கிறார் யுவராஜ். தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, உதயதாராவை யுவராஜ் கன்னத்தில் அறைய வேண்டும். அறைவதற்காக கை ஓங்கும்போது தன் மீது அடிபடாமல் இருக்க உதயதாரா முகத்தை திருப்ப வேண்டும். இதில் டைமிங் மிஸ் ஆனது. பளார் என கன்னம் சிவக்கும் அளவுக்கு அறை விழுந்தது. உதயதாரா அழுதுவிட்டார். உதயதாராவிடம் யுவராஜ் மன்னிப்பு கேட்டார். சிறிது நேரம் உதயதாரா அப்செட்டில் இருந்தார். அரை மணி நேரம் கழித்தே அந்த காட்சியை மீண்டும் படமாக்க முடிந்தது.


Source: Dinakaran
 

எம்.ஜி.ஆர் பாடலுக்கு மாளவிகா டான்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் 'பொறுத்திரு'. புதுமுகங்கள் விஜய்ராஜ், கவுரி, திவ்யா ஸ்ரீ நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக, 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம் பெற்ற 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிளாக நடனம் ஆடியுள்ளார். இதுபற்றி எம்.ஜி.ஆர். நம்பி நிருபர்களிடம் கூறியதாவது: 'பொறுத்திரு' எல்லா அம்சங்களும் நிறைந்த கிராமத்து காதல் கதை. நான் பால்காரன் வேடத்தில் நடித்திருக்கிறேன். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாக நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக பாடல் வருகிறது. அதுதான் 'எங்க வீட்டு பிள்ளை' ரீமிக்ஸ் பாடல். மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம்.


Source: Dinakaran
 

டெலி சிப்ஸ்


நீது சந்திரா, அனுஷ்கா என ஆரம்பித்து கடைசியாக "மங்காத்தா'வில் அஜித்துக்கு ஜோடியாகிறார் திரிஷா. "ஜீ' படத்துக்குப் பின் அஜித் - திரிஷா கூட்டணி இதில் இணைகிறது.டிரெய்லருக்காக மட்டும் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தொடங்குகிறது படத்துக்கான ஷூட்டிங். அஜித்துடன் நாகார்ஜுனாவும் நடிப்பதால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது "மங்காத்தா'.
ரீமேக் சினிமாக்களில் அதிகமாக நடிக்கும் நடிகையாகியிருக்கிறார் ஜெனிலியா. தெலுங்கில் "பொம்மரிலு', தமிழில் "சந்தோஷ் சுப்பரமணி'யமாக ரீமேக் ஆன போது அவர்தான் ஹீரோயின். ஹிந்தியில் "இட்ஸ் மை லைஃப்' என்ற பெயரில் உருவான போது அவரே ஹீரோயின். இப்போது தெலுங்கு "ரெடி'யின் தமிழ் பதிப்பான "உத்தமபுத்திரன்'. இதன் ஹிந்தி பதிப்பிலும் அவர்தான் ஹீரோயினாம். தன் குட்டி ரசிகர்களுக்காக "ஆர்ட் அட்டாக்' என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது டிஸ்னி சேனல். குழந்தைகளின் பல வகையான திறன்களை வெளிக் கொண்டு வருவதுடன், குழந்தைகளின் திறன் அறிந்து அவற்றுக்கு வடிவம் கொடுப்பதாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
ஆமீர் கான் தான் நடித்து ஃப்ளாப் ஆன படங்களின் கலெக்ஷன்களை அடிக்கடி டி.வி.டி.யில் பார்ப்பது வழக்கம். ""நான் உருகி உருகி நடித்த காட்சிகளை ரசிகர்கள் புறக்கணித்து விட்டார்கள். அதனால் இனி அப்படி ரியாக்ஷன் காட்டக் கூடாது'' என்பதற்காகதான் ஃப்ளாப் படங்களைப் பார்ப்பதாக காரணம் சொல்கிறாராம் ஆமீர் கான்.   ரீமேக் சினிமாக்களில் அதிகமாக நடிக்கும் நடிகையாகியிருக்கிறார் ஜெனிலியா. தெலுங்கில் "பொம்மரிலு', தமிழில் "சந்தோஷ் சுப்பரமணி'யமாக ரீமேக் ஆன போது அவர்தான் ஹீரோயின். ஹிந்தியில் "இட்ஸ் மை லைஃப்' என்ற பெயரில் உருவான போது அவரே ஹீரோயின். இப்போது தெலுங்கு "ரெடி'யின் தமிழ் பதிப்பான "உத்தமபுத்திரன்'. இதன் ஹிந்தி பதிப்பிலும் அவர்தான் ஹீரோயினாம்.
80-களில் வெளியான திரைப் பாடல்களை மட்டுமே அதிகம் விரும்பி கேட்பார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். வீடு, கார், அலுவலகம் என எங்கும் இசையில் நீந்திக் கொண்டே இருப்பார். வீட்டில் மினி தியேட்டர் ஒன்று வைத்திருக்கிறார். வீட்டில் இருக்கும் இரவு நேரங்களில் கண்டிப்பாக ஒரு படம் பார்த்து விடுவார். தன் உதவியாளர்களையும் படம் பார்க்க வற்புறுத்துவார்.
""பாய்ஸ்' படத்தில் வேலை செய்தது எனக்கு பிடிக்கவே இல்லை. அப்படத்துக்குப் பின் இனி நடிக்க கூடாது என்றுதான் அப்போது தோன்றியது. அது அறிமுக படமாக இருந்தாலும் தெலுங்கில் வெளியான (உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்) படம்தான் என் முதல் படம் என சொல்லிக் கொள்வதில் ஆசைப்படுகிறேன்''. இவ்வாறு தன் டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார் சித்தார்த். தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் எழுப்பிய தாஜ்மஹாலின் வரலாற்றை விவரிக்கிறது டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் "மிஸ்ட்ரி ஆஃப் தாஜ்மஹால்'. அதை கட்டிய கலைஞர்களின் அடையாளம், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள், கட்டப்பட்டுள்ள இடம், வடிவமைப்பு உள்ளிட்ட பல விவரங்களை ஆராய்கிறது இந்த நிகழ்ச்சி. அக்டோபர் 31-ல் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம். "வான்டட்', "தபாங்' படங்கள் ஹிட்டானதில் சல்மானின் மார்க்கெட் பாலிவுட்டில் எகிறி நிற்கிறது. ஷாருக்கானை விட அதிக சம்பளம் வாங்குகிறார். தற்போது உருவாக்கத்தில் உள்ள "ரெடி' படத்துக்காக ரூ. 21 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். இதை தவிர மும்பை, டெல்லி சிட்டி ரைட்ஸýம் அவருக்குத்தானாம். பொது விழாக்களில் கலந்துக் கொள்வதில்லை என்ற பாலிஸி வைத்திருந்தாலும் அவ்வப்போது நடக்கும் சினிமா விழாக்கள் பற்றி கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார் கவுண்டமணி. யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? என்ன பேசினார்கள்? படத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொண்டு அந்த நேரத்தில் டைமிங் காமெடி ஒன்றை தட்டி விட்டு சிரிப்பாராம் கவுண்டர்.
 

அவதார் -2...வேலையைத் துவங்கினார் கேமரூன்!

Avatar
வசூலிலும் தரத்திலும் யாரும் எட்ட முடியாத சிகரம் தொட்ட சினிமா என்றால் உலக அளவில் அது ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மட்டுமே.
நாடுகள், மொழிகளின் எல்லைகளைக் கடந்து மக்களின் மனங்களை வென்ற சினிமா அது. இப்போதும் சென்னையில் இந்தப் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா…
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பாக டைம் இதழால் பாராட்டப்பட்ட அவதாரின் அடுத்த பாகம் தயாராகிறது.
அவதார்-2 என்ற பெயரில் தயாராகும் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை ஜேம்ஸ் கேமரூன் தொடங்கியுள்ளார். இப்போதைக்கு அதன் முழு ஸ்கிரிப்டையும் முடிவு செய்வது முக்கியம் என்பதால், அந்தப் பணியில் கவனம் செலுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.
அவதார்-2-ன் படப்பிடிப்பு வரும் 2011 மே மாதம் தொடங்கும் என ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனம் அறிவித்துள்ளது.
அவதாரின் மூன்றாவது பாகமும் தயாராக உள்ளது. இதனை 2015ம் ஆண்டு துவக்கவிருக்கிறார்களாம்.
ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து இந்த இரு படங்களையும் ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனமே தயாரிக்கிறது.
இதற்கிடையே, எகிப்திய பேரரசி கிளியோபாட்ரா பற்றிய படம் ஒன்றையும் கேமரூன் எடுக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக ஏஞ்சலினா ஜூலி நடிக்கிறார்.
 

மீன்வாடை தாங்காமல் திவ்யா ஓட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'சிங்கம் புலிÕ படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்கிறார் திவ்யா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ராயபுரம் மீன் மார்க்கெட்டில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட திவ்யா, ஸ்பாட்டுக்கு வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தார். ஜீவா, திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. காட்சிக்கு இடையே அவ்வப்போது கேரவானுக்குள் ஓடியபடி இருந்தார் திவ்யா.
'உடல்நிலை எதுவும் சரியில்லையா?Õ என்று அவரிடம் கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை. மீன் மார்க்கெட்டில் இதுபோன்ற சூழலில் இதுவரை நடித்ததில்லை. மீன்வாடையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுதான் காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிவிடுகிறேன்Õ என்றார். திவ்யாவின் நிலையை புரிந்து கொண்ட இயக்குனர், அவர் சம்பந்தப்பட்ட காட்ச¤களை உடனடியாக எடுத்து திவ்யாவை அனுப்பி வைத்தாராம்.


