கருப்புப் பணத்துக்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை - சமந்தாவின் தந்தை

சென்னை: கருப்பு பணத்திற்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை என்று நடிகை சமந்தாவின் தந்தை கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவின் சென்னை வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டில் 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Samantha's father denies tax evasion charges

இந்த சோதனை குறித்து சமந்தாவின் தந்தை பிரபு கூறுகையில், "கறுப்புப் பணத்துக்கும் என் மகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மகள் வருமானத்துக்கான வரிகளை ஒழுங்காகக் கட்டி வருகிறாள். வரி ஏய்ப்பு செய்ததில்லை. இப்போது வெளிநாட்டில் உள்ளார் சமந்தா.

பொதுவாக தன் வருமானம் மற்றும் கணக்கு வழக்குகளை அவள்தான் பார்த்துக் கொள்வாள்," என்றார்.

 

ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட சரத்குமார் அணி

நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணியை ஆதரிக்குமாறு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டனர் சரத்குமார் தலைமையிலான அணியினர்.

நடிகர் சங்கத்துக்கு வரும் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் இப்போது பொறுப்பில் உள்ள சரத்குமார் தலைமையிலான அணியும், அவர்களை எதிர்த்து விஷால் தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன.

Sarathkumar team meets Rajini

அவரவர் அணிக்கு ஆதரவு திரட்டி தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் இரு அணியினரும்.

திரையுலகின் முக்கிய நடிகர் நடிகைகளைச் சந்தித்தும் ஆதரவு கோரி வருகின்றனர்.

விஷால் அணியினர் ஏற்கெனவே ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கோரினர். அனைத்து விஷயங்களையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அடுத்து இப்போது சரத்குமார் அணியினர் ரஜினியைச் சந்தித்தனர். நடிகர் சங்கப் பிரச்சினைகள் குறித்து ரஜினியுடன் பேசி, பிரச்சினைகள் தீர தங்களை ஆதரிக்குமாறு ரஜினியைக் கேட்டுக் கொண்டனர். சரத்குமார் அணியையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார் ரஜினி.

 

எந்திரன் கதை வழக்கு: ஷங்கர் தரப்பு ஆஜராகாததால் மனுதாரருக்கு சாதகமாக முடிகிறது!

ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை உரிமை வழக்கில் ஷங்கர் தரப்பு ஆஜராகத் தவறியதால், மனுதாரர் தந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை முடித்துவிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எந்திரன் படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆரூர் தமிழ் நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

HC's new order in Enthiran story case

இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

ஆனால் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும். மனுதாரர் தரப்பு ஆதாரங்களை பதிவு செய்ய ‘மாஸ்டர்' கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி 4 வாரங்களுக்குள் பதிவு செய்யவேண்டும்," என்று உத்தரவிட்டார்.

இதனால் வழக்கு மனுதாரர் ஆரூர் தமிழ்நாடனுக்கு சாதகமாக முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் காதலியின் தற்கொலை குறித்து முதன்முறையாக "மனந்திறந்த" ஜிம் கேரி

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட்டின் தலைசிறந்த காமெடி நடிகர்களில் ஒருவரான ஜிம் கேரி தனது முன்னாள் காதலியின் மரணம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்து பேசியிருக்கிறார்.

எஸ் மேன், தி மாஸ்க், நம்பர் 23 போன்ற தலைசிறந்த படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜிம் கேரி. சமீபத்தில் இவரின் காதலி கேத்தரினா வொய்ட்(28) அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Jim Carrey 'deeply saddened' by death of Ex Girl friend Cathriona White

கேத்தரினாவின் மரணத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. இந்நிலையில் முன்னாள் காதலியின் மரணம் குறித்து ஜிம் கேரி முதன்முறையாக மவுனம் உடைத்து பேசியிருக்கிறார்.

ஜிம் கேரி

எஸ் மேன், தி மாஸ்க், நம்பர் 23 போன்ற தலைசிறந்த படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜிம் கேரி. கடந்த திங்கள் கிழமை இவரின் முன்னாள் காதலி கேத்தரினா வொய்ட் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது ஹாலிவுட் திரையுலகினரின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் காதலி

கேத்தரினா வொய்ட் நடிகர் ஜிம் கேரியின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. மேக்கப் கலைஞராக இருந்த கேத்தரினா ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்.

காரணம் என்ன

நடிகர் ஜிம் கேரியின் பிரிவே கேத்தரினாவின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்று ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இறப்பதற்கு முன்பு கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு மிக அருகில், நெருங்கியவர்களிடம் இருந்து ஒரு ஒளி எனக்கு மிக அருகில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிம் கேரியின் பதில்

ஐரிஷ் மலரைப் போன்றவள் கேத்தரினா. அவளின் இறப்பு எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எனது இதயம் என்னைவிட்டு வெளியேறி அவளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் செல்கிறது. நாங்கள் எல்லோருமே அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தோம். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று தனது காதலியின் மறைவு குறித்து ஜிம் கேரி வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முழுமையான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் கேத்தரினா தற்கொலை செய்து கொண்டார் என்று காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

 

நடிகர் சங்கம் ஒன்றும் குடும்பச் சொத்து அல்ல! - குஷ்பு

நடிகர் சங்கம் ஒன்றும் யாருடைய குடும்பச் சொத்துமல்ல. விஷால் போன்ற புதியவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார்.

நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பிறகு குஷ்பு பேட்டியளிக்கையில், நடிகர் சங்க தேர்தல் பற்றிய தன் நிலையைத் தெரிவித்தார்.

Nadigar Sangam is not a family property, says Kushbhoo

அவர் கூறுகையில், "தயாரிப்பாளராகவும், பிரபல டைரக்டரின் மனைவி என்ற முறையிலும் திரையின் வெளியே இருந்து திரைப்பட துறையை பார்க்கிறேன். எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன்.

நடிகர் சங்கம் ஒன்றும் குடும்ப சொத்து இல்லை. ஆகவே புதியவர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவு நடிகர் விஷால் அணியினருக்குத்தான். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை," என்றார்.

 

இன்று இரவு அஜீத்தின் வேதாளம் டீசர்!

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் டீசர் இன்று இரவு வெளியாகிறது.

வேதாளம் படத்தின் டீசரைப் பார்த்த பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

Vedhalam teaser to be unveiled tonight

"அஜீத்தின் வேதாளம் ட்ரெய்லர் பார்த்தேன். இயக்குநர் சிவா மற்றும் குழுவினர் பிரமாதமாக உருவாக்கியுள்ளனர். இன்று இரவு டீசர் வெளியாகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேதாளம் படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன், சூரி, ராகுல் தேவ், கபீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

நாளை விஜய்யின் புலி படம் வெளியாகவுள்ள நிலையில், வேதாளம் டீசர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

வரும் தீபாவளியன்று வேதாளம் திரைக்கு வருகிறது. அன்றுதான் கமல்ஹாஸனின் தூங்கா வனமும் வெளியாகிறது.

 

தியேட்டர்காரர்கள் பொய்க் கணக்கு காட்டுவது உண்மைதான்! - கமலா தியேட்டர் உரிமையாளர்

படங்களின் வசூல் விவகாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் பொய்க் கணக்கு காட்டுவது உண்மைதான் என்று கமலா தியேட்டர் உரிமையாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

கமலா சினிமாஸ் கணேஷ் இப்போது படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இப்போது தற்காப்பு என்ற படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

ஒரு திரையரங்க உரிமையாளராக அவர் பகிர்ந்த அனுபவங்கள் இதோ...

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

திரையரங்கு அதிபராக உங்கள் அனுபவம் எப்படி?

அப்பா முதலில் புதுக்கோட்டயிலுள்ள பிரகதாம்பாள் என்கிற திரையரங்கை லீஸ் எனப்படும் குத்தகை முறையில் எடுத்து நடத்தினார். அதன்மூலம் திரையரங்கம் சார்ந்த அனுபவங்களைக் கற்றுக் கொண்டார். சென்னை வந்த போது முதலில் கிருஷ்ணவேனி என்கிற பழைய திரையரங்கத்தை வாங்கினார். அது பழையதாக இருக்கிறதே என்று புதிதாக ஒன்று கட்டநினைத்த போது கட்டியதுதான் கமலா திரையரங்கம். இந்த திரையரங்கம் 1972-ல் கலைஞர் அவர்களால் திறப்புவிழா செய்யப்பட்டு தொடங்கப் பட்டது. இதன் 25வது ஆண்டு விழாவிலும் கலைஞர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முதலில் ஏசி இல்லாமல் தொடங்கியது. பின்னர் ஏசி கொண்டதாக மாற்றப்பட்டது. பிறகு 2 அரங்குகளாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது ஆண்டுக்கு 120 படங்கள் வெளியாகின்றன. இத்தனை ஆண்டுகளில் பல ஆயிரம் படங்கள் வெளியாகியிருக்கும்.

