மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு

I M Not Doing These Publicity Says Kamal

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தை விளம்பரத்துக்காக நான் பெரிதுபடுத்துவதாகக் கூறுவது மோசமானது, என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

மும்பையில் விஸ்வரூபம் சிறப்புக் காட்சிக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதிலிருந்து...

எனக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை ஹாலிவுட், பாலிவுட் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். பிரச்சனையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மதத்திலும் நம்பிக்கை இல்லை.

விஸ்வரூபம் பிரச்சனையில் விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சினிமா உலகமும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

இப்போது இந்த விவகாரத்தில் முதல்வர் உதவ முன் வந்துள்ளதால் உச்ச நீதிமன்றம் போக வேண்டிய அவசியமில்லை.

இந்தப் போராட்டத்தில் நான் தனி ஆள் இல்லை. ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் சொன்னது வெறுமனே உணர்ச்சிவயப்பட்டோ, மிரட்டவோ அல்ல. உண்மையிலேயே இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலனை செய்வேன்.

எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை, இந்திய தேசிய விருதையே விரும்புகிறேன்.

நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல; அரசியல் ரீதியானது. மற்ற இடங்களில் படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர்.

விஸ்வரூபம் மூலம் விளம்பரம் தேட நான் முயற்சிப்பதாக கூறுவது மோசமானது. நான் கோபத்தில் பேசவில்லை, காயப்பட்டதால் பேசுகிறேன். அந்த அளவு புண்பட்டிருக்கிறேன்.

என் படங்களில் முஸ்லீம்களை நான் எப்போதுமே தவறாக காட்டியதில்லை. ஹே ராம் பார்த்தால் புரியும். இந்த சில தினங்களில் நம்ப முடியாத அளவுக்கு எனக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் மதம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. அதை நானும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் எந்த நிறத்தில் வந்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம்தான்.

விஸ்வரூபம் விவகாரத்தில் எந்த இஸ்லாமிய நண்பராவது கைது செய்யப்பட்டிருந்தால் உடனே விடுவிக்க வேண்டும்.

எனது படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் தென்னகத்தில் உள்ள என் திரைத்துறை நண்பர்கள் மட்டுமல்ல, சல்மான், ஷாருக், மகேஷ் பட், மதூர் பண்டார்கள் என இங்கே உள்ளவர்களும் ஆதரவு தந்தனர். அவர்களுக்கு நன்றி என்றார் கமல்.

 

கமலுக்காக பேனர்கள் வைத்து 'வாய்ஸ்' கொடுக்கும் ரஜினி, அஜீத் ரசிகர்கள்

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் அஜீத் குமாரின் ரசிகர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகினர் கமலுக்கு ஆதரவாக உள்ளனர். நேற்று நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கமலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.

மேலும் கமல் ரசிகர்களும் அவரின் வீட்டுக்கு வெளியே கூடி, நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ரசிகர்கள் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கமலுக்கு ஆதரவாகவும், விஸ்வரூபத்தை வெளியிடக் கோரியும் பேனர்கள் வைத்துள்ளனர். கமலுக்காக பிற நடிகர்களின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் ரிலீஸ் செய்வதில் என்ன பிரச்சனை என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

 

விஸ்வரூபம் படத்தின் மீது அரசு விதித்துள்ள தடை சரியானதுதான் - சோ

Cho Justifies Ban On Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார்.

கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார்.

நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும்.

ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்," என்றார்.

 

ஷாரூக்கான் சர்ச்சை... 'பிரபலம்னாலே பிராப்ளம்தான்'! - ப்ரியங்கா சோப்ரா

Priyanka On Shah Rukh Khan Celebri

மும்பை: பிரபலமாக இருந்தாலே பெரிய பிரச்சினையில் எளிதாக சிக்கிக் கொள்கின்றனர் என்றார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன் மை சிட்டி என்ற வீடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஷாருக்கான், தான் ஒரு முஸ்லிம் ஆக இருப்பதால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து கூறிய கருத்துகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது.

எனினும், ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களை பொதுமக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். அத்தகைய பிரபலங்கள் தற்போது எளிதான இலக்காக அவர்களுக்கு உள்ளனர்," என்றார்.

சரி உங்களது பெயரின் பின்னால் கான் என இருந்தால் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கியிருப்பீர்கள் அல்லவா? என்று கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்து பேசும்போது, "சோப்ரா என்ற பெயராலேயே அதிக சர்ச்சைகள் எழுந்தன. ஒன்றுமில்லாத விசயத்தில் இருந்து மிக பெரிய காரியங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் இருந்து கொண்டு இத்தகைய கேள்வியை கேட்பது வெட்கக்கேடானது," என்று பதிலளித்தார்.

 

கமல் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது! - பாரதிராஜா

Dont Pull Kamal Politics Says Bharathiraja

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா சீரியஸாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:

விஸ்வரூபத்துக்கு பிரச்னை என்று தெரிந்ததும் கொதித்துப் போய் அறிக்கை விட்டேன். போன வாரம்தான் மதுரையில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தோட இசை வெளியீடு இருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் என்னோட மனசில இல்ல. வலிதான் இருக்கும். விஸ்வரூபத்தை வச்சு இங்க நடந்துட்டு இருக்கிற பார்க்கும்போது மனசில ஏற்படற வலி.

உன்னதமான அந்த கலைஞனை எதுக்குப் போய் இப்படி புண்படுத்துறீங்க.... டி.ராஜேந்தர், விஜயகாந்த் ஆகியோர் கட்சி ஆரம்பிச்சபோது அவங்கள திட்டுனேன். ஆனால் அவங்களும் இதுபோன்ற வலியில் சிக்கித்தான் கட்சி ஆரம்பிச்சு இருப்பாங்களோன்னு தோணுது.

இதுவரை கமல்கிட்டப் பேசல. அரசியல் பாதையில் கமலையும் இறக்கி விட்டுராதீங்க. அவர் அரசியலுக்கு வந்தால் உங்களால தாங்க முடியாது. அப்படி அவர் அரசியலுக்கு வந்தா முழுசா எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் வருவார்," என்றார் பாரதிராஜா.

 

கமலுக்கே இப்படின்னா, மத்தவங்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ?: குஷ்பு

Bollywood Supports Kamal

மும்பை: விஸ்வரூபம் பிரச்சினையில் கமல்ஹாஸனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் உள்ளிட்டோர். சினிமாவுக்காகவே வாழும் கமலுக்கே இப்படி நடக்கிறது என்றால் மற்றவர்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அவருடைய நீண்ட கால நண்பரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் ஏற்கனவே ஆதரவு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, வேற்று மொழி நடிகர் நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தி நடிகர் ஷாரூக்கான் கூறுகையில், "இத்தகைய பிரச்சினைகள் எங்களுக்கு புதிதல்ல. கமலுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம். கமல்ஹாசன் சீனியர் கலைஞர். அவர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தின் சில காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது," என்றார்.

நடிகர் நாகார்ஜுன் கூறுகையில், "கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை," என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் பேசுகையில், "மிகச்சிறந்த தமிழ் நடிகரான கமல்ஹாசன், தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுவதாக சொல்வதை கேட்ட போது இதயம் நொறுங்கி விட்டது. தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படம் ஓட தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு துயரமான நாள். மோசமான வாரம்", என்றார்.

நடிகை ஜெயப்பிரதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல், தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலைமையில் இருந்தால், நானும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே 'மெசேஜ்' இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், "கமல்ஹாசன், நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்," என்றார்.

தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் இதுபற்றி கூறுகையில், "தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையிலும், கமல்ஹாசன் வேட்டையாடப்படுகிறார். இதுபோல், மாநில அரசு எப்படி தடை செய்ய முடியும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம்," என்றார்.

இது குறித்து குஷ்பு கூறுகையில்,

50 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து தான் சம்பாதித்த அனைத்தையும் படத்தில் போட்டுவிட்டு, சினிமாவுக்காகவே வாழும் ஒருவருக்கே இப்படி நடந்தால் மற்றவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று வியக்கிறேன் என்றார்.

சபானா அஸ்மி கூறுகையில்,

சென்சார் போர்டு அனுமதி அளித்த பிறகு எந்த மாநில அரசும் படத்திற்கு தடை விதிக்க முடியாது. விஸ்வரூபம் தங்கள் மனதை புண்படுத்துகிறது என்று நினைப்பவர்கள் அதை பார்க்க வேண்டாம். அவர்கள் எப்படி படத்தை பார்க்க விரும்புபவர்களின் உரிமையை பறிக்க முடியும்? படத்தைப் பார்க்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே. கருத்து சுதந்திரம் குறைந்து கொண்டிருக்கிறது என்றார்.

