ஆர்யா,நடிகைகள் அனுஷ்கா,தமன்னா உட்பட 74பேருக்கு கலைமாமணி விருது

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2485.jpg
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் ÒகலைமாமணிÓ எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது. 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அப்பரிந்துரைகளையேற்று முதல்வர் கருணாநிதி அறிவிப்பு செய்துள்ளார்.

2008ம் ஆண்டுக்கான விருதுகள்: சசிரேகா பாலசுப்ரமணியன் (நாட் டியம்), காயத்ரி சங்கரன்(கர்நாடக இசை) வே.நாராயணப் பெருமாள்(கர்நாடக இசை) எம்.வி. சண்முகம்(இசைக் கலைஞர்), இளசை சுந்தரம்(இயற்றமிழ் கலைஞர்), பி.லெட்சுமி நரசிம்மன்(தவில் கலைஞர்), காளிதாஸ், திருமாந்திரை (நாதஸ்வரக் கலைஞர்). பிரேமா ஜெகதீசன்(நாட்டியம்), ரோபோ சங்கர்(சின்னத்திரை கலைஞர்), நாமக்கல் வேணுகோபால்(கிளாரிநெட்), திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி (நாதஸ்வரக் கலைஞர்கள்).

கவிக்கொண்டல் செங்குட்டுவன்(இயற்றமிழ் கலைஞர்), ச.சுஜாதா(நாட்டியம்), ராணி மைந்தன்( இயற்றமிழ் கலைஞர்), ஜி.கே. ராமஜெயம் (ஓவியக் கலை ஞர்), கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்(இயற்றமிழ் கலைஞர்), தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா (பரதநாட்டியக் கலைஞர்கள்), சி.வி. ரமேஸ்வர சர்மா(சமையல் கலைஞர்), திருமுருகன்( சின்னத்திரை இயக்கு நர்), பரத்வாஜ்(இசையமைப்பாளர்), ராஜீவ் மேனன்(ஒளிப்பதிவாளர்), சிற்பி குட்டப்பன் நாயர்(சிற்பக் கலைஞர்), தோஹா பேங்க் சீதாராமன்(பண்பாட்டுக் கலை பரப்புனர்). என்.எத்திராசன்(கலைப் பரப்புனர்), கருணாஸ் (நகைச்சுவை நடிகர்).

2009ம் ஆண்டுக்கான விருதுகள்:

காயத்ரி கிரீஷ் (கர்நாடக இசை), சேக்கிழார்(சின்னத்திரை வசனகர்த்தா), சாக்ஷி சிவா(சின்னத்திரை நடிகர்), மாளவிகா(சின்னத்திரை நடிகை), பூவிலங்கு மோகன்(சின்னத்திரை நடிகர்), எஸ்.முத்துராமலிங்கம் (கூத்துக் கலைஞர்), பி.முருகேஸ்வரி(கரகாட்டக் கலைஞர்), ரேவதி சங்கரன்(சின்னத்திரை நடிகை), தஞ்சை சின்னப்பொன்னு குமார்(கிராமியப் பாடகர்), எல். ஜான்பாவா(சிலம்பாட்டக் கலைஞர்), ரேவதி(வில்லுப்பாட்டுக் கலைஞர்), கே. கருப்பண்ணன்(ஒயிலாட்டக் கலைஞர்).

கே.ஏ. பாண்டியன்(நையாண்டி மேளக் கலைஞர்), எம். திருச்செல்வம்(நையாண்டி மேளக் கலைஞர்), சிவகங்கை வி.நாகு(நையாண்டி மேளக் கலைஞர்), டி.சேகர்(கிராமியக் கருவி இசைக் கலைஞர்), மு.இளங்கோவன்(கிராமியக் கலை பயிற்றுனர்), சா.கந்தசாமி(இயற்றமிழ்), ராஜேஷ் குமார்(இயற்றமிழ்), நாஞ்சில் நாடன்(இயற்றமிழ்), ரோகிணி (குணச் சித்திர நடிகை), சரண்யா (குணச் சித்திர நடிகை), சின்னி ஜெயந்த் (நகைச்சுவை நடிகர்).

2010ம் ஆண்டுக்கான விருதுகள்:

பொன்.செல்வ கணபதி(இயற்றமிழ்), பேராசிரியர் தே.ஞானசேகரன்(இயற்றமிழ்), டாக்டர் சு. நரேந்திரன் (இயற்றமிழ்), டாக்டர் தமிழண்ணல்(இயற்றமிழ்), திண்டுக்கல் ஐ.லியோனி (இலக்கியச் சொற்பொழிவாளர்), சொ. சத்தியசீலன்(சமயச் சொற் பொழிவாளர்), தேச.மங்கையர்க்கரசி(சமயச் சொற்பொழிவாளர்), டி.வி. கோபால கிருஷ்ணன்(இசை ஆசிரியர்), கே.என். சசிகிரண்(குரலிசைக் கலைஞர்), குடந்தை ஜெ. தேவிபிரசாத்(வயலின் கலைஞர்).
ஐ. சிவக்குமார்(மிருதங்க ஆசிரியர்), என்.எஸ்.ராஜம்(மிருதங்க கலைஞர்), ஸ்ரீனிவாசன்(வீணை கலைஞர்), ராஜேஷ் வைத்யா(வீணைக் கலைஞர்), திருவாரூர் எஸ். சாமிநாதன்(புல்லாங்குழல்), கே.வி. இராமானுஜம்(புல்லாங்குழல்), டாக்டர் தி.சுரேஷ் சிவன்(தேவார இசைக் கலைஞர்), கல்யாணி மேனன்(மெல்லிசைப் பாடகி), திருக்கடையூர் முரளிதரன்(நாதஸ்வரக் கலைஞர்), ரெட்டியூர் செல்வம்(தவில் கலைஞர்).

ஏ.ஹேம்நாத்(பரத நாட்டியம்), பிரசன்னா ராமசாமி(நாடகக் கலைஞர்), எப்.சூசை மாணிக்கம்(நாடக நடிகர்), ஆர்யா (திரைப்பட நடிகர்), அனுஷ்கா (திரைப்பட நடிகை), தமன்னா (திரைப்பட நடிகை). விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) மாலையில் நடைபெறும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத் திரை விருதுகளும்&பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்படும். முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குகிறார்.
 

ஆரண்ய காண்டத்துக்கு 53கட் டிரிபியூனல் செல்ல படக்குழு முடிவு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2490.jpg
‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்கு மறு ஆய்வுக்குழு 53 கட் கொடுத்துள்ளதால், டிரிபியூனலுக்கு செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘ஆரண்ய காண்டம்’. இதில் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, யாஷ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் முடிந்து தணிக்கைக்கு சென்றது. படத்தை பார்த்த தமிழக தணிக்கை அதிகாரிகள், படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து மறு ஆய்வுக்குழுவுக்கு படத்தை கொண்டு சென்றனர். படத்தை பார்த்த அவர்கள், 53 கட் கொடுத்துவிட்டு, ஏ சான்றிதழ் அளித்தனர். ‘இத்தனை கட் கொடுத்துவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்ததால் படக்குழுவினர் அதை வாங்க மறுத்துவிட்டனர். இதுபற்றி இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் கேட்டபோது, 1397967985 சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் ஜூரி விருது வாங்கிய படம் இது. வசனங்களை மாற்ற வேண்டும் என்றும், வன்முறை அதிகமாக இருக்கிறது என்றும் 53 கட் கொடுத்தார்கள். இத்தனை கட் கொடுத்தால் படத்தின் கதையே மாறிவிடும். அத்தனை கட் கொடுத்துவிட்டு ‘ஏ’ சான்றிதழ்தான் தருவோம் என்கிறார்கள். இத்தனை கட் கொடுத்தபின் ஏ சான்றிதழை எப்படி ஏற்க முடியும்? அதனால் டிரிபியூனலுக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளோம்‘ என்றார்.