சினிமா சிரமத்தில் இருக்கிறது, திரையரங்கம் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..?

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்ல மாதிரி படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது ஏமாற்று வேலை. இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகவே இருக்கிறது. அன்று 10 அரங்கில் 50 நாட்கள் ஓடியபடம், இன்று 50 அரங்கில் 10 நாளில் வசூல் செய்து விடுகிறது. இன்றைய சூழல் மாறிவிட்டது. இனி 50 நாள் 100 நாள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அப்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை. ஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன. 1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50க்குமேல் திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதைப்போலவே திருட்டு விசிடியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

திருட்டு விசிடியால் பிரச்சினை இல்லை. பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். 'பாகுபலி' எப்படி வசூல் செய்தது? 'பாபநாசம்' எப்படி வசூல் செய்தது? 'தனி ஒருவன்'எப்படி வசூல் செய்தது?

'தனி ஒருவன்' அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. வீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும் போது யாரும் திருட்டுவிசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள்.இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் புகார்கள் சொல்லப் படுகின்றனவே.?

இதை நான் மறுக்கவில்லை. திரையரங்குகள் மீதும் உரிமையாளர்கள் மீதும் குறைகள் இருக்கின்றன. பிரச்சினைகள் இருக்கின்றன. டிக்கெட் விலையில் சொல்வது ஒன்று, விற்பது ஒன்று என்று இன்றும் நடக்கிறது.

500 டிக்கெட் விற்றால் 250 தான் விற்றது என்று பொய்க் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. கட்டணம் அதிகம், சுத்தமில்லை, வசதி இல்லை என்கிற நிலையும் இருக்கிறது. ஒரு திரையரங்கில் வாகனங்களுக்கு மணிக்கு 40 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். டிக்கெட் 120 ரூபாய்தான் வண்டிவிட 4 மணி நேரத்துக்கு 160 ரூபாய் என்றால் என்ன அநியாயம் இது? கடடணங்களால் இப்படி மக்களை கசக்கிப் பிழியக் கூடாது. சினிமா வளர நாங்கள் மட்டும் மாறினால் போதாது எல்லாரும் மாற வேண்டும்.

அப்படி என்ன உங்கள் திரையரங்கில் வசதிகள் உள்ளன?

எங்களைப் பொறுத்தவரை மல்டிப்ளக்ஸ் எனப்படும் சொகுசு திரையரங்குகளை விட, குறைந்த கட்டணம் நிறைவான வசதி கமலா அரங்கில் மட்டும்தான் என்பேன். இதை ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் என்றால் நான் சொல்லியிருக்க முடியாது. இப்போது எல்லாம் முறைப் படுத்தி மேம்படுத்தி நடத்தி வருகிறோம். இப்போது எனக்குத் தகுதி இருக்கிறது. என்னால் இப்போது சொல்ல முடியும்.

ஒருகாலத்தில் மணலைக் குவித்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தார்கள். பின்னர் தரை, பெஞ்ச், நாற்காலி, சோபா என்று மாறியிருக்கிறது அப்போது க்யூவில் நின்று வியர்க்க விறுக்க வெளியில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும். இன்று நெட்டில் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் எடுக்கலாம். இதனால் டிக்கெட் எடுக்கப் போய் வரவும், படம் பார்க்கப் போய் வரவும் என ஆகிற நேர விரயம் மிச்சம்.படம் பார்க்க பத்து நிமிடம் முன்பு வந்தால் போதும். எவ்வளவு சௌகரியம், பாதுகாப்பு, சுத்தம், நிம்மதி தெரியுமா? ப்ளாக் டிக்கெட்டுக்கு வேலையே இல்லை.

Theater owners not showing original collections, says Kamala cinemas Ganesh

ஆன்லைனில் எடுப்பதால் இன்று எல்லாருடைய முகவரியும் பதிவாகி விடுவதால் குற்றச் செயல்கள் இல்லை. படம் பார்ப்பது இன்று பாதுகாப்பான அனுபவமாக மாறி இருக்கிறது. யார் தலையும் மறைக்காத வகையில் திரையரங்க இருக்கைகள் அமைப்பு உள்ளது. ஒலியமைப்பு சரிவரத் துல்லியமாகக் கேட்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

குடிப்பவர்களை புகைப்பவர்களை நாங்கள் திரையரங்குகளில் அனுமதிப்பதில்லை. இங்கே சிகரெட் விற்பதே இல்லை. முன்பெல்லாம் இடைவேளையில் மட்டும்தான் தின்பதற்கு ஏதாவது வாங்க முடியும். திடீரென்று ஒரு குழந்தை அழுதால் அதற்குப் பால் தேவைப்பட்டால் இப்போது உள்ளே உள்ள உணவகத்தில் வாங்க முடியும். எப்போதும் எதுவும் இப்படி உணவகத்தில் வாங்கிக்கொள்ள முடியும். டிக்கெட் எடுக்க காத்திருக்கும் இடமும் கூட ஏசி செய்துள்ளோம். இதற்கெல்லாம் காரணம் எங்களுக்குப் படம் பார்க்க வருகிறவர்களின் வசதிதான் முக்கியம்.

 

செய்தி சேகரிக்க வந்த நிருபர்களைத் திட்டிய சமந்தாவின் தாய்.. அடிக்கப் பாய்ந்த சகோதரர்!

வருமான வரித்துறை ரெய்ட் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை கோபத்துடன் திட்டி வெளியேற்றினார் நடிகை சமந்தாவின் அம்மா.

Samantha's mother and brother attack Journalists

நடிகை சமந்தாவின் வீடு சென்னை பல்லாவரத்தில் உள்ளது. இங்குதான் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சினிமாவில், விளம்பரங்களில் சம்பாதித்த பணத்துக்கு சமந்தா முறையாக வரி செலுத்தவில்லை என்று கூறி இந்த சோதனையை மேற்கொண்டனர் அதிகாரிகள்.

இதனைக் கேள்விப்பட்டு, அவரது வீட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்றனர் நிருபர்கள்.

Samantha's mother and brother attack Journalists

அவர்களை ஆங்கிலத்தில் திட்டியபடி, விரட்டியடிக்க முனைந்தார் சமந்தாவின் தாயார். "உங்களுக்கு இங்கே வேலையில்லை... வெளியே போங்கள்" என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து வேகமாக வந்த சமந்தாவின் சகோதரர் செய்தியாளர்களைத் தாக்க ஆரம்பித்தார்.

இதனால் பதிலுக்கு அவரைத் தாக்க செய்தியாளர்கள் முனைந்தபோது, அவர் உள்ளே ஓடிவிட்டார். அவரை வெளியே வருமாறும், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப் போவதாகவும் செய்தியாளர்கள் கூற, உடனே செய்தியாளர்கள்தான் தாக்கியதா அடாவடியாகப் பேச ஆரம்பித்துவிட்டார் சமந்தாவின் தாயார்.

அதன் பின்னர் சமந்தாவின் தந்தை பிரபு வெளியில் வந்து, வரிமான வரி குறித்து விளக்கம் கூறிவிட்டு கதவை மூடிக் கொண்டார்.

 

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி'!- சீமான் பாராட்டு

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் 'கத்துக்குட்டி' என்று பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவரும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர் மனைவி கயல்விழி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்தார்.

Seeman hails Kaththukkutti

படம் முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ''நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வயிறு குலுங்க சிரித்த படம் கத்துக்குட்டிதான். மிக ஆழமான சிந்தனையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி புதுமையான திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள்.

குறிப்பாக தம்பி சூரி வரும் ஒவ்வொரு காட்சியும் வயிறு புண்ணாகி விடுகிறது. மிக வித்தியாசமான உடல் மொழியில் விளையாடித் தீர்த்திருக்கிறார் சூரி.

படத்தின் பெயர்தான் 'கத்துக்குட்டி'யே தவிர, எல்லோருக்கும் கத்துக் கொடுக்கும் குட்டியாக தம்பி இரா.சரவணன் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

விவசாயப் பின்னணியில் தஞ்சை மாவட்டத்தின் வாழ்வியலை படம் அருமையாகப் பிரதிபலிக்கிறது. படத்தின் ஒவ்வொரு வசனமும் முத்து முத்தாக நெஞ்சை ஈர்க்கிறது. நல்ல கருத்தை சொல்லும் விதமாகச் சொன்னால், கடைக்கோடி ரசிகனுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்தக் கத்துக்குட்டி நிரூபித்திருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும் தனக்கான படமாகப் பெருமிதத்தோடு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி நமக்காகப் பாடுபடும் ஒவ்வொரு விவசாயிக்குமான வெற்றியாக இருக்கும். எனவே, தமிழர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு போய் பார்த்து கத்துக்குட்டி படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!" என்றார்.

சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து கூறுகையில், ''படம் பார்த்து நிறைய இடங்களில் சிரித்தேன்; நிறைய இடங்களில் அழுதேன். வழக்கமான படங்களில் ஒன்றாக இல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதை அச்சு அசலாகப் படத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக படத்தில் வரும் ஒரு பாட்டி பாத்திரம் மனதைக் கொண்டாட வைத்துவிட்டது. மண் சார்ந்த பதிவை இவ்வளவு நகைச்சுவையாகவும் சுவாரசியமான திருப்பங்களுடனும் சொல்லி இருப்பது சிறப்பு. இறுதிக்கட்ட காட்சியில் என்னையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டினேன். இந்த மண்ணுக்காக ஆத்மார்த்தமாக உழைக்கும் அத்தனை உழைப்பாளர்களுக்கும் ராஜ‌மரியாதை செய்திருக்கிறது 'கத்துக்குட்டி' படம்," என்றார் சிலிர்ப்பு குறையாமல்.

'கத்துக்குட்டி' படம் நாளை (அக்டோபர் 1-ம் தேதி) திரைக்கு வருகிறது.

 

கள்ளக்காதலருடன் கையும், களவுமாக சிக்கிய ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி

மும்பை:பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் நடிகர் அர்ஜுன் ராம்பலுடன் காபி ஷாப்பிற்கு சென்று சுற்றியுள்ளவர்களை மறந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் பற்றி பலவாரியாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. சூசனுக்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையான நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Arjun Rampal

இந்த கள்ளத்தொடர்பால் தான் சூசன் ரித்திக்கை பிரிந்து சென்றதாகவும் பேசுகிறார்கள். சூசனால் அர்ஜுன் ராம்பலுக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும், அவர்கள் விவாகரத்து பெறக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சூசனும், அர்ஜுனும் மும்பையில் உள்ள காபி ஷாப் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சுற்றி இருப்பவர்களை மறந்துவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நேரம் ஆக ஆக கடையில் கூட்டம் கூடியுள்ளது.

கூட்டத்தை கவனித்த அவர்கள் இனியும் இங்கிருந்தால் நன்றாக இருக்காது என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.

 

விஜயின் புலி, பிரபாஸின் பாகுபலியை "இந்த" விஷயங்களில் முறியடிக்குமா?

சென்னை: அது வேற இது வேற, பாகுபலியுடன் புலி திரைப்படத்தை ஒப்பிடாதீர்கள் என்று இயக்குநர் சிம்புதேவன் முதல் ஹன்சிகா வரை கூறினாலும் கூட, பாகுபலி படத்துடன் புலியை ஒப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.

Puli (Hindi) (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒருவழியாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை உலகமெங்கும் விஜயின் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இடையில் இன்று காலை விஜய் வீட்டில் நடந்த ரெய்டு கூட படத்திற்கு பப்ளிசிட்டியாகவே மாறிவிட்டது.

Box Office: Vijay's 'Puli' Break Rajamouli's 'Baahubali' Record?

இந்நிலையில் பாகுபலி படம் தென்னிந்தியாவில் இருந்து வெளியாகி உலகமெங்கும் பல்வேறு சாதனைகளைப் புரிந்தது. அவற்றில் குறிப்பிட்ட சில சாதனைகளை புலி முறியடிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

பாகுபலி படத்தின் இந்த சாதனைகளை புலி திரைப்படம் முறியடிக்குமா? என்று பார்க்கலாம்.

அதிகத் திரையரங்குகள்

தென்னிந்தியாவில் உருவான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியான இத்திரைப்படம் சுமார் 20க்கும் மேலான நாடுகளில் 500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை புரிந்தது. மேலும் எந்திரன் மற்றும் ஐ போன்ற திரைப்படங்களின் வரலாற்றையும் முறியடித்தது பாகுபலி.

பிரீமியர் ஷோவில்

பாகுபலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அமெரிக்காவில் சுமார் 118 திரையரங்குகளில் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்த காட்சி மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி, மேலும் அமீர்கானின் "பிகே" படத்தின் வரலாற்றையும் முறியடித்தது பாகுபலி.

உலகளவில் மிகப்பெரிய ஓபனிங்

உலகளவில் சுமார் 75 கோடிகளை வெளியான முதல் நாளே வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. இதற்கு முன்பு தென்னிந்திய மொழியில் வெளியாகி அதிக வசூலைப் பெற்ற ரஜினியின் எந்திரன் திரைப்படத்தின் வசூலை முறியடித்தது பாகுபலி.

வேகமான 100 கோடி

வெளியான 2 தினங்களில் உலகளவில் சுமார் 135 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. ஒரு இந்தியப் படம் உலகளவில் வேகமாக 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது இதுவே முதல்முறை.

5 நாட்களில் 200 கோடி

பாகுபலி வெளியான 5 நாட்களில் உலகளவில் சுமார் 213 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. ஒரு தென்னிந்தியப் படம் வேகமாக 200 கோடிகளை வசூலித்தது இதுவே முதல்முறை.

எந்திரனின் வரலாற்றை

வெளியான முதல் வாரத்தில் சுமார் 255 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது பாகுபலி. மேலும் எந்திரன் படத்தின் மொத்த வசூலையும் சுமார் 7 நாட்களில் முறியடித்து சாதனை புரிந்தது படம்.

ஹிந்தியில் மட்டும் 100 கோடி

ஹிந்தி மொழியில் வெளியான பாகுபலி ஹிந்தியில் மட்டும் சுமார் 120 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது. தென்னிந்திய மொழியில் உருவான பாகுபலி ஹிந்தியில் டப் செய்யப்பட்டு 100 கோடி கிளப்பில் இணைந்தது, பாலிவுட்டில் மாபெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மேலே சொன்ன சாதனைகளை புலி திரைப்படம் முறியடித்தால், இந்திய சினிமா வரலாற்றில் புலியுடன் விஜயின் பெயரும் இடம்பெறும். பாகுபலியின் வரலாற்றை புலி முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

மலையாள டிவி சேனலில் பாகுபலி… அக்டோபர் 4ல் ஒளிபரப்பு

பாகுபலி திரைப்படம் பிரபல மலையாள டிவி சேனலான மழவில் மனோரமாவில் அக்டோபர் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்திய திரைப்பட உலகம் கொண்டாடும் பாகுபலி திரைப்படம் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Bahubali to be aired on Mazhavil Manorama

பிரபாஸ், தமன்னா, ராணா, அனுஷ்கா நடித்துள்ள இந்த திரைப்படத்தினை எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ளார். இந்த படத்தின் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமம், தமிழ், மலையாளம், தெலுங்கு, சேட்டிலைட் சேனல்களுக்கு தனித்தனியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் பாகுபலி திரைப்படம் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மழவில் மனோரமா சேனலில் பாகுபலி ஒளிபரப்பாக உள்ளது. அக்டோபர் 4ம் தேதி பாகுபலி ஒளிபரப்பாக உள்ளதாக மலையாள டிவி சேனல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ் சேனல்களில் புத்தம் புதுப்படங்களை ஒளிபரப்பும் நிலையில் ஞாயிறு டிஆர்பி ரேட்டிங்கை கருத்தில் கொண்டு பாகுபலியை ஒளிபரப்பி கல்லா கட்டப்போகிறது மழவில் மனோரமா சேனல்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய நான் ஈ, மகதீரா ஆகிய படங்களின் ஒளிபரப்பு உரிமையையும் மழவில் மனோரமா சேனல்தான் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனி மேக்ஸ் சேனல் இந்தி பாகுபலி படத்தை அக்டோபர் 25ம் தேதி ஒளிபரப்பப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இப்படி வெயிட் குறையுதே, அழுது புலம்பும் அலியா பட்

மும்பை: பாலிவுட்டின் அழகான நடிகைகளில் ஒருவரான அலியா பட் தனது உடல் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வதால், தற்போது வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

பாலிவுட்டின் சர்ச்சை நாயகி என்று பெயரெடுத்த அலியா பட் தற்போது சந்தார் என்னும் படத்தில் ஷாகித் கபூருடன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் பிகினி உடையில் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

Alia Bhatt Worried about her Weight Loss

இந்தப் படத்தில் பிகினி காட்சியில் நடிப்பதற்காக அலியா பட் தொடர்ந்து தீவிரமான உடற்பயிற்சிகள் செய்து தனது உடலைக் கட்டுக்கோப்பாக, கொண்டுவந்தார்.

ஆனால் அவர் கஷ்டப்பட்டு குறைத்த உடல் எடையைவிட தற்போது அதிக எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார் அலியாபட்.

"எனது உடல் எடை தொடர்ந்து குறைந்து வருவது எனக்கு வருத்தத்தை அளிக்கும் செயலாக இருக்கிறது. என்னைப் பார்க்கும் அனைவருமே தொடர்ந்து என்னுடைய உடல் எடையைக் குறித்தே பேசுவது எனக்கு கவலை அளிக்கிறது" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார் அலியா பட்.