Source: Dinakaran
 

கிசு கிசு - மாஸ்டர் நடிகை அன்பு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
லட்சுமிகரமான நடிகை
மேல ராகவ டான்ஸ் மாஸ்டரு அன்பா இருக்கிறாராம்…
இருக்கிறாராம்… ஒரு படத்துல ஒரு பாட்டுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து ஆடினாங்க. அதுலேருந்து நட்பு தொடருதாம். இயக்கி, ஹீரோவா நடிக்கிற படத்துல நடிகைக்கு பெரிய ரோலா கொடுத்திருக்கிறாராம்… மாஸ்டரு கொடுத்திருக்கிறாராம்…
பிரியமான நடிகையோடு சேர்ந்து நடிக்கிறாரு ஆட்டோகிராப் இயக்கம். ஷூட்டிங் ஸ்பாட்ல நடிகையின் பெயரை சுருக்கி செல்லமா அழைக்கிறாராம்… அழைக்கிறாராம்… ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் சூப்பர் நடிப்புன்னு நடிகையை புகழ்ந்து தள்ளுறாராம். நெருக்கமானவங்ககிட்ட சொல்லி நடிகை பூரிச்சு போறாராம்… போறாராம்…
Ôஎன்னை மாதிரி திறமையான நடிகைக்கு கோலிவுட்ல வாய்ப்பு எட்டா கனியாத்தான் இருக்குன்'னு பத்ம நடிகை நொந்துபோறாராம்… நொந்துபோறாராம்… நெருக்கமான இயக்குனர்களுக்கு தூது விட்டும் பார்த்தாராம். ஆனா வாய்ப்புதான் வரலயாம்…
வரலயாம்…
 

எல்லோரும் கூப்பிட்டுப் பாராட்டறாங்க! - ரீமா சென் சென் புல்லரிப்பு

Reema Sen
ரீமா சென்னுக்கு இன்று பிறந்தநாள். முன்னெப்போதையும் விட சந்தோஷமாக இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
அப்படியென்ன விசேஷம் இந்த ஆண்டு மட்டும்?
“காரணம் இருக்கே… இந்த ஆண்டு நான் நடித்த ஆக்ரோஷ் இந்திப் படம் வெளியாகியுள்ளது. இதில் எனக்குத்தான் அதிக முக்கியத்துவம். படம் வெளியானதும் பாலிவுட்டின் பெரிய டைரக்டர்கள் எல்லாம் என்னை கூப்பிட்டுப் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இதுவரை என்ன போன் நம்பரே தெரியாமலிருந்த டைரக்டர்கள் கூட, தெரிந்தவர்களிடம் நம்பர் வாங்கி என்னை கூப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்க…” என்கிறார் ரீமா குஷியாக.
அப்போ கோலிவுட் அவ்வளவுதானா… இனி இங்குள்ள ரசிகர்களை மறந்துவிடுவாரா?
“இல்லையில்லை… விரைவில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறேன்…,” என்றார்.
பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் எப்படி?
“என் தங்கை திஷா ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கா. இந்த இரவு விருந்துக்கு 50 பேரை மட்டும் கூப்பிட்டிருக்கேன்…”, என்றார்.
என்ஜாய்!
 

என்னுடைய படம் வெளிவர முடியவில்லை மிஷ்கின் வேதனை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தான் எடுத்த படங்களில் மிகச் சிறந்தபடம் ‘நந்தலாலா’ என்றார். தான் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியவை மிகவும் கீழ்த்தரமான படங்கள் என்றார் இயக்குநர் மிஷ்கின். இதுபற்றி படவிழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசுகையில், நான் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படமும், ‘அஞ்சாதே’ படமும் மிக கீழ்த்தரமான படங்கள். மூன்றாம் தரமானவை.
நான் இயக்கிய மிக சிறந்த படம், ‘நந்தலாலா.’ ஆனால் அந்த படம் வெளிவர முடியவில்லை. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் என்னை பாராட்டினார்கள். படத்தை பார்த்தவர்கள், அழாமல் வெளியே வரமுடியாது என்றார்கள்.
‘நந்தலாலா’ படத்தை இங்கு நடக்கும் சந்தையில், ஒரு பொருளாக விற்பதற்கு எடுக்கவில்லை. ஆத்மார்த்தமாக அந்த படத்தை எடுத்தேன். தமிழ் சினிமா இருக்கும் சூழலில் ஒரு நல்ல படம் எடுப்பதும், வெளியிடுவதும் சிரமமான விஷயமாக இருக்கிறது.
குத்துப்பாட்டு இல்லாமல் எடுத்தால், அதுதான் நல்ல சினிமா. குத்துப்பாட்டும், நகைச்சுவையும், சுவிட்சர்லாந்தில் 25 பெண்களுடன் கதாநாயகன்-கதாநாயகி ஆடுவதும், உச்சக்கட்ட காட்சியில் 200 பக்க வசனத்தை பேசுவதும் இல்லாமல் படம் எடுத்தால், அது நல்ல சினிமா.
குடும்பத்துடன் படம் பார்க்க போகலாமா? என்று கேட்டால், என் வீட்டில் ரஜினிகாந்த் படம் பார்க்க போகலாம் என்றுதான் சொல்வார்கள். நல்ல படம் பார்க்க போகலாம் என்றா சொல்வார்கள்?
அப்படி இருந்தும் ‘நந்தலாலா’ மாதிரி நல்ல சினிமா எடுப்பது ஏன் தெரியுமா? நல்ல படங்களை விரும்பும் வெகு சிலருக்காகத்தான். நல்ல சினிமா எடுப்பது, ஒரு தாய்மை போராட்டம் மாதிரி. எல்லா தாய்மார்களும் பிரசவத்தின்போது, ஒரு மகாராஜனை பெறவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி நினைத்துதான் நல்ல சினிமா படங்களை எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்…,” என்றார்.


Source: Dinakaran


Source: India Glitz
 

அபிநயாவுக்கு எந்தக் கட்டளையும் போடலை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தங்கள் படம் முடியும் வரை, வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்று அபிநயாவுக்கு கட்டளையிட்டிருக்கிறார் இயக்குநர் சசிக்குமார். இதுபற்றி சசிக்குமாரிடம் கேட்டோம் “இது வீண் வதந்தி 'நாடோடிகள்' படம் நடிக்கிறப்பவே அந்தப் பொண்ணோட திறமைய பார்த்தேன். 'என்னோட அடுத்த படத்துல நீ நடிக்கிறம்மா' என்று வாக்கு கொடுத்தேன். அதேமாதிரி இப்ப 'ஈசன்' படத்துல நடிக்கிறாங்க. மத்தபடி எந்தக் கட்டளையும் அபிநயாவுக்கு போடலை” என்கிறார் சசிக்குமார்.
 

தமிழ் படத்தில் நடிக்க ஏகப்பட்ட நிபந்தனைகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கிறார் மம்தா. இதுபற்றி அவரிடம் கேட்ட போது “நாலு பாட்டுக்கு ஆடி, ஹீரோ பின்னாடி சுத்துகிற மாதிரி கேரக்டர் வேண்டாம். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கேரக்டரில் நடிப்பதென்று முடிவு செய்திருக்கிறேன். அதுபோன்ற படங்கள் எதுவும் அமையவில்லை. ஹீரோயினுக்கும் முக்கியத்துவமான கேரக்டர் வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை” என்கிறார் மம்தா.
 

ஆர்யாவுக்கு விரைவில் திருமணம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யாவுக்கு வீட்டில் பெண் தேடுகிறார்கள். இதுபற்றி அவரிடம் கேட்ட போது “வயசாயிட்டே போறதால வீட்டுல உள்ளவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை. 'பொண்ணு பார்க்கட்டுமா'னு கேட்டாங்க. 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'னு சொல்லியிருக்கேன். கொஞ்சம்னா எத்தனை நாள்னு உடனே கேட்காதீங்க பாஸ்” என்கிறார் ஆர்யா.
 

மோனிகா பெலுச்சியின் நிர்வாண தத்துவம்!

Monica Bellucci
ஹாலிவுட் செக்ஸ்பாம் மோனிகா பெலுச்சி இத்தாலிய பத்திரிகை வானிட்டி பேருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.
46 வயதாகும் மோனிகா பெலுச்சி, கவர்ச்சி மற்றும் செக்ஸியான வேடங்களில் அசத்தியவர். சமீபத்தில்தான் இவருக்கு குழந்தை பிறந்தது.
இப்போது தனது 5 மாதக் குழந்தையுடன் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்தப் படங்கள் இத்தாலியின் பிரபல பத்திரிகையான வானிட்டி ஃபேரில் வெளியாகியுள்ளன.
இந்த இதழில் மோனிகாவின் பேட்டியும் வெளியாகியுள்ளது. அதில், “நான் நல்லவளா, கெட்டவளா என்று எனக்குள்ளேயே தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் புகைப்படங்களுக்கு நிர்வாண போஸ் கொடுப்பதும்கூட என்னைத் தேடும் ஒரு முயற்சிதான்” என்று கூறியுள்ளார்.
இப்போது விளம்பரப் படங்களில் பிஸியாக இருக்கும் மோனிகா, இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். அவற்றில் ஒன்றில் ராபர்ட் டி நீரோவுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழச்சியாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா!