Source: Dinakaran
 

நயன்தாராவுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2491.jpg
நயன்தாராவுக்கு அம்மாவாக நடிக்க, முதலில் தயங்கினேன் என்று மனிஷா கொய்ராலா கூறினார். ‘எலெக்ட்ரா’ என்ற மலையாள படத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. இதில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் இருந்தது. ஏனென்றால் நயன்தாராவுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை. சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கும். அதனால் இது வொர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இயக்குனர் ஷ்யாம் பிரசாத் நம்பிக்கை அளித்தார். அதன்பிறகே ஈடுபாட்டுடன் நடித்தேன். இதில் என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நயன்தாராவும் நானும் அதிகமான காட்சிகளில் ஒன்றாக நடிக்கவில்லை. இருந்தாலும் நயன்தாரா இனிமையானவர். இந்தப் படத்தில் நடித்தபோது நான் ஆச்சர்யப்பட்ட நடிகர், பிரகாஷ் ராஜ். எந்தவொரு விஷயத்தையும் மிகவும் இயல்பாக செய்துவிடுகிற சிறந்த நடிகர் என்பதை இந்த ஷூட்டிங்கில் உணர்ந்தேன். தமிழில் தனுஷுக்கு மாமியாராக நடித்துள்ள ‘மாப்பிள்ளை’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் காட்சிக்கு காட்சி காமெடி இருக்கும். ‘எலெக்ட்ரா’ எதார்த்தமான படம் என்றால் ‘மாப்பிள்ளை’ கமர்சியல் படம்.
Source: Dinakaran
 

முத்துக்கு முத்தாக பாடல் வெளியீடு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2489.jpg
பாண்டியநாடு தியேட்டர்ஸ் சார்பில் தயாராகும் படம், ‘முத்துக்கு முத்தாக’. ராசு மதுரவன் இயக்குகிறார். கவிபெரியதம்பி இசையில் நா.முத்துக்குமார், நந்தலாலா, உமா சுப்பிரமணியன், ராசு மதுரவன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதன் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. மணிவண்ணன் வெளியிட, ஆர்.கே.செல்வமணி பெற்றார்.

விழாவில் சரண்யா பேசுகையில், ‘இதற்குமுன் ‘களவாணி’ படத்தில் நானும், இளவரசும் ஜோடியாக நடித்தோம். பொருத்தமான ஜோடி என்றார்கள். இந்தப் படத்திலும் நடித்துள்ளோம். மலையாள படங்களில், சின்ன கேரக்டர் கூட ரசிகர்கள் மனதில் நிற்கும்படி அமைந்திருக்கும்.

அதுபோல், இந்தப் படத்தில் நடித்த அனைவரும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள். எல்லா படத்திலும் நான், மகன்களுக்கு அம்மாவாகவே நடிக்கும் வாய்ப்பு அமைகிறது. நிஜத்தில் நான் இரு மகள்களுக்கு அம்மா. ஒரு படத்திலாவது மகளுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஆசை’ என்றார்.
விழாவில் இளவரசு, நட்ராஜ், விக்ராந்த், ஹரீஷ், வீரசமர், பிரகாஷ், கஜினி, மோனிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அருள்ராசன் தொகுத்து வழங்கினார்.
Source: Dinakaran
 

காதலர் குடியிருப்பில் உண்மை சம்பவம்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2487.jpg
வசிஷ்டா பிக்சர்ஸ் சார்பில் இந்துமதி தயாரிக்கும் படம், ‘காதலர் குடியிருப்பு’. அனீஷ், ஸ்ருதி, சரண்யா, அவினாஷ் நடிக்கின்றனர். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் 11&ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது:

‘குப்பி’க்கு பிறகு நான் இயக்கியுள்ள உண்மை சம்பவம், இந்தப் படம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பெங்களூரில் நடந்த சம்பவம் இது. உண்மை சம்பவத்தை படமாக்கும்போது, நிறைய கவனம் தேவை. நிஜ சம்பவங்களுக்கு மாறாக எதையும் மிகைப்படுத்தி சொல்ல முடியாது. காதலர்களின் நிஜ உணர்வுகளை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வகையில், படத்தை உருவாக்கியுள்ளேன். இதில் நடித்த அனைவரும் அந்தந்த கேரக்டராகவே மாறிவிட்டனர். பெங்களூரில் எந்தெந்த பகுதியில் சம்பவம் நடந்ததோ, அங்கு சென்று காட்சிகளை படமாக்கினேன். அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து சந்தனக்கடத்தல் வீரப்பன் கதையை படமாக்குகிறேன். பிறகு பிரபாகரன் கதையை இயக்குகிறேன்.
Source: Dinakaran
 

ரஜினி புதுப்படம் ராணா மார்ச்சில் படப்பிடிப்பு

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-2486.jpg
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ராணா; படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது. ஆக்கர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ‘ராணா’ என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

இதில், ரஜினிகாந்த் 3 மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார். அவர் ஏற்கனவே மூன்று முகம் படத்தில் 3 வேடத்தில் நடித்தார். அதன்பின் இப்போது 3 வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரத்தினவேலு ஒளிப்பதிவும். பட தொகுப்பை ஆன்டணியும் கவனிக்கின்றனர். டெக்னிக்கல் ஸ்பெஷல் எபக்ட்ஸ் விஷயங்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் கவனிக்கிறார்.
Source: Dinakaran
 

கடன் வாங்காமல் வாழ முடியாது :எத்தன் சொல்லும் கருத்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
‘களவாணி’ படத்தை அடுத்து, ஷெராலி பிலிம்ஸ் சார்பில், நசீர் தயாரிக்கும் படம் ‘எத்தன்’. விமல், சனுஷா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை இயக்கும் எல்.சுரேஷ் கூறியதாவது: கடன் வாங்காமல் இங்கு யாரும் வாழ முடியாது என்பதுதான் கதையின் மையக்கரு. படித்துவிட்டு பிசினஸ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார் ஹீரோ விமல். அவரது அப்பா, தன்னை போலவே மகன் அரசு வேலைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறார். இதிலிருந்து விடுபட்டு பிசினஸ் பண்ணுவதற்காக பலரிடம் கடன் வாங்கி நஷ்டமடைகிறார் விமல். இவர் செய்யும் தவறால் ஹீரோயின் சனுஷாவும் பாதிக்கப்படுகிறார். பிறகு எப்படி இவர்கள் மீள்கிறார்கள் என்பது கதை. விமல் இதுவரை நடித்த யதார்த்தமான படங்களின் சாயலில் இதுவும் இருக்கும். சனுஷாவின் நடிப்பும் பேசப்படும் விதமாக இருக்கும். இந்தப் படத்துக்காக இசை அமைப்பாளர் தாஜ்நூர், வித்தியாசமான பாடல்களை அமைத்துள்ளார். கடன் வாங்குவது பற்றியும் கடன் வாங்கினால் ஏற்படும் அவஸ்தை பற்றியுமான பாடல் புதுமையாக இருக்கும். அதே போல மிமிக்ரி பாடல் ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. அதுவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. டப்பிங் பணி நடந்து வருகிறது. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு சுரேஷ் கூறினார்.
 