உடல் எடை குறைந்ததை நினைத்து ஒருபக்கம் கவலைப்பட்டாலும் மறுபக்கம், எல்லா உடைகளும் இப்போது அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

மேலும் இப்பொழுது எனது தோற்றம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சந்தோஷப் பட்டிருக்கு பொண்ணு. உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலயே...

 

நடிகர் சங்கத் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல்

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.

அக்டோபர் 18 ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

Nadigar Sangam Election: Tomorrow Nomination file Starts

காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெற இருக்கின்றது.தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 3-ந் தேதி(சனிக்கிழமை) ஆகும்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் மற்றும் விஷால் ஆகியோர் தலைமையில் 2 அணிகள் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர்.

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி காலை(ஞாயிறு) பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந்(வியாழக்கிழமை) தேதி வெளியிடப்படும்.

சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும் துணைத்தலைவர் பதவிக்கு சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் அணிசார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் நிற்கிறார். நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், அஜய்ரத்னம் போன்றோர் முக்கிய பதவிகளுக்கு நிறுத்தப்பட இருப்பதாக கூறுகின்றனர்.

எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வருவதால் 2 அணியினரும் தங்கள் அணிக்கு ஆதரவைத் திரட்டி வருகிறார்கள்.

 

புலியைத் தொடர்ந்து வேதாளத்தில் மைக் பிடித்த "சுருதி"

சென்னை: விஜயுடன் இணைந்து புலி படத்தில் ஒரு டூயட் பாடலைப் பாடிய நடிகை சுருதிஹாசன், தற்போது அஜீத்தின் வேதாளம் படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

ஒரே சமயத்தில் நடிகர் விஜய், அஜீத்துடன் நடித்து வரும் சுருதிஹாசன் அடுத்தடுத்து இருவரின் படங்களிலும் தலா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

Shruti  Haasan Sing a Song in Ajith's Vedhlam

இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, சுருதி ஹாசன் தனியாக பாடலைப் பாடியிருக்கிறார். அஜீத் - சுருதியின் நடிப்பில் இத்தாலியில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

அனிருத் இசையமைப்பில் 3 படத்தில் "கண்ணழகா", மான் கராத்தே படத்தில் "உன் விழிகளில்" போன்ற பாடல்களை ஏற்கனவே பாடியிருக்கும் சுருதி, தற்போது வேதாளம் படத்திலும் பாடியிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைந்து, சுருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தீபவாளி வெளியீடாக வரும் வேதாளம் படத்தின் ஆடியோ இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகலாம் என்று கூறுகின்றனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த அஜீத் ரசிகர்கள் "ஆடியோ" வைக் கொண்டாடி மகிழத் தீர்மானித்து இருக்கின்றனர்.

 

ஏம்பா, நாட்டில் ஒருத்தர் முன்னேறினால் பிடிக்காதா?: பிரியங்கா அப்படி என்ன செஞ்சிட்டார்?

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார். குவான்டிகோ என்ற அந்த தொடரில் எப்.பி.ஐ. ஏஜெண்டாக நடித்துள்ளார் பிரியங்கா.

Priyanka Chopra

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தொடர் அமெரிக்காவில் ஒளிபரப்பானது. சீரியலை பார்த்த பலரும் பிரியங்காவின் நடிப்பை விட அவரின் லுக்கை பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். கூகுளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை விட பிரியங்கா தான் அதிகமாக டிரெண்டாகியுள்ளார்.

குவான்டிகோவில் பிரியங்கா அமெரிக்கர்களின் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசியுள்ளார். அது என்ன பிரியங்காவின் ஆங்கிலம் அப்படி இருக்கிறது என்று பலர் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் அதுவும் ஹீரோயினாக நடித்துள்ள முதல் இந்திய நடிகை பிரியங்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் கிடக்கிறது ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் பிரியங்கா அதுவும் ஹீரோயினாக நடித்துள்ளது பெரிய விஷயம் என்கின்றனர் சிலர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அனில் கபூர், இர்பான் கான், நசிருத்தீன் ஷா, சூரஜ் சர்மா உள்ளிட்டோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்கர் விருதுப் போட்டியில் மீண்டும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த படம்!

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் படங்களின் பட்டியலில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ஒரு படம் மீண்டும் இடம்பிடித்துள்ளது.

அந்தப் படம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய, ஆனால் பாராட்டுக்களையும் குவித்த மஜித் மஜிதியின் முகமது: தி மெஸஞ்சர் ஆப் காட்!

Mohammad: Yet another AR Rahman musicalin Oscar race

2008-ல் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ ஆர் ரஹ்மான்.

அதன்பிறகு கோச்சடையான் உள்ளிட்ட சில படங்களில் இடம்பெற்ற அவரது இசை ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றன.

இப்போது முகமது: தி மெஸஞ்சர் ஆப் காட் படம் சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றுள்ளது.

ஈரானில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது முகமது. இதன் அடுத்த இரு பாகங்கள் வரும் ஆண்டுகளில் வெளியாகவிருக்கின்றன.

இந்தப் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஃபத்வா விதித்தது மும்பை இஸ்லாமிய அமைப்பு என்பது நினைவிருக்கலாம்.

 

தாரை தப்பட்டை... வெளியீட்டு உரிமையை வாங்கியது லைகா!

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.

சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. இளையராஜா இசையில் உருவாகும் 1000வது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தப் படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

Lyca bags Thaarai Thappattai

இந்தப் படத்தின் இசை மற்றும் பாலாவின் இயக்கம் போன்றவை படம் குறித்த பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே படத்தை வாங்க நிறையப் பேர் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், லைக்கா மற்று அய்ங்கரன் நிறுவனங்கல் இந்தப் படத்தின் உரிமையைப் பெற்றுள்ளன. விரைவில் படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள், இசை வெளியீடு நடக்கவிருக்கிறது.

லைகா நிறுவனம் ஏற்கெனவே கத்தி படத்தை சொந்தமாகத் தயாரித்தது. அடுத்து இப்போது 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' படங்களை வாங்கி வெளியிடுகிறது. அடுத்து பாலா படம்.

ரஜினி படத்தின் தயாரிப்பாளர்களும் இதே லைக்காதான்.

தமிழ் சினிமாவில் வலுவாகக் காலூன்ற அஸ்திவாரத்தை பலமாகவே போட்டு வருகிறது லைகா!

 

நண்பராக இருந்து எதிரியாகிட்டாரே!- எலி தயாரிப்பாளர் பற்றி வடிவேலு புலம்பல்

எலி படத் தயாரிப்பாளரை நான் ஏமாற்றவில்லை. என் சம்பளத்தை விட்டுக் கொடுத்தேன். ஆனால் அவரோ திடீரென எதிரியாகிவிட்டாரே என்று பதிலளித்துள்ளார் நடிகர் வடிவேல்.

'எலி' படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார்.

I never cheats Eli producer, says Vadivelu

அப்புகாரில், "நடிகர் வடிவேலு, ஜனவரி 6ல், என்னை சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது நான், எலி படத்தில் நடிக்கிறேன். அதன் தயாரிப்பாளர் ராம்குமாரிடம் செலவு செய்ய பணம் இல்லை. இந்த படம் ரிலீசாகவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதனால், ராம்குமார் இதுவரை செலவு செய்த, 90 லட்சம் ரூபாயில், 15 லட்சம் ரூபாயை நீங்கள் கொடுத்து விடுங்கள். மீதித் தொகையான, 75 லட்சம் ரூபாயை நான் தந்து விடுகிறேன். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விடுவார். பின் நீங்களே இந்த படத்திற்கு தயாரிப்பாளராகி விடுங்கள்' என, கெஞ்சினார்.

நண்பர்களுடன் சேர்ந்து, 17 கோடி ரூபாயில் 'சிட்டி சினி கிரியேஷன்ஸ்' நிறுவனம் மூலம், எலி படத்தை தயாரித்தேன். இந்த படத்தை, 32 கோடிக்கு விற்பனை செய்து தருவதாக, வடிவேலு உறுதி அளித்தார். ஆனால், படம் சரியாக ஓடவில்லை; எனக்கு, ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. என் மூலம், எலி படத்தை திரையிட்ட, தியேட்டர் உரிமையாளர்கள், பட வினியோகஸ்தர்கள், பொய் கணக்கு காட்டி, கூடுதலாக பணம் கேட்டு மிரட்டினர். இதனால், வடிவேலுவிடம் நஷ்டஈடு கேட்டேன். பணம் தர மறுத்ததோடு வடிவேலுவும் எலி பட இயக்குனர் யுவராஜ், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.துரைசாமி, வடிவேலுவின் மேனேஜர் பன்னீர், அக்கவுன்டன்ட் முத்தையா ஆகியோரும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.