Priyanka Chopra
ஹிந்திப் படம் ஒன்றில் தமிழ் பெண்ணாக நடிக்கிறார் முன்னாள் உலக அழகியும், முன்னணி நடிகையுமான பிரியங்கா சோப்ரா.
க்ரிஷ், பேஷன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரியங்கா. தேசிய விருது பெற்றவர்.
ஆங்கில எழுத்தாளர் சேதன் பகத் எழுதிய நாவல் ’2 ஸ்டேட்ஸ்’. வட இந்தியரான சேதன், தமிழ் பெண்ணை மணந்துள்ளார். தனது திருமண அனுபவத்தை மையமாக கொண்டே இந்த நாவலை எழுதியுள்ளார் சேதன்.
இந்த நாவலை படமாக்குகிறார் சித்தார்த் ஆனந்த். சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார்.
இந்த படத்தில் சைஃப் அலிகான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமிழ் பெண்ணாக நடிக்கிறார் பிரியங்கா. இதற்காக தமிழில் பேச அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.
தமிழன் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read Priyanka Chopra plays as a Tamil girl
 

வித்யா பாலனின் நிபந்தனை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


திரையில் கவர்ச்சி ராணியாகவும் நிஜத்தில் சோக நாயகியாகவும் திகழ்ந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இப்போது தமிழ் மறறும் இந்தியில் படமாகிறது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். ஆனால் படக் குழுவினருக்கு திடீரென ஒரு நிபந்தனை விதித்தாராம் வித்யா பாலன். சில்க் வேடத்தில் நடிக்க தயாரா இருக்கிறேன்; ஆனால் அவரைப் போல கிளாமரா நடிக்க மாட்டேன், என்று நடிகை வித்யாபாலன் திடீரென கூறியிருப்பதால் சில்க் வாழ்க்கை வரலாறு படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். மேலும் அவரை சமாதானம் பேசி நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.


Source: Dinakaran

 

1 நாளில் 28சிகரெட் ஊதிய நீது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘ஆதிபகவன்’ பட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து முடிந்தது. இப¢படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் நீது சந்திரா, சிகரெட்டுக்கு அடிமையானவராக நடிக்கிறார். ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் கேரக்டராம். இதற்காக இவரை வைத்து ஒரு நாளில் படமான காட்சிகளில் 28 சிகரெட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார் நீது. “ஒரே சிகரெட்டை சும்மா பிடிப்பது போல செய்கை காட்டலாம் என நினைத்தேன். இயக்குனர் அமீர் நிஜமாக தம் அடிக்க சொன்னார். இது புது அனுபவமாக இருந்தது. மறுநாள் தொண்டை பாதித்து டாக்டரிடம் சிகிச்சை பெற்றேன்” என்றார் நீது சந்திரா.


Source: Dinakaran

 

இயக்குனர் மீது சிரஞ்சீவி கோபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘ஆரஞ்ச்’. இதில் ச¤ரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்துள்ளார். ‘பொம்மரிலு’ படம் இயக்கிய பாஸ்கர் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு முதலில் போட்ட பட்ஜெட் ரூ.20 கோடியாம். இப்போது அதை தாண்டி ரூ.35 கோடி செலவாகிவிட்டதாம். இதனால் சிரஞ்சீவி

அப்செட் ஆகி, இயக்குனர் பாஸ்கரை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கியதும் சில காட்சிகளுக்கு ரீஷூட் செய்ததும் பட்ஜெட் அதிகமாக காரணமாக கூறப்படுகிறது. பட்ஜெட் எகிறியதால் படக்குழு அப்செட்டில் உள்ளது.


Source: Dinakaran



Source: One India

 

கிசு கிசு - நடிகையுடன் பவுலர் காதல்?

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
மூணுஷா நடிகை ரொம்பவே வருத்தமா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… இந்த தீபாவளிக்கு வெளிநாட்ல ஷூட்டிங்காம். Ôஒவ்வொரு தீபாவளியும் பேமிலியோடு கொண்டாடுவேன். ஷூட்டிங்கிற்கு லீவு கொடுங்களேÕன்னு கேட்டாராம்… கேட்டாராம்… ஆனா படக்குழு மறுத்துட்டாங்களாம்… மறுத்துட்டாங்களாம்…
இதனால நடிகைக்கு வருத்தமாம்… வருத்தமாம்…
தன்னோட இந்தி படத்துக்கு ஹீரோயின் தேடுறாரு மின்னல் இயக்குனரு. விஷயம் கேள்விப்பட்டு, அவரோட அன்பான வாரண நடிகை சான்ஸ் கேட்டாராம்… கேட்டாராம்… Ôஇந்த ரோல் உங்களுக்கு சூட் ஆகாதுÕன்னு இயக்குனரு சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்… இதனால நடிகை அப்செட்டாம்…
அப்செட்டாம்…
பிசின் நடிகைக்கு நேத்து பர்த் டே. அவரோட பரம ரசிகன்னு சொல்லிக்கிற ஸ்ரீயான இந்தி கிரிக்கெட் அணி பவுலரும் போன் பண்ணி வாழ்த்து சொன்னாராம்… சொன்னாராம்… இப்போதெல்லாம் அடிக்கடி நடிகைக்கு போன் பண்றாராம். மணிக்கணக்குல பேசுறாராம்… பேசுறாராம்… பவுலருக்கு காதல் தீ பத்திக்கிச்சுன்னு சினிமா வட்டாரத்துல பேசிக்கிறாங்க… பேசிக்கிறாங்க…


Source: Dinakaran


Source: dinakaran-kolly
 

தெலுங்கு சினிமாவில் அசத்தும் ஆர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமான ஆர்யாவுக்கு ‘நான் கடவுள்’ படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம், தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தற்போது ஆர்யா வீட்டிற்கு படை எடுத்துள்ளனர். நான் கடவுள் படத்தில் ஆக்ஷன் காட்சியில் அசத்திய ஆர்யா, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் காமெடியுலும் அசத்தினார். பாலா, லிங்குசாமி, அடுத்து மிஷ்கின்… இன்றைய தேதியில் கே‌ரியர் கிராஃப் பிரைட்டாக இருப்பது ஆர்யாவுக்குதான்.

கோலிவுட்டை கலக்கிய ஆர்யா, தற்போது டோலிவுட்டிலும் ஜொலிக்க தொடங்கியுள்ளாராம். ஆமாம், ஆர்யாவின் நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்ததில் ஏகப்பட்ட வருமானம் கிடைத்துள்ளது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ‘வருடூ’ என்ற தெலுங்கு படத்தில் நெகட்டிவ் ரோலில் அசத்திய ஆர்யாவுக்கு தெலுங்கு பட தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தற்போது ஆர்யா வீட்டிற்கு படை எடுத்து வருகிறார்கள்.


Source: Dinakaran

 

பழைய மனைவியும் புது மனைவியும்...! - பிரகாஷ் ராஜ்

Pony Varma and Prakash Raj
என் பழைய மனைவி லலிதகுமாரியும் புது மனைவி போனி வர்மாவும் இப்போது நல்ல நண்பர்களாகிவிட்டார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் நடிகையுமான லலிதகுமாரியை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பிறகு (ஒரு குழந்தை இறந்துவிட்டது), பாலிவுட் நடன இயக்குநர் போனி வர்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.

சமீபத்தில் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார். லலிதகுமாரிக்கும் அவருக்கும் பிறந்த பெண் குழந்தைகள் இருவரும் இப்போது பிரகாஷ்ராஜுடன் வசிக்கின்றனர்.

போனி வர்மாவுடனான புதிய வாழ்க்கை எப்படி உள்ளதென சமீபத்தில் ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் இப்படி எழுதியுள்ளார்:

“புதிதாக திருமணம் ஆனவர்கள் கணவனுக்காக விரதமிருப்பது வடக்கில் பிரபலம் (தில்வாலே துல்ஹனியே லேஜாயேங்கேவில் கஜோல் விரதமிருப்பதைப் போல). என் மனைவி போனியும், எனக்காக தனது ஷூட்டிங்குக்குக் கூடப் போகாமல் நாள் முழுக்க விரதமிருந்தார். இந்த திருமண உறவு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது… அழகாக உள்ளது” என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

தனது பழைய மனைவி லலிதகுமாரி பற்றி கூறுகையில், ” எனது குழந்தைகள் இருவரும் என்னுடன்தான் உள்ளனர். என் முன்னாள் மனைவி லலிதகுமாரியும், இப்போதைய மனைவி போனியும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்” என்று எழுதியுள்ளார் பிரகாஷ் ராஜ்.



Source: India Glitz

 

கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!

Kamal Hassan
கமல் ஹாஸன் நடித்துள்ள 4 பிரண்ட்ஸ் மலையாளப் படம் இன்று கேரளாவில் வெளியாகிறது.

சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜெயராம், ஜெயசூர்யா மற்றும் குஞ்சக்கோ போபன் நடித்துள்ள இந்தப் படத்தின் நாயகி மீரா ஜாஸ்மின்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாஸன் நடித்துள்ள மலையாளப்படம் இது. நடிகர் கமலாகவே இந்தப் படத்தில் வருகிறாராம்.

“இந்தப்படத்தை தனது மலையாள நண்பர்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் விரும்பிச் செய்திருக்கிறேன்” என்று கமல் கூறியது நினைவிருக்கலாம்.

எம் ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்தப் படம், இன்று கேரளா முழுவதும் வெளியாகிறது.


 

அமீஷா பட்டேலுடன் ஜோடி போடும் லியாண்டர்!

Leander Paes and Amisha Patel
ராஜதானி எக்ஸ்பிரஸ்… இது ரயில் அல்ல… பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நடிக்கும் புதிய சினிமா.

இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் வீரர் லியாண்டர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்தநிலையில் ராஜதானி எக்ஸ்பிரஸ் பட வாய்ப்பை ஒப்புக் கொண்ட லியாண்டர், முழு ஹீரோவாக அதில் அறிமுகமாகிறார்.