கிசு கிசு -நடிகரால் தவிக்கும் இயக்குனர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நடிகரால் தவிக்கும் இயக்குனர்

1/27/2011 7:35:51 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

கன்னடம், இந்தி படங்கள்ல உச்ச நடிகரை கெஸ்ட் ரோல்ல நடிக்க வைக்க முயற்சி நடந்துச்சு… நடந்துச்சு… ஆனா, நடிகரு அன்பா மறுத்துட்டாராம்… மறுத்துட்டாராம்… அனிமேஷன் பட ஷூட்டிங்ல மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்துறாராம்… செலுத்துறாராம்…

தமிழ்ப் பட ஹீரோ புது முடிவுக்கு வந்திருக்கிறாராம். காமெடி கதைகள்ல, கமென்ட் அடிச்சி நடிக்கிறதை கைவிட முடிவு பண்ணியிருக்கிறாராம்… பண்ணியிருக்கிறாராம்… இனிமே சீரியஸ் ரோல்கள்ல கவனம் செலுத்துப் போறாரம்… போறாராம்…

பஞ்ச் நடிகருக்கு கதை சொல்லி ஓகே வாங்கிட்டாரு எல்லோரும் சுகம்னு சொன்ன பட டைரக்டரு. அதே நேரம், படத்துல பஞ்ச், கமர்ஷியல் அயிட்டங்களை நடிகரு சேர்க்கச் சொல்லியிருக்கிறாராம். நடிகரு விரும்புற மாதிரி அதை சேர்க்க முடியாம இயக்குனரு விக்கிறாராம்…தவிக்கிறாராம்… ரூம் போட்டு பலமுறை டிஸ்கஷன் பண்ணியும் இயக்குனர் சேர்த்த கமர்ஷியல் அம்சங்கள், நடிகருக்கு திருப்தி தரலையாம்… தரலையாம்…


Source: Dinakaran
 

பிப்ரவ‌ரி 11ல் நடுநிசி நாய்கள் ரிலீஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிப்ரவ‌ரி 11ல் நடுநிசி நாய்கள் ரிலீஸ்!

1/28/2011 12:40:57 PM

தனது சொந்த தயாரிப்பில் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி முடித்துள்ளார் கௌதம் மேனன். க்ரைம் கலந்த த்ரில்லர் கதைக்கு பாடல்கள், பின்னணி இசை எதும் கிடையாது. படம் வருகிற பிப்ரவ‌ரி மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 90 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஓர் இரவில் நடக்கும் கதையை படமாக்கியுள்ளார் கௌதம். இதையடுத்து அவர் தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெ‌ரிகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெ‌ரிகிறது.


Source: Dinakaran
 

’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்கிறார் விஜய்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்கிறார் விஜய்?

1/28/2011 12:33:27 PM

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கு நீடித்த வந்த குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஷங்கர் இயக்கும் ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் நடிக்கமாட்டார் என செய்திகள் வெளியாகின. மேலும் விஜய்-க்கு பதில் சூர்யா நடிப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் கண்டிப்பாக நடிப்பார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது.

7ஆம் அறிவு படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சூர்யா, ’3 இடியட்ஸ்’ படத்திலிருந்து விலகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வேலாயுதம் படத்திற்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டில் சில மாற்றம் செய்து ’3 இடியட்ஸ்’ படத்திற்கு விஜய் கால்ஷீட் தந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த குழுப்பம் நீடித்து வரும் நிலையில், ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் ஷங்கர் படமாக்குகிறார். க‌‌ரீனா கபூர் வேடத்தை யார் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இலியானாவாக இருக்கலாம். படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

’3 இடியட்ஸ்’ படத்தில் நடிப்பது குறித்து விஜய்யும், இயக்குனர் ஷங்கரும் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இதற்கு பிறகு தான் ’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்கப் போவது யார் என்பது தெரியும்.


Source: Dinakaran
 

ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார அமைப்பு வழங்கியது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர். ரகுமானுக்கு கிரிஸ்டல் விருது, உலக பொருளாதார அமைப்பு வழங்கியது!

1/28/2011 11:37:45 AM

ஆஸ்கர் விருதுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட அடுத்த நாளான நேற்று, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு உலக பொருளாதார அமைப்பு 'கிரிஸ்டல் விருது' வழங்கி கவுரவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் வர்த்தகம், அரசு, கலை, கலாசாரம், மதங்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 2,500 சர்வதேச தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அதில் கலைத் துறையில் இசை மட்டுமின்றி தனது திறமையால் சமூக மற்றும் அறக்கட்டளை பணிகளுக்கும் சிறந்த பங்களிப்பதற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு 'கிரிஸ்டல் விருது' வழங்கப்பட்டது.

அழகிய எம்பிராய்டரி செய்த கறுப்பு குர்தா அணிந்து விழாவில் பங்கேற்ற ரகுமான், விருதை பெற்றுக் கொண்டார். 'ஸ்லம்டாக் மில்லியனர்', 'பாம்பே ட்ரீம்ஸ்' ஆகிய திரைப்படங்களில் ரகுமானின் சிறந்த இசை பற்றி கூட்டத்தில் பெருமையாக குறிப்பிட்ட பலரும் குழந்தைகள் நலனுக்கு அவர் பணியாற்றி வருவதை பாராட்டினர். இரண்டு ஆஸ்கர் விருதுகள் உட்பட பல சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றுள்ள ரகுமான், விருதுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், "தனது சமூக பணிக்கு இந்த விருது மேலும் ஊக்கம் அளிக்கிறது" என்றார். ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் மீண்டும் 2 பிரிவுகளில் ஏ.ஆர். ரகுமான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Source: Dinakaran
 

கிசு கிசு -ரசிகர்களே வேண்டாம் நடிகர் முடிவு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ரசிகர்களே வேண்டாம் நடிகர் முடிவு

1/28/2011 2:35:03 PM

நல்ல காலம் பொறக்குது…

நல்ல காலம் பொறக்குது…

'தா’ங்கிற பேர்ல ரிலீசான படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவு செஞ்சாங்களாம்…
செஞ்சாங்களாம்… ஆனா, ஏதாவது ஒண்ணு தடையா வந்து முட்டுக்கட்டை போடுதாம்…
போடுதாம்… 'முதல்ல நீங்க படத்தோட பேரை மாத்துங்க. அப்பறம் ஒரு மாற்றம்
தெரியும்’ன்னு தயாரிப்புக்கு ஜோசியருங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனால
தலைப்பை மாத்தப்போறாங்களாம்… மாத¢தப்போறாங்களாம்…

காமெடி ஆக்டருங்க தனித்தனியா குரூப் வச்சிருக்காங்க. பிளாக் காமெடி
நடிகருக்கு மட்டும் குரூப் அமைய மாட்டேங்குதாம்… மாட்டேங்குதாம்…
'யப்பா, நீ வந்துருப்பாÕன்னு எதிர் கோஷ்டில இருக்க¤றவங்களுக்கு வலை
விரிச்சும் பார்த்தாராம். யாரும் சிக்கலையாம்… சிக்கலையாம்… ஆனாலும்
காமெடியின் முயற்சி தொடருதாம்… தொடருதாம்…

ஃபேன்ஸ் கூட்டம் சுற்றி சுற்றி வந்தாலும் அலைபாயுற நடிகரு கண்டுக்க
மாட்டேங்க¤றாராம்… மாட்டேங்க¤றாராம்.. ‘நடிகர் அந்தஸ்த்தெல்லாம்
எதிர்பார்க்காம வந்ததுதான். அதை தக்க வச்சிக்கிற அவசியம் எனக்கில்லை.
வாய்ப்பு க¤டக்க¤ற வரைக்கும் ஆக்டிங். இல்லேன்னா பேமலி’ன்னு தத்துவம்
சொல்றாராம்… சொல்றாராம்…


Source: Dinakaran
 

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

1/28/2011 11:58:11 AM

நிகழ்கால உண்மைகளுடன் சுவாரஸியப்படுத்தி தருவது இயக்குனர் சிம்புதேவனின் ஸ்டைல். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 365ல் கடவுள். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படங்களை‌த் தொடர்ந்து அவர் தனுஷை வைத்து இயக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடுகளத்தைத் தொடர்ந்து மாப்பிள்ளை, வேங்கை, சீடன், இரண்டாம் உலகம் போன்ற படங்கள் வெளிவரவிருக்கின்றன. இதில் சீடனில் தனுஷுக்கு கெஸ்ட் ரோல். இந்தப் படங்களுக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். சிம்புதேவன் கதை பிடித்ததால் உடனே தனது சம்மதத்தை தெ‌ரிவித்துள்ளார். இந்தப் படத்தை யார் தயா‌ரிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.