வடிவேலு பதில்

இது குறித்து நடிகர் வடிவேலு கூறுகையில், "எலி படத்தை, முதலில் ராம்குமார் என்பவர் தயாரிக்க இருந்தார். நிதி வசதி போதாது என்பதால், ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த, தயாரிப்பாளர் சதீஷ்குமார், அந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தார். படம் வெளியான பின்னர் 'எதிர்பார்த்தபடி ஓடவில்லை; நஷ்டமாகி விட்டது. அடுத்து, ஒரு படம் நடித்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்,' என்றார். நானும், அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

சதீஷ்குமாருக்கும், எனக்கும் இடையே படம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. நான் அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது நான் மதுரையில் இருக்கிறேன். தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் நல்ல மனிதர். அவர் இப்படி புகார் கொடுக்க, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பைனான்சியர்கள் மிரட்டலால், புகார் மூலம் என்னை காரணம் காட்டி, அவர்களைச் சமாளிக்க முற்பட்டிருக்கலாம். சதீஷ்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிப் பிரமுகரை எனக்கு தெரியாது.

எலி படத்திற்கு எனக்குப் பேசிய சம்பளத்தில், இரண்டு கோடி ரூபாய் மட்டும் கொடுத்தார். மீதிச் சம்பளமே தரவில்லை. நஷ்டம் என்று கூறியதும், நானும் பாக்கி சம்பளத்தைக் கேட்கவில்லை. ஒரு நடிகன் என்ற வகையில் இதைத்தான் நான் செய்ய முடியும். நண்பராக இருந்த தயாரிப்பாளர், திடீரென எதிரியை போல் நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது," என்றார்.

 

குடும்பத்தோடு புலி படம் பார்த்த விஜய்

வரும் அக்டோபர் முதல் தேதி புலி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியாகிறது. இந்தப் படத்தை முழுமையாய் பார்த்திராத விஜய், நேற்று தன் குடும்பத்தினருடன் புலி பார்த்து மகிழ்ந்தார்.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இசைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சர்வதேசத் தரம் வாய்ந்த தாகூர் ப்ரிவியூ திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தனர் விஜய்யும் குடும்பத்தினரும்.

Vijay watched puli with family

விஜய்யுடன் அவரது நெருங்கிய நண்பர்களும் படத்தைப் பார்த்தனர். பார்த்த அனைவரும் படத்தையும் அதில் விஜய்யின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டினர்.

நாளை மறுநாள் உலகெங்கும் வெளியாகிறது புலி. சிம்பு தேவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பிடி செல்வகுமாரும் ஷிபு தமீன்ஸூம் படத்தைத் தயாரித்துள்ளனர்.

 

அல்லு அர்ஜுன் படத்தில் "குத்தாட்டம்" ஆடப்போகும் அனுஷ்கா

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகையாக விளங்கும் அனுஷ்கா தெலுங்கின் இளம் நடிகர் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறாராம்.

அக்டோபர் 9 ம்தேதி அனுஷ்கா ராணியாக நடித்திருக்கும் ருத்ரமாதேவி திரைப்படம் வெளியாகிறது, இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் அல்லு அர்ஜுனின் பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது, இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த படத்தில் நடிகை அனுஷ்கா ஒரு ஐட்டம் பாடலிற்கு ஆடவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Anushka Shetty item song in Allu Arjun's Upcoming Movie

ருத்ரமாதேவி படத்தில் அல்லு அர்ஜுன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றிக் கடனாக இந்தப் படத்தில் அனுஷ்கா ஐட்டம் பாடலிற்கு ஆடுகிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனிற்கு ஜோடியாக ராகுல் பரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கிறார். பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி போன்ற படங்களினால் புகழ்பெற்ற அனுஷ்கா, இந்தப் படத்தில் ஆடுவதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் அதிகரிக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

அனுஷ்காவின் நடிப்பில் அக்டோபர் 9 ம் தேதி ருத்ரமாதேவி மற்றும் இஞ்சி இடுப்பழகி ஆகிய 2 படங்கள் வெளியாகின்றன. இதில் இஞ்சி இடுப்பழகி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

ருத்ரமாதேவி திரைப்படம் தமிழ், தெலுங்கு தவிர்த்து ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் முறையாக தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் விஜய் படம்!

விஜய்யின் திரையுலகப் பயணத்தில் முதல் முறையாக அவர் நடித்த படம் ஒன்று தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதுதான் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புலி.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இதுவரை விஜய் படங்கள் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் வெளியாகும். ஆனால் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியாகி வந்தன. அதேபோல நேரடித் தமிழ்ப் படமாகவே கேரளாவில் நூறுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகு வசூல் குவித்து வந்தன விஜய் படங்கள்.

For the first time Vijay's Puli releasing in 3 languages

இப்போது ஆந்திராவில் தமிழ் மற்றும் தெலுங்கில் புலி படம் வெளியாகிறது. வட மாநிலங்களில் இந்தியில் டப்பாகி வெளியாகிறது.

கர்நாடகத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலுமே இந்தப் படம் வெளியாகிறது. வழக்கத்தை விட அதிக அரங்குகளில் மலையாளத்தில் இந்தப் படம் வெளியாகிறது.

மொத்தம் 2000க்கும் அதிகமான அரங்குகளில் புலியை வெளியிடுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

விஜய் படம் இத்தனை அரங்குகளில், இத்தனை மொழிகளில் உலகெங்கும் வெளியாவது இதுவே முதல் முறை!

 

'அசால்ட்டா' தயாரிப்பாளராகிவிட்ட பாபி சிம்ஹா!

நடிக்க வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சர்ச்சைக்குரிய நடிகனாகிவிட்ட பாபி சிம்ஹா, அடுத்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

நேரம், ஜிகிர்தண்டா போன்ற படங்களின் மூலம் பாப்புலரான பாபி சிம்ஹா, இப்போது பாம்புச் சட்டை, உறுமீன், இறைவி, மசாலா படம், கோ 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அடுத்து படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

Bobby Simha turns producer

அசால்ட் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ள பாபி, தன் நண்பர் சதீஷுடன் சேர்ந்து வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தைத் தயாரிக்கிறார்.

ஜிகிர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த பாத்திரத்தின் பெயர் அசால்ட் சேது. அதே பெயரில் படக் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்!

 

வடநாட்டு சாமியாரின் எம்எஸ்ஜி 2 புலியுடன் மோதுகிறதா?

சென்னை: விஜய் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் புலி திரைப்படத்துடன் எந்தத் தமிழ்ப் படமும் போட்டியிடாத நிலையில், வடநாட்டு சாமியார் நடிப்பில் வெளியான எம்எஸ்ஜி 2 திரைப்படம் தமிழில் வெளியாகிறது.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

வட நாட்டில் பிரபலமான குர்மீத் ராம் என்னும் சாமியாரின் நடிப்பில் கடந்த ஆண்டு எம்.எஸ்.ஜி. (மெசேஞ்சர் ஆப் காட்) என்ற பெயரில் படமொன்று வெளியானது.

'MSG 2′ Starring Gurmeet Ram Rahim Singh Releases In Tamil

இவரே இயக்கி, அதில் இவரே நடிக்கவும் செய்திருந்தார். இதில் சாமியார் குர்மீத் ராம் அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

மேலும் இந்தப் படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார். தற்போது அடுத்த அதிர்ச்சியாக இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்எஸ்ஜி 2 திரைப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விஜயின் புலி திரைப்படம் வெளியாகும், அதே நாளில் சாமியார் தனது படத்தை வெளியிடுவது தான்.

எம்எஸ்ஜி 2 படத்தின் அதிரடியான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் தானா நடக்குதா? இல்லை திட்டம் போட்டு செய்றாங்களா...

 

ஓமைகாட்: 'அந்த' படத்திற்கு முன்பே லீடரின் படம் ரிலீஸாக வேண்டியதா?

சென்னை: லீடர் நடிகரின் கால்ஷீட்டிற்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓடியதால் தான் விலங்கின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படம் மன்னரின் பெயர் கொண்ட பிரமாண்ட படத்திற்கு பிறகு ரிலீஸாகிறதாம்.

லீடர் நடிகர் நடித்துள்ள விலங்கின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. படத்தின் முக்கிய அம்சமாக விஷுவல் எஃபெக்ட்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Wow, leader's movie got delayed because of him?

இந்த படம் ரிலீஸாக சில மாதங்களுக்கு முன்பு தான் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர் மன்னரின் பெயர் கொண்ட சரித்திர படத்தை வெளியிட்டு வெற்றி கண்டுள்ளார். ரசிகர்கள் சிலர் லீடரின் படத்தை அந்த சரித்திரப் படத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லீடரின் படம் சரித்திர படத்திற்கு முன்பு ரிலீஸாக வேண்டியதாம். இயக்குனர் படத்தின் கதையை எப்பொழுதோ தயார் செய்துவிட்டாராம். அவர் கதையை எழுதும்போதே லீடரை மனதில் வைத்து தான் எழுதினாராம்.

