காமெடி பீஸ் வடிவேலு :விந்தியா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காமெடி பீஸ் வடிவேலு : விந்தியா!

3/31/2011 10:56:13 AM

நடிகை விந்தியா அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அவர் பிரச்சாரம் அமைந்ததது. தனது பிரச்சாரத்தின்போது விந்தியா பேசுகையில், "வடிவேலு ஒரு காமெடி பீஸ். இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு," என்றார்.





Source: Dinakaran
 

விஜய்,சத்யராஜுடன் பணிபுரிவது புது அனுபவம் :ஷங்கர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஜய், சத்யராஜுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்

3/28/2011 11:38:25 AM

விஜய், சத்யராஜ், இலியானா போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தை அடுத்து, இந்தியில் ஹிட்டான '3 இடியட்ஸ்' படத்தை 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் டேராடூனில் நடந்து முடிந்துள்ளது. இதுபற்றி தனது வலைப்பதிவில் ஷங்கர் எழுதியிருப்பதாவது: 'நண்பன்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. கல்லூரி தொடர்பான காட்சிகள் அனைத்தையும் டேராடூனில் எடுத்துள்ளோம். விஷுவலாக இந்த காட்சிகள் மிரட்டும். இந்தப் படத்தில், விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த் போன்றோருடன் பணிபுரிவது புதிய அனுபவமாக இருக்கிறது. விஜய், சத்யராஜ் காம்பினேஷன் பிரஷ்சாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். நண்பர்களாக நடிக்கும் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் கேமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, பின்னாலும் சூப்பராக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அனைவரும் அவரவர் கேரக்டரோடு ஒன்றியிருக்கிறார்கள். 'எந்திரன்' படத்தில் இருந்து அனைத்து விதத்திலும் 'நண்பன்' மாறுபட்டு இருக்கும். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.





Source: Dinakaran
 

அசினுக்கு கேரளா ஆனது பாங்காக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அசினுக்கு கேரளா ஆனது பாங்காக்

3/28/2011 11:40:03 AM

'ரெடி' இந்தி படத்துக்காக பாங்காக்கில் இருந்தபோது கேரளாவில் இருப்பதை போன்றே உணர்ந்தேன் என்றார் அசின். இதுபற்றி அவர் கூறும்போது, 'கேரளா எப்போதும் பசுமையாக இருக்கும். பாங்காக்கில் நாங்கள் ஷூட்டிங் நடத்திய இடமும் அப்படியே இருந்தது. அது வேறு நாடு என்கிற எண்ணம் எனக்கு வரவில்லை. கேரளாவில் இருப்பதை போன்றே உணர்ந்தேன். இந்தப் படத்துக்காகத்தான் அதிக நாட்கள் வெளிநாடுகளில் செலவழிக்க வேண்டியதாக இருந்தது' என்றார்.





Source: Dinakaran
 

மனம் மாறினார் திவ்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மனம் மாறினார் திவ்யா

3/28/2011 11:42:49 AM

ரசிகர்களின் வேண்டுகோளுக்காக, நடிப்பதில்லை என்ற முடிவை வாபஸ் பெற்றுள்ளதாக திவ்யா கூறியுள்ளார். 'தண்டம் தஷகுணம்' என்ற கன்னட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு செல்லாததால் திவ்யா மீது புகார் செய்தார் தயாரிப்பாளர் கணேஷ். தன்னிடம் வாங்கிய கடனை தயாரிப்பாளர் தராததால்தான் விழாவுக்கு செல்லவில்லை என்றார் திவ்யா. இதையடுத்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் திவ்யாவுக்கு ஒரு வருடம் தடை விதித்தது. ஆனால், நடிகர் சங்கம் திவ்யாவுக்கு ஆதரவாக கொடி பிடித்தது. இதற்கிடையில் திவ்யா, 'கன்னட திரையுலகினருடன் சண்டைப்போட என்னிடம் சக்தி இல்லை. இதனால் கன்னட சினிமாவில் இனி நடிக்க போவதில்லை' என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், 'இந்தப் போட்டியில் நான்தான் வென்றேன். எனக்கு நடிகர் சங்கமும் நல்ல உள்ளம் கொண்ட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனது பணம் திரும்ப கிடைத்துவிட்டது. எனது ரசிகர்கள் தொலைபேசியிலும் இணையதளம் மூலமாகவும் கன்னட சினிமாவை விட்டு செல்ல வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டதால் என் முடிவை வாபஸ் பெற்றுள்ளேன்' என்று திவ்யா கூறியுள்ளார்.





Source: Dinakaran
 

நல்ல படங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நல்ல படங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம்

3/28/2011 11:48:57 AM

'சிங்கம் புலி' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் சவுந்தர்யா. இவர் நடித்த பல காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது: நான் நடித்த சில காட்சிகள் படத்தில் இல்லை. ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்கும்போது இதுபோன்ற விட்டுக் கொடுத்தல் சகஜம்தான். இப்போது தமிழில் 'காந்தர்வன்', 'மல்லுக்கட்டு' படத்தில் நடித்து வருகிறேன். ஒன்றில் கிராமத்து பெண், மற்றொன்றில் நகர்புறத்து கல்லூரி மாணவி. தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க நீண்ட நாள் போராடும் நடிகைகளில் நானும் ஒருத்தி. அதனால் படங்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன்.





Source: Dinakaran
 

ஷாமின் 6

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷாமின் 6

3/28/2011 11:45:01 AM

'முகவரி', 'காதல் சடுகுடு', 'தொட்டி ஜெயா', 'நேபாளி' படங்களை இயக்கிய வி.இசட். துரை, அடுத்து இயக்கும் படத்துக்கு '6' என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தில் ஷாம் ஹீரோ. அவர் 3 வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயின் உட்பட மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.





Source: Dinakaran
 

நாசர் ரசித்து நடித்த படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நாசர் ரசித்து நடித்த படம்

3/28/2011 11:43:40 AM

ஜெயராம் கிரியேஷன் சார்பில் ஜே.ரவி தயாரிக்கும் படம் 'மகாராஜா', சத்யா, நாசர், கருணாஸ், அஞ்சலி நடிக்கிறார்கள். டி.மனோஹரன் இயக்குகிறார். இமான் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவில், நாசர் பேசியதாவது: இப்போது வாரத்திற்கு நாலைந்து சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவருகிறது. இது ஆரோக்கியமான விஷயம். இப்போதுள்ள இளைஞர்கள் புத்தி கூர்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனால் சில நேரம் பெருமையாக இருக்கிறது. சில நேரம் கோபம் வருகிறது. அப்படி கோபப்பட்டால் அதற்கும் விளக்கம் வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தலைமுறை இடைவெளிகளின் மோதலை காமெடியாகவும், கமர்சியலாகவும் சொல்லும் படம் இது. எனது 25 வருட சினிமா வாழ்க்கையில் நான் ரசித்து நடித்த கேரக்டர் இந்தப் படத்தில் கிடைத்தது. இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும்.





Source: Dinakaran
 

கமலின் விஸ்வரூபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமலின் விஸ்வரூபம்

3/28/2011 11:47:16 AM

செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு விஸ்வரூபம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார். கமல் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். தமிழ், இந்தியில் தயாரிக்கப்படும் இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் லண்டனில் நடக்கிறது. சைக்காலஜிகல் த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.





Source: Dinakaran
 

ஆதிபகவனில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆதிபகவனில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி

3/28/2011 11:50:12 AM

அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் முன்னாள் ஹீரோயின் சாக்ஷி ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். தமிழில், 'புதையல்', 'மாப்பிள்ளை கவுண்டர்', 'வேதம்', 'மானஸ்தன்' உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சாக்ஷி. கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்த இவர், திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்தார். இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் 'ஆதிபகவன்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இதன் ஷூட்டிங் பின்னிமில்லில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்காக, வெளிநாட்டில் இருந்து 150 டான்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.