பிரியதர்ஷன் கூறுகையில், கருத்து சுதந்திரத்திற்கு தடைபோட யாருக்கும் உரிமை இல்லை என்றார்.

 

விஸ்வரூபம் வெளியாகும்வரை ‘தலைவா’ பட வேலைகள் துவங்காது - முதல் முறை வாய் திறந்த விஜய்

Vijay Supports Kamal   

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் விஜய்.

விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை தன் புதிய பட வேலைகளைத் தொடங்கமாட்டாராம் விஜய்.

விஸ்வரூபம் விவகாரம் கடந்த 20 நாட்களாக பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் விஜய் அமைதியாகவே இருந்தார். இந்தப் படத்துக்கு தடை, தடைக்குத் தடை, அதற்கும் ஒரு தடை என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

ஆனால் அப்போதும் விஜய் அமைதியாக இருந்துவிட்டார். ஏற்கெனவே அரசியல் ஆர்வத்தில் அவரும் அவரது தந்தையும் செய்யும் செயல்களால் ஆட்சி மேலிடத்தின் கோபப் பார்வைக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த நேரத்தில் கமல் பிரச்சினையில் தலையிடுவது ஆபத்து என அமைதி காத்தனர். ஆனால் கமல் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகக் கூறியதும், விஜய் வாய்திறந்துவிட்டார்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை ஏஎல் விஜய் இயக்கும் தன்னுடைய புதிய படமான தலைவா பணிகளைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஏறு, உன்னால் முடியும் என்று என்னைத் தூக்கி விட்டவர் எம்.ஜி.ஆர். - கமல்

I Dont Have Fear Because Mgr Lifte

சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?

நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.

மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.

 

கமல் பேசியதைக்கேட்டு எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது- தனுஷ்

I Am More Pained Kamal S Speech Says Danush

சென்னை: கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மாபெரும் மனிதர். அவரது பேச்சைக்கேட்டு எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது. இதற்கு மேல் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷும், அவரது மனைவி இயக்குநர் ஐஸ்வர்யாவும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் விவகாரம் மற்றும் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷடமானது . மிகவும் கஷ்டமாக உள்ளது. நாங்கள் சாரைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது பேச்சால் அதிர்ந்து போயுள்ளோம். சினிமாவுக்காகவே வாழ்பவர் கமல் சார். அவரது படம் ரசிகர்களைப் போய்ச் சேர வேண்டும், யாருக்காக எடுத்தாரோ அவர்களிடம் அது போக வேண்டும். திரைக்குப் போய்ச் சேர வேண்டும்.

கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவரின் ஆதரவும் கமல் சாருக்கு உண்டு என்றார் ஐஸ்வர்யா.

தனுஷ் கூறுகையில், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 50 வருடமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சந்தோஷப்படுத்தி ரசித்து வருபவர் கமல் சார். அவரது பேச்சைக் கேட்டு எனக்கு இதயத்தில் ரத்தம் கசிந்தது. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார் தனுஷ்.

 

'புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!' - கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

Film Personalities Thanking Jayalalitha

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த சூழலில், இன்று கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, அவரது அலுவலகத்தில் கூடினர் சினிமா பிரபலங்கள் பலரும்.

அவர்கள் இந்தத் தடை, கமலுக்கு தங்களின் ஆதரவை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தபோதே, முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி வெளியாகிவிட்டது.

இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று முதல்வர் கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் வெளியில் கொண்டாட ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து வந்திருந்த அத்தனை பிரபலங்களும் அப்படியே யு டர்ன் அடித்து, முதல்வருக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தனர்.

முதலில் பேட்டியளித்த நடிகை ராதிகா, "தமிழக முதல்வர், புரட்சித்தலைவரி மாண்புமிகு அம்மா அவர்களின் அறிவிப்பின் மூலம் விஸ்வரூபம் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உள்ளம் கலையுலகினருக்காக எப்போதுமே இரக்கப்படும். அதனால்தான் சுமூகத் தீர்வுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார். முதல்வருக்கு எங்கள் திரையுலகமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மும்பையில் இருக்கும் கமல்ஹாசனிடம் இந்தத் தகவலை தெரிவித்துவிட்டோம். இஸ்லாமிய அமைப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும். இதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்குகிறோம்," என்றார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில், "முதல்வர் புரட்சித்தலைவிக்கு கமல் சார்பில் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் கமல்ஹாஸன் வந்துவிடுவார். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை முடித்துவிடுவோம். முதல்வருக்கு மீண்டும் நன்றி," என்றார்.

விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து கமல் நன்றி கூறுவார் என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

 

இஸ்லாமிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் சார்பில் அமீர் சந்திப்பு!

Ameer Meet Islamic Organisations

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் கமல்ஹாசனுடன் பேச்சு நடத்த அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கமல்-இஸ்லாமிய கூட்டமைப்பு- அரசு என்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் 24 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் கமலும் இஸ்லாமியக் கூட்டமைப்பினரும் சேர்ந்து பேசி பிரச்சனைத் தீர்க்க முயன்றால், அதற்கு அரசு உதவும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா எம்எல்ஏ,

இந்தப் பிரச்சனையில் முதல்வர் இன்று தெரிவித்த கருத்துக்களை வரவேற்கிறோம். இதற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி கமலுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம்.

இதில் அரசுத் தரப்பும் பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறோம். இது முத்தரப்புப் பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது இந்தக் கருத்தை அரசிடம் தெரிவிப்போம். அதன் பின்னர் பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இதை அரசியலாக்க முயலவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கமல் எங்களுடன் பேசவில்லை, மீடியாவில் தான் பேசினார் என்றார்.

அமீரும் முயற்சி...

முன்னதாக இயக்குனர் அமீர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சரியான நேரத்தில் விஸ்வரூபம் பிரச்னையில் தலையிட்டு ஒரு சுமூக முடிவு ஏற்பட வழி செய்து கொடுத்துள்ளார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய அமைப்பினர் அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தப் போகிறோம். எந்த இடத்தில் பேச்சு நடக்கும் என பின்னர் சொல்கிறேன். கமல் வந்ததும் இந்த பேச்சு மற்றும் காட்சி நீக்கங்களை முடிவு செய்துவிடுவோம்," என்றார்.

 

ரம்யா கிருஷ்ணனின் 'நீலாம்பரி' அவதாரம்...

Ramya Krishnan As Neelambari

நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் புதிய சீரியல் ராஜகுமாரி சன் டிவியில் இந்த வாரம் தொடங்கியுள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணனின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நீலாம்பரி என்ற பெயரை தனது கதாபாத்திரத்தின் பெயருக்கு வைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

காசி நகரத்தின் ஆன்மீக அழகுடன் கதை ஆரம்பித்துள்ளது. நீலாம்பரியின் பிறந்தநாள் தினத்தில் ஆண்டுதோறும் காசிக்கு வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்வது அவரது குடும்பத்தினரின் வழக்கம். இந்த ஆண்டு முக்கியமான பிறந்தநாள் என்றும் உன்னுடைய வாழ்க்கையில் திருப்பங்கள் வரப்போகிறது என்றும் கூறிய சாது நீலாம்பரியை சுவாமிக்கு அபிசேகம், அர்ச்சனை செய்யச் சொல்லுகிறார்.

தொடரின் மற்றொரு பகுதி சென்னையில் நிகழ்கிறது. சரத்பாபு, கிட்டி அண்ணன் தம்பிகள் அவர்களின் சொத்தும் வியாபாரமும் இணைந்தே இருக்கிறது. அவர்களைப் போல அவர்களின் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர். இதில் கிட்டி-கீதாவிற்கு பிறந்த மூத்த பெண் ராஜகுமாரியை சிறுவயதிலே தொலைத்து விடுகின்றனர். அந்த குழந்தைதான் நீலாம்பரியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.

தனது குடும்பத்தினரை நீலாம்பரி சந்திக்கிறாளா? அண்ணன் தம்பிகள் கடைசிவரை இதே ஒற்றுமையுடன் இருப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் கதை நகர்கிறது. பெரும்பாலான தொடர்களில் அண்ணன் சொல்வதைத்தான் தம்பி கேட்பார்கள். ஆனால் இந்த தொடரில் தம்பி கிட்டி கூறுவதை தட்டாமல் கேட்கிறார் அண்ணன் சரத்பாபு.