கதை தயாராகியும் லீடரின் கால்ஷீட் கிடைக்கத் தான் தாமதம் ஆகிவிட்டதாம். அதனால் தான் லீடரின் படம் சரித்திர படத்திற்கு பிறகு ரிலீஸாகிறதாம்.

 

'புதுசா தினுசா மாம்பழம் பாரு... அதைப் பறிச்சி கசக்கி ஜூஸைப் போடு' -இது வில்லன் பாட்டு!

தமிழ்ப்பட உலகில் புதிதாக ஒரு வில்லன் அறிமுகமாகிறார். பெயர் கே.ஜி.ஆர். சொந்த ஊர் மேட்டூர் பக்கத்திலுள்ள பூமனூர்.

பரிசல் என்ற படத்தில் அறிமுகமாகும் இவரது சொந்தப் பெயர் கோவிந்தன். தந்தை பெயர், மகன் பெயர் ஆகியவற்றுடன் தன் பெயரையும் இணைத்து கே.ஜி.ஆர். என்று பெயரை மாற்றிக் கொண்டாராம்.

KGR, A new villain launches in Parisal

ஏ-1 பிலிம் மேக்கர்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் 'பரிசல்' படத்தை சுந்தர் என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார். இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் கே.ஜி.ஆர். இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசல் கதை என்ன?

ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், பரிசலில்தான் செல்ல வேண்டும். இருப்பதோ ஒரே ஒரு பரிசல். ஒரு பாலம் கட்டப்பட்டால், சீக்கிரம் நகரத்திற்குச் செல்லலாம் என்று கிராமத்து மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக இருக்கிறார் கிராமத்தின் பண்ணையாரான உத்ரபாண்டி. பாலம் கட்டப்பட்டு விட்டால், கிராமத்து மக்கள் வேலை தேடி நகரத்திற்குச் சென்று விடுவார்கள், பிறகு தன் வயல்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள் என்று அவர் நினைப்பதே காரணம். அதனால் பரிசல் ஓட்டும் 'தலைவாசல்' விஜய்யை அவர் கொன்று விடுகிறார். அந்த ஊரில் டாக்டராக இருக்கும் 'நிழல்கள்' ரவியையும் கொன்று விடுகிறார்.

பாலம் கட்டுவதற்கு ஆதரவாக இருக்கும் யாரையும் தன் அடியாட்களை வைத்து தீர்த்துக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறார் உத்ரபாண்டி. இறுதியில் என்ன நடந்தது? பாலம் கட்டப்பட்டதா, இல்லையா? இதுதான் 'பரிசல்' படத்தின் கதை. இந்த கொடூர குணம் கொண்ட உத்ரபாண்டியாக நடிப்பவர்தான் கே.ஜி.ஆர்.

KGR, A new villain launches in Parisal

'பரிசல்' படத்தில் கே.ஜி.ஆருக்கு ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது.

நடன நடிகை ரிச்சாவுடன் இவர் சேர்ந்து ஆடும்.

'புதுசா தினுசா
மாம்பழம் பாரு
அதைப் பறிச்சி
கசக்கி
ஜூஸைப் போடு'

என்ற ஆரம்பிக்கிறது அவருக்கான பாடல்!

ஆரம்ப காலத்தில் கல் வேலை, கிணறு தோண்டும் வேலை, லாரி ஓட்டுநர் என்று பல தொழில்களைச் செய்திருக்கும் கே.ஜி.ஆர்., பின்னர் சொந்தத்தில் வாங்கி ஓட்டினாராம். சொந்த ஊரில் விவசாயமும் செய்கிறார்.

'பரிசல்' படத்தில் மிகவும் அருமையாக இவர் நடித்ததைப் பார்த்து, 'நிழல்கள்' ரவி, 'தலைவாசல்' விஜய் இருவரும் இவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.ஜி.ஆர். 'வீர திருவிழா' படத்தில் பொன்வண்ணனின் சம்பந்தியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் இன்னொரு படம் 'அடையாளம்.'

 

இறைவி: தீபாவளிக்கு முதல் பார்வை, கிறிஸ்துமஸில் படம் ரிலீஸ்

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் இறைவி திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பார்வையை தீபாவளி தினத்திலும், படத்தை கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

Karthik Subbaraj's Iraivi Shooting Wrapped up

இறைவி படத்தைப் பற்றிய முதல் அறிவிப்பு பிப்ரவரியில் வந்தது. படப்பிடிப்பு மே மாதம் இருபதாம்தேதி தொடங்கியது. நடுநடுவே சற்று இடைவெளி விட்டு கார்த்திக் சுப்புராஜ் நடத்திய படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

2 தினங்களுக்கு முன்பாக படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பார்வையை தீபாவளி தினத்திலும், படத்தை கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


"இறைவி படப்பிடிப்பு முடிந்தது. இப்படி ஒரு அருமையான குழுவினருடன் பணிபுரியும் வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றி" என்று தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா.

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் இறைவி திரைப்படம் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இறைவி - எதிர்பார்ப்பு அதிகம்...

 

தேவர் மகன் கெட்டப்புக்கு திரும்பினார் கமல்!

தூங்கா வனம் முடித்த கையோடு அடுத்த படத்தின் ஷூட்டிங்கை சத்தமின்றி தொடங்கியேவிட்டார் கமல் ஹாஸன்.

உத்தம வில்லனில் மீசையில்லாமல், பாபநாசத்தில் திருநெல்வேலிக்காரர் கெட்டப்பில், தூங்காவனத்தில் கொஞ்சம் தாடி - முறுக்கிய மீசை என்று வந்தவர், அடுத்த படத்துக்கு அப்படியே முழுசாக வேறு மாதிரி ஆகிவிட்டார்.

Kamal reveals his getup for next movie

தேவர் மகனில் வைத்திருந்தாரே அந்த மாதிரி கிடா மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் கமல்.

இந்த கெட்டப்பை முதல் முறையாக, தூங்காவனத்தின் தெலுங்குப் பதிப்பான சீகட்டி ராஜ்ஜியம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

Kamal reveals his getup for next movie

ஹைதராபாதில் நடந்த இந்த விழாவில் கமல் மற்றும் அவரது படக்குழுவினர் பங்கேற்றனர்.

கமலின் அடுத்த படத்தை இயக்குபவரும் தூங்கா வனம் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal reveals his getup for next movie
 

பாடகர் க்ரிஷ்ஷின் கனவை நனவாக்கிய ரஜினி!

பாடகரும் நடிகருமான க்ரிஷ்ஷின் நெடு நாள் ஆசையை நேற்று நிறைவேற்றி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

நடிகை சங்கீதாவின் கணவரும், ஏராளமான பின்னணி பாடல்களைப் பாடியுள்ளவருமான க்ரிஷ், சமீபத்தில் வெளியான புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.

Rajini fulfills singer Krish's wish

இவருக்கு நீண்ட நாட்களாக ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை.

அந்த ஆசை நேற்று நிறைவேறிவிட்டது.

சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு க்ரிஷ்ஷை வரச் சொன்ன ரஜினி, அவருக்கு ஆசி கூறி உடன் நின்று படமெடுத்துக் கொண்டார்!

சமூக வலைத்தளங்களில் படம் வெளியாகி நேற்று இரவே வைரலானது. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில், "மச்சி எக்ஸ்ட்ராடினரிடா... தலைவர எப்போ பாத்த?" என்று ட்விட்டரில் கேட்க, அதற்கு பதிலளித்த க்ரிஷ், "மச்சி இன்னிக்குதான்டா... வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களிலேயே மிகச் சிறந்த மனிதர்," என்று பதிலளித்துள்ளார்.

 

விஜய் டிவி நீயா நானா கோபிநாத் தெரியும்… வாய்ஸ் கோபி தெரியுமா?

சென்னை: ஒரு சிலரின் குரல் வசீகரிக்கும். முகம் பார்க்காமல் பின்னணி குரலுக்காகவே ரசிகர்கள் ஆனவர்கள் பலர் உண்டு. அதேபோல விஜய் டிவியில் பின்னணி குரல் கொடுத்து வரும் கோபி நேற்று சிறந்த வாய்ஸ் ஓவர் விருது பெற்றதன் மூலம் தனது முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

Vijay TV Voice Of The Channel award winner Gopi.