Source: Dinakaran
 

ஸ்ரேயாவை யோசிக்க வைத்த சிறுவன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஸ்ரேயாவை யோசிக்க வைத்த சிறுவன்

3/25/2011 12:05:07 PM

ஸ்ரேயா கூறியது:தீபா மேத்தாவின் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்Õ, ஜீவாவுடன் 'ரவுத்திரம்Õ, மோகன்லாலுடன் 'கேசனோவாÕ படங்களில் நடித்து வருகிறேன். சல்மான் ருஷ்டி எழுதிய நாவலை தழுவித்தான் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்Õ எடுக்கப்படுகிறது. அந்த நாவலை பல முறை படித்தேன். அவர் படைத்த வேடங்கள் மிகவும் கவர்ந்தது. இதில் நான் ஏற்றிருக்கும் வேடம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.மும்பை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பஸ்சில் செல்வேன். தூரத்திலிருந்து பார்த்தபோது நான் செல்லவேண்டிய பஸ்தான் வருகிறது என்று எண்ணி வேறு பஸ்சில் ஏறிவிட்டேன். அந்த பஸ் ஓர் இடத்தில் நின்றது. திடீரென்று இறங்கிய எனக்கு வழி தெரியவில்லை. அருகே இருந்த பார்வையற்றோர் பள்ளியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சிறுவனிடம், வழி கேட்டேன். 'நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?Õ என்றான். அப்போது பஸ் மாறி ஏறியதை சொன்னேன். உடனே அவன், 'பார்வையில்லாத நான், கிரிக்கெட் பந்து எந்த திசையில் வருகிறது என்பதை சரியாக கணித்து அடிக்கிறேன். ஆனால் நீங்கள் எப்படி பஸ் மாறி ஏறினீர்கள்Õ என்று கேட்டான். அது என்னை யோசிக்க வைத்தது. அதே நேரம், பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என எண்ணமும் ஏற்பட்டது. அதனால்தான் இப்போது சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.


Source: Dinakaran
 

திவ்யாவுக்கு திடீர் தடை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திவ்யாவுக்கு திடீர் தடை

3/25/2011 12:01:33 PM

தாண்டம் தஷகுனம்Õ கன்னட படத்தில் நடித்தார் திவ்யா. Ôஇப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர வேண்டும் என்றால் சம்பள பாக்கியை தர வேண்டும்Õ என தயாரிப்பாளருக்கு கண்டிஷன் போட்டார் திவ்யா. Ôபட விளம்பரத்துக்காக திவ்யா வருவது அவசியம் என்பதால் சம்பள பாக்கியை தந்துவிட்டேன். ஆனால் சொன்னபடி அவர் விழாவுக்கு வரவில்லை. என்னுடன் வாய்த்தகராற¤ல் ஈடுபடுகிறார்Õ என கன்னட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் தயாரிப்பாளர் கணேஷ். இதையடுத்து திவ்யா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கன்னட தயாரிப்பாளர்கள் அவசரமாக கூட்டம் நடத்தி ஆலோசித்தனர். இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே அதிரடி முடிவை எடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ÔÔதொடர்ந்து கன்னட பட உலகினருடன் பிரச்னையில் ஈடுபட்டு வருகிறார் திவ்யா. அதனால் இனி அவரை எந்த படத்துக்கும் ஒப்பந்தம் செய்யக்கூடாதுÕÕ எனக் கூறி, சங்க கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர். இந்த தடை நடவடிக்கையால் கன்னட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


Source: Dinakaran
 

சண்டக்கோழி பார்ட் 2 : லிங்குசாமி மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சண்டக்கோழி பார்ட் 2 : லிங்குசாமி மறுப்பு

3/25/2011 12:02:35 PM

சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி இயக்குவதாகவும் விஷால் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.இது பற்றி லிங்குசாமி கூறியது:சண்டக்கோழி படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது எளிதான காரியமல்ல. அப்படி எடுத்தால், முதல் பாகத்தை விட விறுவிறுப்பாக எடுக்க வேண்டும். இப்போதைக்கு அந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணமில்லை. நானும் விஷாலும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளோம். அது முன்பே எடுத்த முடிவு. Ôவேட்டை படத்தை முடித்த பின் விஷாலை இயக்குவேன். ஆனால் அது Ôசண்டக்கோழிÕ பார்ட் 2 கிடையாது. அது வேறு கதை. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி அம்சங்கள் நிறைந்த படமாக அது இருக்கும். ஒவ்வொரு படத்தையும் வெரைட்டியாக தர விரும்புகிறேன். எனவேதான் திரைக்கதை அமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். திரைக்கதை ரெடியாகிவிட்டால், ஷூட்டிங்கை வேகமாக முடித்துவிடுவேன். இதுதான் எனது பாணி.
இவ்வாறு லிங்குசாமி கூறினார்.


Source: Dinakaran
 

கிசு கிசு -வில்லனுக்கு நடிகை தந்த ஷாக்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

வில்லனுக்கு நடிகை தந்த ஷாக்

3/25/2011 12:05:33 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

ஜெக இயக்குனரு காட்டன் வீர ஹீரோகிட்ட கதை சொன்னாராம்… சொன்னாராம்… முழு கதையும் கேட்ட நடிகரு, பதில் எதுவும் சொல்லலையாம். நொந்துபோன இயக்கம் திரும்பி வந்துட்டாராம். கதை பிடிக்கலேன்னா சொல்லி இருக்கலாம். பதிலே சொல்லலேன்னா என்ன அர்த்தம்னு இயக்கம் புலம்புறாராம்… புலம்புறாராம்…

பிரகாச வில்லன் நடிகரு கன்னட படம் தயாரிக்கிறாரு. இதுல நடிக்க சீல நடிகையை கேட்டாராம்… கேட்டாராம்… போன்ல நடிகரு கேட்டதும், தெலுங்குல பிசியா இருக்கேன். உங்க படத்துக்கு கால்ஷீட் இல்லேன்னு நடிகை சொல்லிட்டாராம். வில்லன் ஷாக் ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்…

ரம்ய நம்பி நடிகை திடீர்னு கவர்ச்சிக்கு மாற முடிவு பண்ணியிருக்காராம்… பண்ணியிருக்காராம்… வாய்ப்புகள் வரணும்னா கவர்ச்சியா நடிச்சே தீரணும்னு நட்பு நடிகைங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். முதல் கட்டமா கிளாமர் ஷூட் நடத்தியிருக்காராம். அதுக்கான ரெஸ்பான்ஸை பார்த்துட்டு கவர்ச்சிக்கு மாறுவாராம்… மாறுவாராம்…


Source: Dinakaran
 

ஸ்டூடியோ காலம் திரும்புமா?பிரபு ஏக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்டூடியோ காலம் திரும்புமா? பிரபு ஏக்கம்

3/23/2011 10:29:30 AM

வைஜயந்தி மூவீஸ் சார்பில் அஸ்வினிதத் தயாரிக்கும் படம் 'சக்தி'. தெலுங்கில் ரிலீசாகியுள்ள இந்தப் படத்தை தமிழில் 'ஓம் சக்தி' என்று டப் செய்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர், இலியானா நடித்துள்ள மெஹர் ரமேஷ் இயக்கி உள்ளார். மணிசர்மா இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. பி.வாசு வெளியிட, கே.எஸ்.ரவிகுமார் பெற்றார். விழாவில், பிரபு பேசியதாவது:

இந்தப் படம் பிரமாண்ட அரங்குகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதற்காகவே பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர். ஒரு காலத்தில் படங்கள் செட்டுகளில் உருவானது. ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள் வந்தால் ஒரு புறம் எனது தந்தை படம், மறுபுறம் சித்தப்பா எம்.ஜி.ஆர் படம், இன்னொரு புறம் ஜெமினி மாமா, ஜெய்சங்கர் படம் நடந்து கொண்டிருக்கும் மதிய வேளைகளில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். பிறகு ரஜினி, கமல், காலகட்டம் வந்தது. பிறகு சினிமா அரங்கத்தை விட்டு வெளியே போனது. உறவுகளும் பிரிந்தது. சினிமா, மீண்டும் செட்களுக்கு வரவேண்டும். நிறைய படங்கள் செட்டில் எடுக்க வேண்டும். அப்போது 'மாமன் மச்சான்' என்று உறவுகள் மலரும். இவ்வாறு பிரபு பேசினார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், பிறைசூடன், ஸ்டன்ட் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Source: Dinakaran
 

செல்வமணியின் அகிலா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
செல்வமணியின் அகிலா

3/23/2011 10:23:29 AM

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'அகிலா' என்ற படத்தை இயக்குகிறார் ஆர்.கே.செல்வமணி. இதில் ஆனந்தன் என்ற வழக்கறிஞ்சர் ஹீரோ. பெங்களூர் மாடல் ஹுதாசா ஹீரோயின். பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார். ஆதித்யன் இசை. கணேஷ்ராம் ஒளிப்பதிவு. படம் பற்றி ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நசுக்கப்படும் அப்பாவி மக்கள் பற்றிய கதை. எனது முந்தைய படங்கள் போன்று இதுவும் நிஜ சம்பங்களின் அடிப்படையிலானது. அந்த சம்பவம் எது என்பதை இப்போது சொல்ல இயலாது. முதல் கட்டமாக சென்னையில் நாளை (இன்று) படப்பிடிப்பு தொடங்குகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் மேற்கு வங்கம், உத்ராஞ்சல், ஜார்கண்ட் பகுதிகளில் நடக்கிறது.