சினிமா, சீரியல் என எதிலும் தலை காட்டாமல் கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த சரப்பாபு, கீதா ஆகியோர் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜகுமாரி தொடர் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தொடரின் கதைக்களம், காசி, சென்னை என பயணிக்கிறது. காட்சியமைப்புகள் அழகாக இருக்கிறது. படையப்பாவில் வெற்றி பெற்ற நீலாம்பரி இந்த தொடரை வெற்றிகரமாக கொண்டு செல்வாரா என்பது போகப்போகத் தெரியும்.

 

விஸ்வரூபம் விவகாரம்: கமலுக்கு சல்மான் கான் ஆதரவு

Vishwaroopam Salman Khan Supports Kamal

மும்பை: விஸ்வரூபம் பிரச்சனையில் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்கி படத்தை ரிலீஸ் செய்ய கமல் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திரைத்துறையினர் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டின் வசூல் மன்னன் சல்மான் கான் விஸ்வரூபம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சல்மானின் ட்வீட்:

கலையை மதியுங்கள், கலைஞனை மதியுங்கள், ரசிகர்களை மதியுங்கள். நான் கமல் ஹாசனை ஆதரிக்கிறேன். சென்சார் போர்டு படத்திற்கு அனுமதி அளித்துவிட்டதல்லவா. 100 சதவீதம் நான் அதைப் பார்க்கப் போகிறேன். படங்கள் நல்ல படம், மோசமான படம் என்று 2 வகைப்படும். படம் ஹிட்டா, தோல்வியா என்பதை டிக்கெட் வாங்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

கமல் கஷ்டத்தைத் தீர்க்க இலவசமாக நடித்துத் தருகிறார் ரஜினி?

Is Rajini Going Act Kamal Direction

சென்னை: சமூக வலைத் தளங்களில் கருத்து சொல்லிக் கொண்டிருந்தது போய், செய்திகள் என்ற பெயரில் இஷ்டத்துக்கும் அடித்துவிட ஆரம்பித்துள்ளனர்.

தாங்கள் கேள்விப்படும் செவி வழி தகவல்களை, நம்பகமான செய்திகளாகவே கொட்டி வருகின்றனர் ஆர்வக் கோளாறில்.

அந்த வகையில் இப்போது வந்துள்ள ஒரு 'செய்தி' இது. கமல் கஷ்டத்தைப் போக்க, அவர் இயக்கத்தில் இலவசமாகவே நடித்துக் கொடுக்கப் போவதாக ரஜினி அறிவித்துள்ளாராம்.

இதனை ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் பிரபலங்கள் கூட பகிர்ந்து வருவதால், இதற்கு ஒரு நம்பகத் தன்மை வந்துவிட்டது.

எனவே அனைவருமே இந்த செய்தி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

"கமலுக்கு நேர்ந்துள்ள பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ரஜினி தீவிரமாக உள்ளது உண்மைதான். அரசியல் மற்றும் அரசு ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க ரஜினி சிலரிடம் பேசி வருகிறார். ஆனால் கமலுக்கு இலவசமாக படம் நடித்துத் தருகிறேன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. இது தேவையின்றி அவரை சிக்கலில் மாட்டிவிடும் முயற்சி," என்றனர் நாம் விசாரித்தபோது.

ரஜினி தரப்பில் கேட்டபோதும், அப்படி எந்த அறிவிப்பையும் ரஜினி வெளியிடவில்லை என்றனர்.

பிரச்சினையின் உண்மையான காரணத்தைத் தீர்க்காமல் ரஜினியே படம் நடித்துக் கொடுத்தாலும் நாளை அந்தப் படத்துக்கும் இதே நிலைதான் வரும் என்பது ரஜினிக்கும் புரியுமல்லவா!

 

மும்பை செல்கிறார் கமல்.. அங்காவது பிரச்சினையின்றி வெளியாகுமா விஸ்வரூபம்?

Kamal Fly Mumbai Release Viswaroop

சென்னை: விஸ்வரூபம் படத்தை இந்தியில் வெளியிட இன்று மும்பை செல்கிறார் கமல்ஹாஸன்.

விஸ்வரூபம் படத்துக்கு தடைமேல் தடை, தமிழக அரசுடன் மோதல், தொடர்ந்து இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து வெளியேறப் போவதாக கமல் மிரட்டல் என பல்வேறு விறு விறு காட்சிகள் நேற்று முழுவதும் அரங்கேறின.

பின்னர் மாலையில் தன் அலுவலகம் எதிரில் திரண்டிருந்த ரசிகர்களுடன் பேசினார் கமல்ஹாஸன்.

அவர் கூறுகையில், ‘மும்பைக்கு சென்று வெற்றிகரமாக திரும்பி வருவேன். அதுவரை அமைதி காக்க வேண்டும். உங்களை நம்பித்தான் மும்பைக்கு செல்கிறேன்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் இந்தப் படம் தயாராகியுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி அங்கு இந்தப் படம் வெளியாகிறது. அடுத்த நாளே டிடிஎச்சில் வெளியாகும் என கமல் கூறியிருந்தார். அது சாத்தியமா என்று தெரியவில்லை.

இந்தியிலும் கமலுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அங்கே பிவிஆர் தியேட்டர் குழுமத்துடன் கமலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வட இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்த உடனே, ஒரு தியேட்டர் கூட தரமாட்டோம் என பிவிஆர் குழுமம் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம்.

 

உணர்ச்சிவசப்படாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் - இயக்குநர் அமீர்

Director Ameer Calls Calm

சென்னை: இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் விஸ்வரூபம் விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர் நீதிமன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கோவையில் பழைய இரும்புக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வரும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த விஷயத்தில் பொறுகை காக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

தமிழகத்தில் நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதேனும் நடந்துவிட்டால் அது காலத்தால் மறைக்க முடியாத கரும்புள்ளியாகிவிடும். இந்த சூழ்நிலையில் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

கமல் போன்ற நிதானமான கலைஞன் தமிழகத்தை மதசார்புள்ள மாநிலமாக கருதக்கூடாது. நான் உள்பட தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாகவும், இந்தியாவை மதசார்பற்ற நாடாகவும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் அவசரப்பட்டு எந்த விதமான முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், ஒரு படைப்பாளியாக சக மனிதனாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாமல் காப்பதுடன் இந்த பிரச்சனை மேலும் உயர் பெறாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

நண்பன் கமலுக்கு கைகொடுக்க வருகிறார் ரஜினி?

Rajini Tries Make Peace Between Govt And Kamal

சென்னை: இக்கட்டான சூழலில் உள்ள தனது 40 ஆண்டுகால நண்பன் கமல் ஹாஸனுடன் போனில் பேசிய ரஜினி, அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார்.

ரஜினி - கமல் இருவரும் திரையில் மரியாதைக்குரிய போட்டியாளர்களாகவும், நிஜத்தில் நட்புக்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

உழைப்பாளி சமயத்தில் ரஜினிக்கு நெருக்கடி ஏற்பட்ட போது கமல் உதவிக்கு வந்தார். அதே போல கமலுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் முதல் குரல் கொடுப்பவராகத் திகழ்கிறார் சூப்பர் ஸ்டார்.

இந்த விஸ்வரூபம் விவகாரத்திலேயே கூட, கமலை அரசும் இஸ்லாமிய அமைப்புகளும் நெருக்கடிக்குள்ளாக்கிய போது முதல் அறிக்கை வெளியிட்டவர் ரஜினிதான். அதன்பிறகுதான் பாரதிராஜா போன்றவர்கள் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், பிரச்சினை மிகத் தீவிரமடைந்து கமல் இந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறேன் என்று மனம் வெதும்பி அறிவித்துள்ளதால், அதிர்ச்சியடைந்த ரஜினி, கமலுடன் உடனடியாக போனில் பேசினார்.

கமல் வைத்த பிரஸ்மீட்டுக்கே நேரில் வருவதாக ரஜினி கூறியுள்ளார். ஆனால் வேண்டாம், பிரஸ் மீட் முடிந்ததும் சந்திக்கலாம் என்று கமல் கூறியதால் வரவில்லை. இன்று இரவு அவர் கமலைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தை விட்டு கமல் வெளியேறுவேன் என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட ரஜினி, "அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விட வேண்டாம். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். பொறுமையாக இருங்கள்," என்று அறிவுறுத்தினாராம்.