மகாபாரதம் தொடரின் சகுனியின் குரல்... அந்த வில்லத்தனமாக சிரிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் கோபி என்றால் நம்ப முடிகிறதா? விஜய் டிவியின் புரமோக்களில் கேட்ட குரல்... ரசிகர்களால் ரசிக்கப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் நேற்று ரசிகர்கள் முன்பு அறிமுகமானார். இப்படி ஒரு அறிமுகம் கிடைக்க இந்த விருதுவாங்க தனக்கு 13 வருடங்கள் ஆகிவிட்டது என்று சற்றே வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் தெரிவித்தார் கோபி.

Vijay TV Voice Of The Channel award winner Gopi.

உங்களுக்கு எல்லாம் நீயா நானா கோபி தெரியும் என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார் வாய்ஸ் கோபி. கோபியின் குரலுக்கு ரசிகர்களாக இருக்கும் பலரும் இன்று ஃபேஸ்புக், டுவிட்டரில் வாய்ஸ் கோபிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விருது பெற்றதை குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார் கோபி...

 

விஜய்க்கு ஈடாக ஆட்டம் போட சிரமப்பட்ட ஹன்சிகா

சென்னை: புலி படத்தில் விஜய்க்கு ஈடாக டான்ஸ் ஆட சிரமமாக இருந்ததாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

புலி படம் மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஹன்சிகா. முன்னதாக அவர் வேலாயுதம் படத்தில் விஜய்யை விரட்டி விரட்டி காதலித்தார். புலி படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாகிறது.

Hansika

இந்நிலையில் படம் பற்றி ஹன்சிகா கூறுகையில்,

இளவரசியாக நடிப்பது லேசானது அல்ல. என்னை என் அம்மாவும், சகோதரரும் இளவரசி என்று தான் அழைப்பார்கள். இளவரசி கதாபாத்திரத்திற்காக மேக்கப் போட்டு தயாராகவே 2.5 முதல் 3 மணிநேரம் ஆனது.

விஜய் சிறப்பான டான்சர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு ஈடாக ஆடத் தான் சிரமமாக இருந்தது. படத்தில் நான் 2 பாடல்களுக்கு மேல் வருகிறேன். நான் வரும் பாடல்களுக்கு ராஜுசுந்தரம் மாஸ்டர் தான் டான்ஸ் ஸ்டெப் அமைத்துள்ளார் என்றார்.

 

சுசீந்திரன் 'வில்'... ரமேஷ் சுப்பிரமணியன் 'அம்பு'!

வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன், "இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு எனக்கு இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதும் கூட வெண்ணிலா கபடி குழு மேடையில் நிறப்பது போல் உள்ளது. இந்த வில் அம்பு படம் எங்கள் பதினாலு வருட நட்பின் சாட்சி," என்றார்.

Vill Ambu audio launched

கவிஞர் வைரமுத்து பேசும் போது, இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஒரு சிறந்த இயக்குநராக நிரூபித்துவிட்டு, தற்போது ஆலமரமாக இருந்து பல விழுதுகளை உருவாக்கி வருகிறார். அவர் நட்புக்கு செய்யும் செயல் மிகப்பெரியது. ஆற்றல் மிகுந்த தன் நண்பர்களுக்கு வெளிச்சம் தந்து கொண்டிருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டி வருகிறார்கள். இது நிச்சயம் பாராட்டத்தக்க ஒரு விஷயம். எனக்கு அழுக்கை அழகாகக் காட்டும் இந்த விஷயம் மிகவும் பிடித்துள்ளது. இந்தப் படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெறும்," என்றார்.

நடிகர் சூரி பேசும் போது, "நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தவன். நான் மட்டுமல்ல, விஷ்ணு உள்ளிட்ட பலர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக வந்தவர்கள்தான். இப்போது அண்ணன் தயாரித்துள்ள வில் அம்பு படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார் , அனிருத் , டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி இசையமைப்பாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும், பாடலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்," என்றார்.

Vill Ambu audio launched

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும் போது, "படத்தில் நான் எழுதிய பாடல் குறும்படமே உயிர்க்கிறாய்.. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலை இயக்குநர் ரமேஷ் சொல்லும் போது, இது குறும்படம் எடுக்கும் நாயகன் பாடும் பாடலாக அமைய வேண்டும் என்று கேட்டார். உடனேயே இந்த பாடல் குறும்படமும் அதைச் சார்ந்த விஷயமும் இருக்கும் வகையில் உருவாக்கினேன். பாடல் நன்றாக வந்துள்ளது," என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, "சுசீந்திரன்தான் என்னை முதலில் நடிக்க வைத்தார். அவர் மிகச் சிறந்த இயக்குநர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஜி.வி.பிரகாஷ் உடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரை போல் வெர்ஜின் பாய்தான் என்பதை நிரூபிக்க முடிகிறது. இப்போது பாடல்களை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள் அது எனக்கு தவறாகப்படுகிறது. லிப் அசைவோடு எடுக்கும் போதுதான் ஒரு நடிகனின் நடிப்பும் வெளிவரும்," என்றார்.

 

அமலா மகனை தமிழில் அறிமுகப்படுத்தும் ரஜினி!

பிரபல நடிகை, சமூக சேவகி அமலாவின் மகன் அகிலை தமிழில் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.

அமலா - நாகர்ஜூனாவின் மகன் அகில் சினிமாவில் நடிக்கிறார். மனம் என்ற படத்தில் அறிமுகமான அவர், இப்போது அவர் பெயரிலேயே உருவாகும் புதிய படத்தில் (அகில்) நடிக்கிறார்.

Rajini may introduce Amala Son Akhil in Tamil

இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சி. கல்யாண் அந்த உரிமையைப் பெற்றுள்ளார்.

தமிழில் வெளியாகும் அகில் படத்துக்காக ஒரு பிரமாண்ட விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதில் கலந்து கொண்டு தங்கள் மகனை வாழ்த்தி அறிமுகப்படுத்துமாறு ரஜினிக்கு அமலாவும் நாகர்ஜூனாவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஜினியும் விழாவில் கலந்துகொண்டு அகிலைத் தமிழில் அறிமுகம் செய்வார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

அகில் படத்தை விவி விநாயக் இயக்கியுள்ளார். அக்டோபர் 22-ம் தேதி வெளியாகிறது.

 

எலி படத்தில் மோசடி பண்ணிட்டார்..!- வடிவேலு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: எலி படத்தில் தன்னை வடிவேலு மோசடி செய்துவிட்டதாகக் கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.

வடிவேலு ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் எலி. இந்தப் படம் பெரிய நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

Cheating case against Vadivelu

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த வடிவேலு தன்னை மோசடி செய்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரில், ரூ 12 கோடிக்கு இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் வடிவேலுவுக்கு சம்பளமாக மட்டும் ரூ 8 கோடி கொடுத்ததாகவும், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சேனலில் ரூ 10 கோடி வரை தரத் தயாராக இருந்தும் அதனை வாங்க விடாமல் வடிவேலு தடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வேறு சேனல்கள் எதுவும் இந்தப் படத்தை வாங்காமல் விட்டதால், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்துக்குமே வடிவேலுதான் காரணம் என்றும் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.

இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட கமிஷனர், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

மாறுவேடமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற 'புலி' விஜய்

விருதுநகர்: புலி பட ரிலீஸுக்கு முன்பு இளைய தளபதி விஜய் மாறுவேடமிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் அக்டோபர் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போதே புலி படம் பற்றி பேசி அதை ட்விட்டரில் தொடர்ந்து டிரெண்டாக்கவிட்டு வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

Vijay visits Srivilliputhur Andal temple in disguise

இந்நிலையில் படம் வெற்றி பெற வேண்டி விஜய் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். கோவிலுக்கு அவர் மாறுவேடமிட்டு சென்றுள்ளார். தலையில் பெரிய தொப்பி போட்டு முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார்.

அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் அவர் பிரார்த்தனை செய்கையில் சிலர் அவரை அடையாளம் கண்டுவிட்டார்களாம். இதை உணர்ந்த விஜய் தயவு செய்து இதை யாரிடமும் கூறிவிடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொண்டாராம்.

தனது படங்கள் ரிலீஸாகும் முன்பு விஜய் வேளாங்கண்ணி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் ஆண்டாள் கோவிலுக்கு சென்றுள்ளார். ஒரு வேளை அடுத்தபடியாக வேளாங்கண்ணி செல்வார் போன்று.

 

கரு.பழனியப்பனின் புது அவதாரம்... உள்ளம் கவர்வானா இந்தக் 'கள்ளன்?'

சென்னை: பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ம் ஆண்டில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் கரு.பழனியப்பன்.

பார்த்திபன் கனவு திரைப்படம் வெற்றிப் படமாக மாறியதுடன் தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருதையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

தொடர்ந்து சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் போன்ற போன்ற படங்களை இயக்கினார். தான் இயக்கிய மந்திர புன்னகை படத்தின் மூலம் நாயகனாகவும் அவதாரமெடுத்த கரு.பழனியப்பன் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Karu. Pazhaniappan's next Movie

கரு.பழனியப்பன் தற்போது புதுமுக இயக்குநர் சந்திரா இயக்கி வரும் ‘கள்ளன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பருத்திவீரன் படத்தில் அமீரின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. நவம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கின்றனர்.