லியாண்டர் பெயஸ் ஜோடியாக நடிக்க நிறைய கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக அமீஷா படேல் தேர்வாகியுள்ளார். கஹோனா பியார் ஹை மூலம் இந்தியில் முன்னணி நடிகையானார். தமிழில் ‘புதிய கீதை’ என்ற தமிழ் படத்தில் விஜய்யுடன் நடித்தார்.

ராஜஸ்தானி எக்ஸ்பிரஸை இயக்குபவர் அசோக் கோஹ்லி.

இப்படத்தில் நடிப்பது லி்யாண்டர் கூறுகையில், “முதலில் சற்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் ஒரு மாறுதலுக்காக இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். இதன் கதையும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது” என்றார்.

நாயகி அமீஷா பட்டேல் கூறும்போது, “எனக்கு இதில் சவாலான வேடம். படத்தின் கதை ரொம்ப நாட்களுக்கு முன்பே எனக்கு தெரியும். ஆனால் கடந்த வாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். லியாண்டர் பெயஸ் இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவார்,” என்றார்.



Source: One India

 

விக்ரம் -அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்!

Anushka
மதராஸபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் – அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவஙகியது.

அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது.

உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், ‘அனுஷ்காவா, வேண்டாம்… பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)’ என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும்.

இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான ‘ஐயாம் ஸாம்’ என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள்.


 

பையனூரில் டிவி நடிகர்களுக்கு வீடு...ராம நாராயணன் தொடங்கி வைத்தார்!

Rama Narayanan
டிவி நடிகர்களுக்கென வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.

திருப்போரூரை அடுத்த பையனூரில் திரைப்பட துறையினருக்கு அரசு 96 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. இதில் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கர் இடமும் ஸ்டூடியோ கட்ட 15 ஏக்கரும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கரும், சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.வி. நடிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 600 சதுர அடி பரப்பு அளவில் 504 வீடுகளும் 800 சதுர அடிபரப்பில் 280 வீடுகளும் 1000 சதுர அடி பரப்பில் 364 வீடுகளும் ஒரு ஷாப்பிங் மாலும் கட்டப்படுகின்றன.

சின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் பணி துவக்க விழா பையனூரில் இன்று நடந்தது. விழாவுக்கு கண்மணி சுப்பு தலைமை தாங்கினார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை ஆகியோர் விழாவில் பங்கேற்று கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். ஷாப்பிங் மால் கட்டுமான பணியை நடிகை குஷ்பு தொடங்கிவைத்தார். கிளப் ஹவுஸை ராதாரவி தொடங்கி வைத்தார்.

விழாவில் ஆர்.கே.செல்வமணி, சத்யஜோதி தியாகராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் நவீன ஸ்டூடியோவை முதல்வர் கருணாநிதி ஜனவரி 14-ந்தேதி திறந்து வைப்பார் என்று ராமநாராயணன் தெரிவித்தார்.

சின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் செலவு உள்ளிட்டவற்றை சங்கமே ஏற்கிறது. அதே நேரம், திரைப்பட கலைஞர்களுக்கான வீடுகளுக்கு கணிசமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீடுகளை வாங்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை திரைப்பட தொழிலாளர்கள்.


 

இனி அரசு நிர்ணயிக்கும் கட்டணம்தான்! - திருப்பூர் திரையரங்குகள் முடிவு

http://www.arnolfini.org.uk/img/imagecache/230x230_Untitled-4.jpg
திருப்பூர்: இனி அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே டிக்கெட்டுகளை விற்கப் போவதாக திருப்பூர் நகர திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டதும், ஆரம்ப நாட்களில் வரும் கூட்டத்தைப் பயன்படுத்தி பெரும் வசூலை எடுக்க அதிக கட்டணம் வைத்து டிக்கெட் விற்கப்படுகிறது.

சென்னை நகரில் பெரும்பாலும் இப்படி நடப்பதில்லை. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இது எழுதப்படாத நடைமுறையாக உள்ளது.

ஆனால் இப்படி வசூலாகும் தொகை பெருமளவு விநியோகஸ்தர்களுக்கே போய் விடுவதாகவும், இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை எனவும கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மக்களிடையே தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே , இனிமேல் எப்போதும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே டிக்கெட் விற்பனை செய்வது என திருப்பூரில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

அட…!


 

நோ கால்ஷீ‌ட் :நயன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உதயநிதியை வைத்து எம்.ராஜேஷ் இயக்கப்போகும் படத்துக்கு நாயகியைத் தேடி வருகிறார்கள். தன் முந்தைய படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த நயன்தாராவையே போடலாம் என்று இயக்குநர் அணுகியபோது கையை விரித்துவிட்டாராம் நயன். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, பிரச்சனைகளை முடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்று விளக்கம் சென்னாராம். இருந்தாலும் நடிகையைச் சமாதானப்படுத்த முயன்று வருகிறார் இயக்குந‌ர்.




Source: Dinakaran
 

‘டைரக்டர் மட்டும் இல்லேன்னா… ‘-அதிர்ச்சியில் அஞ்சலி!

Anjali
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த திடீர் தாக்குதலில் இயக்குநரால் காப்பாற்றப்பட்டார் நடிகை அஞ்சலி.
‘இயக்குநர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் தப்பித்திருக்கவே முடியாது’, என்கிறார் அஞ்சலி அதிர்ச்சி விலகாமல்.
அஞ்சலியும் கரணும் ஜோடியாக நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படப்பிடிப்பு குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் நடந்தது. நேற்று பகல் அஞ்சலி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது 7 பேர் அடங்கிய கும்பல ஆட்டோவில் வந்து இறங்கி, ‘குமரி மாவட்டத்துக்காரன் கதையை எப்படி சினிமாவாக எடுக்கலாம்’ என கேட்டு இயக்குனர் வடிவுடையானை அடித்து உதைத்தது. சட்டை கிழிக்கப்பட்டது. கார் உடைக்கப்பட்டது. படப்பிடிப்பு சாதனங்கள் உடைக்கப்பட்டன.
ஹீரோயின் அஞ்சலியையும் தாக்க தேடினார்கள். அப்போது அஞ்சலியை போர்வையால் போர்த்தி ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைக்கும்படி உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார் இயக்குநர். இதர துணை நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினார்கள்.
“தக்க சமயத்தில் இயக்குநரும் உதவி இயக்குநர்களும் என்னைக் காப்பாற்றினார்கள். அந்த கும்பல் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று பயமாக இருக்கிறது..” என்றார் அஞ்சலி.
 

அஞ்சலியை மர்ம கும்பல் துரத்தியதால் பரபரப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாராகும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’. இந்த படத்தில் கரண், அஞ்சலி, சரவணன், கஞ்சாகருப்பு நடிக்கின்றனர். வடிவுடையான் இயக்குகிறார். நேற்று பிற்பகல் குலசேகரத்தை அடுத்த மங்கலம் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் காரில் அந்த இடத்துக்கு வந்தது. காரிலிருந்து இறங்கியவர்கள், இயக்குனர் வடிவுடையானை பார்த்து, Ôகுமரி மாவட்டத்தை இழிவுபடுத்தி படம் எடுக்கிறாயா?Õ எனக் கூறி சரமாரியாக அவரை தாக்கினர். இதில் வடிவுடையானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கும்பலில் சிலர், அஞ்சலியை நோக்கி வந்தனர். பயந்துபோன அஞ்சலி ஓட, அவரை அந்த கும்பல் துரத்தியது. அருகில் உள்ள வீட்டுக்குள் அஞ்சலி புகுந்தார். ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரின் காரை தாக்கிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அஞ்சலி கூறும்போது, ÔÔஷூட்டிங் நடக்கும்போது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அவர்கள் யார் என்றே தெரியாது. என்னை நோக்கி ஓடி வந்தனர். இதனால் பயந்து, அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து
தப்பினேன். அதை இப்போது நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறதுÕÕ என்றார்.


Source: Dinakaran


Source: India Glitz
 

ஏழுமலையானுக்கு ரூ 15கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய காஞ்சனா!

Jayalalitha with Kanchana
திருப்பதி: திருமலை ஏழுலையான் கோயிலுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை காஞ்சனா.
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்தவர் நடிகை காஞ்சனா. தெலுங்கிலும் ஏராளமான படங்கள் நடித்துள்ள இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
இந்த நிலையில், சென்னை ஜிஎன் செட்டி சாலையில் தனக்கு சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்து பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இந்த இடத்தில் கல்யாண மண்டபம் அல்லது சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு கூட காஞ்சனா மிகுந்த பணக்கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வந்தன. மனநிலை சரியில்லாததால் அவரை உறவினர்கள் கைவிட்டுவிட்டதாகவும், குடியிருக்க வீடு கூட இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை உடனடியாக மறுத்து விளக்கமளித்திருந்தார் காஞ்சனா.
அவரிடம் இவ்வளவு நிலம் இருப்பது பற்றி யாருக்கும் தெரியவும் இல்லை. அவரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை!
 

ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏஎல்எஸ். வீரய்யா எழுதிய 'சினிமாவும் நானும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி பேசியதாவது: வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற சிலர்தான். சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல் உறுதியாக இருக்க வேண்டும். சினிமாவுக்கு வருவதற்கு நாடக அனுபவம் வேண்டும். சினிமாவே செல்லுலாய்டு வடிவிலிருக்கும் நாடகம்தான். ரயில்வே வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ். 'உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறியா, எந்த தைரியத்தில் சினிமாவுக்கு வந்த?' என்று அவரிடம் நான் கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அவர் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் 4 மணி நேரம் காத்திருந்த காலம் உண்டு.
'கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள்(வாலி) 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே..' என்று என்னிடம் சிலர் சொல்வதுண்டு. அவர் 54 வயது வரைதான் வாழ்ந்தார். எனக்கு 80 ஆகிவிட்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்கள் எழுதி இருப்பார். அவர் எழுதிய 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற புத்தகம் வாழ்க்கை நெறிகளை விளக்கும். எனக்கு அதிகாரம் இருந்தால் அந்த புத்தகத்தை கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக்கி இருப்பேன். இவ்வாறு வாலி பேசினார்.


Source: Dinakaran
 

அசின் பிறந்த நாள்:கேக் ஊட்டி சல்மான் கான் வாழ்த்து!

Asin and Salman Khan
மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய அசினுக்கு, சல்மான்கான் கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அசினுக்கு இன்று 25வது பிறந்த நாள். காலையிலேயே பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடங்கிவி்ட்டன. மும்பையில் அசின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதிகள் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினர்.
தொடர்ந்து இரு படங்களில் அசினுடன் ஜோடியாக நடித்த நடிகர் சல்மான்கானும் வந்திருந்தார். பிறந்த நாள் கேக் ஊட்டி, அசினுக்கு அவர் வாழ்த்துத்தெரிவித்தார்.
இந்தி நடிகர்கள் ஷாகித் கபூர், நீல் நிதின் முகேஷ், தபு ஆகியோரும் வாழ்த்தினர். விஜய், சூர்யா போன்றோர் டெலிபோனில் வாழ்த்தினர்.
பிறந்தநாளையொட்டி அசினுக்கு ஏராளமான பரிசு பொருள்கள் குவிந்தன. பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி அசின் கூறுகையில், “பிறந்தநாளை எனது பெற்றோருடன் கொண்டாடுவதையே விரும்புகிறேன். இந்த முறை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எனது பள்ளி, கல்லூரி தோழிகள் தன்யா, ரோஸ் இருவரும் எனது பிறந்தநாளுக்காக இரு தினங்களுக்கு முன்பே இங்கு வந்து விட்டனர். ரொம்ப சந்தோஷமாக பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
இந்த பிறந்த நாளுக்கும் வழக்கம்போல பரிசுகளை அளித்தனர் என் பெற்றோர். கூடவே பர்த்டே ஸ்பெஷலாக கேரள உணவான அப்பம், அவல் பாயசம் என அசத்திவிட்டனர்…” என்றார்.
 

பாவனா கையில் கன்னடம் மட்டும்!

Bhavana
ஒரு நேரத்தில் படு பிசியாக நடித்து வந்த பாவனாவிடம் இப்போது கன்னடப் படங்கள் சிலவற்றைத் தவிர வேறு எதுவுமே இல்லையாம். இருந்தாலும் விசனப்படாமல் இருக்கும் படங்களில் நடித்து வருகிறாராம்
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, அங்கிருந்து தெலுங்கில் புகழ் பெற்று, பிறகு மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்த பிசி நடிகை பாவனா. மூன்று மொழிகளிலும் அவர் பெயர் சொல்லும்படியாக பல படங்கள் அமைந்தாலும் கூட முன்னணி நடிகையாக பெரிய அளவுக்கு வர முடியவில்லை.
இப்போது சுத்தமாக அவருக்கு எந்த மொழியிலும் படம் இல்லையாம். கன்னடத்தில் மட்டுமே சில வாய்ப்புகள் உள்ளனவாம். அதில் மட்டும்நடித்துக் கொண்டிருக்கிறாராம் பாவனா. ஆனால் அதுகுறித்து அவரிடம் கவலை இல்லை.
நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன். இது பாவனாவின் சிறந்த படம் என்று சொல்லும்படியான படமாக அது அமைய வேண்டும். அது முடித்த பிறகுதான் கல்யாணம் மற்றதெல்லாம். அதுவரை கல்யாணத்திற்கு நான் அவசரப்படவில்லை.
நான் கவர்ச்சியை நம்பவில்லை. தேவையில்லாமல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களுக்கு மோகத் தீயை மூட்ட விரும்பவில்லை. நல்ல கதை இருப்பவர்கள், நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைப்பவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதையைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாவனா.
பாவனா பேசுவதே சித்திரம் போலத்தான் இருக்கிறது!
 

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படப்பிடிப்பில் ரகளை!

Karan and Anjali
குலசேகரத்தில் நடந்த நடிகர் கரணின், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படப்பிடிப்பில் மர்ம கும்பல் புகுந்து ரகளை செய்ததால் படப்பிடிப்பு நிறுத்தபட்டது.
வடிவுடையான் இயக்கும் இப்படம், குமரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவமாம். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இன்று ஷூட்டிங் ஆரம்பித்த உடனே, திடீரென்று மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. அந்த கும்பலில் இருந்தவர்கள் படப்பிடிப்பு குழுவினரை கடுமையாக தாக்கினர். “எங்க ஊர் கதையை எப்படி நீ படமெடுக்கலாம்” என்று கூறிக்கொண்டே இயக்குநர் வடிவுடையானின் காரையும் அடித்து நொறுக்கினர். படத்தின் ஹீரோ கரண் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தால் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டது. தாக்குதல் குறித்து படப்பிடிப்பு குழுவினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
 

நமீதா கடத்திய கார் டிரைவர் :திருச்சியில் பரபரப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக திகழும் நமீதா நமீதா. திருச்சி விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்டார். சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார்.
அழைப்பு
முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.
டிரைவர் உடையில்…
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து வரவேற்றார். “கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள்” என்று நமீதாவிடம் கூறினார். அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினார். உடனே காரை மின்னல் வேகத்தில் அந்த இளைஞர் ஓட்டிச் சென்றார்.
அதிர்ச்சி
நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச்செல்ல வந்திருந்த டிரைவர், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரை பின்தொடர்ந்தார். இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு `செல்போன்’ மூலம் தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து விழா குழுவினர் கரூரில் இருந்து ஐந்தாறு கார்களில் திருச்சியை நோக்கி விரைந்தார்கள். நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கினார்கள். நமீதாவை கடத்த முயன்ற போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
ரசிகர்
போலீசில் பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியை சேர்ந்தவர். அவர் நமீதாவின் தீவிர ரசிகர் என்றும், நமீதா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அவரை தன் காரில் அழைத்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Source: Dinakaran
 

நமீதாவை கடத்த முயன்றது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

Namitha sizzles in Indra Vizha

நடிகை நமீதாவை கார் டிரைவர் கடத்த முயன்ற விவகாரத்தில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் இந்த சம்பவத்‌தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவி்ல்லை என்று நமீதா கூறியிருக்கிறார். தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை நமீதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து வருவதால் மானாட மயிலாட போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், ‌பொது நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் கலந்து கொள்கிறார். சினிமாவில் 30 நாள் 50 நாள் கால்ஷீட் கொடுத்து கஷ்டப்பட்டு நடிப்பதை விட, பொது நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரம், ‌2 மணி நேரம் கலந்து கொண்டாலே லட்சங்களில் சம்பளம் கிடைக்கிறது என்பதால் அவர் பொது நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் மூத்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நமீதா தனது மேனேஜருடன்‌ சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். திருச்சி விமான நிலையத்தில் டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர், ``கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள் என்று நமீயிடம் கூறியிருக்கிறார். நமீதாவும் அதை நம்பி காரில் ஏறினார்.

கார் மின்னல் வேகத்தில் புறப்பட்டது. சினிமா நடிகை என்பதால் மெதுவாக சென்றால் ரசிகர்கள் மொய்த்து விடுவார்கள் எனவேதான் வேகமாக செல்கிறேன் என்று அந்த டிரைவர் கூறியிருக்கிறார். இதற்கிடையில் நமீதாவை அழைத்துச் செல்வதற்காக வந்த உண்மையான டிரைவர், நமீதா வேறு காரில் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக விழாக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். நமீதாவை அழைத்து சென்ற மர்ம நபர் யார் என தெரியாமல் விழாக்குழுவினர் குழம்பினார்கள். நமீதா கடத்தப்பட்டது பற்றி அங்கிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து விழாக்குழுவை சேர்ந்தவர்கள் 6 கார்களில் திருச்சி‌க்கு விரைந்தனர். நமீதாவை ஏற்றி வந்த காரை அவர்கள் பார்த்து மறி்த்து நிறுத்தினர். நமீதாவை கடத்த முயன்ற மர்ம ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பெரியசாமி (26) என்றும், திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. நமீதாவை கடத்தியது ஏன்? என்று போலீசார் அவரிடம் கேட்டதற்கு, தான் நமீதாவின் தீவிர ரசிகன். அவர் கரூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக திருச்சி வருதாக கேள்விப்பட்டேன். நமீதாவை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஒரு ரசிகனாக அவர் முன்னால் போய் நின்றால் பேச மாட்டார் என்பதால், கார் டிரைவர் வேடத்தில் அவரிடம் சென்று பேசினேன். அவரும் அதை நம்பி காரில் ஏறினார். அவரை பத்திரமாக கரூரில் கொண்டு வந்து விட வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதனால்தான் கரூர் நோக்கி வந்தேன். அதற்குள் விழாக்குழுவை சேர்ந்தவர்கள் வந்து என்னை மடக்கி விட்டனர். ஆனாலும் நமீதாவுடன் ஒரே காரில் சென்றது சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியிருக்கிறார். ‌போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடந்த சம்பவம் குறித்து நமீதா கூறுகையில், திருச்சி விமான நிலையத்துக்கு கார் அனுப்பி வைப்பதாக விழாக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதனால்தான் அந்த டிரைவரை உண்மையான டிரைவர் என்று நம்பி காரில் ஏறினேன். விழாக்குழுவினர் வந்து அந்த காரை மறித்தபோதுதான் உண்மை நிலவரமே எனக்கு தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் ரொம்ப அதிர்ச்சியாகி விட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னமும் மீளவில்லை, என்றார். இந்த கடத்தல் முயற்சி சம்பவத்தால் விழாக்குழுவினரிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நமீதா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை புறப்பட்டு சென்றார்.
 