ஏற்கெனவே கமலை இக்கட்டிலிருந்து மீட்க ரஜினி வேறு சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

கமல் வீட்டுக்கு விரைந்த நட்சத்திரங்கள்

ரஜினி தவிர, பாரதிராஜா, வைரமுத்து, சரத்குமார், ராதிகா, பிரகாஷ் ராஜ், சிம்பு, சினேகா, பிரசன்னா என பலரும் கமலை நேரில் சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

 

கமலுக்கு எதிரான அரசின் கடுமையான நிலைக்கு 'அந்தப் பேச்சு' காரணமா?

Is These The Reasons Tn Govt Opposition To Kamal

சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது.

அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்...

நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்,

சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார்.

இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.

கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்' அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்.

 

கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம் - இது கமல் ரசிகர்கள்

Kamal Fans Decide Return Ration Cards

மதுரை: கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கமல் ரசிகர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட கமல்ஹாசன் நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் அழகர் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் தலைவர் கமல்ஹாசன் எந்த மதத்தையும் சேராதவர். எங்கள் நற்பணி மன்றத்தில் எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும், எல்லா அரசியல் கட்சியினரும் உள்ளனர்.

கமல்ஹாசன் அதிக செலவில் விஸ்வருபம் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை சில முஸ்லிம்கள் எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த படத்தை பார்த்து பின்னர் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

எங்கள் தலைவர் எங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வது கிடையாது. எங்கள் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு உதவிதான் செய்து வருகிறோம். இன்று நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படம் குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக கூறியுள்ளார்.

தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரசிகர்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு அவரது பின்னால் செல்வோம்.

அவரது உத்தரவுக்காக பொறுமை காத்து கொண்டு வருகிறோம். அவர் கட்டளையிட்டால், களம் இறங்க தயார்," என்றனர்.

 

கமலுக்கு ஏற்பட்ட சோதனையை ஜீரணிக்க முடியவில்லை: அர்ஜுன்

Kamal Is The Man Arjun

சென்னை: விஸ்வரூபம் குறித்து இன்று கமல் ஹாசன் அளித்த பேட்டியைப் பார்த்து கண்கலங்கிவிட்டதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து விஸ்வரூபம் பற்றியும், அதற்கு தமிழக அரசு விதித்த தடை பற்றியும் உருக்கமாக பேட்டியளித்தார். தனக்கு மதமும் இல்லை, குலமும் இல்லை தற்போது பணமும் இல்லை என்றார். தன்னுடைய ரசிகர்களில் ஏராளமானோர் முஸ்லிம்கள் என்றும், யார் மனதையும் புண்படுத்த படம் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன் என்றார்.

இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில்,

கமலின் பேட்டியைப் பார்த்து கண்கலங்கினேன். அவருக்கு ஏற்பட்டுள்ள சோதனையை ஜீரணிக்க முடியவில்லை. தன்னுடைய இத்தனை ஆண்டு கலைசேவையில் அவர் இதுவரை யார் மனதையும் புண்படுத்தாதவர். அவருக்கா இப்படி ஒரு சோதனை. கமல் சார் எங்கும் போகக் கூடாது அவர் இங்கு தான் இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கமல் சார் உங்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது என்றார்.

 

விஸ்வரூபம்: ஜெ. அரசின் தடையால் கர்நாடக, கேரள தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்

பெங்களூர்: விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதால் கர்நாடகா, கேரள மாநில தியேட்டர்களில் அமோக வசூலாக உள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவருக்கு சாதகமாக தீரப்பும் வந்துவிட்டது. ஆனால் தமிழக அரசோ அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் இன்று விஸ்வரூபம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் விஸ்வரூபம் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதைப் பார்க்க தமிழக ரசிகர்கள் கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

thanks tn govt ban on vishwaroopam
அதிலும் குறிப்பாக பெங்களூரில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. இதற்கிடையே நேற்று கர்நாடகத்தில் விஸ்வரூபம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டவுடன் பல்வேறு நிறுவன ஊழியர்கள் அலுவலகங்களில் அனுமதி பெற்று படத்தைப் பார்க்க கிளம்பிவிட்டனர்.
 

விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம்!

Kamal Edit Certain Parts Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்கவும் மாற்றவும் நடிகர் கமல் ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தப் படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை சுட்டிக் காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கமல், எனது முஸ்லீம் குடும்ப நண்பர்கள் என்னை அணுகி பிரச்சனையைத் தீர்க்க உதவ வேண்டும் என்றனர். விஸ்வரூபம் படப் பிரச்சனை குறித்து என்னிடம் பேசினர். இந்த பிரச்சனையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

படத்தில் சர்ச்சைக்குள்ள காட்சிகள், வசனங்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் அளித்தனர். இதற்கு சுமூகத் தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட சில காட்சிகளை மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருந்து சில வாசகங்களை படத்தில் நான் பயன்படுத்தியுள்ளது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர். அதனால் இறைமறை வசனங்களை நீக்குவது என்று தீர்மானித்துள்ளேன். சில காட்சிகளையும் எடிட் செய்ய உள்ளேன்.

இதனால் எங்களுக்குள் இனி பிரச்சனை இல்லை. குறிப்பாக எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

இந்தப் படப் பிரச்சனைகளால் சில விரும்பத்தாக சம்பவங்கள் நடந்து வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. என் சகோதர்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

இனி இஸ்லாமியர்களுக்கும், எனது இஸ்லாமிய ரசிகர்களுக்கும், பொதுவாக எனது ரசிகர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டியதும், சட்டம் ஒழுங்கை பேண வேண்டியதும் அரசின், காவல்துறையின் கடமை என்றார்.

கமலின் இந்த அறிவிப்பு குறித்து 24 இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆருண் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால், விஸ்வரூபத்துக்கு இஸ்லாமியர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு அகலலாம். ஆனால், அரசின் எதிர்ப்பு அகலுமா என்பது தெரியவில்லை.

 

விஸ்வரூபம்: உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகும் கமல்

Kamal Move Sc

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டு, படத்துக்கும் தடை விதித்தனர்.

மேலும் இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

தீர்ப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேட்டியளித்த கமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் காணச் சென்ற ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டுகிறது போலீஸ்

Kamal Fans Throng Viswaroopam Theaters

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தை காணும் ஆவலுடன் தியேட்டர்களின் குவிந்த ரசிகர்களை வெளியேற்றிய போலீசார், அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பெரும் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று இரவு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற பெஞ்சில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ள தியேட்டர்களின் முன்பாக கமல் ரசிகர்கள் குவிந்து நிற்கின்றனர்.

சில தியேட்டர்களில் படத்தைப் போட்டு விட்டனர். இருப்பினும் சில ஊர்களில் தியேட்டர்களில் 12 மணிக்கு மேல்தான் முதல் காட்சி என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.

தியேட்டர்களை விட்டு விரட்டப்பட்ட ரசிகர்கள்

ஆனால் போலீஸார் திடீரென இன்று கமல் ஹாசன் ரசிகர்களுக்கு எதிராக மாறினர். தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்களை அவர்கள் படமெல்லாம் போட மாட்டாங்க என்று கூறி தடியடி நடத்தி விரட்டியடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் போலீஸார் ரசிகர்களை விரட்டியடிப்பதாக தவகல்கள் வந்து கொண்டுள்ளன.

திருப்பூரில் காத்திருப்பு

திருப்பூரைப் பொறுத்தவரை யுனிவர்சல், உஷா மெகா உள்ளிட்ட7 தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். இருப்பினும் படம் இன்னும் திரையிடப்படவில்லை. 12 மணிக்குமேல்தான் முதல் காட்சி என்று அங்கு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் வெளியே காத்து நிற்கின்றனர்.

படம் தொடர்பான பிளக்ஸ் போர்டுகளையும் கூட தியேட்டருக்கு வெளியே வைக்கவில்லை. கோர்ட் உத்தரவு வந்த பிறகே வெளியில் வைப்போம் என்று தியேட்டர் நிர்வாகம் கூறிவிட்டன.

சேலத்தில் ரசிகர்கள் மீது தடியடி

இதற்கிடையே சேலத்தில் இன்று காலை கேயெஸ் தியேட்டர், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து விட்டனர். ஆனால் அவர்களைப் போலீஸார் திடீரென தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்கள் தடையை மீறிப் போக முயன்றனர். இதையடுத்து படம் இப்போது கிடையாது என்று கூறிய போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தியதால் அவர்கள் கலைந்து ஓடினர்.

இதை இன்று சென்னையில் அளித்த பேட்டியிலும் கமல் குற்றச்சாட்டாக முன் வைத்தார். எனது ரசிகர்களை போலீசார் தியேட்டர்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர் என்றார்.