Source: Dinakaran
 

காதல் முதல் கல்யாணம் வரை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதல் முதல் கல்யாணம் வரை

3/23/2011 10:21:51 AM

ஈஸ்ட் கோஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம், 'காதல் டூ கல்யாணம்'. ஆர்யாவின் தம்பி சத்யா, திவ்யா ஜோடியாக நடிக்கின்றனர். படத்தை இயக்கும் மிலிந்த் கூறியதாவது:  காதல் என்பது இரண்டு பேர் சம்மந்தப்பட்டது. கல்யாணம் இரண்டு குடும்பங்கள் சம்மந்தப்பட்டது. காதலுக்குப் பிறகு கல்யாணத்துக்கான ஏற்பாட்டுக்கு செல்லும்போது என்னென்ன பிரச்னைகள் வருகிறது என்பது திரைக்கதை. சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் கதை செல்லும். இதில் சத்யா ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். திவ்யா கார்பரேட் கலாசாரத்தில் வாழ்பவர். இவர்களிருவர் தொடர்பான காட்சிகள் பரபரப்பாக இருக்கும். இந்தப் படத்துக்காக சத்யா, மும்பையில் உள்ள அனுபம் கெர் நடிப்பு பயிற்சி பள்ளியில் இரண்டு மாதம் படித்துவிட்டு நடிக்க வந்தார். திவ்யா இதுவரை நடித்த தமிழ்ப் படங்களிலேயே இதில்தான் சிறப்பாக நடித்துள்ளார் என்று சொல்வேன். அவரது கேரக்டரும், நடிப்பும் அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. படம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மிலிந்த் கூறினார்.





Source: Dinakaran
 

ஒரு பாடலுக்கு விதார்த் டான்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரு பாடலுக்கு விதார்த் டான்ஸ்

3/23/2011 10:28:12 AM

சேனல் பைவ் புரொடக்ஷன்ஸ் சார்பில், மலேசிய மாறன் தயாரிக்கும் படம், 'குருசாமி'. உதயதாரா, பிரேம்குமார், அலெக்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் கே.ஆர்.மணிமுத்து கூறியதாவது: அய்யப்பன் புகழ் பாடும் கதையை கொண்ட படம் இது. 'அய்யப்பனே சாமி' என்ற பாடல் காட்சியில்'மைனா' விதார்த் ஆடியுள்ளார். சாலிகிராமத்திலுள்ள அய்யப்பன் கோயிலில் அவரது காட்சிகள் படமானது. நானும், அவரும் நண்பர்கள். சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் அவர், எனது வேண்டுகோளுக்காக ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். தவிர, 'பாய்ஸ்' மணிகண்டனுக்கும் முக்கிய கேரக்டர் இருக்கிறது.





Source: Dinakaran
 

ரானாவில் அமிதாப்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரானாவில் அமிதாப்

3/23/2011 10:26:16 AM

ரஜினியின் 'ரானா' படத்தில் அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் படம் 'ரானா'. ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ரஜினியும் அமிதாப்பும் இணைந்து பல இந்தி படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இது 1991-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து இப்போது மீண்டும் இணைகின்றனர்.





Source: Dinakaran
 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்

3/21/2011 10:28:35 AM

'அவதார்' பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்க இருப்பதாக லட்சுமி ராய் கூறியுள்ளார். பிரியதர்ஷன் இயக்கும், 'அரபியும் ஒட்டகமும் பி. மாதவன் நாயரும்' என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமி ராய். இந்த படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் உள்ள அல் கதீனா பாலைவனத்தில் நடந்து வருகிறது. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பாலைவனத்தில் செல்லும் சிறப்பு ஜீப் ஸ்பாட்டுக்கு வந்து நின்றது. இதையடுத்து பிரியதர்ஷன் உட்பட படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ச்சிக்கு காரணம் ஹாலிவுட் பட இயக்குனர், கேமரூன் அதிலிருந்து இறங்கியது தான். இதுபற்றி பிரியதர்ஷன் கூறும்போது, 'அபுதாபி மீடியா சப்மிட்' என்ற கருத்தரங்கில் 3-டி பற்றி பேச வந்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். அவர் வந்திருப்பதை அறிந்து முந்தைய நாளே டின்னருக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தேன். அப்போது, 'எப்படி நீங்கள் ஷூட்டிங் நடத்துகிறீர்கள் என்பதை அறிய ஆசை. நான் செட்டுக்கு வருகிறேன்' என்றார். இதையடுத்து மறுநாள் செட்டுக்கு வந்ததும் எங்களுக்கு புல்லரித்துவிட்டது. பிறகு எல்லோரையும் பாராட்டிவிட்டு சென்றார்' என்று கூறினார்.

லட்சுமி ராயிடம் கேட்டபோது கூறியதாவது: பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தேன். அப்போது அதிக நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. இந்திய சினிமா பற்றியும் அதற்கான வியாபாரம் பற்றியும் கேட்டார். அவரது அனைத்துப் படங்களுக்கும் நான் ரசிகை என்றேன். அவருடன் இணைந்து பணிபுரிவது பற்றி கேட்டேன். 'அவதாரி'ன் அடுத்த பாகம் உட்பட சில படங்களை அவர் இயக்க இருக்கிறார். இதில் ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விரைவில் கலிபோர்னியாவில் கேமரூனை மீண்டும் சந்தித்து பேச இருக்கிறேன். இதையடுத்து ஹாலிவுட்டில் இருந்து அறிவிப்பு வந்தாலும் வரும். இவ்வாறு லட்சுமி ராய் கூறினார்.


Source: Dinakaran
 

கல்யாணத்துக்கு ஆயிரம் பொய் காதலிக்க லட்சம் பொய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கல்யாணத்துக்கு ஆயிரம் பொய் காதலிக்க லட்சம் பொய்

3/21/2011 10:31:30 AM

ஸ்ரீசிவ செல்வநாயகி அம்மன் மூவிஸ் சார்பில் டிசிஎஸ் தயாரிக்கும் படம் 'கண்டேன்'. இதில் சாந்தனு ஹீரோ. அவர் ஜோடியாக ரேஷ்மி நடிக்கிறார். படத்தை இயக்கும் ஏ.சி.முகில் கூறியதாவது: ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்து வைக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், காதலுக்காக லட்சம் பொய் சொல்லலாம் என்பது இந்தப் படத்தின் கதை. சாந்தனு இப்படி பல பொய்கள் சொல்லி எப்படி ரேஷ்மியை காதலிக்கிறார் என்பது திரைக்கதை. இந்தப் படத்தில் காதலுக்கும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். சந்தானம் தனி டிராக்காக இல்லாமல் படம் முழுவதும் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. மலேசிய தமிழிசை பாப் பாடகர் பர்ன், எழுதி, பாடியுள்ள பாடலுக்கு அவரே நடித்துள்ளார். படம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு முகில் கூறினார்.