குளுகுளு ஆன கடு கடு வடிவேலு!

http://s.chakpak.com/se_images/84601_-1_564_none/vadivelu-wallpaper.jpg

காமெடி நடிகர்கள்  வடிவேலுவும், சிங்கமுத்துவும் நிலமோசடி விவகாரத்தில் மோதிக் கொண்ட சம்பவத்துக்கு பிறகு வடிவேலு ரொம்பவே மாறி விட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்துவாசிகர். முன்பெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கடு கடுவென இருக்கும் வடிவேலு சமீப காலமாக குளுகுளுவென கூலாக இருக்கிறாராம். காரணம் என்னவாம்? சிங்கமுத்துவுடனான மோதலுக்குப் பிறகு வைகைப்புயல் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் குறிப்பிடும்படி இல்லையாம். அதிலும் சுந்தர் சி.யுடன் சண்டை போட்டு வந்தபிறகு வின்னர், தலைநகரம் மாதிரியான பேசப்படும் அளவுக்கு காமெடி எதுவும் ஒர்க்-அவுட் ஆகவில்லை. தனுஷூடன் முறைத்துக் கொண்டதால் ‌வாய்ப்புகள் வேறு நடிகருக்கு போகிறது. இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்த வடிவேலு, சமீப காலமாக சினிமா வட்டாரத்தில் விறைப்பாக நடந்து கொள்வதை குறைத்துக் கொண்டிருக்கிறாராம். அதேநேரம் தனது காமெடிக் குழுவுவினரிடம் ஒரே மாதிரியான, சலித்துப் போன காமெடியாய் இல்லாமல் புதுசு புதுசா யோசித்து மக்களை சிரித்து ரசிக்க வைக்கும் காமெடியை உருவாக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
 

ஐங்கரனுடன் மோதிய பச்சான் டைரக்டர்!

Pachan clashes with Ayngaran
களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் படம் இயக்கி வரும் பச்சான் டைரக்டருக்கும், அந்த படத்தை தயாரிக்கும் ஐங்கரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம். ஒருவழியாக இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பிற்கு திருப்தி இல்லியாம். அந்த காட்சிகளை மட்டும் ரீ-ஷூ‌ட் பண்ணலாம் என்ற ஐங்கரனின் ஐடியாவை தட்டிக் கழித்து விட்டாராம் பச்சான். நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் படம். அதுல கருத்து சொல்றதுக்கோ, திருத்தம் சொல்றதுக்கோ ஒருத்தருக்கும் உரிமையில்லை. வேணும்னா இப்படியே ரிலீஸ் பண்ணுங்க. இல்லைன்னா விலை எவ்வளவுன்னு சொல்லுங்க. நானே படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிக்கிறேன் என்றாராம். நல்லதா போச்சு என்று விலை சொன்ன நிறுவனத்திடம் பணத்தை அப்புறமா வாங்கிக்கோங்க என்று அவர் சொல்லியிருக்கிறார். பள்ளிக்கூடம் போன்ற தரமான படங்களை இயக்கிய பச்சான் இப்படி வம்பு பண்ணுவார்னு எதிர்பார்க்கலை என்று புலம்பிக் கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
 

விமலா ராமனுடன் மோதிய ப்ரியாமணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் என்ற புதிய இயக்குநர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ப்ரியாமணியும் விமலா ராமனும் நடிக்கிறார்கள். சுமந்த் நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் ஆரம்பத்தில் ப்ரியாமணியை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதுவரை குழப்பமின்றி போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கில், விமலா ராமன் வந்ததும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாராம் ப்ரியாமணி. எனக்கு என்ன ரோல், விமலா ராமனுக்கு என்ன ரோல்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம். க்ளைமாக்ஸில் தன்னை விட விமலா ராமனுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பதால் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாராம் ப்ரியாமணி. “நான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை… நானும் விமலா ராமனு ஒண்ணா… நான் ஷூட்டிங்குக்கு வரலேன்னா என்ன பண்ணுவீங்க?”, என்று ப்ரியாமணி எகிற “பருத்தி வீரன்ல யார் நடிச்சிருந்தாலும் இந்த தேசிய விருது கிடைச்சிருக்கும். ஏன்னா அது எந்த நடிகையோட, நடிகரோட படமும் இல்லை. அமீர் சார் படம்…!” என தன் பங்குக்கு குத்த ஆரம்பித்துள்ளார் விமலா ராமன்.


Source: Dinakaran

 

சிறந்த கட்டுடல் கொண்ட நாயகியாக ஜெனிபர் அனிஸ்டன் தேர்வு

Jennifer Aniston
சிறந்த உடலமைப்புடன் கூடியவராக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த முக அமைப்பு, சிறந்த சிரிப்பு, சிறந்த அழகி, சிறந்த கால் அழகி, சிறந்த அசிங்கமான முகம் என்று ஏகப்பட்ட சர்வேக்களையும், கருத்துக் கணிப்புளையும் நடத்துவது மேற்கில் சகஜம். அந்த வரிசையில் தற்போது சிறந்த உடல் கட்டுடைய அழகி யார் என்பதை ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை அறிவித்துள்ளனர்.

இதில் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் முதலிடத்தைப் பிடித்து சிறந்த கட்டுடல் நாயகியாக உருவெடுத்துள்ளார். மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டை இவர் பெற்றுள்ளார்.

35 வயது முதல் 50 வயதுக்குட்பட்டோர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டனர். இக்கணிப்பில், மர்லின் மன்றோ, செரில் கோல், ஹாலி பெர்ரி ஆகியோர் எல்லாம் ஜெனிபருக்குப் பின்னால்தான் வந்துள்ளனர்.

தனது உடலை சிறப்பாக கவனித்துக் கொள்வதும், பாரமரிப்பதுமே ஜெனிபருக்கு சிறந்த உடல் கட்டு இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.


 

பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா? அன்புமணி சவால்!

Anbumani
மேட்டூர்: நிஜத்தில் சண்டை போடவே தெரியாத ஒரு நோஞ்சான் நடிகர் பத்து பேரை போட்டு அடிக்கிறார். அவர் தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதத் தயாரா என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

மேட்டூர், மேச்சேரியில் பாமக சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில், சினிமாக்காரர்களை கடுமையாக சாடினார். குறிப்பாக ஹீரோக்களை விளாசித் தள்ளினார்.

கடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால், பீர் அபிஷேகம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களால் சமுதாயம் பாதிக்கிறது. இளைஞர்களை பார்த்து எந்த நடிகரோ, கட்சித் தலைவரோ மது அருந்தாதீர்கள், புகை பிடிக்காதீர்கள், திரைப்படம் பார்த்து கெட்டு போகாதீர்கள் என்று சொன்னது உண்டா?

நல்ல திரைப்படங்கள் இப்போது வருவதில்லை. குத்துப்பாட்டு, அரைகுறை ஆடைகளோடு, ஆடல்- பாடல்களுடன் காட்சிகள் அமைகின்றன.

தொலைக்காட்சி தொடர்களில் மாமியார் கொடுமை, மருமகள், மாமியாரை கொல்வது, உள்பட குடும்ப வன்முறை தொடர்கள்தான் வருகின்றன. இவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நடிகர், நடிகையரின் கட்சியை நம்பி சிலர் ஓடுகிறார்கள். தமிழகத்தில் 43 ஆண்டுகளாக திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். மற்றவர்களுக்கு ஆளும் திறமை தகுதி இல்லையா?

கையில் கற்பூரம் ஏந்துகிறார்கள். அவர் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்கபிரதட்சணம் செய்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். முட்டிபோட்டு மலை ஏறுகிறார்கள்.

கட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். நடிகர் சம்பாதிக்க இப்படியெல்லாம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு சென்று விடு கிறார்கள். திரைப்படம் ஒரு பொழுது போக்குதான். அதில் வரும் காட்சி நிஜம் அல்ல.

ஒரு நோஞ்சான் நடிகர் 10 பேரை அடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே சண்டை போட தெரியாது. உண்மையிலேயே சண்டை போட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும், நான் வெற்றி பெற்று காட்டுகிறேன். எனக்கு டூப் போடத் தெரியாது. தமிழகத்தில் உண்மையான கதாநாயகன் டாக்டர் ராமதாஸ்தான் என்றார் அன்புமணி.


 

‘தளபதி’ பாதிப்பில் பேசியதுதான் அந்த ‘நண்பேன்டா’ வசனம்! – சந்தானம்

Santhanam
பாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று தாக்குப் பிடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்தான். இதற்கு சந்தானம் – ஆர்யா கூட்டணியின் காமெடி சரவெடியே காரணம்.

இந்தப் படத்தில் வரும் நண்பேன்டா வசனம் படு பாப்புலர். ஆனால் இந்த ஒற்றைச் சொல்லை, தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினி சொல்வாரே..’நீ என் நண்பேன்டா’ என்று.. அந்தக் காட்சி பாதிப்பில்தான் வைத்ததாகச் சொல்கிறார் சந்தானம்.