 

விஸ்வரூபம்... அரசின் மேல்முறையீடு தீர்ப்பு வரும் வரை காத்திருக்க தியேட்டர்கள் முடிவு!

Theaters Still Not Ready Screen Viswaroopam

சென்னை: இன்று காலை முதல் விஸ்வரூபம் படத்தை திரையிட தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டாலும், படத்தைக் காண ரசிகர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த இரண்டு வார தடையை உயர்நீதிமன்றம் நேற்று இரவு ரத்து செய்தது. படத்தை இன்றுமுதல் திரையிட அனுமதித்தது.

ஆனால் தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போகிறது. காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இந்த அப்பீலை எடுத்துக் கொண்டு விசாரிக்கவிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச்.

இந்த நிலையில் படத்தைக் காண ஏராளமானோர் திரையரங்குகளின் முன் இன்று காலையிலேயே குவிந்தனர். ஆனால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுத்துவிட்டனர் போலீசார்.

இதனால் எங்குமே காலை சிறப்புக் காட்சி நடக்கவில்லை. முதல் காட்சி முற்பகல் 11 மணிக்குப் பிறகுதான் தொடங்கும். அதற்குள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு தீர்ப்பு கிடைத்துவிடும் என்பதால், தியேட்டர்களும் அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

இதனை வெளிப்படையாக சொல்லாமல், போலீஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர். 11 மணிக்குப் பிறகுதான் காட்சி நடக்கும். போய் வாருங்கள்... கூட்டம் கூட வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர் போலீசார்.

 

விஸ்வரூபம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை!!

Viswaroopam Hc Postpones Hearing Govt Appeal Petition

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.

முன்னதாக இந்தப் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10 மணிக்கு படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள் படத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாளை காலை (இன்று) இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.இதையடுத்து இந்தப் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது.

பின்னர் வழக்கு பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 4ம் தேதி) தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

விஸ்வரூபம்.. 'வெயிட் பண்ணுங்க..'- தியேட்டர்களுக்கு முக்கிய பிரமுகர் வாய்மொழி 'உத்தரவு'?

Viswaroopam Issue Govt S Oral Instruction Theaters

சென்னை: விஸ்வரூபம் படம் வெளியிடுவதை தாமதப்படுத்துமாறு திரையரங்குகளுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது.

ஆனால் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடாமல், படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவே, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை, மூத்த அமைச்சர் ஒருவர் தொடர்பு கொண்டாராம்.

'விஸ்வரூபம் விவகாரத்தில் அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சிறுபான்மையினர் உணர்வுகளை மதிக்க வேண்டும். எனவே அரசுக்கு துணை நிற்கும் வகையில், மேல்முறையீட்டு மனு முடிவு தெரியும் வரை படத்தைத் தாமதப் படுத்த முடியுமா?' என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.

அரசுத் தரப்பு கேட்கும்போது, மறுக்க முடியுமா என்ன... உடனடியாக அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் தொலைபேசியில் அழைத்த அந்த நிர்வாகி அரசின் முடிவை தெரிவித்து, வெயிட் பண்ணுங்க... அவசரப்பட வேண்டாம், என்று கூறியுள்ளாராம்.

சாதாரண நடிகர்களின் படங்களுக்கே சிறப்புக் காட்சி போட அனுமதிக்கும் அரசு, கமல் படத்துக்கு இன்று அனுமதி மறுத்த போதே விஷயத்தைப் புரிந்து கொண்ட திரையரங்குகள், இப்போது அப்பீல் மனு ரிசல்ட் தெரியும் வரை காத்திருக்க முடிவு செய்திருப்பதன் பின்னணி இதுதானாம்!

 

தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால் வேறு மாநிலம் அல்லது வெளிநாட்டில் குடியேறுவேன்- கமல்

I Will Go Some Other State Or Abroad

சென்னை: எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை.

தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது. இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ் மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன். ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒருபிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன்.

என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா.. என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று.நான் அதை ஏற்கிறேன். நாட்டுக்கா, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார்.

தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.
மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன்.

எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை.எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான்.இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்.

எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப்படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும்.

எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.

  Read in English: Vishwaroopam: Kamal Haasan to leave Ind?
 

அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைகாய் ஆக்கிவிட்டனர்-கமல்

Kamal Sees Political Plot Against His Movie

சென்னை: அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் உருக்கமாக பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஒரு படம் எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையையும் பாதிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர்.

யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும்

நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல-நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உள்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை என்றார் கமல்ஹாசன்.

 

கமலுக்கு ஏற்பட்ட நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் - பாரதிராஜா

Bharathi Raja Comes Support Kamal

சென்னை: கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

விஸ்வரூபம் சர்ச்சை குறித்து பாரதிராஜா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலை குணிய வேண்டும். நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான். அனைவருக்கும் பாலமாக இருந்து பெருமை தேடித் தருகிறவர்கள் இவர்கள்தான். கலைஞன் அழிந்தால் கலை அழியும், கலை அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும், இனம் அழிந்தால் பிணம் திண்ணும் கழுகுகள்தான் பறக்கும். அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வரக் கூடாது.

கலைக்காக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு கலைஞனை கீறி ரணம் பார்த்து ரத்த ருசி பார்ப்பது தமிழகத்தின் சாபக்கேடாக முடிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

கமல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கித் தலை குணிய வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் நீதியின் பாலும், சட்டத்தின்பாலும் நம்பிக்கையுடன் உள்ளோம்.

கண்ணகி கோபப்பட்டாள், அன்று மதுரை எரிந்தது. இன்று ஒரு கலைஞனை வேதனையுறச் செய்துள்ளார்கள். அதனால் தமிழகமே எரிந்து போய் விடுமோ என்று அஞ்சுகிறேன்.

கமல் என்ன தவறு செய்து விட்டான்... நடப்புநிகழ்ச்சியைச் சொன்னான். அது தவறா.. பின்லேடனையும், முல்லா உமரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது தவறா.. கஜினி முகம்மது கொள்ளையடித்தான் என்று பேசினால் அது தவறா.. அப்படியென்றால் அதைப் பாடப் புத்தகத்திலிருந்தே எடுத்து விடுங்கள்.

தயவு செய்து நல்ல கலைஞனை வாழ விடுங்கள். இல்லாவிட்டால் அத்தனை கலைஞர்களின் பெருமூச்சும், தீமூச்சாக மாறி விடும் என்றார் பாரதிராஜா.

 

விஸ்வரூபம் வெளியிட்ட சென்னை தியேட்டர்கள் மீது தாக்குதல்- பேனர்கள் எரிப்பு

Viswaroopam Banner Torched Chennai

சென்னை: சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது சிலர் கல்வீசியும், தீவைத்து எரித்தும் தாக்குதல் தொடுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் விஸ்வரூபம்திரைப்படம் திரைக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டுள்ளனர். அத்தனை தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் எழும்பூரில் உள்ள ஆல்பட் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பேனரைசிலர் தீவைத்து எரித்து விட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ பரவமால் தடுக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

தேவி தியேட்டரிலும் தீவைப்பு

இதேபோல இன்று காலை, அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் முன்பு மத்திய சென்னை மாவட்ட கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் ரசிகர்கள் விஸ்வரூபம் படத்துக்கான பேனரை காலை 6 மணி அளவில் வைத்தனர். அதை அங்கு வந்த ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி பேனரை எரித்து விட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தியேட்டரின் மெயின் வாசல் அருகில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

விஸ்வரூபம் படத்தின் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் தேவி தியேட்டர் முன்பு கமல் ரசிகர்களும் திரண்டனர். அவர்கள் பேனர் எரிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் அப்படியெல்லாம் தீவைப்பு சம்பவங்கள் நடக்கவில்லையே என்று போலீஸார் மகா அமைதியாக பதிலளித்தனர். உண்மையில் தீயில் எரிந்த பேனரை போலீஸாரே எடுத்து மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் தியேட்டர் மீது கல்வீச்சு

அதேபோல சென்னை வில்லிவாக்கத்தி்ல் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் இன்று சிலர் திரண்டு வந்து கல்வீச்சில் இறங்கினர். இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.மேலும் தியேட்டருக்கு முன்பு டயர்களையும் போட்டுத் தீவைத்து எரித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்

சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் படம் நிறுத்தப்பட்டது. தாக்குதலை தடுக்க தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருப்பூரில் உஷா மெகா, எஸ்.ஏ.பி, ஸ்ரீசக்தி, யுனிவர்சல் உள்ளிட்ட 7 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படுவதை ஒட்டி காலை முதலே ரசிகர்கள் திரண்டனர்

ரசிகர் மன்ற காட்சி

காலை 6 மணிக்கு எஸ்.ஏ.பி தியேட்டரில் ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. பிற தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். படம் திரையிடப்படவில்லை. சில தியேட்டர்களில் ப்ளக்ஸ் பேனர்களை கூட வைக்க அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டரின் அனுமதி கிடைத்தபின்னர்தான் படம் திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

திருப்பூரில் அனைத்து தியேட்டர் வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலும் பேனர்கள் எரிக்கப்பட்டதாலும் இங்கும் அதுபோல சம்பவங்களை ஏற்படாமல் தடுக்க போலீஸ் காவல் நிற்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் பாதியில் நிறுத்தம்

ஈரோட்டில் மிகமுக்கியமான பகுதியில் உள்ள திரையரங்கில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 15 நிமிடத்தில் திரைப்படம் நிறுத்தப்பட்டது.