Source: Dinakaran
 

மனதுக்கு பிடித்தவரை தேடுகிறார் சமீரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மனதுக்கு பிடித்தவரை தேடுகிறார் சமீரா

3/21/2011 10:30:09 AM

'காதலுக்கு நான் எதிரி இல்லை. என் மனதுக்குப் பிடித்தவரை தேடிக் கொண்டிருக்கிறேன்' என்றார் சமீரா ரெட்டி. இதுபற்றி அவர் கூறியதாவது: 'நடுநிசி நாய்கள்' படத்தின் புரமோஷன், பிரபுதேவா பட ஷூட்டிங், கோழிகோடில் நடந்த கலைநிகழ்ச்சி என்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்ததால் உடல் நலம் சரியில்லாமல் போனது. இப்போது குணமாகிவிட்டேன். தமிழில் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்துவருகிறேன். இதனுடன் விஷால் நடிக்கும் படம், பிரியதர்ஷன் இயக்கும் இந்திபடம், கவுதம் மேனம் இயக்கும் படம் என இந்த வருடம் முழுவதும் பிசியாக இருக்கிறேன். யாரையும் காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். காதலுக்கு நான் எதிரி இல்லை. இவ்வளவு பிசியாக இருக்கும்போது நான் யாரை போய் காதலிப்பது? இருந்தாலும் என மனதுக்குப் பிடித்தவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.


Source: Dinakaran
 

வளர்ந்து வரும் ரீ ரிலீஸ் கலாசாரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வளர்ந்து வரும் ரீ ரிலீஸ் கலாசாரம்

3/21/2011 10:32:54 AM

தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு மறு வெளியீடு (ரீ ரிலீஸ்) கலாசாரம் வளர்ந்து வருகிறது. மறு வெளியீடு என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மறு திரையீடு செய்வது வழக்கமான ஒன்று. குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்து பெரிய வெற்றி பெற்ற படங்கள் அவ்வப்போது மறு வெளியீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏற்கெனவே வெளிவந்து ரசிகர்களை சென்று அடையாத அல்லது தோல்வியை தழுவிய படங்களை மறு வெளியீடு செய்யும் கலாசாரம் வளர்ந்து வருகிறது.

மக்கள் கவனத்தை பெறாமல் போன சில கவர்ச்சிப் படங்கள் வேறு பெயர்களில் மறு வெளியீடு செய்யப்பட்டு சமீபத்தில் தியேட்டர்களில் ஓடியது. 'ஸ்வேதா கேர் ஆஃப் வெலிங்டன் ரோடு', 'அந்தரங்கம்' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இது ஒரு புறம் இருக்க, சரியான திட்டமிடுதலுடன் வெளியிடப்படாத, அல்லது தோல்வியடைந்த படங்களை மறு திரையீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய 'தா' படம் மீடியாவால் பாராட்டப்பட்டது. ஆனால், அந்தப் படம் ஒருவாரம் கூட தியேட்டரில் ஓடவில்லை. இப்போது அந்தப் படத்தை மறு வெளியீடு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. 'நில் கவனி செல்லாதே', 'முன்தினம் பார்த்தேனே', 'நானே என்னுள் இல்லை' உட்பட சில படங்கள் மறு திரையீடலுக்கு தயாராகி வருகிறது.

'மிஷ்கின் இயக்கிய முதல் படமான 'சித்திரம் பேசுதடி' ரிலீசானசில நாட்களிலேயே படப் பெட்டிகள் திரும்பியது. படத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு தயாரிப்பாளர் அதை ரீ ரிலீஸ் செய்தார். 50 நாட்களை தாண்டி ஓடியது. 'ஒரு தலை ராகம்', 'சேது' போன்ற பல படங்களுக்கு இத்தகைய அனுபவங்கள் உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், மறுவெளியீடு செய்ய சில தயாரிப்பாளர்கள் முயற்சிக்கிறார்கள். அதில் வெற்றி பெறவும் கூடும்' என்கிறார் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர் ஒருவர்.

'பொதுவாக சிறு பட்ஜெட் படங்கள்தான் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அதுவும் சினிமா துறையில் போதிய அனுபவம் இல்லாதவர்கள், படம் வெளியிடும்போது சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு படங்களை வெளியிடுவதில்லை. உரிய முறையில் விளம்பரமும் செய்வதில்லை. அதனால்தான் இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில படத்தின் இயக்குனர்கள், நடிகர்களுக்கு தங்கள் படத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கும். நல்ல படம் மக்களை போய் சேரவில்லை என்று கருதிக் கொண்டு மீண்டும் செலவு செய்து படத்தை வெளியிடுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறிதான்' என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன்.


Source: Dinakaran
 

கார்த்திகாவுக்கு திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்த்திகாவுக்கு திருமணம்

3/21/2011 10:25:16 AM

'தூத்துக்குடி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கார்த்திகா. அதன் பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது படங்கள் எதுவும் இல்லாத நிலையில் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். இதற்கிடையில் கார்த்திகாவுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தனது சொந்தத்திலேயே அவருக்கேற்ற மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். இதுகுறித்து கார்த்திகாவின் அம்மா மாலினி கூறும்போது, 'கார்த்திகாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எதுவும் அவளுக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த ஆண்டுக்குள் அவளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.


Source: Dinakaran
 

பாடல் வெளியீட்டில் த்ரிஷா டான்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாடல் வெளியீட்டில் த்ரிஷா டான்ஸ்

3/21/2011 10:22:14 AM

தெலுங்கு பட பாடல் வெளியீட்டு விழாவில், மேடையில் டான்ஸ் ஆடுகிறார் த்ரிஷா. பவன் கல்யாண், த்ரிஷா நடித்துள்ள தெலுங்கு படம் 'தீன்மார்'. இதன் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ஷிபா கலா வேதிகா அரங்கில் இன்று நடக்கிறது. மேடை நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாத த்ரிஷா, இந்த விழாவில் டான்ஸ் ஆட சம்மதித்துள்ளார். ஏற்கனவே 'ஷக்தி' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜூனியர் என்டிஆருடன் இலியானா மேடையில் டான்ஸ் ஆடினார். இதையடுத்து போட்டியை சமாளிக்க த்ரிஷாவும் டான்ஸுக்கு சம்மதித்துள்ளதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Source: Dinakaran
 

'துரத்தப் பார்க்கிறார்கள், ஜெனிலியா கொதிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'துரத்தப் பார்க்கிறார்கள், ஜெனிலியா கொதிப்பு

3/18/2011 10:55:17 AM

ஜெனிலியா கூறியது: 'பாலிவுட்டை உதறிவிட்டு கோலிவுட்டுக்கு போனவர், இப்போது மீண்டும் பாலிவுட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்Õ என்று மும்பையில் சிலர் என் மீது புகார் கூறுகின்றனர். இது யாரோ கட்டிவிடும் கதை. நான் பாலிவுட்டுக்கு வந்தது பிடிக்காமல் என்னை துரத்தப் பார்க்கிறார்கள். பாலிவுட்டில்தான் அறிமுகம் ஆனேன். அதன்பிறகு கோலிவுட், டோலிவுட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஷங்கரின் 'பாய்ஸ்Õ படத்தில் நடித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் 'துஜே மேரி கஸம்Õ என்ற இந்தி படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் அறிமுகமான நடிகை நான் ஒருத்திதான். இப்போதுதான் நான் இந்தியில் கவனம் செலுத்துவதாகவும் பாலிவுட்டில் லாபம் அடைய வந்திருப்பதாகவும் கூறுவது தவறு. ஷூட்டிங்கிற்காக மும்பை, சென்னை, ஐதராபாத் என்று 3 நகரங்களுக்கும் சுற்றி சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வெற்றி, இந்த பேச்சுக்களையெல்லாம் மாற்றிவிடும். அதற்காக காத்திருக்கிறேன்.