Source: Dinakaran
 

ஆர்யாவின் கவுரவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யாவின் கவுரவம்

1/28/2011 12:56:37 PM

இன்றுள்ள இளம் ஹீரோக்களில் கவுரவ வேடங்களில் அதிகம் நடிப்பவர் ஆர்யாதான். நட்புடன் யார் அணுகினாலும் உடனே ஓகே சொல்லி விடுகிறார். 'ரெண்டு சீன்ல நாம நடிச்சுட்டு போறது ஏதோ ஒரு வகையில அவங்களுக்கு யூஸ்புல்லா இருக்குனா சந்தோஷந்தான் பாஸ்' என்கிறார். கடைசியாக 'பரிமளா திரையரங்கம்' என்ற சின்ன பட்ஜெட் படத்தில்கூட நடித்திருக்கிறார். ஒரு பழைய திரையரங்கை புதுப்பித்து கட்டும் ஹீரோ அதை நடிகர் ஆர்யாவை வைத்து திறக்க ஆசைப்படுகிறார். அதை ஏற்று அந்த சிறிய கிராமத்துக்கு வந்து தியேட்டரை திறந்து வைக்கிறார். இதற்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்து அன்று முழுவதும் பயங்கர கூட்டத்துக்கிடையே நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆர்யாவின் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டின் மதிப்பு பல லட்சங்கள்.


Source: Dinakaran
 

என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு?

1/28/2011 12:58:49 PM

சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெங்களூருவில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் நிர்வாகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார் பூஜா. 'என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு? ஒரு படத்துக்கு 20 லட்சம் வரை சம்பளம் பெறும் நிலையில் இருப்பவர் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தது ஏன்?' என்பதுதான் இப்போது கோடம்பாக்கத்தின் மில்லியன் டாலர் கேள்வி. சினிமாவில் அவருக்கு சில கசப்பான அனுபவங்கள். அதனால் வெறுத்து ஒதுங்கி விட்டார் என்றும், அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கும் கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் வேலையில் சேர்ந்து விட்டார் என்றும் அதே கேள்விக்கு பதில்களும் உலா வருகிறது.


Source: Dinakaran
 

விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன நடிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன நடிகை

1/28/2011 1:00:28 PM

அறிமுக நிலையிலேயே விளம்பரங்களுக்கு மோஸ்ட் வாண்டட் ஆன ஒரே நடிகை அமலாபால்தான். ஒரு சில விளம்பர படங்களில் நடித்து விட்டாலும் அடுத்து பல முன்னணி நிறுவனங்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன. இதற்கிடையில் 'மைனா'வுக்கு முன் சில மாவட்ட தலைநகர் கடை விளம்பரங்களில் நடிக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறார் அமலா. இப்போது அந்த நிறுவனங்களுக்கு நடித்துக் கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருக்கிறாராம்.


Source: Dinakaran
 

நல்ல பெயர் வாங்க ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நல்ல பெயர் வாங்க ஆசை

1/28/2011 1:02:33 PM

வில்லங்க படங்கள் எடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட சாமிக்கு அடுத்து ஒரு நல்ல படம் எடுத்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் உடுமலைப்பேட்டையில் இருந்தபடி தீவிரமாக திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார். காதல் கதையாம். அமலா நடித்தால் நன்றாக இருக்கும் என்பது சாமியின் கணிப்பு. அவருக்கு எப்போது போன் போட்டாலும் நாட் ரீச்சபிள்தானாம். அதனால் புதுமுகம் தேடிக் கொண்டிருக்கிறார். 'சிந்துசமவெளி' காலர் டியூனைகூட மாற்றி இப்போது 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…' என்று மாற்றிவிட்டார்.


Source: Dinakaran
 

சமூக சேவையில் ஸ்ரேயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சமூக சேவையில் ஸ்ரேயா

1/28/2011 2:23:29 PM

நடிகை ஸ்ரேயா கூறியது: ஜீவாவுடன் 'ரவுத்திரம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மலையாளத்தில் மோகன்லாலுடன் 'கேசினோவாÕவில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் தாமதமாகிறது. காரணம் தெரியவில்லை.  'போக்கிரி ராஜாÕ படத்தில் மம்முட்டியுடன் நடித்தேன். 2 மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தது சந்தோஷம். விரைவில் இரண்டு சர்வதேச படங்களில் நடிக்க உள்ளேன். அதில் ஒன்று சேகர் கபூர் இயக்கும் 'பானி’. இப்படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்’ டேனி பாய¢ல் இணை தயாரிப்பில் ஈடுபடுகிறார். ஹிருத்திக் ரோஷன் ஹீரோ. அடுத்து தீபா மேத்தா இயக்கும் 'மிட்நைட் சில்ரன்Õ படத்தில் நடிக்கிறேன். இதற்கு முன் அவரது சகோதரர் திலிப் மேத்தா இயக்கிய 'குக்கிங் வித் ஸ்டெல்லாÕ படத்தில் நடித்தேன். அப்போது தீபாவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை அவரது இயக்கத்தில் நடிக்க அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக சேவையிலும் கவனமாக இருக்கிறேன். பார்வையற்ற பெண்களுக்கு பயிற்சி அளிக்க மும்பையில் அழகு கலை நிலையம் அமைத்தேன். அங்கு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வெளி அழகு நிலையங்களில் வேலை தர தயங்குகிறார்கள். அந்த தயக்கத்தை போக்குவதற்காக போராடப் போகிறேன். சில நேரம் வாடிக்கையாளர்களால் பார்வையற்ற பெண்கள் பாதிக்கும் சூழல் உள்ளது என்பதை அறிந்திருக்கிறேன். அதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட உள்ளேன்.


Source: Dinakaran
 

இனி எனக்கு ஜோடி தேவையில்லை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இனி எனக்கு ஜோடி தேவையில்லை!

1/28/2011 3:03:42 PM

நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ், சனா கான் நடித்துள்ள படம் 'பயணம்’ பிப்ரவரி 4ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் நாகார்ஜுனாவிற்கு ஜோடி இல்லையாம். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘'பயணம்’ படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கும் காலத்தை கடந்துவிட்டேன். இப்போது கதைக்குத்தான் முக்கியத்துவம் தருகிறேன்’ என்கிறார் நாகார்ஜுனா.


Source: Dinakaran
 

காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் கதையில் ஜாதியை சொல்ல கூடாது

1/28/2011 2:31:38 PM

'பொன்மாலைப் பொழுது’ பட இயக்குனர் ஏ.சி.துரை கூறியது: கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் ஹீரோவாக அறிமுகம் படம் இது. ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். ‘வாங்க காதலில் விழுங்கள்’ என்று இப்படத்திற்கு துணை தலைப்பு தந்திருக்கிறேன். ஏன் அப்படி தலைப்பு வைத்தேன் என்பதற்கு படத்தில் விடை இருக்கும்.  பிளஸ் 2 படிக்கும் டீன் ஏஜ் மாணவர்களின் காதலை சொல்லும் கதை. இது ஜாதியை மையமாக கொண்டதா என்கிறார்கள். ஜாதி, மதம் வைத்து நிறைய காதல் கதைகள் வந்துவிட்டன. மீண்டும் மீண்டும் அதையே படமாக்குவது மக்களின் மனதை அதே பாதைக்கு கொண்டு செல்வதுபோல்தான் ஆகிறது. இயக்குனர்கள் ஜாதி, மதத்தை கடந்து வந்தால்தான் மக்களும் அதை கடப்பார்கள். இப்படத்தில் காதலை புதிய களத்தில் சொல்கிறேன். ஒரு மகன் இப்படத்தை பார்த்தால் தந்தையையும் பார்க்கச் சொல்வான். அதேபோல் தந்தை பார்த்தால் மகனை போய் பார்க்க வலியுறுத்துவார். இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பிப்ரவரியில் தொடங்குகிறது.