நாகையிலும் சிக்கல்

இதேபோல நாகப்பட்டினம் பாண்டியன் திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. விஸ்வரூபம் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர். ஆனால் திடீரென அங்கு வந்த வட்டாட்சியர், திரையரங்கு உரிமையாளரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி, திரைப்படத்தைப் பாதியில் நிறுத்தச் சொன்னார். இதை அடுத்து, படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் கலைவாணியிலும் படம் நிறுத்தம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கலைவாணி திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி உடனே நிறுத்தும்படி கட்டளை வந்ததால், படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகள் பெரும் கோபம் அடைந்து பிரச்னையில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் குதித்தனர்.

 

இந்தியாவில் நாங்கள் மிக பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக உள்ளோம்: பாக். அமைச்சருக்கு ஷாருக் பதிலடி

Shahrukh Khan Slams Pakistan Rehman Malik Over Security

மும்பை: தான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவில் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகளுக்கு அரசியல் தலைவர்கள் சில சமயம் என்னை ஒரு சின்னமாக ஆக்கிவிடுகின்றனர். நான் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக சில சமயங்களில் என் மீது குற்றம் சுமத்தினர். இத்தனைக்கும் நான் ஒரு இந்தியன், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் என் தந்தை. என்னை என் தாய்நாட்டை விட்டுவிட்டு 'என் தாய்நாடு' என்று அவர்கள் கருதும் நாட்டுக்கு என்னை போகச் சொல்லி தலைவர்கள் பேரணிகள் நடத்தினர் என்றார்.

இதையடுத்து ஷாருக்கிற்கு இந்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கோரிக்கை விடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மாலிக்கின் கருத்து குறித்து ஷாருக் கூறுகையில்,

நான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக உள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் நான் இந்தியாவில் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக எங்குமே இல்லை. என் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்.

இவ்வாறு சிலர் அறிவுரை கூறுவதற்கு காரணம் அவர்கள் நான் எழுதிய கட்டுரையை படிக்காமல் பிறர் கூறியதை வைத்து கருத்து தெரிவிப்பது தான் என்று நினைக்கிறேன். அதனால் முதலில் கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

 

கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர்: நடிகர் விவேக்குக்கு போலீஸ் அபராதம்!

Police Charged Rs 100 Fine Vivek

சென்னை: காரில் அனுமதியின்றி கறுப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விவேக்குக்கு ரூ 100 அபராதம் விதித்தனர் சென்னை மாநகர போலீசார்.

சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில் பரங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கொடிசெல்வம், பரமசிவம், வெங்கடேசன், ஜெயவேல் உள்பட ஏராளமான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விமான நிலையத்தில் இருந்து நடிகர் விவேக்கின் கார் வந்தது.

அந்த காரின் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. உடனே காரை போக்குவரத்து போலீசார் நிறுத்தி, "உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு பிரபலமான நீங்களே இதைச் செய்யலாமா?" என்றனர்.

உடனே, காரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற இருப்பதாக நடிகர் விவேக் கூறினார். ஆனால் தற்போது அனுமதி இல்லாததால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அபராத தொகையை நடிகர் விவேக் செலுத்தினார்.

செலவு ரூ 100... பலன்? பெரிய பப்ளிசிட்டி!!

 

விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல் முறையீடு!

Tn Govt File Appeal Petition Against Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான தடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு. இதற்கான அனுமதியை தலைமை நீதிபதி (எலிப்பி தர்மாராவ்) வழங்கினார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தமிழக அரசு விதித்த இரு வார கால தடை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீக்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.

இதனையடுத்து, விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிரான சிக்கல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து, இந்த உத்தரவு அமுலுக்கு வருவதை புதன் கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்டது. ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எலிபி தர்மாராவை அவரது இல்லத்தில், இரவு 11. 30 மணி அளவில் சந்தித்த அரசு வழக்கறிஞர்கள் குழு, மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெற்றது. இதனையடுத்து இந்த மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விஸ்வரூபம் இன்று வெளியாவதும் கஷ்டமே.

 

விஸ்வரூபத்திற்கு சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசின் பரபரப்பு புகார்

Tn Govt S Charge On Viswaroopam Certification

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல்,முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது.

நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.

144 தடை ஏன்...?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார். அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.

 

விஸ்வரூபத்திற்கு தடைவிதித்தது நியாயமல்ல: ஆமீர் கான்

Aamir Khan Disapproves Ban On Vishwaroopam

மும்பை: விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது நியாயம் அன்று என்று பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கையை புண்புடுத்தும் வகையில் காட்சி இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் அப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசும் படத்திற்கு தடை விதித்தது. இதற்கிடையே விஸ்வரூபத்திற்கு தடை விதித்ததை கண்டித்தும், கமலுக்கு ஆதரவு தெரிவித்தும் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் விஸ்வரூபம் மீதான தடை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சென்சார் போர்டு பட்ததைப் பார்த்து அதை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்த பிறகு விஸ்வரூபத்திற்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும். இது ஜனநாயக நாடு. விஸ்வரூபத்திற்கு தடை விதித்திருப்பது நியாயம் இல்லை என்றார்.

 

படத்தை விற்றுவிட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை!- தமிழக அரசு இன்னொரு அதிரடி வாதம்!

Kamal Hasn T Any Rights Sue Against Govt

சென்னை: விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே விற்றுவிட்ட கமல் ஹாஸனுக்கு, அரசுக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை இல்லை என்று தமிழக அரசு அதிரடி வாதத்தை நீதிமன்றத்தில் வைத்துள்ளது.

இந்தப் படம் முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரித்துள்ளதாகக் கூறி தமிழக அரசிடம் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் ஒன்றுபட்டு குரல் கொடுக்க, படத்துக்கு 2 வார காலம் தடை விதித்ததது தமிழக அரசு. இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களும் கடிதம் கொடுத்துள்ளனர் அரசுக்கு.

இவற்றை எதிர்த்து இரு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார் கமல். இந்த வழக்குகளின் விசாரணை மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. இடையில் படத்தையும் நீதிபதிகள் குழு பார்த்து முடித்தது.

இந்தப் படத்துக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது...? ஏன் விலக்கக் கூடாது? என்று அரசுத் தரப்பும் கமல் தரப்பும் தீவிரமாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாதம் செய்து வருகின்றன.

இதில் அரசுத் தரப்பு வைத்துள்ள ஒரு வாதம் மிக முக்கியாமானது. "விஸ்வரூபம் என்ற product-ஐ கமல்ஹாஸன் வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் எந்த உரிமையும் இப்போது அவரிடம் இல்லை. எனவே இந்தப் படத்தின் தடைக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை கமல்ஹாஸனுக்கு இல்லை.

மேலும் இந்தப் படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி அரசு இந்தத் தடையை விதித்துள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

 

புலிகள் நடமாடும் அடர்ந்த காட்டில் தங்கிய சூர்யா... விசாரணைக்கு உத்தரவு!

Surya S Controversial Stay Dense Forest   

புலிகள் நடமாடும் தேனி - கூடலூர் மலைப் பகுதியில் சூர்யா கலந்து கொண்ட சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்தது. இது இப்போது சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது இதன் படப்பிடிப்பு. மாற்றான் சரியாகப் போகாத வருத்தத்தில் உள்ள ரசிகர்களை, சூர்யாவின் முறுக்கேற்றும் ஸ்டில்கள் உற்சாகம் கொள்ள வைத்துள்ளன.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேக்கடியில் நடந்தது. அன்று இரவு பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான முல்லைக்கொடி என்ற இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கினார்.