Source: Dinakaran
 

லிப் டு லிப் காட்சியில் பிரியாமணி,விமலா ராமன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

லிப் டு லிப் காட்சியில் பிரியாமணி, விமலா ராமன்

3/16/2011 5:40:55 PM

தெலுங்கில் கவர்ச்சியாக நடிப்பதில் நடிகைகள் இடையே கடும் போட்டி உள்ளது. இதனால் தமிழில் ஹோம்லியாக நடித்த விமலா ராமன் கூட அங்கு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாறிவிட்டார். பிரியாமணியுடன் சேர்ந்து விமலா ராமன் நடிக்கும் தெலுங்கு படம் ராஜ். இதன் பாடல் காட்சி, சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடலில் பிரியாமணி, விமலாவுடன் சேர்ந்து ஆடிப் பாடும் காட்சியில் ஹீரோ சுமந்த் நடித்தார். பிரியாமணி, விமலா இருவருமே படுகவர்ச்சி உடையில் இந்த பாடலில் தோன்றுகின்றனர். சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு ஹீரோவை கட்டிப்பிடித்து ஆடிப் பாடும் காட்சியாம். இடையே லிப் டு லிப் கிஸ் காட்சிகளையும் சுட்டுத் தள்ளினார் டைரக்டர். சுமந்த்துக்கு பிரியாமணியும் விமலாவும் முத்தம் தருவது போல் வரும் இக்காட்சிக்கு பல டேக்குகள் ஆனதாம். யூனிட்டிலிருந்தவர்கள் சுமந்த்திடம் கைகுலுக்கிவிட்டு 'கொடுத்தவச்ச ஹீரோப்பா?Õ என மனதுக் குள் முணுமுணுத்தார்களாம்.


Source: Dinakaran
 

ஏப்ரல் மாதம் காதலியுடன் பிருத்விராஜ் திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏப்ரல் மாதம் காதலியுடன் பிருத்விராஜ் திருமணம்

3/16/2011 5:39:15 PM

'கனா கண்டேன், 'மொழி, 'நினைத்தாலே இனிக்கும், 'அபியும் நானும் என கோலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டும் பிருத்விராஜ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு போட்டி ஹீரோவாக வலம் வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 'உருமிÕ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.பிருத்விராஜ் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்குவார். தற்போது மீண்டும் பரபரப்பான காதல் கிசு கிசுவில் சிக்கி இருக்கிறார் பிருத்வி. ஒரு வருடத்துக்கு முன்பு டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி காண வந்த பெண் நிருபரை சந்தித்ததும் காதலில் விழுந்தாராம் பிருத்வி. அந்த பெண் மும்பைவாசி. இது பற்றிய ரகசியம் வெளிவராமல் இருப்பதற்காக வார இறுதி நாட்களில் மும்பைக்கு ரகசிய விசிட் அடித்துக் கொண்டிருந்தார் பிருத்வி. இந்த ரகசிய காதல், இப்போது மல்லுவுட்டில் லீக் ஆகி இருக்கிறது. விஷயம் பிருத்வியின் அம்மாவுக்கு தெரிந்ததும் அவரும் பச்சை கொடி காட்டிவிட்டாராம். ஏப்ரல் மாதம் காதலியுடன் திருமணம் நடக்கிறது. பிறகு திருவனந்தபுரத்தில் ஊர் அறிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் பிருத்வி.


Source: Dinakaran
 

கிசு கிசு -சாமியாரை சந்தித்த நடிகர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

சாமியாரை சந்தித்த நடிகர்

3/16/2011 5:43:04 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

சந்தன காமெடி நடிகரு சமீபத்துல பெங்களூரு போனாராம்… போனாராம்… ஷூட்டிங் முடிஞ்சி திடீர்ன்னு கார்ல புறப்பட்டவரு 'அந்த சாமியாரை சந்திச்சி ஆசி வாங்க¤னாராம்… வாங்கினாராம்… 'சாமியோட சந்திப்பு எப்படின்னு நடிகர்கிட்ட கேட்டா, 'ஆசி வாங்குறதுக்காக போகல. இது எதேச்சையா நடந்த சந்திப்புÕன்னு மழுப்புறாராம்… மழுப்புறாராம்…

திவ்யமான நடிகையை படத்துக்கு ஒப்பந¢தம் பண்ண சில டைரக்டருங்க முயற்சி பண்ணினாங்களாம். ஆனா, எப்போ போன் பண்ணினாலும் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் நடிகை இருக்கிறாராம்… இருக்கிறாராம்… எல்லைக்கு உள்ளே இருந்தாலும் ரெஸ்பான்ஸ் பண்றதில்லையாம்… பண்றதில்லையாம்… கேட்டா, எனக்கு சினிமா மட்டுமே எல்லாம் கிடையாது. அதையும் தாண்டி நிறைய பொறுப்புகள் இருக்குன்னு கோபப்படுறாராம்… கோபப்படுறாராம்…

தல நடிகரு நடிக்கிற பார்ட் 2 படம், கோவால ஷூட்டிங் நடக்கிற மாதிரி கதை பண்ணியிருந்தாங்களாம். இப்போ வெளிநாட்ல ஷூட்டிங் நடத்துற மாதிரி மாத்தியாச¢சாம். அதை மாத்தினது நடிகர்தானாம்… நடிகர்தானாம்… வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம்னு சக்ர இயக்கம் வாய் திறக்காம இருக்காராம்… இருக்காராம்…


Source: Dinakaran
 

‘வேலாயுதம்’ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘வேலாயுதம்’ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்

3/14/2011 3:43:07 PM

வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா ‌மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ‌சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 'வேலாயுதம்Õ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் டாம் டெல்மர் அமைக்கும் சண்டை காட்சியில் விரைவில் நடிக்க இருக்கிறார் விஜய்.


Source: Dinakaran
 

ஏஞ்சலினாவை பார்த்து தைரியம் வந்தது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏஞ்சலினாவை பார்த்து தைரியம் வந்தது

3/15/2011 11:43:59 AM

சினேகா கூறியது: குடும்ப பாங்காகவும் காதல் நாயகியாகவும் என்னை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜயசாந்தி நடித்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்Õ ரீமேக்கான 'பவானிÕ படத்தில் நடிக்க கேட்டு கதை சொல்ல வந்தார் இயக்குனர் கிச்சா. ஆச்சர்யமாக இருந்தது. 'இது போல் நடித்ததில்லை. இந்த வேடத்தை 100 சதவீதம் சரியாக செய்ய முடியுமா?Õ என்று தெரியவில்லை என தயங்கினேன். ஆனால் எனக்கு நம்பிக்கையூட்டினார் இயக்குனர். என் மீது அவர் நம்பிக்கை வைத்திருக்கும்போது எனக்கே தைரியம் வந்தது. போலீஸ் வேடத்தில் நடிப்பதற்கு முன் எப்படியெல்லாம் அதற்கான பயிற்சி தேவை என்பதை கேட்டறிந்து பயிற்சி பெற்றேன். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி நடித்த 'லாரா கிரஸ்ட்Õ, Ôடாம்ப் ரெய்டர்Õ ஆகியவை அவரை ஒரே இரவில் ஆக்ஷன் ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த படங்கள். அவை இரண்டையும் குறைந்தது ஆறு முறை பார்த்தேன். அதன்பிறகே என் மேல் நம்பிக்கை வந்தது. பிறகு ஒப்புக்கொண்டேன். முதல்நாள் ஷூட்டிங்கில் வரவழைத்துக்கொண்ட தைரியத்தை கிளைமாக்ஸ் வரை மனதில் நிறுத்திக் கொண்டேன். தற்போது இதுபோல் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் ஆக்ஷன் ஹீரோயினாக தொடர்ந்து நடிப்பதற்கு முழுமையாக தயாராக நேரம் தேவைப்படுகிறது.