“சின்ன வயசிலேருந்தே நான் தலைவர் ரஜினி ஃபேன். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட ரஜினி சார் ஸ்டைலில்தான் ஹேர் கட் பண்ணிக்குவேன். இதுக்காக எங்க பிடி மாஸ்டர்கிட்ட வாங்கி அடி கொஞ்சமல்ல. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்.

நான் நடிக்க வந்த பிறகு, எப்படியாவது அவர்கூட நடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது குசேலன்ல நிறைவேறினாலும், அவரோட வர்ற மாதிரி சீன் எதுவும் அமையல. இப்போ எந்திரன்ல அந்த வாய்ப்பு கிடைச்சது.

சிலர் சொல்றாங்க, எனக்கும் கருணாசுக்கும் படத்தில ஸ்கோப் இல்லையேன்னு. இந்தக் கதையில எங்களுக்கு இந்த அளவுதான் வேலைன்னு தெரியும். இன்னொன்னு இது ரஜினி சார் படம். அவர் கூட நடிக்கணும்ங்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிரதான நோக்கமா இருந்தது. ஒரு ரசிகனாத்தான் நான் ரஜினி சார்கூட இருந்தேன். தூரத்திலேருந்து பாத்துக்கிட்டிருக்கிற ரசிகன் ஒருத்தனுக்கு, திடீர்னு 30 நாள் ரஜினி சார் கூடவே இருக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சா…? அதை விவரிக்க வார்த்தை இல்லைங்க.

செட்ல எங்க கூடத்தான் சாப்பிட்டார் ரஜினி சார். அவர் நினைச்சிருந்தா உலகத்திலேயே காஸ்ட்லியான கேரவன்ல சொகுசா இருந்திருக்க முடியும். ஆனா ஒரு நாள்கூட அவர் கேரவன் கேட்கல. அவரோட சீன் முடிஞ்சதும், என்கிட்டயும் கருணாஸ் கிட்டேயும் ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டு, எங்களோட எதிர்காலத்துக்கான யோசனைகளை சொல்லி…. சான்ஸே இல்ல சார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் இல்ல. நிஜ சூப்பர் ஸ்டார்…,” என்றார்.



Source: dinakaran-kolly

 

பாலா-மணிரத்னத்துக்கு தங்க அடையாள அட்டை...வழங்கினார் ரஜினி!

Mani Rathnam and Bala
இயக்கியது நான்கே படங்கள் என்றாலும், தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு கொண்டுபோனவர் இயக்குநர் பாலா. அவரது பங்களிப்பை மெச்சும் வகையில் தங்க அடையாள அட்டை வழங்கியது இயக்குநர்கள் சங்கம்.

சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த இயக்குநர்கள் சங்க 40வது ஆண்டுவிழாவில் இந்த அட்டையை வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பாலாவைத் தவிர, தமிழ் சினிமாவுக்கு தேசிய அளவில் விருதுகள் பெற்றுத் தந்த மணிரத்னம், அகத்தியன் ஆகியோரின் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் தங்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தங்களுக்கு அளிக்கப்பட்டஇந்த கவுரவத்துக்காக நன்றியை தெரிவித்துக் கொண்டனர் மூன்று இயக்குநர்களும்.

 

இயக்குனர்கள் சங்கத்துக்கு வயது 40 : திரையுலகம் கொண்டாட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க 40-வது ஆண்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. இயக்குனர்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை மத்திய அமைச்சர் நெப்போலியன் திறந்து வைத்தார். பிறகு இசை நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கே.பாலசந்தர், பாரதிராஜா முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் ராம நாராயணன், கே.விஸ்வநாத், நாகபரணா, ஹரிஹரன் தலைமை வகித்தனர். எஸ்.பி.முத்துராமன் வரவேற்றார். இசை நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நெப்போலியன் பாட்டுப் பாடி, தொடங்கி வைத்தார். மலையாள நடிகர் மம்மூட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சரத்குமார், நடிகை சந்தியா மற்றும் அனுராதா ஸ்ரீராம், திப்பு, சின்மயி, சுசித்ரா, மாலதி, ரஞ்சித் உட்பட பல பாடகர், பாடகிகள் பாடினர். இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், தேவா, சபேஷ்-முரளி, யுவன்சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, தினா, கார்த்திக் ராஜா உட்பட பலர் இசை அமைத்தனர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. இதில், வெளிநாட்டு லேசர் நடனம் நடைபெற்றது. பின்னர் பாரம்பரிய இசையான தப்பாட்டம், களரி போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாலசந்தர், பாரதிராஜா படங்களின் பாடல்களுக்கு நடிகைகள் தேஜாஸ்ரீ, அமலா பால், ராம்ஜி, சஞ்சீவ், சுஜா, சஞ்சனா சிங், தேவயானி, ரோஜா, ராஜ்கபூர், ரமேஷ்கண்ணா, பப்லு உட்பட பலர் ஆடினர். சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, டி.பி.கஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி மற்றும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிங்கப்புலி, மயில்சாமி, சித்ரா லட்சுமணன், இளவரசு நடித்த காமெடி நாடகம் இடம்பெற்றது. பின்னர், காயத்ரி ரகுராம் குழுவினரின் நடனம் இடம்பெற்றது.

வசந்த் இயக்கிய பாலசந்தர், பாரதிராஜா பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. விழாவில், பழம்பெரும் இந்தி இயக்குனர் கோவிந்த் நிகலானி, கவுரவிக்கப்பட்டார். அவருக்கு மணிரத்னம் நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் 'எந்திரன்' பட பாடல்களுக்கு சமீரா ரெட்டி நடனம் ஆடினார். இயக்குனர் பார்த்திபன் கவிதை படிக்க, அதை மம்தா மோகன்தாஸ் பாடலாக பாடினார். அதற்கு ராஜேஷ் வைத்யா இசை அமைத்தார். விழாவில், தெலுங்கு இயக்குனர்கள் கே.விஸ்வநாத், கே.ராகவேந்திர ராவ், கோடி ராமகிருஷ்ணா, ஏ.கோதண்டராம ரெட்டி, கன்னட இயக்குனர்கள் துவாரகேஷ், நாகபரணா, கே.எஸ்.ராவ், மலையாள இயக்குனர் ஹரிஹரன், தமிழ் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, ராம நாராயணன் ஆகியோர் அவர்களது சாதனைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் மணிரத்னம், அகத்தியன், பாலா ஆகியோருக்கு தங்கத்திலான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ரஜினி-கே.பாலசந்தர், விக்ரம்-தரணி, தனுஷ்-வெற்றிமாறன், கார்த்தி-தமன்னா, பாரதிராஜா-இளையராஜா, விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகரன், சரத்குமார்-ராதிகா, ஆர்.கே.செல்வமணி-ரோஜா, கார்த்திக்-ராதா, விவேக்-நதியா, சத்யராஜ்-குஷ்பு, வாலி-எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் ருசிகர கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இயக்குனர் லிங்குசாமி ஒரு காட்சியை விளக்க, அதற்கு இசை அமைப்பாளர் யுவன் இசை அமைக்க, நா.முத்துக்குமார் பாடல் எழுதினார். பாடல் உருவாகும் விதத்தை இப்படி செய்து காட்டினார்கள். வெங்கட் பிரபுவும், விஷ்ணுவர்தனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை விஜயசாரதி, இயக்குனர்கள் பிரியா.வி, ஆர்.கண்ணன், ஜெயம் ராஜா, தருண்கோபி, கவுதம் வாசுதேவ் மேனன், விஜய், பொன்வண்ணன் உட்பட பலர் தொகுத்து வழங்கினர்.


Source: Dinakaran
 

சிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசை!

Kamal
கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தின் இசை சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்படுகிறது.
இதற்கான விரிவான ஏற்பாடுகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் இறங்கியுள்ளது.
மன்மதன் அம்பு படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி அமையும்.
சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20 -ம் தேதி நடக்கும் இந்த விழாவில் கமல்ஹாஸன் உள்ளிட்ட படத்தின் கலைஞர்களும், தமிழ் சினிமா பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அனைத்துப் பாடல்களையும் இசை நிகழ்ச்சியாக மேடையில் பாடவைக்கிறார்.
ஆடியோ வெளியீட்டுக்கு முன் தினம், 500 ரசிகர்களை, ஒரு சொகுசு கப்பலில் அழைத்துச் செல்கிறது மன்மதன் அம்பு டீம்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.
 

உதயநிதியுடன் நடிக்க மறுத்தார் நயனதாரா

Nayantara
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் நயனதாரா என்கிறார்கள்.
ஆதவன், விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் உதயநிதி.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குநர் ராஜேஷ்தான், உதயநிதியை ஹீரோவாக்குகிறார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் உதயநிதி.
தற்போது உதயநிதிக்கு ஜோடி தேடிக் கொண்டிருக்கிறார்கள். நயனதாராவைக் கேட்டுள்ளார் ராஜேஷ். ஆனால் அவர் சரி என்று சொல்ல மறுத்து விட்டாராம். மேலும், இப்படத்தில் நடிக்கும் ஆர்வத்திலும் அவர் இல்லையாம். அவர் தற்போது வேறு மாதிரியான சூழலில் சிக்கியிருப்பதால் புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே இந்த நிராகரிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.
இருந்தாலும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறாராம் ராஜேஷ். அதேசமயம், வேறு நாயகிகள் குறித்தும் பரிசீலனை நடந்து வருகிறதாம்.
இப்படத்திற்கு நண்பேன்டா என்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனத்தையை தலைப்பாக்கலாம் என்று தெரிகிறது.
 