இந்த இடத்துக்கு தேக்கடி படகு நிறுத்த பகுதியில் இருந்து படகு மூலம் சென்று 24 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் ஜீப்பில் செல்ல வேண்டும். நடிகர் சூர்யாவை அப்பகுதியில் தங்க வைப்பதற்கு கேரள வனத்துறையினர் இரவு 8 மணிக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த வருடம் கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் இரவு 8 மணிக்கு மேல் தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள லேக் பேலஸ் என்ற இடத்துக்கு சென்றார். இதற்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் இப்போது நடிகர் சூர்யாவை 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கேரள வனத்துறையினரே அழைத்துச் சென்றுள்ளனர்.

புலிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் நடமாடும் ஆபத்தான பகுதிக்கு சூர்யாவை அழைத்துப் போய் தங்க வைத்தது இப்போது விசாரணை வரை போய்விட்டதாம்.

 

ஆதி பகவன் யாருக்கும் எதிரானதல்ல- தயாரிப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ

No Religious Scenes Aadhibhagavan Says Producer

சென்னை: ஆதிபகவன் படம் யாருக்கும் எதிரானதல்ல. இந்தப் படம் பிப்ரவரியில் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் ஜெ அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

ஜெயம் ரவி, நீது சந்திரா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆதிபகவன்‘. இப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்கும் என சந்தேகிப்பதாகவும் எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் அன்பழகன் கூறுகையில், "ஆதிபகவன்  ஒரு நேர்மையான பொழுதுபோக்குப் படம். மதக் காட்சிகள் எதுவும் இதில் இல்லை.

‘ஆதி பகவன்' என்பது கதையில் வரும் இரு கேரக்டர்கள் பெயர். திருக்குறளில் இடம் பெற்ற ‘ஆதிபகவன்' வார்த்தையையே படத்துக்கு தலைப்பாக்கி இருக்கிறோம். ஆக்ஷன், காதல் கலந்த படம்.

இப்படத்தை முடக்க பார்க்கிறார்கள். காரணமே இல்லாமல் எதிர்க்கின்றனர். சுயநலத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் எதிர்ப்பு கிளப்புகின்றனர். யார் யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் ரசிக்கும் விதத்தில் படம் உருவாகியுள்ளது," என்றார்.

கமல் கூட ஆரம்பத்தில் இப்படித்தான் சொன்னார்!!

 

உங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்!

Murder Threat Mallika Sherawat

மும்பை: ராஜஸ்தானில் கொல்லப்பட்ட நர்ஸ் பன்வாரி தேவி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிக்கும் நடிகை மல்லிகா ஷெராவத்தின் தம்பிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனராம்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி. நர்ஸான இவர் அரசியல்வாதியுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் விளைவாக பின்னர் உயிரை இழந்தார். இவரது கொலைச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது பன்வாரி தேவி கதையை பாலிவுட்டில் படமாக்குகின்றனர். பன்வாரி தேவி வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறாராம். ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மல்லிகா இந்த வேடத்தில் நடிக்கக் கூடாது என்று சிலர், தொலைபேசி மூலம் மல்லிகாவின் தம்பியைப் பிடித்து மிரட்டினராம்.

இதுகுறித்து மல்லிகா கூறுகையில், எங்களுக்கு மிரட்டல் வந்தது உண்மைதான். சிலர் எனது சகோதரரிடம் போன் மூலம் உனது சகோதரியிடம் சொல்லி இந்தி விவகாரத்தில் இருந்து விலகிட சொல் என கூறி உள்ளனர். என்னை யாரும் இதுவரை நேரடியாக மிரட்டவில்லை.

ஒவ்வொரு நடிகரும் நடிகையும் அரசியலுக்கு பலியாகிறார்கள். ஒவ்வொரு நாளும் அரசியல் செய்தாக வேண்டும். இந்தியாவில் வாழ்வதற்கு கண்டிப்பாக அரசியல் செய்ய வேண்டும். நான் நல்ல அரசியல்வாதியாகவும் கெட்ட அரசியல்வாதியாகவும் நடித்து இருக்கிறேன் என்றார் மல்லிகா.

 

யுட்யூபில் வெளியான விஸ்வரூபம்... உடனடியாக தடை செய்த கமல் தரப்பு!

Viswaroopam Piracy Cyber Crime Police Ban Youtube

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று காலை திடீரென யுட்யூப் வீடியோ தளத்தில் வெளியானது.

அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அந்த வீடியோ இடம்பெற்ற கணக்கு முடக்கப்பட்டது.

விஸ்வரூபம் படம் சில வெளிநாடுகளில் வெளியான இரண்டாம் நாள் நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சில வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, படம் வெளியான இரண்டாவது வாரமே ஒரிஜினல் டிவிடிகளே வந்துவிடும் நிலை உள்ளது.

இந்த சூழலில் தமிழகம் - புதுவையில் முழு தடையும், மற்ற மாநிலங்களில் பகுதி தடையும் விதிக்கப்பட்டுள்ள விஸ்வரூபத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து திருட்டு டிவிடிகள் வரத் தொடங்கிவிட்டன. சென்னையில் மிக சுலபத்தில் ரூ 25-க்கே டிவிடிக்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், விஸ்வரூபம் முழுப் படத்தையும் சிலர் இன்று யுட்யூப் தளத்தில் பதிவேற்றிவிட்டனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக அந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

யூ டியூபில் விஸ்வரூபத்தை வெளியிட்டது யார் எனவும், அதை பதிவிறக்கம் செய்தவர்கள் யார் எனவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

நஷ்டம்தான்... ஆனாலும் அமெரிக்காவில் விஸ்வரூப வசூல்!

Viswaroopam Tops Us Box Office

விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள்.

நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில் தொடர்ந்து மக்கள் கூடுகின்றனர்.

முதல் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு.

இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை இல்லாமல் இருந்திருந்தால்கூட, பெரும் நஷ்டத்திலிருந்து கமல் தப்பித்துவிட்டிருப்பார் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

 

ஓடிப் போய்டுவோம்... பெற்றோரை மிரட்டிய கரீனா-சைப் (இது திருமணத்திற்கு முன்)

Kareena Kapoor Saif Ali Khan Threatened

மும்பை: பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவோம் என்று திருமணத்திற்கு முன்பு அவர்களின் பெற்றோரை மிரட்டியுள்ளனர்.

பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து கரீனா பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நானும், சைபும் எங்கள் பிரைவசியை விரும்புகிறவர்கள். திருமணத்தன்று நாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எந்த டிசைனர் உடை அணிகிறோம், யார் யாரை எல்லாம் அழைக்கிறோம் என்பதை அறிய மக்கள் ஆர்வாக இருந்தனர். திருமணம் முடிந்த பிறகு வீட்டு மாடியில் வந்து நின்று அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றோம்.

எங்கள் திருமணத்தை மீடியாக்கள் முன்பு நடத்தி சர்க்கஸ் ஆக்கினால் நாங்கள் இருவரும் ஓடிப் போய் லண்டனில் திருமணம் செய்து கொள்வோம் என்று பெற்றோரை மிரட்டினோம் என்றார்.

சைபும், கரீனாவும் நீண்டடடட காலமாக காதலர்களாக இருந்து இப்போது திருமணம் அப்போது திருமணம் என்று கூறி ஒரு வழியாக மணந்ததால் தான் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

 

விஸ்வரூபம்: ஹைகோர்ட்டில் இன்று தீர்ப்பு- அரசுடன் சமரசம் பேச கமலுக்கு அட்வைஸ்

Judgement Day Viswaroopam Today

சென்னை: விஸ்வரூபம் படம் மீதான தடை நீங்குமா நீங்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தீர்ப்பை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டும், தேச ஒற்றுமை கருதியும், பெரும் பொருட் செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதாலும், பிரச்சினை குறித்து அரசுடன் பேசுமாறும் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. புதுவையிலும் தடை செய்யப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

சர்ச்சைக்குரியவிஸ்வரூபம் படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் பிரசாத் லேபில் பார்வையிட்டனர். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றே தீர்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தீர்ப்பை நாளை வரை ஒத்திவைத்து நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.

நீதிபதி தனது உத்தரவின்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல்களைப் பார்த்துக் கூறுகையில், நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்ள வேண்டும். கமல் ஹாசன் சுமுக முடிவுக்கு பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முன்வர வேண்டும். அரசுத் தரப்புடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி தீர்ப்பை நாளைக்கு (இன்றைக்கு) ஒத்திவைத்தார்.