Source: Dinakaran
 

தனுஷ் செய்த ஜாங்கிரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனுஷ் செய்த ஜாங்கிரி

1/28/2011 2:53:09 PM

தனுஷ் கவுரவ வேடத்தில் தோன்றும் படம் 'சீடன்'. மலையாளத்தில் ரிலீஸான 'நந்தனம்' ரீமேக்கான இதை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது. ''கவுரவ வேடத்தில் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் சிவபெருமானின் தீவிர பக்தன். 'சீடன்' படத்தில் சிவன் வேடம் ஏற்க வேண்டும் என்று சுப்ரமணியம் சிவா சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன்'' என்றார் தனுஷ்.  மேலும் 'சீடன்' படத்தில் தனுஷ் சமையல்காரராக கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஷூட்டிங்கில் அவரே செய்த ஜாங்கிரியை படக்குழுவினர் ருசித்து சாப்பிட்டார்களாம்.


Source: Dinakaran
 

சென்சார் மீது எஸ்.பி. சரண் தாக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சென்சார் மீது எஸ்.பி. சரண் தாக்கு

1/27/2011 2:18:03 PM

நடிகரும் பாடகருமான எஸ்.பி. சரண் தயாரித்துள்ள படம் ‘ஆரண்ய காண்டம்’. ரவி கிருஷ்ணா, ஜாக்கி ஷெராப், சம்பத், யாஸ்மின் நடித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். அடுத்த மாதம் ரிலீசாகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது. அத்துடன் பல காட்சிகளை வெட்டிவிட்டதாம். இதனால் கோபம் அடைந்திருக்கிறார் எஸ்.பி. சரண். இது பற்றி அவர் கூறியது: இந்தப் படம் போதை கும்பலை பற்றிய கதை கொண்டது. அவர்களை பற்றி சொல்லும்போது, துப்பாக்கி, ரத்தம் என காட்சிகள் இருப்பது பெரிய விஷயம் கிடையாது. படத்தில் வன்முறை இருப்பதாகக் கூறி ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அது கூட பரவாயில்லை. பல காட்சிகளை நீக்கிவிட்டதுதான் தாங்க முடியவில்லை. இதை விட வன்முறை அதிகம் உள்ள பல படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளது. அதையெல்லாம் சென்சார் அனுமதித்து இருக்கிறார்கள். சூர்யா நடித்த ‘ரத்த சரித்திரம்’ படத்திலும் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தன. ஒரு படத்தை குழந்தை போல் நினைத்து பாதுகாக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் அக்கறை காட்டுகிறோம். அந்த காட்சிகளை வெட¢டி எறிவதை சகிக்க முடியவில்லை.


Source: Dinakaran
 

மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர்.ரகுமான் பெறுவாரா : 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர்.ரகுமான் பெறுவாரா : 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை!

1/27/2011 12:22:28 PM

கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்தார் ஏ.ஆர்.ரகுமான். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில். ரகுமான் இசையமைப்பில், டேனி பாயில் இயக்கியுள்ள 127 ஹவர்ஸ் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரகுமானின் பெயர் மட்டும் 2 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (இஃப் ஐ ரைஸ்) ஆகிய இரு பிரிவுகளில் ரகுமானின் பெயர் பரிந்துரையாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளுவாரா ரகுமான் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், அதிகபட்சமாக தி கிங்க்ஸ் ஸ்பீச் படம் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரையைப் பெற்றுள்ளது. ட்ரூ கிப்ட் படம் 10 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. 83வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.


Source: Dinakaran
 

2 ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

2 ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை

1/27/2011 12:34:15 PM

காவலன் படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ள நிலையில், தனது எதிர்கால சினிமா பற்றிய தனது பார்வையை மாற்றியுள்ளதாக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். சமூகத்துக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் படங்களில் இனி அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாக விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து தற்போது தனக்கு எந்த எண்ணம் இல்லை என்று கூறிய அவர், அதற்குகான நேரம் அமைய வேண்டும் என்று கூறினார். மேலும், அரசியலில் ஈடுபடும் முடிவை நான் எடுத்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து பேசுவதெல்லாம் மரியாதை நிமித்தம்தான் என்று விஜய் கூறினார்.

சமீபத்தில் ’3 இடியட்ஸ்’ படத்தை விஜய் 3 ஹீரோக்களின் கதை என்பதால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இரண்டு அல்லது மூன்று ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை. நல்ல கதைகள் அமைந்தால் வேறு ஹீரோக்களுடனும் நடிக்க தயார் எனக் கூறினார். மேலும், தான் நடித்து வரும் ‘வேலாயுதம்’ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் ’3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதாக விஜய் தெரிவித்தார்.


Source: Dinakaran
 

அமலாபால் வாய்ப்பை பிடிக்க ஓவியா முயற்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அமலாபால் வாய்ப்பை பிடிக்க ஓவியா முயற்சி

1/27/2011 2:08:12 PM

‘களவாணி’ படத்துக்கு பின் சற்குணம் இயக்கும் படம் ‘வாகை சூட வா’. விமல் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நடிக்க அமலா பால் தேர்வாகியிருந்தார். இப்போது கால்ஷீட் பிரச்னையால் படத்திலிருந்து விலக அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்கிடையே அவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். அதே நேரம், அமலா பால் விலக முடிவு செய்திருப்பதை அறிந்த ‘களவாணி’ பட ஹீரோயின் ஓவியா, அந்த வாய்ப்பை பிடிக்க முயற்சித்து வருகிறாராம். ஏற்கெனவே தெரிந்த இயக்குனர், ஹீரோ என்பதால் அவர்களுக்கு தூது விட்டிருக்கிறாராம் ஓவியா.
ஒருவரின் வாய்ப்பை இன்னொருவர் தட்டிப் பறிப்பதாக அமலா பால், ஓவியா பற்றி முன்பே கிசு கிசு பரவியுள்ளது. இந்நிலையில் ஓவியா இந்த பட வாய்ப்பை பெற முயற்சிப்பதால், இருவருக்கும் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.


Source: Dinakaran
 

ரஜினிக்காக கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்காக கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்யும் தீபிகா

1/27/2011 12:47:23 PM

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ராணா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன. சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் அனிமேஷன் படத்தில் ரஜினி நடிக்கும் நேரடி காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது.

நேரடி காட்சிகளில் வரும் ரஜினிக்கு த்ரிஷா ஜோடியாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது தீபிகாவை அணுகியுள்ளனர். ரஜினி படத்திற்காக தன்னை அணுகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தீபிகா. இருப்பினும் இன்னும் தான் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடைய கால்ஷீட் புத்தகம் 2011 இறுதி வரை நிரம்பி வழிகிறதாம். இருப்பினும் ரஜினி படம் என்பதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக, கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் தீபிகா.

தான் ஒரு தீவிர ரஜினி ரசிகை என்று கூறியுள்ள தீபிகா, அவருடைய படத்தில் இணைந்து நடிப்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

கவுரவ வேடத்தில் கஸ்தூரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவுரவ வேடத்தில் கஸ்தூரி

1/27/2011 2:26:53 PM

பேசன் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'பதினாறு' படத்தை வி கிரியேசன்ஸ்  சார்பாக கலைப்புலி தாணு வெளியிடுகிறார். பரதன், வி ஐ பி, புன்னகை பூவே ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சபாபதி  இப்படத்தை இயக்கியுள்ளார். பதினாறு பட இசை வெளியீட்டில்  ஹீரோ சிவா, 'இது உண்மையான காதலை மையமாக கொண்ட படம். அறிமுக நாயகி மது ஷாலினி என்னுடன் நடித்துள்ளார். இப்படத்தின் கதை நகரத்திலும், கிராமத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறுகிறது. சென்னை,தேனீ,கொடைக்கானல் ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளார்கள். ‘பதினாறு’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் கஸ்தூரி என்று பேசினார்.