Source: Dinakaran
 

பூபதி பாண்டியன் மீது ஸ்ரேயா ரெட்டி தாக்கு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பூபதி பாண்டியன் மீது ஸ்ரேயா ரெட்டி தாக்கு

3/15/2011 11:46:28 AM

காமெடி, காதல், சென்டிமென்ட் என்று கமர்ஷியல் பார்முலாவை வைத்து படங்களை தந்தவர் பூபதி பாண்டியன். தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்’, 'திருவிளையாடல் ஆரம்பம்’, விஷால் நடித்த 'மலைக்கோட்டை’ படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு கதை உருவாக்கினார். இந்த கதையை கேட்டு அதில் நடிக்க விருப்பம் தெரிவித்தார் விஷால். இயக்குனரும் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகளில் தீவிர ஈடுபட்டார். இதற்கிடையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. திடீரென்று தனது புதிய படத்தில் நடிக்க ஆர்யாவை தேர்வு செய்திருக்கிறார் பூபதி.  விஷாலின் அண்ணியும் தயாரிப்பாளருமான நடிகை ஸ்ரேயா ரெட்டி இது பற்றி கருத்து தெரிவித்தபோது, 'பூபதி பாண்டியன் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. இதனால் அவரது இயக்கத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Source: Dinakaran
 

ஹீரோயின் மீது நிகிதா பாய்ச்சல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோயின் மீது நிகிதா பாய்ச்சல்

3/14/2011 3:31:43 PM

'சரோஜா’ படத்தில் நடித்த பின், சேரனுடன் 'முரண்Õ படத்தில் நடிக்கிறார் நிகிதா. அவர் கூறியது: சமீபத்தில்தான் எனது தந்தை இறந்தார். அந்த வேதனையில் இருக்கும்போது எனக்கும் கன்னட நடிகர் தர்ஷனுக்கும் திருமணம் என்று புரளி கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது மேலும் வேதனையாக இருந்தது. 'பிரின்ஸ்Õ என்ற படத்திற்காக அவருடன் திருமண காட்சியில் நடித்தேன். அதைத்தான் புரளியாக கிளப்பி இருக்கிறார்கள். இதே படத்தில் ஜெனிபர் கோட்வால் நடித்துள்ளார். மும்பையில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். ஆனால் ட்விட்டரில் என்னைப் பற்றி குறிப்பிடும்போது 'எனக்கு நிகிதா நண்பரல்லÕ என்று கூறி இருக்கிறார். 'பிரின்ஸ்Õ படத்தை சிறப்பு காட்சி திரையிட்டார்கள். எனது நடிப்பை நிறைய பேர் பாராட்டினர். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் இப்படி நடந்து கொள்கிறார். எனக்கு காதலன் யாரும் இல்லை. தர்ஷன் நல்ல நண்பர். சினிமாவில் 9 வருடமாக இருக்கிறேன். அதனால் புகழ் கிடைத்தது. இனிமேல் என் எதிர்கால வாழ்க்கையை யோசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. காதல் திருமணம், குடும்பத்தார் நடத்தி வைக்கும் திருமணம் என எதுவாக இருந்தாலும் ஓகேதான்.


Source: Dinakaran
 

மீண்டும் விக்ரமன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் விக்ரமன்

3/14/2011 12:42:57 PM

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் விக்ரமன் இயக்கும் படம் 'இளமை நாட்கள்'. இதில் முழுவதும் புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். பால்ராஜ் இசை. கே.எஸ்.ராஜன் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக நட்சத்திர தேர்வு நடந்து வருகிறது. ப்ளஸ் டூ மாணவர்கள் பற்றிய கதையான இந்தப் படத்தில், அவர்களுக்குள் ஏற்படும் காதல், நட்பு, மோதல் ஆகியவற்றை யதார்த்தமாகச் சொல்கிறார்களாம்.


Source: Dinakaran
 

த்ரிஷாவின் மெகா ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

த்ரிஷாவின் மெகா ஆசை

3/15/2011 11:55:48 AM

விடுமுறை என்றால் த்ரிஷாவின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. பார்ட்டி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது நண்பர்களுடன் கேம்ப் என விதவிதமாக அனுபவிப்பது அவரது வழக்கம். சமீபத்தில் தோழிகளுடன் ஜெய்ப்பூருக்கு சென்றார் த்ரிஷா. அங்குள்ள காட்டுப் பகுதிகளுக்கு சென்று விலங்குகளை பார்த்து வந்தது மறக்க முடியாத அனுபவம் என பூரிக்கிறார். த்ரிஷாவுக்கு ஒரு ஆசையாம், நடுக்காட்டில் உலவும் மெகா சைஸ் புலிகளைப் பார்க்க வேண்டுமாம். அதேபோல, நல்ல ஏற்ற இறக்கம் கொண்ட முரட்டு மலையில் ட்ரெக்கிங் போகவும் ஆசையாம்.


Source: Dinakaran
 

விக்ரமுக்கு டாக்டர் பட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விக்ரமுக்கு டாக்டர் பட்டம்

3/14/2011 12:41:03 PM

ஏராளமான வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்தவர், விக்ரம். இவருக்கு இத்தாலியிலுள்ள பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காக, இந்த விருதை விக்ரமுக்கு வழங்குவதாக, இத்தாலி யுனிவர்சிட்டா பாப்புலேர் டெக்லி ஸ்டெடி டிமிலானோ பல்கலைக்கழக இயக்குனர்களும், செனட் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். மே 29ம் தேதி, இத்தாலி யுனிவர்சிட்டியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் விக்ரம் இந்தப் பட்டத்தை பெறுகிறார்.


Source: Dinakaran
 

அரவான் உண்மை சம்பவ கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அரவான் உண்மை சம்பவ கதை

3/14/2011 12:39:47 PM

வசந்தபாலன் இயக்கும் 'அரவான்' படத்தில், நடிக்கும் தன்ஷிகா கூறியதாவது: வரும் 18-ம் தேதி முதல், 'அரவான்' படத்தில் நடிக்கிறேன். 300 வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. முதல்முறையாக ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறேன். இதற்காக, இந்தியில் ஜீனத் அமன் நடித்த 'சத்யம் சிவம் சுந்தரம்', தமிழில் ராதா நடித்த 'முதல் மரியாதை', ரஞ்சிதா நடித்த 'நாடோடி தென்றல்' படங்களை பார்க்குமாறு வசந்தபாலன் சொன்னார். அந்தப் படங்களை பார்த்தேன். அவற்றில் நடித்த ஹீரோயின்கள், சில காட்சிகளில் ஜாக்கெட் அணியாமல் நடித்திருப்பார்கள். அதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டேன்.


Source: Dinakaran
 

சுவாரஸ்யமான அனுபவம் :ஓவியா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சுவாரஸ்யமான அனுபவம் : ஓவியா!

3/14/2011 12:45:46 PM

'களவாணி' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஓவியா, இந்த படத்தின் கன்னட, தெலுங்கு ரீமேக்கில் அதே கேரக்டரில் நடித்து வருகிறார். இதுபற்றி ஓவியா கூறியதாவது: தமிழில் 'களவாணி' ஹிட்டானதால், கன்னட, தெலுங்கு வாய்ப்புகள் கிடைத்தன. கன்னடத்தில் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர் பிரதீப் ராஜா. மேலும் ஒரு மழை பாடலும் படத்தில் இருக்கிறது. கன்னட ரசிகர்களுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் இதே வேடத்தில் நிகிலுடன் நடிக்கிறேன். ஒரே வேடத்தை வெவ்வேறு மொழிகளில் செய்வதால் போரடிக்கவில்லையா என்கிறார்கள். இதில் ஏன் போரடிக்கப் போகிறது? ஒவ்வொரு முறையும் முதலில் நடித்ததை விட இன்னும் சிறப்பாக நடிக்க முடியும். இது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கிறது. தமிழில், ராசு. மதுரவன் இயக்கத்தில் நடித்துள்ள 'முத்துக்கு முத்தாக' விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கூடை பந்து பிளேயராக நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு ஓவியா கூறினார்.


Source: Dinakaran
 

சிங்கம் புலியில் ஒரு பாடல் நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிங்கம் புலியில் ஒரு பாடல் நீக்கம்

3/14/2011 12:48:52 PM

'சிங்கம் புலி' படத்தில் ஒரு பாடலை நீக்கியுள்ளதாக அதன் இயக்குனர் சாய்ரமணி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 8 வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் கதையை தயார் செய்து வைத்திருந்தேன். பல ஹீரோக்களிடம் சொல்ல முயற்சித்தும் நடக்கவில்லை. கதை கேட்ட சில ஹீரோக்கள் வில்லனாக நடிக்க தயக்கம் காட்டினார்கள். அதனால் அண்ணன், தம்பி கதையை இரட்டைவேட கதையாக மாற்றினேன். சில ஹீரோக்களுக்கு பிடித்திருந்தது. கால்ஷீட் இல்லை. கடைசியில் சூப்பர்குட் சவுத்ரி தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவுக்கு சொல்லச் சொன்னார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஜீவா கதை கேட்டார். உடனே ஒப்புக்கொண்டா£ர். படம் நீளமாக இருக்கிறது என்று பலரும் சொன்னதால் ஒரு பாடல் காட்சியை நீக்கி இருக்கிறோம். இதே கதையை தெலுங்கு, இந்தியில் உரிமம் கேட்கிறார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Source: Dinakaran
 