இப்படத்தில் கரு.பழனியப்பன் வித்தியாசமாக அடர்ந்த தாடி, முறுக்கு மீசை என கிராமத்து கெட்டப்பில் தோன்றுகிறார். விவசாய சமூகத்துக்கு முன்பிருந்த வேட்டையாடிகளின் கதையாம் இது. வேட்டையாடி வாழ்ந்த அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றிய கதையாக "கள்ளன்"திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு கரு.பழனியப்பன் மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார். பின்னர் ‘கிராமபோஃன் என்ற படத்தையும் இவரே இயக்கி நடிக்கவிருக்கிறாராம்.

 

"வேதாளம்” பாட்டுக்கு கல்யாண் மாஸ்டர் டான்ஸுதானாம்- டுவிட்டரில் அஜித்துடன் ஹாப்பி போட்டோ!

சென்னை: அஜித்தின் வேதாளம் படத்தில் பாடலுக்கு நடன அசைவுகளை கற்றுத் தந்தது கல்யாண் மாஸ்டர்தானாம். இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படு மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் அவர்.

கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் முதல் பார்வையும், போஸ்டரும் வெளியான நிலையில் அதுதான் தல ரசிகர்களிடையே "டாக் ஆப் தி டவுன்". தல 56 இதுதான் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இப்படம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாம்.


இப்படத்தில் அஜித்தின் தனிப்பாடல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இப்பாடலுக்குத்தான் நடன அசைவுகளை அளித்துள்ளார் நடன இயக்குனரான கல்யாண் மாஸ்டர்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில், "பல நாட்களுக்கு பிறகு அஜித்துடன் ஒரு அற்புதமான பாட்டு..வேதாளம்" என்று டுவிட்டியுள்ளார். சிவாவின் இயக்கத்தில் தயாராகும் "வேதாளம்" தீபாவளி ரிலீசாக வெளிவரும் என்று நம்பப் படுகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 16 அன்று இப்படத்தின் இசை வெளியாகலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

 

இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா சரத்குமார்? - பிரகாஷ் ராஜ்

சேலம்: தலைமைப் பொறுப்பில் உள்ள சரத்குமார் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Prakash Raj slams Sarath Kumar

இதையொட்டி சேலம், நாமக்கல்லில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், கருணாஸ், சரவணன், அஜய்ரத்னம், மனோபாலா உள்ளிட்டோர் சனிக்கிழமை சேலம் வந்தனர்.

சேலத்தில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து விஷால், நாசர் தலைமையிலான அணிக்கு ஆதரவு தரும்படி கோரினர்.

இதைத்தொடர்ந்து, நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறோம். யாரையும் குறைகூற இங்கு வரவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும்.

சரத்குமார் எனது நண்பர். ஆனால், அவர் தவறான இடத்தில் உள்ளார். எதிரணியினர் அரசியல், சாதியைப் புகுத்துகின்றனர். கலைஞர்களுக்கு சாதி, மத பாகுபாடு கிடையாது.

நடிகர் சங்கத் தேர்தலில் புரட்சி ஆரம்பிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும், மாற்றத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை இருக்காது என சரத்குமார் கூறுவது அநாகரிகமானது. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் வாழ முடியாது. மேலும், தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. அதேபோல, சங்க உறுப்பினர்களை பயமுறுத்தக்கூடாது.

நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கேள்விக் கேட்கும் உரிமை உண்டு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர். அப்படியானால் ஏதோ நடக்கிறது என்றுதானே அர்த்தம். நான் யாருக்கும் பயப்படவில்லை. எனக்குப் பதவி வேண்டாம். ஆனால், நடிகர் சங்கத்தில் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். இந்தத் தேர்தல் நடிகர் சங்கத் தேர்தலை மாற்றக்கூடியது. ஒன்றுசேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்."

நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்கள் தபால் வாக்கு அளிக்காமல் சென்னைக்கு வந்து வாக்களிக்க வேண்டும். மேலும், உறுப்பினர் அடையாள அட்டையை மிரட்டி வாங்கி வைத்திருக்கின்றனர் என்றார்.

 

தப்புத் தப்பா பேசிய விஷால், எஸ்வி சேகருக்கு நோட்டீஸ் அனுப்பிட்டோம்! - சரத்குமார்

நடிகர் சங்கம் மற்றும் நிர்வாகிகள் பற்றி தவறாகப் பேசி வரும் விஷால் மற்றும் எஸ் வி சேகர் போன்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

சேலத்தில் விஷால் அணியும் சரத்குமார் அணியும் தீவிரமாக ஆதரவு கோரி வருகின்றனர்.

Sarath sent notice to Vishal and S V Sekar

நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கோரிய பின்னர் சரத்குமார் எம்எல்ஏ அளித்த பேட்டி:

கடந்த 3 நாட்களாக மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று சகோதர, சகோதரிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் நடிகர் சங்கத்தில் இதுவரை என்னென்ன செய்து உள்ளோம் என்பதை அனைவருக்கும் சுட்டிக்காட்டி என்றும் போல் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி கட்ட முடியும்? இல்லையெனில் அவர்களாவது பூச்சி முருகனிடம் வாபஸ் பெறக்கோரியோ அல்லது கட்டிடம் தொடர்பாக புதிய திட்டமோ இருந்தால் என்னிடம் பேசி இருக்கலாம்.

அப்படி உங்களது திட்டத்தை நடிகர் சங்கம் நிராகரித்தால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் ஒப்பந்தம் போட்டது முதல் திட்டம் தீட்டியது வரை எதுவும் கூறாமல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறி வருகின்றனர்.

இளைஞர்களை நாங்கள் வரவேற்கிறோம். சங்க செயற்குழுவில் சூர்யா, நாசர், குஷ்பு ஆகியோர் இருந்தவர்கள்தானே.

நடிகர் சங்க கட்டிடம் கட்டியிருந்தால் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கமாட்டேன். ஆனால் இந்த வழக்கை முடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டிய பணி எனக்கு இருக்கிறது. நடிகர் சங்கம் மீண்டும் கடனில் மூழ்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன்.

நடிகர் சங்கத்துக்கு வரும் ரூ. 24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறு கூறுவதன் மூலம் நலிவடைந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி கிடைக்கப்படாமல் போவதுடன் நடிகர் சங்க வருமானத்தையும் தடுத்து விடாதீர்கள்.

தவறான குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்கும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஷால் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீசு அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக அவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

சிலர் நான் தமிழனே இல்லை என்று கூறி வருகிறார்கள். என் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தினால் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நடிகர் சங்கத்தை பற்றி தவறான குற்றச்சாட்டுகளை கூறினால் கண்டிப்பாக நான் பதில் சொல்லி தான் ஆவேன்.

ரகசியத்தை வெளியிடுவேன் என்று உணர்ச்சிகரமாக தான் கூறினேனே தவிர மிரட்டலாக கூறவில்லை. மாற்றம் தேவை என்கிறார்கள். நடிகர் சங்கத்தில் திறமை உள்ளவர்கள்தான் உள்ளார்கள். தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது," என்றார்.

 

இயக்குநர் பெரோஸ் முகம்மதுவை மணந்து திருமதியானார் நடிகை விஜயலட்சுமி

சென்னை: நடிகை விஜயலட்சுமியின் திருமணம் இன்று காலை நடந்தது, இயக்குநர் பெரோஸ் முகம்மதுவை மணந்து திருமதியாக மாறினார் நடிகை விஜயலட்சுமி.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி, சுமார் 10 க்கும் அதிகமான படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்திருந்தார். இயக்குநர் அறிவழகனின் வல்லினம், ஈரம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பெரோஸ் முகம்மதுவை காதலித்து மணந்திருக்கிறார் விஜயலட்சுமி.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் பண்டிகை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார் பெரோஸ் முகம்மது. இந்தப் படத்தை விஜயலட்சுமி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹிந்து முறைப்படி கோவிலில் நடந்த இந்தத் திருமணத்திற்கு இரு வீட்டாருடன் சற்று நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

திருமணத்திற்கு முன் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து மணம் புரிந்தாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மதம் மாற மாட்டோம். அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றுவோம் என்று விஜயலட்சுமி கூறியிருந்தார்.

Actress Vijayalakshmi Married Feroz Mohammed

திருமணத்திற்குப் பின்பு நடிப்பிற்கு முழுக்குப் போடும் விஜயலட்சுமி, தொடர்ந்து தனது நிறுவனங்களின் தயாரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார்.

வாழ்க பல்லாண்டு என்று நாமும் மணமக்களை வாழ்த்துவோம்....