Source: Dinakaran
 

முத்துக்கு முத்தாக அடுத்த மாதம் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முத்துக்கு முத்தாக அடுத்த மாதம் ரிலீஸ்

1/27/2011 2:29:30 PM

'முத்துக்கு முத்தாக' படத்தை தயாரித்து இயக்கும் ராசு மதுரவன், அடுத்து லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விக்ராந்த், நட்ராஜ், ஹரீஷ், வீரசமர், பிரகாஷ் நடித்துள்ள 'முத்துக்கு முத்தாக' ஷூட்டிங் முடிந்துவிட்டது. படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. நெஞ்சை நெகிழ வைக்கும் குடும்பக்கதை வந்து நாளாகி விட்டது. அந்தக்குறையை 'முத்துக்கு முத்தாக' போக்கும். தாய், தந்தை, மகன்கள் இவர்களது பாசப் போராட்டமே கதைக்களம். முழு படத்தையும் பார்த்தவர்கள், சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படத்தை அனுப்பி வையுங்கள் என்று ஆலோசனை சொன்னார்கள். ஆங்கிலத்தில் சப்&டைட்டில் போடும் பணி நடந்து வருகிறது. 'முத்துக்கு முத்தாக' ரிலீசுக்கு பிறகு இயக்கும் படம், 'பக்கி'. இதில் லாரன்ஸ் ஹீரோ. கே.பி பிலிம்ஸ் கே.பாலு தயாரிக்கிறார்.


Source: Dinakaran
 

வானம் எப்போது திரைக்கு வரும்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வானம் எப்போது திரைக்கு வரும்?

1/25/2011 4:57:56 PM

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் 'வானம்’. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். வழக்கமாக படத்தில் இருக்கும் எல்லா பாடல்களை வெளியிடுவது தான் வழக்கம் ஆனால் வானம் படத்தில் சிம்பு-யுவன்சங்கர்ராஜா இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் மட்டும் கொண்ட சிடி ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற பாடல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்தது. இதனை தொடர்ந்து வானம் படத்தை காதலர் தினத்தில் திரைக்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால் சிம்புவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வானம் பிப்.14 காதலர் தினத்துக்கு திரைக்கு வரவில்லை என்பது சிம்பு ரசிகர்களை வருத்தமடையச் செய்யும் விஷயம். படம் எப்போது திரைக்கு வரும் என்பது சிம்புவுன் உடல்நிலையைப் பொறுத்த விஷயம் என்கிறார்கள்.


Source: Dinakaran
 

விஷாலின் ‘பட்டத்து யானை’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஷாலின் ‘பட்டத்து யானை’

1/25/2011 10:37:30 AM

தேவதையை கண்டேன், திருவிளையாடல், மலைக்கோட்டை. காதல் சொல்ல வந்தேன் படங்களுக்கு பின் ‘பட்டத்து யானை’ படத்தை இயக்க உள்ளார். முன்னதாக, சீயான் விக்ரம் நடிக்கும் வெடி படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் நின்று போனது. இதனால் சிறிது காலம் தன் கதைக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த பூபதி பாண்டியன் தற்போது விஷாலுடன் ‘பட்டத்து யானை’ படத்தில் இணைய உள்ளார். ஆனால் இது விக்ரமுக்கு தயாரான கதையா அல்லது புது கதையா என்பது தெரியவில்லை.


Source: Dinakaran
 

பரத்தின் ’555′

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பரத்தின் ’555′

1/25/2011 10:30:58 AM

'நினைத்தாலே இனிக்கும்' குமரவேல் இயக்கும் 'யுவன் யுவதி' படத்தில் நடிக்கிறார் பரத். 'யுவன் யுவதி' படத்தில் ஆக்ஷன், ரொமான்டிக் ஹீரோ என வெரைட்டியான கேரக்டர்களில் நடிப்பதாக பரத் கூறியுள்ள பரத் அடுத்து ‘பூ’ படத்துக்கு பின் சசி இயக்கும் 555 படத்தில் நடிக்கிறார். தற்போது படத்திற்கு ஹீரோயின் தேர்வு நடக்கிறது.


Source: Dinakaran
 

சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகர்கள்

1/25/2011 10:38:37 AM

புதுமுகங்கள் அமீத் பதக், நீது சவுத்ரி நடிக்கும் படம் 'அன்பிற்கு அளவில்லை'. படம் குறித்து இயக்குனர்கள் மரியம் கானசக், ஆனந்த்பாபு கூறியது:
இந்தியாவில் ஆண¢டுதோறும் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. 2007ம் ஆண்டில் 3,874 விவாகரத்துகள் நடந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 4,643 விவாகரத்துகள் நடந்துள்ளது. குழந்தை பிறந்ததும் கணவன், மனைவி இடையே தூரம் அதிகமாகிவிடுகிறது. குழந்தையை வளர்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதனால் தம்பதி இடையிலான பாசம் குறைந்து விவாகரத்துகள் நடக்கின்றன. இதன் பின்னணியில் இப்படக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப¢படத்தை பார்த்து கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் இணைந்தால் அதுவே படத்தின் வெற்றி. நல்ல கருத்தை சொல்வதால் படத¢தில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடாமல் பணியாற்றுகின்றனர். படம் முடிந்த பின் நாங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர்.


Source: Dinakaran
 

மலையாளத்தில் அறிமுகமாகும் பாக்யராஜ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையாளத்தில் அறிமுகமாகும் பாக்யராஜ்!

1/25/2011 10:43:54 AM

சமீபகாலமாக அதிக தமிழ் படங்களில் ஹீரோவின் அப்பா நடித்து வரும் பாக்யராஜ், தற்போது பிறமொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கு முதற்கட்டமாக ‘மிஸ்டர் மருமகன்’ என்ற மலையாள படத்தில் திலீப்புக்கு மாமனராக நடிக்கிறார் பாக்யராஜ். அவர் அறிமுகமாகும் முதல் மலையாள படம் இது. இதில் அவருக்கு ஜோடி ரோஜா நடிக்கிறார்.


Source: Dinakaran
 

ஹீரோ ஆகிறார் கண்ணதாசன் பேரன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோ ஆகிறார் கண்ணதாசன் பேரன்

1/25/2011 10:52:48 AM

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர் கண்ணதாசன்.  தமிழ் சினிமாவில் அவரது இடத்தை நிரப்ப யாரலும் மடியாது. தற்போது அவரது பேரன் ஆதவ் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ‘பொன்மாலைப் பொழுது’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.


Source: Dinakaran
 

கேத்ரினா கைப்,பிரியங்கா சோப்ரா வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெய்டு

1/24/2011 4:44:58 PM

மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகைகள் கேத்ரினா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கேத்ரினா கைப், லண்டனைச் சேர்ந்தவர். இவரது தந்தை காஷ்மீரி இந்தியர். தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர். மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வரும் கேத்ரினா கைப், படம் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படுகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'தீஸ் மார் கான்' என்ற இந்திப் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும் இதில் இடம் பெற்றிருந்த கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. இதே போல் மற்றொரு முன்னணி நட்சத்திரமான பிரியங்கா சோப்ரா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்று திரைப்படங்களில் நடிக்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானத்துக்கு உரிய வரி கட்டப்படவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடிகைகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து உடனடியாக தகவல் இல்லை.