இதையடுத்து அரசுத் தரப்பு அதிகாரிகளை கமல்ஹாசன் தனது வக்கீல்கள் புடைசூழ சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

விஸ்வரூபம் திருட்டு விசிடி விற்றால் குண்டர் சட்டம்... பிரவுசிங் சென்டர்களில் சோதனை!

Police Warns Viswaroopam Video Piracy

சென்னை: தமிழகத்தில் இன்னும் வெளியாகாத கமல் ஹாஸனின் விஸ்வரூபம் பட திருட்டு டிவிடி மற்றும் படப் பதிவுகளை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வார காலம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இத் திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து கமல் ரசிகர்கள் சிலர் பக்கத்து மாநிலங்களுக்குப் போய் படம் பார்க்கின்றனர்.

இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து திருட்டு டிவிடி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக தமிழகத்துக்குள் விஸ்வரூபம் திரைப்படம் பொதுமக்களிடத்தில் பரவி விடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

அதன்படி, தமிழக குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் உத்தரவின் பேரில், டிஐஜி ஜான் நிக்கல்சன் மேற்பார்வையில், எஸ்.பி.விஜயகுமாரி தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகையா அடங்கிய திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று தினங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கணினி மையங்கள், பேருந்து நிலையங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள், ஆம்னி பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாரேனும் இது தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்று திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

முல்லா உமர் தமிழகத்தில் வசித்ததற்கு கமல் ஆதாரம் தர வேண்டும்! - மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு

New Case On Kamal Madurai Court

மதுரை: தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் எழிலரசு. இவர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் தமிழக போலீசாரிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே முஸ்லிம் சமுதாயம் குறித்து தவறாக விமரிசனம் செய்திருப்பதாக கூறி இந்த படத்திற்கு தமிழ கத்தில் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தை திரைப்பட தணிக்கை குழுவினர் பார்வையிட்டு பொதுமக்கள் அனைவரும் பார்க்கத்தகுந்த படம் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது.

திரைப்பட தணிக்கைத் துறை சான்றளித்த பிறகு ஒரு படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை நாட்டில் கருத்துக்களை வெளியிடும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது.

இதேபோலத்தான் சமீபத்தில் திரைக்கு வந்த துப்பாக்கி படத்திற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் வெளியான ஒரு குறும்படத்திற்கு எதிராகவும் இங்கு போராட்டம் நடத்தினார்கள். இது சுய விளம்பரங்களுக்காக செய்யும் போராட்டம்போல தோன்றுகிறது.

எனவே விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் தலீபான் இயக்கத்தின் தளபதி முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்," என்று கோரியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

 

நமீதாவின் ரியல் எஸ்டேட் நிகழ்ச்சிக்கு மின் திருட்டு?

Power Stolen Namitha S Real Estate Function

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வீட்டுமனை விற்பனைக்காக நமீதா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின் திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மங்கலம்பேட்டை- உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் ரியல் ஏஜன்சி நிறுவனத்தில் மனை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு தங்கக்காசு வழங்கும் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மங்கலம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் நடிகை நமீதா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்காக அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை திருடி நிகழ்ச்சியை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம், உளுந்தூர் பேட்டை மின்சாரத்துறை செயற்பொறியாளரிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு எங்களுக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்தபோது மின்திருட்டு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கான ஆதாரமும் இல்லை. ஆதாரம் கிடைத்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

கமலும் இஸ்லாமிய அமைப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்வதுதான் நல்லது- சீமான்

Kamal Has Talk With Islamic Organisations Seeman

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் கமலும் இஸ்லாமிய அமைப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான்.
அவர் பேசுகையில், "ஈழத்தில் இன உறவுகள் கொலைகளை தடுக்க முடியவில்லை. அதற்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினவு தினம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.

தமிழர் இனத்துக்கு உரிமை எதுவும் இல்லை. வழக்காடும் உரிமை, அரசியல் உரிமை, மொழி உரிமை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி தமிழகத்தில் மட்டும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கவில்லை என்கிறார்.

ஆனால் வேறு இடத்தில் இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப்படி பயிற்சி கொடுத்ததால் 554 மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊழலற்ற, உண்மையான மக்களாட்சி நமக்கு தேவை. இளைஞர்கள்தான் அதை பொறுப்பேற்று செய்யவேண்டும். ஆங்கிலத்துக்கு அடிமையாக இருக்கிறோம். மொழி, சாதி, அரசியல் கடவுள் என அனைத்திற்கும் அடிமையாக உள்ளோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்," என்றார்.

அவரிடம் விஸ்வரூபம் குறித்து கேட்கப்பட்டது. தமிழக அரசின் தடையை கமல் ஏற்று, காட்சிகளை மாற்ற வேண்டும் என நீங்கள் கருத்து கூறியதாக செய்தி வந்துள்ளதே என்று கேட்ட போது, "நான் அப்படிச் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்ற முக்கிய விஷயங்களை முன்னிறுத்தி தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு இது.

கமலஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தை பார்க்காமல் எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. இஸ்லாமியர்களும், கமல்ஹாசனும் இதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் அப்போதும் சொன்னேன்," என்றார்.

 

விஸ்வரூபத்தை தடை செய்யக் கோரி ஹைதராபாத் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

Now Muslims Seek Ban On Viswaroopam Andhra Too

ஹைதராபாத்: விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் விஸ்வரூபத்துக்கு தடை அமலில் இருந்தாலும், பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கேரளா, கர்நாடகத்தில் இந்தப் படத்தை வெளியிட தடை ஏதுமில்லை. ஆனால் கர்நாடகத்தில் இரண்டு ஷோக்களுக்குப் பிறகு இந்தப் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆந்திராவில் ஒரு ஷோ ஓடியது. அடுத்த இரு தினங்களில் மீண்டும் திரையிடப்பட்டதாகக் கூறினர். ஆனால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

கேரளத்திலும் இதே நிலைதான். அங்கு 83 அரங்குகளில் திரையிடப்பட்டது இந்தப் படம். இப்போது பாதிக்கும் மேற்பட்ட அரங்குகளில் நிறுத்தப்பட்டுவிட்டது.

அங்கு திரைப்படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பதும் கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதுமாக கண்ணாமூச்சு நடந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில்ஆந்திராவில் இந்தப் படத்தை தடை செய்துவிட வேண்டும் என்று கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் முகமது ஹாஜி என்பவர். இவர் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பெரிய வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வழக்கு மனுவில், "கமல் எடுத்துள்ள விஸ்வரூபம் படம் இஸ்லாமியரின் நம்பிக்கைகள், உணர்வுகளை நேரடியாகத் தாக்குகிறது. இந்தப் படத்தை முற்றாக தடை செய்து மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

 

விஸ்வரூபம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசு பரபரப்புப் புகார்

Tn Govt Blasts Censor Board Certifying Viswarooopam

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார்.

இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது.

நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார்.

அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.

பின்னர் மதிய உணவு இடைவேளைக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 2.30 மணிக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

பின்னர் கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார்.

மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும்.

இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.

பெருமளவில் போலீஸ் குவிப்பு

இதற்கிடையே, உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வரும் கோர்ட்டுக்கு வெளியே பெருமளவில் செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் திரண்டு நிற்கின்றனர்.

 

கர்நாடகத்தில் விஸ்வரூபம் இன்று மீண்டும் ரிலீஸ்!

Vishwaroopam Releases Karnataka

பெங்களூர்: பாதுகாப்பு தருவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து கர்நாடகத்தில் இன்று மீண்டும் விஸ்வரூபம் ரிலீஸானது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் உள்ளிட்ட சில இடங்களில் கடந்த 25ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் மறுத்ததையடுத்து படம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பெங்களூரில் 17 தியேட்டர்கள் உள்பட மாநிலத்தில் மொத்தம் 40 தியேட்டர்களில் இன்று விஸ்வரூபம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. மதியக் காட்சி முதல் இந்தப் படம் பெங்களூரில் 17 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

இந்த 17 தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டதாக படத்தின் கர்நாடக மாநில வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்கராஜு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

முஸ்லிம் தலைவர்கள் குழு பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜியை சந்தித்து படத்தில் 'அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல' என்ற வரியைச் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த வரியை பட தலைப்பு போடுகையில் சேர்க்க முடிவு செய்தேன்.

கடந்த 27ம் தேதி படத்தைப் பார்த்த கமிஷ்னர் மிர்ஜி, அதில் ஆட்சேபமிக்கும் வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்தார் என்றார்.