விஷால் படத்தில் கவர்ச்சி பாடகி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஷால் படத்தில் கவர்ச்சி பாடகி

3/14/2011 3:35:24 PM

பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ரெட்டி ஹீரோயின். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. கவர்ச்சி பாப் பாடகி சோஃபி சவுத்ரியை இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் பிரபு தேவா. இதில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளார். இது பற்றி சோஃபி கூறும்போது, 'Ôபிரபு தேவா இயக்கும் படத்துக்காக பாலிவுட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது நண்பரும் டிசைனருமான மனிஷ் மல்ஹோத்ரா, இப்படத்துக்காக எனக்கு காஸ்டியூம் வடிவமைத்திருக்கிறார். தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. கோலிவுட்டில் நல்ல கதைகளுடன் படங்கள் வெளி வருகின்றன. மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க ஆசை. நான் கமல் ரசிகை. ரஜினி, விஜய், அஜீத் ஆகியோரும் பிடிக்கும். அவர்களுடன் நடிக்க ஆசை. பிரபு தேவா படத்தில் நடிக்கும் பாடல் பற்றி விரிவாக இப்போது கூற முடியாது. தமிழில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது முழுமையாக நிறைவேறும் என்ற எதிர்பார்க்கிறேன்ÕÕ என்றார்.


Source: Dinakaran
 

ரியல் எஸ்டேட் பிசினசில் கவனம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரியல் எஸ்டேட் பிசினசில் கவனம்

3/15/2011 12:01:28 PM

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையான நமீதா, இப்போது ஒரு பிரமாண்ட பிஸினஸிலும் குதித்துள்ளார். தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ரியல் எஸ்டேட் பிசினசிலும் கவனம் செலுத்தி வருகிறார் நமீதா. கடந்த மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்றுதான் இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாகத் துவங்கினார் நமீதா. சென்னையிலும் இதுபோன்ற பிஸினஸிலும் உருவாக்கித் தரும் திட்டத்தையும் கையோடு துவங்கியுள்ளார் நமீதா.





Source: Dinakaran
 

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு படம் காட்டும் சடகோபன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு படம் காட்டும் சடகோபன்

3/12/2011 11:53:23 AM

சடகோபன் ரமேஷ் நடித்த விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் 'போட்டா போட்டி'. இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை காமெடியாக சொல்லியிருக்கும் படம். படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் 'போட்டா போட்டி'
தான் நடித்திருக்கும் 'போட்டா போட்டி' படத்தை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திரையிட முடிவு செய்துள்ளாராம். இதற்கு பட நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது.


Source: Dinakaran
 

கமர்சியல் ஹீரோயினுடன் போட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமர்சியல் ஹீரோயினுடன் போட்டி

3/12/2011 11:56:30 AM

பிருத்விராஜுடன் மம்தா நடித்துள்ள மலையாள படமான 'அன்வர்' தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் பற்றி மம்தா கூறியது:
கமர்சியல் வெற்றிதான் ஹீரோயின் திறமைக்கு உத்தரவாதம் என்பதை நம்பவில்லை. 'அன்வர்' படம் கோவை வெடிகுண்டு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இக்கதையால் ஈர்க்கப்பட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் வெற்றி, தோல்வியை கணக்கில் எடுக்காமல் குறிப்பிட்ட நடிகர், நடிகையின் நடிப்பை வைத்தே அவர்களின் திறமையை கணிக்கிறார்கள் மலையாள ரசிகர்கள். அந்த வகையில் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள வெற்றிகரமான கமர்சியல் ஹீரோயின்களைவிட என்னால் இன்னும் பிரகாசிக்க முடியும். நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் பிரச்னை என்று வந்தால் கூட அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வேன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விரும்புகிறேன்.


Source: Dinakaran
 

ஷூட்டிங்கில் விபத்து ஆதி காயம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஷூட்டிங்கில் விபத்து ஆதி காயம்

3/9/2011 10:01:19 AM

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஆதி படுகாயமடைந்தார். வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம், 'அரவான்'. இதன் ஷூட்டிங் மதுரை மேலூர் பகுதியில் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் ஆதி, பசுபதி, அர்ச்சனா கவி மற்றும் ஏராளமான கிராமத்தினர் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது 5 அடி உயர பனை மரத்தை ஆதி தாண்டிக் குதிப்பது போன்று படமாக்கினர். டூப் போடலாம் என்றபோது, மறுத்த ஆதி, தானே தாண்டினார். அப்போது எதிர்பாராவிதமாக பனை மரத்தின் மீது விழுந்தார். பனை மட்டை கறுக்குகள், ஆதியின்  கைகளை கிழித்தது. படுகாயம் அடைந்த அவர் வலியால் துடித்தார். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்குப் பின், ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியுள்ளனர்.


Source: Dinakaran
 

மீண்டும் பின்னணி பாடுகிறார் தனுஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் பின்னணி பாடுகிறார் தனுஷ்

3/10/2011 11:49:51 AM

ஏற்கனவே தொடங்கி பாதியில் கைவிட்ட இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தூசு தட்டி இரண்டாம் உலகம் என்ற பெய‌ரில் பல மாற்றங்களுடன் உருவாக்கி வருகிறார் செல்வராகவன். தனுஷ், ஆண்ட்‌ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ‌ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் தனது தம்பி தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம் செல்வா, இதற்கு யுவனும் ஒப்புக் கொண்டாராம். இதனையடுத்து விரைவில் பாடல் ஒலிப்பதிவு ஆகிறது. கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் மெகா ஹட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Dinakaran
 

கிசு கிசு -ஹீரோவின் காதலுக்கு நடிகர் துணை

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஹீரோவின் காதலுக்கு நடிகர் துணை

3/10/2011 11:58:13 AM

நல்ல காலம் பொறக்குது…
நல¢ல காலம் பொறக்குது…

படங்கள் இல்லாததால நண்பர்களோடு அரட்டை அடிக்கிறதுல பிசியா இருக்காராம் ஜீவனுள்ள நடிகரு. வர்ற வில்லன் வாய்ப்பையும் ஏத்துக்க மறுக்கிறாரு… மறுக்கிறாரு… ரியல் எஸ்டேட் பிசினஸ்ல குதிக்கலாமேன்னு நடிப்புலக நண்பர்கள் அவருக்கு சீரியஸா அட்வைஸ் பண்றாங்களாம்… பண்றாங்களாம்…

புதுமை இயக்குனரோட வித்தக பட ஷூட்டிங் அம்போன்னு நிக்குது. இதனால அப்பட நாயகியான பூரண நடிகை வருத்தமா இருக்காராம்… இருக்காராம்… படத்துல தனக்கு பெரிய ரோலுன்னு குஷியா இருந்தவரு, இப்போ சோகமா இருக்காராம். திடீர்னு புதுமைக்கு போன் பண்ணி எப்போ சார் ஷூட்டிங்கின்னு நடிகை கேட்டாராம்… கேட்டாராம்… ஏம்மா காமெடி பண்றேன்னு நொந்தவரு, போன்லேயே தயாரிப்பை பற்றி ஒரு மணி நேரம் புலம்பி தீர்த்துட்டாராம்… தீர்த்துட்டாராம்…

சோனிய நடிகைக்கும் கன்னட சுதீப்பான நடிகருக்கும் காதல் தீ பத்திக்கிட்டு எரியுது… எரியுது… இதுக்கு காரணமா இருந்தது காதல் தேசத்து நடிகராம்… நடிகராம்… கன்னட சினிமாவுக்கு நடிக்க போனவரு, அங்கே சுதீப்பையும் சோனிய நடிகையையும் நண்பராக்கி விட்டாராம். பிறகு நடிகரோட காதலுக்கும் துணையா இருந்து, நடிகைகிட்ட கிரீன் சிக்னல் வாங்கித் தந்தாராம்… தந்தாராம்…


Source: Dinakaran
 

வதந்தியால் பயமில்லை த்ரிஷா பேட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வதந்தியால் பயமில்லை த்ரிஷா பேட்டி