Source: Dinakaran
 

நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறேன்

1/24/2011 12:04:14 PM

நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறேன் என்றார் சுஜா. அவர் மேலும் கூறியதாவது: தமிழில், நான் நடித்துள்ள 'ஆயிரம் விளக்கு' விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். தெலுங்கில் நடித்த 'நாகவல்லி' ரிலீஸ் ஆகிவிட்டது. பெயரிடப்படாத மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தொடர்ந்து கிளாமராக நடித்து வருகிறீர்களே என்கிறார்கள். கதையோடு சேர்ந்த கிளாமர் கேரக்டரில் நடித்து வருகிறேன். ஆனால், அந்த மாதிரியான கேரக்டரில் மட்டுமே நடிக்கவில்லை. தெலுங்கில் ரிலீசான 'நாகவல்லி'யில் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தேன். மலையாளம், தெலுங்கில் நல்ல கேரக்டர் கிடைத்து வருகிறது. தமிழில் அந்த மாதிரியான கேரக்டருக்கு காத்திருக்கிறேன். இவ்வாறு சுஜா கூறினார்.


Source: Dinakaran
 

விநியோகஸ்தர் ஆனார் இளையராஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விநியோகஸ்தர் ஆனார் இளையராஜா

1/24/2011 10:13:21 AM

சுவாமி சினி ஆர்ட்ஸ் சார்பில் துரைமுருகன் தயாரிக்கும் படம் 'செங்காத்து பூமியிலே'. ரத்னகுமார் இயக்குகிறார். பவன், செந்தில், பிரியங்கா, சுனுலட்சுமி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது: படத்தின் கதையை சொல்லி இளையராஜாவை இசை அமைக்க கேட்டேன். 10 நாள் படப்பிடிப்பு நடத்தி, போட்டு காட்டுங்கள். பிடித்தால் இசை அமைக்கிறேன் என்றார். அப்படியே செய்தோம். படத்தை பார்த்துவிட்டு இசை அமைக்க ஒப்புக்கொண்டார். முழு படத்தையும் முடித்து விட்டு இசை அமைக்க கொடுத்தபோது, படம் அவருக்கு பிடித்துப்போக, வெளியிடும் உரிமையையும் நானே பெற்றுக் கொள்கிறேன் என்றார். இளையராஜா எங்கள் படத்தை வெளியிடுவதை பெருமையாக நினைக்கிறோம்.


Source: Dinakaran
 

வில்லி ஆனார் முமைத்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வில்லி ஆனார் முமைத்

1/24/2011 12:06:40 PM

'நேனு நான் ராட்ஷசி' என்ற தெலுங்கு படத்தில் வில்லியாக நடித்து வருகிறார் முமைத்கான். இதுபற்றி அவர் கூறியதாவது: எனது கண்ணும், உடல்வாகும் வில்லிக்கு ஏற்ற மாதிரி இருப்பதாக, பல படங்களில் வில்லியாக நடிக்க அழைப்பு வந்தது. நான்தான் மறுத்து வந்தேன். ஆனால் வில்லியாக நடிப்பதும் நடிப்புதானே என்று தோன்றியதால் இப்போது ஒப்புக் கொண்டேன். ராணா, இலியானா ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் எனது வில்லி கேரக்டர்தான் அனைவரையும் கவரும். இதுதவிர கன்னட படம் ஒன்றிலும் வில்லியாக நடிக்க இருக்கிறேன். தமிழில் 'பவுர்ணமி நாகம்' படத்தில் வில்லியாகவும், ஹீரோயினாகவும் நடித்தேன். இப்போது மலையூர் மம்பட்டியானில் நல்ல கேரக்டரில் நடித்து வருகிறேன். வேறு படங்கள் இல்லை.


Source: Dinakaran
 

கூடைப்பந்து பயிற்சிப்பெறும் நகுலன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கூடைப்பந்து பயிற்சிப்பெறும் நகுலன்

1/24/2011 10:17:26 AM

கூடைப்பந்து பற்றிய படத்துக்காக, தினமும் பயிற்சி செய்து வருகிறார் நகுலன். 'ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகன், அடுத்து இயக்கும் படத்தில் நகுலன் ஹீரோவாக நடிக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம் பற்றி அறிவழகன் கூறியதாவது: டெக்னிக்கலாக மிரட்டிய 'ஈரம்' படத்துக்குப் பிறகு கூடைப்பந்து பற்றிய கதையை இப்போது எடுக்க இருக்கிறேன். இதில் நகுலனுக்கு சிறப்பான வேடம். ஏற்கெனவே சுறுசுறுப்பான முகம் அவருடையது. கூடைப்பந்து வீரருக்கான கேரக்டரில் அவர் பக்காவாக பொருந்துகிறார். இப்போது தினமும் கூடைப்பந்து பயிற்சி பெற்று வருகிறார். நானும் நகுலனுடன் சென்று வருகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கும். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அறிவழகன் கூறினார்.


Source: Dinakaran
 

கோடை விடுமுறையில் ‘மாப்பிளை’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கோடை விடுமுறையில் ‘மாப்பிளை’

1/24/2011 12:52:14 PM

'தலைநகரம்', 'மருதமலை', 'படிக்காதவன்' படங்களை இயக்கியவர் சுராஜ். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனிஷா கொய்ராலா நடிக்கும் 'மாப்பிள்ளை'யை இயக்கி வருகிறார். மனிஷா கொய்ராலா தனுஷின் மாமியாகவும் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. ஏப்ரலில் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source: Dinakaran
 

மீண்டும் தரணி -விக்ரம் கூட்டணி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் தரணி – விக்ரம் கூட்டணி!

1/24/2011 12:30:56 PM

நண்பர்களான தரணி-விக்ரம் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தில் மற்றும் தூள் போன்ற கமர்ஷியல் சூப்பர் ஹிட் இந்த கூட்டணி, இடையில் இணை முடியாத சூழல் காணப்பட்டது. தெலுங்கில் பிசியாக இருக்கும் இயக்குனர் தரணி ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். அதே போல் தற்போது விஜய் இயக்கத்தில் ‘தெய்வ மகன்’ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் தமிழ்ப் படத்தை தரணி இயக்குவார் என சொல்லப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


Source: Dinakaran
 

பிப்ரவ‌ரி மாதம் திரைக்கு வரும் படங்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிப்ரவ‌ரி மாதம் திரைக்கு வரும் படங்கள்

1/24/2011 12:35:25 PM

மிஷ்கின் இயக்கத்தில் சேரன், தீபா ஷா நடிக்கும் படம் 'யுத்தம் செய்'. சேரன் சி.பி.ஐ அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், பிப்ரவ‌ரி மாதம் முக்கியமான படங்கள் வெளியாகின்றன. பிப்.4 யுத்தம் செய், பயணம் படங்கள் திரைக்கு வருகின்றன. கௌரவ் இயக்கியிருக்கும் தூங்கா நகரம் படமும் பிப்ரவ‌ரி 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படங்கள் தவிர மேலும் ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source: Dinakaran
 

கதையை தேடிப் பிடித்து நடிக்கும் மாதவன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கதையை தேடிப் பிடித்து நடிக்கும் மாதவன்!

1/24/2011 12:46:01 PM

ஒன்றுக்கு மூன்று கதையை கேட்டு, தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நடித்து வருகிறார் மாதவன். இந்த ஃபார்முலா தமிழில் மட்டும் அல்ல இந்தியிலும் பயன்படுத்தி வருகிறார். அப்படிதான் கமலுக்காக மன்மதன் அம்புவில் நடித்தார். தற்போது லிங்குசாமியின் வேட்டையில் நடித்து வருகிறார். இதையடுத்து விக்ரம் குமார் இயக்கும் மும்மொழிப் படத்தில் மாதவன் நடிக்கிறார். யாவரும் நலம் படத்தின் மூலம் விக்ரம் குமாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Dinakaran
 

தீவிரவாதிகள் கதையில் மேக்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தீவிரவாதிகள் கதையில் மேக்னா

1/24/2011 12:57:18 PM

'காசி’, 'என் மன வானில்’, 'அற்புத தீவு’ படங்களை இயக்கிய வினயன், அடுத்து 'காதல் வேதம்Õ படத்தை இயக்குகிறார். அவர் கூறியது: வன்முறையும் தீவிரவாதமும் எல்லா நாடுகளிலும் வேரூன்றி இருக்கிறது. அதை எதிர்த்து போராடுவதுதான் இப்படக் கதை. இந்த தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாததுபோல் தோன்றும். ஆனால் காதல்தான் கதையின் களம். அந்த காதலை எந்த விதத்தில் தீவிரவாதம் நசுக்கப் பார்க்கிறது என்பதுதான் திரைக்கதை. ஹீரோ முரளிகிருஷ்ணா. செகண்ட் ஹீரோ கவுதம். மேக்னா ஹீரோயின். திலகன், சாருஹாசன் சுதந்திர போராட்ட தியாகிகளாக நடிக்கின்றனர். அவர்கள் இருவரும் படத்தில் பேசும் வசனங்கள், அனல் பறக்கும் விதத்தில் இருக்கும். இதன் ஷூட்டிங் கேரளா, பெங்களூர் போன்ற இடங்களில் நடந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிக்காக பெங்களூரில் பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு ஷூட்டிங் நடக்கிறது.