பெட்டியில் முடங்கிய 70படங்கள்!

http://www.impactstudio3d.com/IMAGES/forjavascript/PictureBox/film-roll000.gif 
பெரும் கடன் சுமை, படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன் வராத நிலை, தரமற்ற கதை போன்றவற்றால், ஸூட்டிங் – போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் முடிந்தும் 70 தமிழ்ப் படங்கள் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றன.
இவை இந்த ஆண்டு சென்சார் செய்யப்பட்டவை என்பதால், வரும் டிசம்பர் இறுதிக்குள் எப்படியாவது அனைத்துப் படங்களையும் வெளியிட்டுவிடும் முயற்சியில் உள்ளனர்.
“வருடம் முழுவதும் சும்மா இருந்துவிட்டு வருடக் கடைசியில் குய்யோ முறையோ என்று புலம்புவது தமிழ் சினிமாக்காரர்களுக்குப் புதிதல்ல.
இப்போது வெளியாகாமல் உள்ள 70 படங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த 6 மாதங்களுக்கும் முன்பே தயாரானவை. ஆனால் யாரும் வாங்க முன்வராத படங்கள்.
இவற்றை வேறு வழியின்றி இப்போது சொந்தமாகவேனும் வெளியிடத் தயாராகும் தயாரிப்பாளர்கள் இதனை முன்பே செய்திருந்தால், இத்தனை நாட்களுக்கான வட்டியையாவது தவிர்த்திருக்கலாமே” என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 10 வாரங்கள் உள்ளன. அதற்குள் இந்த 70 படங்களும் ரிலீசாகவிருக்கின்றன.
 

கன்னடத்திற்குப் போனார் அபிநயா

Sasikumar and Abhinaya
நாடோடிகள் படம் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களைப் பெற்ற ஆந்திரத்து அபிநயா தற்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாதவராக இருந்தாலும், அந்தக் குறை சற்றும் தெரியாமல், மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூடியவர் அபிநயா. நாடோடிகள் படத்தில் அவரது நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது.
நாடோடிகள் மூலம் நடிகையான அபிநயா தற்போது தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் புக் ஆகியுள்ளார். இந்த நிலையில் தற்போது கன்னடத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.
நாடோடிகள் படத்தின் கன்னடப் பதிப்பில், தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்கிறார் அபி.
கன்னட இளம் சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் இப்படத்தில், சசிகுமாரின் ரோலில் நடிக்கிறார். அவரது தங்கையாக வருகிறார் அபிநயா. தெலுங்கு நாடோடிகளிலும் அபிநயா அதே வேடத்தில்தான் நடித்திருந்தார். அதில் அவரது அண்ணனாக வந்தவர் ரவி தேஜா.
மூன்று மொழிகளிலும் ஒரே கேரக்டரில் நடித்த பெருமை இதன் மூலம் அபிநயாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
அபிநயா நல்ல டான்சரும் கூட. அவருக்கு குரு என்றுயாருமே கிடையாதாம், அவராகவே நடனத்தை கற்றுத் தேர்ந்துள்ளார். இது போக 3 வயது முதலே மாடலிங்கிலும் கலக்கி வருபவர் அபிநயா என்பது குறிப்பிடத்தக்கது.
 

10 பேருக்கு பார்வை போன விவகாரம்:அசினுக்கு நோட்டீஸ்!

Asin
இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ்!
அசின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்றதால் பார்வை பறிபோன இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு அரசு சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை அசின் பங்கேற்றதுடன், முழு செலவையும் ஏற்றார். இதுபோன்ற முகாம்களை இனி தானே முன்னின்று நடத்துவதாகவும் அறிவித்தார்.
இந்த கண் சிகிச்சை முகாமில் 300 ஈழத் தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்யப்பட்டது. லென்ஸ் வாங்கியதிலிருந்து அனைத்து செலவுகளையும் அசின்தான் ஏற்றார். ஆனால் கண் சிகிச்சை பெற்ற 10 தமிழர்கள் பார்வை பாதிக்கப்பட்டது. பலருக்கு பார்வை பறிபோகும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடந்து நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் நோட்டீசு அனுப்பபட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர்அணி பொது செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி நடிகைஅசினுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், “இலங்கையில் அரசு சார்பில் ஏற்பாடு செய்த கண் சிகிச்சை முகாமில் 300 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான செலவை நீங்கள்தான் (அசின்) ஏற்றீர்கள். கண் சிகிச்சை செய்த 10 பேருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது. அவர்களுக்கு கண்ணில் தவறான லென்ஸ் பொருத்தப்பட்டதால் கண் பார்வை போய்விட்டது. மேலும் பலருக்கு கண் பார்வை போகும் நிலை உள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால் நடிகை அசின் ஈழத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவோம்…” என்று கூறியுள்ளார்.
சாமி சிலையை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்தவர்தான் இந்த ராம்நகர் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
 

‘ஒச்சாயி’க்கு வந்த சோதனை!

Ochaayee Movie
முக்குலத்தோர் சமூகத்தினரின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று தமிழக அரசு கேட்டிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சமூகங்களில் ஒன்று முக்குலத்தோர் சமுதாயம். இந்த சமுதாயத்தினரின் குல தெய்வங்களில் ஒன்று ஒச்சாயி அம்மன். இந்தப் பெயரைத் தழுவி முக்குலத்தோர் சமுதாயத்தினர் பெயர்களை வைப்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம்.
ஒச்சு, ஒச்சாயி என்ற பெயர்கள் ஒவ்வொரு முக்குலத்தோர் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படுவதைக் காணலாம். முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தையின் பெயர் ஒச்சாத் தேவர் என்பதாகும்.
இப்படி முக்குலத்தோர் சமுதாயத்தின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயரை தமிழ்ப் பெயரா என்று கேட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழக அரசு.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ. ஆசைத்தம்பி என்பவரது இயக்கத்தில்உருவாகியிருக்கும் படம்தான் ஒச்சாயி. புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தமிழ்ப் பெயர்களில் அமைந்த திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி சலுகையை தர மறுத்து விட்டதாம் தமிழகஅரசு. காரணம், ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று கேட்டு மறுத்துள்ளது.
இது தென் மாவட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வ குவார்ட்டர் கட்டிங் என்ற பெயரிலேயே ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. இதற்கு கேளிக்கை வரி விலக்கும் அளித்துள்ளனர். அப்படி இருக்கையில் ஒரு தமிழ்ச் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயரைக் கொண்ட படத்துக்கு தமிழ்ப் பெயரா என்று கேட்டிருப்பது வேதனை தருவதாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் கூறுகிறார்கள்.
இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி கூறுகையில், உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன்.
எனக்கு மட்டுமல்ல, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.
ஒச்சாயி தமிழ்ப் பெயர்தான்-தா.பாண்டியன்
இந்த நிலையில், ஒச்சாயி என்பது தமிழ்ப் பெயர்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.
ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி – தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம். தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.
‘ஒச்சாயி” என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும். எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 

கர்நாடக அரசுக்கு ரூ 3.38கோடி வருவாய் தந்த எந்திரன்!

Rajini and Aishwarya Rai
பெங்களூரு: சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை திரையிட்ட திரையரங்குகள் கேளிக்கை வரியாக மட்டும் ரூ 3.38 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில சரித்திரித்தில் இதுவரை எந்தப் படம் மூலமும் கிடைக்காத கேளிக்கை வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ரஜினியின் சிவாஜிக்கு மட்டுமே ரூ 1.3 கோடி வரியாகக் கிடைத்தது.
எந்திரன் படம் பெங்களூர் நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. புறநகர்களிலும் சேர்த்து 58 திரையரங்குகள். இவை தவிர மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தப் படம் வெளியானது. அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
பெங்களூரில் எந்திரனுக்கு கட்டணமாக ரூ 750 முதல் 1500 வரை கவுன்டர்களிலேயே விற்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக மாநில வணிக வரித்துறை இணை ஆணையர் ஜைபுன்னிசா கூறுகையில், “டிக்கெட் கட்டணத்தை அதிகமாக வைத்து விற்றதால் வணிக வரித்துறை பெங்களூர் தியேட்டர்களை சோதனையிட்டதாகக் கூறப்பட்டதில் உண்மையில்லை. வேறு வழக்கமான சோதனைகளுக்காகவே சில திரையரங்குகளுக்கு அதிகாரிகள் சென்றார்கள்.
எந்திரன் படத்தைப் பொறுத்தவரை, கர்நாடக அரசுக்கு நல்ல வருவாயைத் தந்துள்ளது. இந்தப் படம் ரிலீஸான முதல்வாரம் மட்டும் பெங்களூர் திரையரங்குகள் மூலம் ரூ 1.67 கோடி கேளிக்கை வரி கிடைத்தது. இரண்டாவது வாரம் இது ரூ 81 லட்சம். உண்மையில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வைத்து விற்பதை அரசே அனுமதித்தது. இதன் மூலம் ஒரு டிக்கெட்டுக்கு ரூ 118 வரை கேளிக்கை வரியாகக் கிடைத்துள்ளது.
கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இந்தப் படம் மூலம் ரூ 90 லட்சம் வரை வரை அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இது இதுவரை வேறு எந்தப் படம் மூலமும் கிடைக்காதது”, என்றார்.
இதற்கு முன் ரஜினியின் சிவாஜி படம் மூலம் ரூ 1.3 கோடி வரை அரசுக்கு கேளிக்கை வரியாகக் கிடைத்ததாக ஜைபுன்னிசா கூறினார்.
எந்திரன் பட கர்நாடக வெளியீட்டு உரிமை ரூ 9.5 கோடிக்கு விற்கப்பட்டது. இந்தத் தொகையை முதல் வாரத்திலேயே அந்த விநியோகஸ்தர் எடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.