3/9/2011 11:43:28 AM

த்ரிஷா கூறியது: என்னைப் பற்றி நிறைய வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். திருமணம் நடந்துவிட்டது என முதலில் சொன்னார்கள். கடந்த வாரம், எனக்கு நிச்சயதார்த்தம் மட்டும் நடந்துள்ளது என்றனர். இதையொரு வேலையாக சிலர் செய்கின்றனர். அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதற்கு பயப்படவும் இல்லை. என்னைப் பற்றி என் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் தெரியும். தற்போது தெலுங்கில் 'தீன்மார்Õ, தமிழில் 'மங்காத்தாÕ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறேன். மேலும் 2 தெலுங்கு கதைகளை கேட்டிருக்கிறேன். தமிழில் சில கதைகளை கேட்டேன் பிடிக்கவில்லை. இந்தியில் நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். 'விண்ணைத்தாண்டி வருவாயாÕ, 'மன்மதன் அம்புÕ போன்ற படங்களில் ஹோம்லி வேடம் ஏற்றதால் இனி கிளாமராக நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள். அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை. 'தீன்மார்Õ படத்தில் கிளாமர் வேடம்தான். இன்றைய காதலர்கள் எப்படி இருக்கிறார்கள். காதலை எவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். பிடித்தால் சேர்ந்து இருப்பது, பிடிக்காவிட்டால் பிரிவது என இப்போதைய இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கும் கலாசாரம் பற்றிய கதை. என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு கிளாமர் வேடங்களுக்கு தடை போடமாட்டேன்.


Source: Dinakaran
 

ஐபிஎல் கிரிக்கெட் :தீபிகாவுக்கு முக்கியத்துவம் கேத்ரினா விலகல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஐபிஎல் கிரிக்கெட் : தீபிகாவுக்கு முக்கியத்துவம் கேத்ரினா விலகல்!

3/10/2011 11:32:54 AM

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூர் அணியின் விளம்பர தூதராக மைதானத்துக்கு வந்து வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் கேத்ரினா கைப். கடந்த ஆண்டும் போட்டிகளின் ஆரம்பத்தில் வந்தார். இடையில் காணாமல் போய்விட்டார். அவருக்கு பதில், பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களின்போது தீபிகா படுகோனை மைதானத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், Ôஇந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டேன்Õ என தெரிவித்திருக்கிறார் கேத்ரினா. Ôதொடர்ந்து பட ஷூட்டிங் இருப்பதால் நேரம் இல்லை. அதனால் பங்கேற்கவில¢லைÕ என்றும் அவர் காரணம் சொல்கிறார். ஆனால், Ôஉண்மையான காரணம் இது இல்லைÕ என்கிறது பாலிவுட் வட்டாரம். பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன் நெருங்கி பழகி வருகிறார் தீபிகா படுகோன். அதனால் கடந்த ஆண்டு பெங்களூர் அணி ஆடிய ஆட்டங்களுக்கு திடீர் விசிட் அடித்தார் தீபிகா. அவரே அந்த அணியின் திடீர் விளம்பர தூதராகவும் மாறிவிட்டார். இது கேத்ரினாவுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் கடந்த ஆண்டே அவர் சில போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்தார். இம்முறையும் தீபிகாவுக¢கே முக்கியத்துவம் தரப்படும் என்பதால் பெங்களூர் அணியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார் கேத்ரினா.


Source: Dinakaran
 

அய்யன் தாமதம் ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அய்யன் தாமதம் ஏன்?

3/9/2011 10:00:23 AM

சிங்கமுத்து மகன் வாசன், திவ்யா பத்மினி நடித்துள்ள படம் 'அய்யன்'. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், வரும் 11-ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் கேந்திரன் முனியசாமி கூறும்போது, 'வெயிலும், வறட்சி எனும் இரண்டு பின்னணியில் நடக்கும் கதை. இதற்காக மூன்று கோடை காலங்கள் தேவைப்பட்டது. அதற்காக காத்திருந்து படத்தை உருவாக்கினோம். அதுதான் தாமதத்திற்கு காரணம். ஊதாரியாக திரியும் இளைஞன், ஊர்க்காவலனாக மாறுவதுதான் கதை. இளையராஜாவின் இசையில் 6 பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.


Source: Dinakaran
 

கணவரை பிரிந்தேனா?பூமிகா கொதிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கணவரை பிரிந்தேனா? பூமிகா கொதிப்பு

3/9/2011 10:01:59 AM

சொந்தமாக தயாரித்த படம் தோல்வியடைந்ததால் கணவர் பரத் தாகூரை, பூமிகா பிரிந்துவிட்டார் என்றும் கணவர் மீது, கொடுமைப்படுத்தியாக போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பூமிகாவிடம் கேட்டபோது, கூறியிருப்பதாவது: என் கணவர் இல்லாமல் தனியாக நான் வெளியூர் அல்லது வெளிநாடு சென்றால் உடனே கணவரைப் பிரிந்துவிட்டதாக அர்த்தமா? அதுமட்டுமில்லாமல் எப்போதும் அவர் என் அருகிலேயே இருக்க முடியுமா? எப்படி தவறான செய்திகள் பரவுகிறது என்பது தெரியவில்லை. இந்த மாதிரியான செய்திகள் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கின்றன. பரத் எனது பணத்தை எடுத்துக்கொண்டதாகவும், கணவரால் கொடுமைப்படுத்தப் பட்டதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வந்துள்ளன. எனது குடும்பம் கடந்த வருடம் பெரும் கார் விபத்தை சந்தித்தது. இதில் எனது அம்மா இன்னும் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவருக்கு இருதய நோய். அவரைப் பார்ப்பதற்காக மும்பையில் இருக்கிறேன். உடனே, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், பரத் மீது போலீசில் புகார் செய்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது. பெற்றோரை பார்த்துக்கொள்வதற்காக வீட்டில் இருக்க கூடாதா? போலீசில் புகார் கொடுத்திருந்தால் எந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தேன் என்பதை நிரூபிக்க முடியுமா? இரண்டு பேரும் காதலித்தார்கள். ஆனால், ஆரம்பம் முதலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் சொல்கிறார்கள். ஆமாம், நான் அமைதியானவள். அவர் கொஞ்சம் படபடப்பானவர். இதில் என்ன இருக்கிறது. இரண்டு பேருமே ஒரே எண்ணத்தில் ஒன்றுப்போல் இருந்தால் இன்னொருவர் எதற்கு? ஒருத்தர் மட்டுமே வாழ்ந்துவிட்டு போகலாமே? நான் சொந்தமாக தயாரித்த தெலுங்கு படம், 'தகிட தகிட' ஓடாததுதான் பிரச்னை என்றும் இதனால் ஏற்பட்ட பல கோடி ரூபாய் நஷ்டத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது என்றும் கற்பனையாக கதை சொல்கிறார்கள். இதே படம் வெளியான நாளில் மேலும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த படங்களும் ப்ளாப் ஆயின. அதை ஏன் பேசமாட்டேன் என்கிறார்கள். படம் ஓடாததற்காக, கணவரை பிரிந்தேன் என்றால், இதைவிட வேடிக்கை வேறு ஏதாவது இருக்குமா? இவ்வாறு பூமிகா கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

இமேஜை கெடுக்க முயற்சி :சுனேனா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இமேஜை கெடுக்க முயற்சி : சுனேனா

3/9/2011 10:07:34 AM

'திருத்தணி' படத்தில் நடித்து வரும் சுனேனா கூறியதாவது: தமிழில் ஹோம்லியான கேரக்டரில் நடித்து நல்ல பெயர் வாங்கியுள்ளேன். எந்தப் படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. அதற்காக கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. கிளாமரும் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தமிழில் நடிப்பதற்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருந்தேன். அதிலும் ஹோம்லியான கேரக்டர்தான். அந்தப் படத்தை சென்னையில் வெளியிட்டவர்கள், நான் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு வருந்தினேன். என் இமேஜை கெடுக்கும் முயற்சியாக இதை கருதுகிறேன். 'திருத்தணி' படத்தில் முதன் முறையாக காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறேன். பிறகு 'கதிர்வேல்' வெளிவர இருக்கிறது. தமிழில் எனக்கு இருக்கும் நல்ல பெயரை கடைசி வரை காப்பாற்றுவேன்.


Source: Dinakaran