Source: Dinakaran
 

தத்துவம் சொல்ல நடிகர்கள் இல்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தத்துவம் சொல்ல நடிகர்கள் இல்லை

1/24/2011 12:55:47 PM

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரின் பாடல்களை ஒரே ஆடியோவில் தொகுத்து வெளியிட்டது சரிகம ஆடியோ. இந் நிகழ்ச்சியில் டைரக்டர் கே.பாக்யராஜ் கூறியது: தத்துவ பாடல்களில் மக்களை கவர்ந்தவர் எம்ஜிஆர். நடிப்பில் கவர்ந்தவர் சிவாஜி. இவர்கள் இருவரிலிருந்து மாறுபட்டு, பெண்களை கவர்ந்தவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர் பாடிய தத்துவ பாடல்களான 'சின்னப்பயலே… சின்னப்பயலேÕ, 'காடு வௌஞ்சென்ன மச்சான்Õ, 'தூங்காதே தம்பி தூங்காதேÕ போன்றவை வாழ்க்கையில் நம்பிக்கை தரும் பாடல்களாக அமைந்திருந்தன. அதுபோல் தத்துவ பாடல்கள் பாட இன்றைக்கு நம்மிடம் நடிகர்கள் இல்லை. சில நடிகர்கள் ஏதோ ஒரு சில படங்களில் அது போன்ற பாடல், காட்சிகளில் நடிக்கிறார்கள். அவர்கள் அதை தொடர்ந்து செய்வதில்லை. என் மகன் சாந்தனுக்கு நான் கூறிய அறிவுரை, 'நடிப்பில் சந்தேகமிருந்தால் சிவாஜி படத்தை பார். ஏழை முதல் பணக்காரர் வரை மாஸ் அட்ராக்ஷன் எப்படி பெற வேண்டும் என்பதை அறிய எம்ஜிஆர் படங்களை பார்Õ என்று கூறி இருக்கிறேன்.


Source: Dinakaran
 

ட்விட்டர்,பேஸ் புக் எதிலும் நான் எழுதுவது கிடையாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ட்விட்டர், பேஸ் புக் எதிலும் நான் எழுதுவது கிடையாது

1/24/2011 1:06:09 PM

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கிட்டதட்ட எல்லா நடிகர்களும், நடிகைகளும் ‘ட்விட்டர், பேஸ் புக்’ தங்களுடைய அன்றாட சம்பவங்களை எழுதி வருகின்றனர். அதில் சிலர் தேவையற்ற கருத்துக்களை எழுதி சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. சமீபத்தில் ‘ட்விட்டர், பேஸ் புக் எதிலும் நான் எழுதுவது கிடையாது. ஆனால் என் பெயரில் போலியாக யாரோ இதை நடத்துகின்றனர்’ என்கிறார் அசின். மேலும் அதில் வரும் தகவலை யாரும் நம் வேண்டாம் என்று கூறினார்.


Source: Dinakaran
 

சிவன் வேடத்தில் தனுஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிவன் வேடத்தில் தனுஷ்

1/24/2011 1:09:44 PM

கவுரவ வேடத்தில் தோன்றும் படம் 'சீடன்'. மலையாளத்தில் ரிலீஸான 'நந்தனம்' ரீமேக்கான இதை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது. ''கவுரவ வேடத்தில் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் சிவபெருமானின் தீவிர பக்தன். 'சீடன்' படத்தில் சிவன் வேடம் ஏற்க வேண்டும் என்று சுப்ரமணியம் சிவா சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன்'' என்றார் தனுஷ்.  
கவுரவ வேடத்தில் தனுஷ் நடித்துள்ள Ôசீடன்Õ, அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதில் அனன்யா ஹீரோயினாக நடித்துள்ளார். சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளார்.


Source: Dinakaran
 

கோ எனது சொந்த அனுபவம் : கே.வி.ஆனந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோ எனது சொந்த அனுபவம் : கே.வி.ஆனந்த்
1/22/2011 10:50:50 AM
'கோ' படத்தின் கதை எனது சொந்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டது என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறினார். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் குமார், ஜெயராமன், ஜெயந்த் தயாரிக்கும் படம் 'கோ'. ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இயக்குனர் பிரியதர்ஷன் வெளியிட, பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின், மற்றும் படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது:
எனது மூன்றாவது படம் 'கோ'. இந்தப் படத்திலும் நல்ல டீம் அமைந்துள்ளது. நான் ஒளிப்பதிவாளராவதற்கு முன் பத்திரிகை புகைப்பட கலைஞராக பணியாற்றினேன். அப்போது எனக்கும், எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சுறுசுறுப்பானவர்கள். அந்த கேரக்டருக்கு ஜீவாதான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன். பெண் நிருபர் கேரக்டருக்கு தமிழ் முகமாகவும் இருக்க வேண்டும் கொஞ்சம் ஆங்கில ஸ்டைலும் இருக்க வேண்டும் என்ற வகையில் ஹீரோயின் தேடியபோது கார்த்திகா பொருத்தமானவராக தெரிந்தார். இருவருமே போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 5 பாடல்கள் இடம் பெறுகிறது. ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புடையதாக அமைந்துள்ளது.


Source: Dinakaran
 

அமிதாப்புடன் நடிக்கிறேனா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமிதாப்புடன் நடிக்கிறேனா?
1/22/2011 10:42:46 AM
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள 'ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: 'ஆடுகளம்' படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். இதில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளேன். யதார்த்தமான கதைகளில் நடிக்கும்போதுதான் நம் திறமையை நிரூபிக்க முடியும். அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பூரி ஜெகன்னாத் இயக்கும் 'புட்டா' என்ற படத்தில் அமிதாப்புடன் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. அந்தப் படத்துக்கு என்னிடம் கால்ஷீட் கேட்டது உண்மைதான். அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லாததால் மறுத்துவிட்டேன். அமிதாப்புடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான். தமிழில், 'வந்தான் வென்றான்' படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறேன். இதில் எனது கேரக்டர் மாடர்னானது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.


Source: Dinakaran
 

டுவிட்டரில் உறவாடும் அப்பா-மகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டுவிட்டரில் உறவாடும் அப்பா-மகள்
1/21/2011 2:40:27 PM
நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக் என இணையதளம் மூலம் நண்பர்கள், ரசிகர்களுடன் பேசிக்கொள்வது அதிகரித்து வருகிறது. தமிழ் நடிகைகள் பலர் டுவிட்டரில் இணைந்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் கமல் மகள் ஸ்ருதி மிஞ்சிவிட்டார். தன் அப்பா கமலிடம் கூட டுவிட்டரில் தான் பேசிக் கொள்கிறாராம். ஏன் இப்படி என கேட்டதற்கு, ‘அப்பாவை அடிக்கடி சந்திப்பது அரிது. அதனால் டுவிட்டரில் அவருடன் பேசிக்கொள்வேன்’ என்கிறார் கமல் மகள் ஸ்ருதி.


Source: Dinakaran